Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

தமிழ் மொழியை ஆட்சி மொழியாகவும், சட்டவாக்க மொழியாகவும், நிர்வாக மொழியாகவும், நீதிமன்றமொழியாகவும் அர்த்தமுள்ள வகையில் அமுல்படுத்துவது அரசின் பொறுப்பாகும் என்பதுடன் சமத்துவம், தனித்துவம், சுயாதீனம் என்பவற்றின் அடிப்படையில் மொழி சமத்துவம் பேணப்படுவதற்கான இலங்கை மக்களின் பண்பாட்டு புரட்சி ஏற்பட வேண்டுமெனவும், தமிழ் மொழி அமுலாக்கலை அர்த்தமுள்ளதாக்குவோம் என்ற தொனிப்பொருளில் மாற்று கருத்தாடலுக்கான அமையம் கொழும்பில் 30.11.2013 அன்று நடத்திய மொழியுரிமை மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

ஏதோ தெரியவில்லை நல்ல நிகழ்வுகளுக்காகவும், கெட்ட நிகழ்வுகளுக்காகவும் பயணம் செய்யும் பாக்கியம் எனக்கு இப்ப அடிக்கடி கிடைத்து வருகின்றது. திடீரென எடுத்த முடிவின் பிரகாரம் அம்மாவின் திவசத்துக்காக போன கிழமை ஊருக்குப் போய் வரும் ஒரு பாக்கியம் கிட்டியது. ஒரு குறுகிய சில நாட்கள் தான் நின்றாலும் அங்கே என்னைத் தாக்கிய, என்னை உறுத்தி வருத்திய ஒரு விடையம் சம்பந்தமாக இதைத் தெரியப்படுத்த வேண்டும் என்ற விருப்பம் கொண்டே இதை எழுதுகிறேன்.

எங்கடை மக்களை ஒரு வகையிலும் நிமிரவிடாமல், ஏதோ சொல்ல முடியாத சுமைகளையும் துன்பங்களையும் கொடுத்து அவர்களை இன்னும் அடிமைகள் போல் அரசாங்கமும் சில தனியார் நிறுவனங்களும் செய்கின்ற வேலைகளையும், விசமங்களையும் கேள்விப்பட்ட போது எங்களுடைய மக்களின் அறியாத்தனங்களையும் எண்ணி கவலைப்படாமல் என்னால் இருக்க முடியவில்லை.

மக்கள் கடுமையான சாவல்களை எதிர் கொள்ளும் ஆண்டாகவே 2014 பிறக்கின்றது. வன்னி மக்களின் நிலத்தை பன்நாட்டு பண்ணைக்காக அபகரிக்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதே நேரம் இராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் அரசு, இராணுவத்துகே அதிக நிதியையும் ஒதுக்கிகின்றது. நாட்டின் நிலங்கள் முதல் தேசிய சொத்துகள் அனைத்தும் அன்னிய கம்பனிகளுக்கு விற்கப்படுகின்றன.

கடந்தமாத போராட்டத்தில், பிரசுரிக்கப்பட்ட இக்கட்டுரைத் தொடரின் முதற் பாகத்தின் இறுதியில் '1983 இல் வடபகுதியின் அதி உச்ச மீன்பிடி காரணமாக, நாட்டின் 40 சதவீதத்திற்கும் அதிகமான மீன் உணவுத்தேவையை வடபகுதி மீனவர்களே பூர்த்தி செய்தனர். அக்காலத்தில் இலங்கையில் இருந்த மீன்பிடி தொழிலாளர்களில் 15 சதவீதமான மீனவர்கள் இந்த சாதனையை செய்தனர் என்று குறிப்பிட்டிருந்தேன். வடபிரதேச மீன்பிடி உச்சத்திலிருந்த 83 ஆம் ஆண்டில் மொத்தமான உள்ளக இயந்திரம் பொருத்தப்பட்ட ஆழ்கடல் மீன் பிடிப்படகுகள் (one day boats -3 ½ Tonners) 680 ஆகவும் வெளியிணைப்பு இயந்திரம் பொருத்தப்பட்ட கண்ணாடி இழைப்படகுகள் 2600 ஆகவும், மரவள்ளங்கள் 3865 ஆகவும் இருந்தது. இந்தக் காலத்தில் பிடிக்கப்பட்ட பெருந்தொகையான மீன்கள் பிரதானமாகக் கண்ணாடி இழைப்படகுகளாலும், கரையோரத் தொழிலாளர் பயன்படுத்தும் மரவள்ளங்களாலேயே பிடிக்கப்பட்டது.

கம்யுனிஸ்ட்டு கட்சி அறிக்கையை, ஆசான்கள் கார்ல் மார்க்சும், பிரடெரிக் ஏங்கெல்சும் உலக தொழிலாளர்களிற்கு தந்த மாபெரும் ஆவணத்தை, தமிழ்மண்ணின் உழைப்பாளிகளிற்கும், இடதுசாரி முற்போக்கு சக்திகளிற்குமாக முதல் தமிழ் மொழிபெயர்ப்பை பெரியார், பொதுவுடமைக்கட்சியின் சிங்காரவேலனாருடன் சேர்ந்து கொண்டு வந்தார். கடவுளை பரப்புகிறவன் அயோக்கியன், கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்று வாழ்நாள் முழுவதும் மதங்களிற்கு எதிராக, மூடநம்பிக்கைகளிற்கு எதிராக போராடினார். பார்ப்பனக் கொடுங்கோன்மையை, மனிதர்களை சாதி பிரித்து உயர்வு, தாழ்வு கற்பிக்கும் சதியை சாடினார். "நான் பிராமணர்களது சாதி ஒடுக்குமுறை பற்றி பேசினால் சந்தோசப்படும் வேளாளர்களும், செட்டியார்களும் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை குறித்து, அவர்களை மற்ற தமிழ்சாதியினர் சமமான மனிதர்களாக மதித்து நடக்காத சாதிவெறி குறித்து பேசும் போது மெளனமாக இருக்கிறார்கள்" என்று சாதிப்படிமுறையின் கீழ் உள்ளவர்களை ஒடுக்கும் இரட்டைவேடம் போடுபவர்களை சாடினார்.

ஒருவன் மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டுமென்றால், மற்றவன் இழப்பதன் மூலம் துன்பத்தை அனுபவித்தாக வேண்டும். மற்றவனுடைய செல்வத்தை அனுபவிப்பது தான் மகிழ்ச்சி. இதுதான் இந்த தனியுடமை சமூக அமைப்பின் அறம் மற்றும் கோட்பாடாகும். இதை அமெரிக்க அரசின் முன்னைய முக்கிய கொள்கை வகுப்பாளரும், முக்கிய மந்திரியுமாக இருந்த கொலின் பாவெல் நறுக்குத் தெறித்தது போல் மிக எடுப்பாகவே கூறியிருந்தார். "தனிச் சொத்துரிமையை மதிப்பது மனித கௌரவத்தின் அடையாளம் இதில் சமரசம் செய்து கொள்வது கூடாது. சுதந்திரச் சந்தையும், சுதந்திர வாணிபமும் நமது தேசியப் பாதுகாப்புத் திட்டத்தில் முன்னுரிமை பெறுகின்றது" என்றார். தனியுடமைச் சமூக அமைப்பு இதைத் தாண்டி மனிதனை மனிதனாக மதிக்காது. இந்தத் தனியுடமை சார்ந்த பொருள் உலகில், மனிதன் தானும் ஒரு உயிருள்ள சடப்பொருளாக மாற்றப்பட்டு விடுகின்றான். இந்த சமூக அமைப்பில் ஏற்படும் அதிர்வுகளில் ஒன்றுதான் உலகப் பொருளாதார நெருக்கடி.

சுவீஸ்சில் மிகப் பெரிய நகரான சூரிச்சில் இலங்கை அரசின் ஐனநாயக விரோதப் போக்கை கண்டித்து துண்டுப்பிரசுரமும் பிரச்சாரமும்!

மார்கழி 14-12-2013 அன்று சுமார் மூன்று மணியளவில் முன்னிலை சோசலிசகட்சி தோழர்கள் தமிழ்பேசும் மக்கள் அதிகமாக காணப்படும் பகுதியில் ஒன்று கூடினர். லலித் மற்றும் குகனை விடுதலை செய்! கடத்தல்கள் - படுகொலைகளை எதிர்ப்போம்! என்ற தலைப்பிலான துண்டுப்பிரசுரத்தையும் போராட்டம் பத்திரிகையையும் வினியோகித்தனர். பலர் எந்த மறுப்பும்மில்லாமல் வாங்கிப்படித்தனர். சிலர் மேலதிகமாகவும் முன்னில சோசலிச கட்சியின் தமிழ் பேசும் தோழர்களுடன் உரையாடினர்.

அண்மையில் ஒரு பத்திரிகையின் பிரதிகள் லண்டனின் சில பகுதிகளில் ஒரு நிறுவனத்தால் தூக்கிச் செல்லப்பட்டனவாம். குறிப்பிட்ட அந்த நிறுவனத்தின் இலங்கை அரசுடனான வியாபாரத் தொடர்புகளை அந்த பத்திரிகை விமர்சித்ததாம். அதனால் தான் அவர்கள் கருத்துச் சுதந்திரத்தின் கழுத்திலே கத்தியை வைத்ததாக அந்த பத்திரிகை கண்ணீர் விட்டு கதறுகிறது. முதலாளித்துவத்திற்கும், தமிழ் மக்களைக் காட்டிக் கொடுப்போருக்கும் எதிராக போர் தொடுத்த அந்தப் பத்திரிகைக்கு நடந்த அராஜகத்தை, ஜனநாயக மறுப்பை கண்டு சில இணையங்கள், சில கருத்து கந்தசாமிகள் பொங்கியெழுந்து அறிக்கை அணுகுண்டுகளை வீசித் தள்ளியிருக்கிறார்கள்.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு பத்தரமுல்லை தியத்த உயன பூங்காவில் “புத்தி பிரபோதினி” எனும் புகைப்படக் கண்காட்சியை பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, 10.12.2013 அன்று திறந்துவைத்தார்.

அதில் கிளிநொச்சி விட்டுத்திட்டத்துக்கான காட்சிப் படம், வன்னி மக்களை அவர்களின் சொந்த மண் மற்றும் அது சார்ந்த உழைப்பில் இருந்து அகற்றுவதை எடுத்துக் காட்டியது. (பார்க்க படத்தை) 200 வருடமாக லயன் கம்பரங்களில் மலையக மக்கள் வாழந்த படி, எப்படி தோட்டக் கூலிகளாக வாழ்கின்றனரோ அதை வன்னியில் உருவாக்க முனைகின்றனர்.

சூழலில் பெருகிவரும் நச்சுப்பதார்த்தங்கள் இடம்பெயரும் விவசாயிகள்!

வட மத்திய மாகாணத்தின் அநுராதபுரம் மாவட்டத்தில் பரவலாக சிறுநீரக நோய் பரவி வருவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதோடு, இந்நோய் தற்போது வவுனியா, அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு, மொனராகலை, பொலநறுவை ஆகிய மாவட்டங்களிலும் கண்டறியப்பட்டுள்ளது. மிகப் பெரிய சமூக பிரச்சினையாக உருவெடுத்து மெல்ல மெல்ல முழுநாட்டையும் ஆக்கிரமிக்கும் சமூக அவலமான சிறுநீரக நோய் தொடர்பாக தெளிவான அரசியல் ஆய்வுடன் இதற்கு எதிராக மக்களைத்திரட்ட வேண்டியது இடதுசாரிகளின் கடமையாகும். அதற்கான முதற்படி கலந்துரையாடலே ஆகும்.

இனவாதச் சேற்றுக்குள் மூழ்கியுள்ள சமகால இலங்கை அரசியல் சூழ்நிலையில் அதைக் களைந்தெறிய முற்பட்டுள்ள சமவுரிமை இயக்கத்தின் செயற்பாடுகள் இன்றைய காலத்தின் தேவையாகும். இவ்வாறு 22-12-ல் பாரிஸில் நடைபெற்ற சமவுரிமை இயக்க நிகழவில் கலந்து கொண்டு பேசிய "ஓசை" மனோ குறிப்பிடட்டுள்ளார். இந்நிகழ்வில் தொடர்ந்து பேசிய அவர், தமிழ் மக்கள் தங்கள் பிரச்சினைகள் பற்றி அமெரிக்க மேற்குலக நாடுகள் உட்பட ஏனைய சர்வதேசத்திடமும் சொல்லியுள்ளார்கள். இவர்கள் எல்லோரும் தங்கள் நலன்களுக்காவே தமிழ் மக்கள் பிரச்சினைகள் பற்றி பேசி நீலிக்கண்ணீர் வடிக்கின்றார்கள். ஆனால் தமிழ் சமூகமும் அதன் தலைமையும் இதுவரை சொல்லாத இடம் சாதாரண சிங்கள மக்களிடம் மட்டுமேயாகும். அம்மக்களின் ஏகப்பெரும்பான்மையோருக்கு தமிழ் மக்கள பிரச்சினைகள் பற்றி சரிவரத் தெரியாது. இவைகளை சரிவர அம்மக்களுக்கு எட்டப்பட வைப்பின் அவர்களே இலங்கையின் சகல இனவாதங்களையும் முறியடிப்பர் எனக்குறிபிட்டார்.

மதக் குரோதத்தை மனதில் நிரப்பிக் கொண்டு, சிங்கத்தின் வாளை கையிலேந்தி இலங்கைவாழ் முஸ்லிம்களுக்கு எதிராக யுத்தப் பிரகடனம் செய்திருக்கும் காவி உடை தரித்த இனவாத சாமியார்களும் அவர்களுக்கு குற்றேவல் புரியும் ஆசாமியார்களும் பெரும்பான்மை மக்களின் இன உணர்வுகளை தூண்டும் விதத்திலான கோஷங்களை ஏந்திக் கொண்டு, ஆர்ப்பாட்டம் பேரணி என்ற பெயரில் நாட்டை இனவாத சாக்கடையில் மூழ்கடித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்துவாய் பிறத்தலே தர்மம் என்கிறாய்     

இஸ்லாத்தில் சேர்தலே நட்பு என்கிறாய்

இயேசுவில் நுளைதலே அன்பு என்கிறாய்

பௌத்தத்தில் ஜனித்தலே கர்மா என்கிறாய்

இப்படி ஆண்டாண்டாய் மனிதரை மக்கரிகும்   

அத்தனை மதப் போக்கையும் விஞ்சிய என்.ஜி.ஓ.க்களே..!

உங்களின் தலித்திய விளிம்பினில் விடிவாமே..! எப்படி..?

மக்கள் பண்பாட்டுக் கழகம் ஏற்பாடு செய்திருந்த பௌர்ணமி ஒன்றுகூடல் 16.12.2013ம் அன்று “கோ. நடேசய்யரின் வாழ்வும் தொழிற்சங்க அரசியலும்” என்ற தலைப்பில் இடம்பெற்றது. கஹவத்தையில் அமைந்துள்ள விடியல் கல்வியகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்விற்கு ஆசிரியர் செ.செல்வகுமார் தலைமை தாங்கினார். சட்டத்தரணி இ.தம்பையா குறித்த தலைப்பில் கருத்துரையை வழங்கினார்.

சமவுரிமை இயக்கம் தேசியவாதிகளின் கடுமையான எதிர்ப்புக்கும், அவதூறுக்கும் உள்ளாகி வருகின்றது. இலங்கையின் இன மத அரசியல் அடித்தளத்தையே கேள்விக்குள்ளாக்கும் அரசியல் உள்ளடக்கத்தைக் கொண்ட இதன் செயற்பாடு, அறிவுத் துறையினால் கடுமையாக எதிர்க்கப்படுகின்றது. இதன் அரசியல் நடைமுறை செயற்பாட்டை முடக்க, இதன் கோட்பாட்டை சிதைக்க முனைப்புக் கொண்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது.

 

 

தேசியப் பிச்சனைக்குரிய தீர்வை சமவுரிமைக்கான போராட்டம் தராது என்ற வாதம், தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றது. இந்த அடிப்படையில் சமவுரிமை இயக்கத்தை இனவாதம் என்று கூறுமளவுக்கு, இனத் தேசியவாதம் முன்தள்ளப்படுகின்றது. சமவுரிமைக்கான அமைப்பு தொடங்கிய காலம் முதல் இதற்கு எதிரான இன்றைய அவதூறுகள் வரை, சமவுரிமை போராட்டத்தை முடக்குவதையே கோருகின்றது. சமவுரிமையை நிலைநாட்டுவதற்கான போராட்டம் இனவாதமேயொழிய, இனப்பிரச்சனைக்குரிய தீர்வாகவும் அதற்கான செயல் பூர்வமான ஒன்றாகவும் இருக்க முடியாது என்பதே இதில் உள்ள அரசியலாகும்.

 

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE