Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

இல்லை என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை

யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் முழுமையாக குடியமர்த்தப்படவில்லை, யுத்தத்தில் சொத்துக்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்தவர்களுக்கு எவ்வித நிவாரணமோ இழப்பீடோ வழங்கப்படவில்லை, யுத்தத்தில் அவயங்களை இழந்தவர்களிற்கு எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை, சுதந்திரமான ஊடக செயற்பாடுகளிற்கோ அரசியல் செயற்பாடுகளிற்கோ இடமில்லை, இராணுவ முகாம்களிற்காகவும் அதியுயர் பாதுகாப்பு வலயங்களிற்காகவும் அபகரிக்கப்பட்ட நிலங்கள் மக்களிடம் மீளக் கையளிக்கப்படவில்லை, சுதந்திரமான மீன்பிடித்தலிற்கு இன்னும் அனுமதியில்லை, விவசாயத்தை அபிவிருத்தி செய்ய எவ்வித திட்டங்களும் இல்லை, சீரழிந்த நீர்ப்பாசனம் மீள சீராக்கப்படவில்லை, தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் சிறைக்கைதிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை, கைதுகள் கடத்தல்கள் நிறுத்தப்படவில்லை, சேதமடைந்த பாடசாலைகள் புனரமைக்கப்படவில்லை, பொது இடங்களிலிருந்தோ தேவையற்ற இடங்களிலிருந்தோ இராணுவம் விலக்கிக் கொள்ளப்படவில்லை, காணாமல் போனவர்கள் தொடர்பாக எந்த தகவலும் இல்லை, சிவில் நிர்வாகமோ மக்களின் வாழ்வுரிமையோ உறுதி செய்யப்படவில்லை, யுத்தம் நிறைவடைந்து நான்கு வருடங்கள் நிறைவடைய உள்ள நிலையில் இப்படியான இன்னல்களைத் தவிர வேறொன்றும் இல்லை.

மறைந்த போராளிகளிற்கு அஞ்சலி செலுத்தியதற்காக ஒரு மாணவனை, தமிழ்ச் சமுதாயத்திற்காக தம்முயிரை துறந்தவர்களை நினைவு கொண்டதற்காக தாய், தந்தையின் கண் முன்னாலேயே அவர்களின் வாழ்வின் ஒளியை கொன்றிருக்கிறார்கள். இந்த சர்வாதிகார இலங்கை அரசிற்கெதிராக ஒரு சிறு எதிர்ப்பை காட்டினாலும் கொல்லப்படுவீர்கள் என்று பயப்படுத்துவதற்காக ஒரு மாணவனைக் கொன்றிருக்கிறார்கள். கைது, வழக்கு என்று போனால் ஊடகங்களில் வெளிவரும் என்பதனால் கள்ளர்களின் மேல் பழியைப் போட்டு கொலை செய்திருக்கிறார்கள்.

இந்த இதழின் உள்ளே...

  • மக்கள் உரிமைகளுக்கு ஆபத்து!
  • இடதுசாரிய கருத்தாடலுக்கு உயர்ந்த வரவேற்பு
  • அரசாங்கம் அரத்தை நக்கும் பூனையைப் போன்றது
  • வன்னி நிலம் யாருக்கு?
  • சம சுகாதார ஊழியர்கள் அச்சுறுத்தலுக்கு மத்தியில் உண்ணாவிரதம்

மன்னார், திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி நேற்று எட்டாவது நாளாக தோண்டப்பட்ட போது மேலும் ஒரு மண்டையோடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மண்டையோட்டுடன் இதுவரை 44 மனித எழும்புக்கூடுகளும், மண்டையோடுகளும் இந்தக் குழியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

கடந்த முறை ஜெனீவாவில் இலங்கை குறித்த மனித உரிமை மீறல்கள் கூட்டம் நிகழ்ந்தது குறித்து "போராட்டம்" பத்திரிக்கையில் வந்த ஆக்கம் இது. வருகின்ற மாதத்தில் மீண்டும் ஜெனீவாவில் இலங்கை குறித்த மனித உரிமை மீறல்கள் கூட்டம் நிகழவுள்ளது. இலங்கை குறித்து ஜெனீவாவில் எத்தனை கூட்டம் நிகழ்ந்தாலும், அதன் ஒரே நோக்கம் இலங்கையில் அமெரிக்கா, பிரித்தானியா, ஜரோப்பிய வல்லரசுக்களின் பொருளாதார  நலன்களின்  அடிப்படையிலானதே ஒழிய, தமிழ் மக்களிற்கு இழைக்கப்பட்ட அநியாயம் குறித்த கரிசனையின் பாற்பட்டதல்ல என்பதனை இந்த ஆக்கம் மிகவும் தெளிவாக விவரிக்கின்றது.

இல்லை என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை

யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் முழுமையாக குடியமர்த்தப்படவில்லை, யுத்தத்தில் சொத்துக்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்தவர்களுக்கு எவ்வித நிவாரணமோ இழப்பீடோ வழங்கப்படவில்லை, யுத்தத்தில் அவயங்களை இழந்தவர்களிற்கு எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை, சுதந்திரமான ஊடக செயற்பாடுகளிற்கோ அரசியல் செயற்பாடுகளிற்கோ இடமில்லை, இராணுவ முகாம்களிற்காகவும் அதியுயர் பாதுகாப்பு வலயங்களிற்காகவும் அபகரிக்கப்பட்ட நிலங்கள் மக்களிடம் மீளக் கையளிக்கப்படவில்லை, சுதந்திரமான மீன்பிடித்தலிற்கு இன்னும் அனுமதியில்லை, விவசாயத்தை அபிவிருத்தி செய்ய எவ்வித திட்டங்களும் இல்லை, சீரழிந்த நீர்ப்பாசனம் மீள சீராக்கப்படவில்லை, தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் சிறைக்கைதிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை, கைதுகள் கடத்தல்கள் நிறுத்தப்படவில்லை, சேதமடைந்த பாடசாலைகள் புனரமைக்கப்படவில்லை, பொது இடங்களிலிருந்தோ தேவையற்ற இடங்களிலிருந்தோ இராணுவம் விலக்கிக் கொள்ளப்படவில்லை, காணாமல் போனவர்கள் தொடர்பாக எந்த தகவலும் இல்லை, சிவில் நிர்வாகமோ மக்களின் வாழ்வுரிமையோ உறுதி செய்யப்படவில்லை, யுத்தம் நிறைவடைந்து நான்கு வருடங்கள் நிறைவடைய உள்ள நிலையில் இப்படியான இன்னல்களைத் தவிர வேறொன்றும் இல்லை.

மலையக தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு சம்;பந்தமான கூட்டு உடன்படிக்கை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை முதலாளிமார் சம்மேளனத்திற்கும் சம்பள உயர்வு சம்பந்தமான கூட்டு உடன்படிக்கையில் கையொப்பமிடும் தொழிற்;சங்க கூட்டுக்கமிட்டிக்குமிடையில் நடைபெற்று தோட்டத்தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படுவது வழக்கம். இதன்படி சம்பள உயர்வு வழங்கப்படும்போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆறுமுகம் தொண்டமான், ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வேலாயுதம், ஏனைய தொழிற்சங்க கூட்டுக்கமிட்டி சார்பில் இராமநாதன் ஆகியோர் கையொப்பமிட்டு வருகின்றனர்

கடந்த பத்து வருடகாலத்தில், அமெரிக்க ஏகாதிபத்தியம் பல வழிகளிலும் நலிந்த நிலையை அடைந்து வருகிறது. உலகம் இரு அரசியற் துருவங்களாகப் பிரிந்திருந்த, சோவியத் வீழ்ச்சியடைந்த 1990கள் வரையான காலகட்டம் வரை, அமெரிக்கப் பொருளாதாரமும் அதன் வளர்ச்சியும் மேற்படி "இரு அரசியற் துருவ" அடிப்படையிலேயே திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. அக்காலத்தில் பாதுகாப்பு மற்றும் யுத்தம் சார்ந்த ஆயுத உற்பத்தியும், தொழில் நுட்பமும் அமெரிக்காவின் பொருளாதாரத்தில் பாரிய பங்கு வகித்தன. NATO ஒப்பந்தம் ஊடாக மேற்கு ஐரோப்பிய கூட்டாளி நாடுகள், தென்-அமெரிக்க மற்றும் சில ஆசிய, ஆபிரிக்க அடிவருடி நாடுகள் அமெரிக்காவின் ஆயுத - தளபாட மற்றும் யுத்தம் சார் தொழில் நுட்பத்தை இறக்குமதி செய்வதன் மூலம் அதன் பொருளாதாரத்துக்கு பாரிய பங்களிப்புச் செய்தன.

பொய் சொல்லக் கூடாது என்று ஒளவைக்கிழவி பாடினாள். குழந்தைகளை பொய் சொல்லக் கூடாது என்று பாடிய அவள் இன்றைக்கு ஏழு கழுதை வயதில் சிதம்பரம் சொல்லும் பொய்களிற்கு கையிலிருக்கும் தடியால் சிதம்பரத்தின் மண்டையைப் பிளந்திருப்பாள். இந்தியாவின் நிதியமைச்சர், இலங்கைத் தமிழ்மக்களின் இனப்படுகொலை நடந்தபோது உள்துறை அமைச்சராக இருந்த மாண்புமிகுவின் பச்சைப்பொய்யைப் பாருங்கள்.

"இறுதிக் கட்டப்போரின் போது இந்தியாவின் பேச்சைக் கேட்டிருந்தால் பிரபாகரன் உயிரோடிருந்திருப்பார் என இந்திய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். போரை நிறுத்துமாறு இந்தியா இரு தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுத்த போதிலும் இரண்டு தரப்பினரும் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. போரை நிறுத்தச் சொல்லி பிரபாகரனிடம் இந்திய அரசாங்கம் எவ்வளவு சொல்லியும் கடைசிவரை அவர் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. அதனால்தான் அவர் மரணமடைய நேரிட்டது. இந்தியா சொன்னதைக் கேட்டிருந்தால் இன்றைக்கு பிரபாகரன் உயிரோடு இருந்திருப்பார்" என்று சிதம்பரம் கூறினார்.

வேலை முடிஞ்சு வெளியால வந்து ரெலிபோனைத் தூக்கினா, தாமுவின் மெசேச் வந்திருந்தது, நான் பல முறை எடுத்தேன் தொடர்பு கொள்ள முடியவில்லை... எப்படியும் இரவு ஏழு மணிபோல் கட்டாயமாக என் கொட்டலுக்கு வா என்று இருந்தது.

இண்டைக்கு வெள்ளி, அது தான் வரச் சொல்லியிருக்கிறான் என்ற நினைப்புடன் வீடு வந்து, இது அது என்று செய்ய வேண்டிய கடன்களை முடித்து விட்டு ஒரு சின்ன குட்டி நித்திரையும் போட்டு விட்டு, ஓர் இரவு நேரம் கொட்டலில் போய் இறங்கினேன்.

இரவு பகல் என்றில்லாமல் கரியபுகை திறந்த வெளியெங்கும் நிறைந்து வழியும். குண்டுகளின் மரண வேட்டுக்கள் வீசி அடித்த வினாடிகளில் சின்னக்குஞ்சுகளின் சிரிப்புக்கள் செத்துப் போகும். ஓடிக்கொண்டிருந்த மனிதர்களின் வியர்வையுடன் நிகழ்கால வாழ்க்கை, எதிர்கால நம்பிக்கைகள் எல்லாமே கசிந்து காற்றிலே கரைந்து போகும். காட்டுவழி எங்கும் போக்கிடம் இன்றி போய்க்கொண்டிருந்த மனிதர்களிடம் மரணபயம் ஒன்றே மிச்சமிருந்தது. ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மனிதகுலத்தின் மனச்சாட்சியை அந்த மனிதர்களின் மரண ஓலங்கள் பிடித்து உலுப்பிக் கொண்டுதான் இருக்கும். இதயமுள்ளவர்களின் கண்களில் இருந்து கண்ணீரும் சென்னீரும் கரைந்து கொண்டு தான் இருக்கும்.

கடந்த சில தசாப்தங்களில் ஏறக்குறைய முழு உலகமுமே நவ தாரளவாதத்தின் தாக்கத்திற்கு ஆளாகியுள்ளது. சர்வதேச நிதி நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் உட்பட நவ தாராள சிந்தனையாளர்கள், அரசானது பொருளாதார சமூக பரப்புகளில் உள்ள பங்கினை தானே முன்வந்து குறைத்து; பொருட்கள் சேவைகளின் உற்பத்தி, விநியோகம், நுகர்வு மட்டுமல்லாது மனிதனின் பிரதானமான ஏனைய பல செயற்பாடுகளிலும் சந்தைக்கு தீர்மானங்களை மேற்கொள்ள வழிவிட வேண்டும் என குறிப்பிடுகின்றனர்.

விவசாயிகளுக்கு உதவி செய்வதாகக் கூறி வட்டிக்கு விவசாயக் கடன் வழங்கிய வங்கிகள், இப்போது வட்டியையும் முதலையும் வழங்குமாறு விவசாயிகளின் கழுத்துக்களைப் பிடித்து நெருக்கி வருகின்றன. ஏற்கனவே பெருமழை காரணமாக வெங்காயம், கிழங்கு மற்றும் உபஉணவு உற்பத்தியில் அழிவுகள் ஏற்பட்டதனால் விவசாயிகள் பெருநட்டமடைந்தனர். பின்பு வறட்சி காரணமாகப் பெரும்போக நெற்செய்கையிலும் அழிவு ஏற்பட்டது இவ்வாறு நட்டத்தின் மேல் நட்டம் ஏற்பட்ட நிலையில் செய்வதறியாது திகைத்து தடுமாறி நிற்கும் விவசாயிகளை கடன் கொடுத்த வங்கிகள் மிரட்டியும் விரட்டியும் வருவது கண்டனத்துக்கும் விசனத்திற்கும் உரியதாகும். இதனால் சில விவசாயிகள் தற்கொலைக்கும் தற்கொலை முயற்சிகளுக்கும் தள்ளப்பட்டுள்ளனர் எனவே அரசாங்கம் இவ்விடயத்தில் தலையிட்டு விவசாயக்கடன் தள்ளுபடியை செய்து ஏனைய நிவாரணங்களை வழங்கவேண்டுமென விவசாயிகள் சார்பாக எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி வற்புறுத்துகிறது.

புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டிக் கொண்டிருந்தன. ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசமின்றி எல்லோரும் அதற்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். கடைவீதிகள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தன. எந்தவகையிலாவது உழைத்த பணத்தைக் கொண்டு துணிமணிகள் வாங்குவதற்காக மக்கள் கடைவீதிகளில் நடமாடிக் கொண்டிருந்தார்கள். அதேநேரம் கொலன்னாவ பகுதியில் சம்பவமொன்று நடந்து கொண்டிருந்தது. கொலன்னாவையையும், அதனை அண்டிய பகுதிகளையும் நாறடித்துக் கொண்டிருந்த குப்பைமேட்டுக்கு போகும் வழியை மறித்து அப்பிரதேச மக்கள், அங்கே குப்பை கொட்டுவதற்கு எதிராக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் இறங்கியிருந்தார்கள்.

சமூகம் சாந்த ஒரு சினிமா குறித்த விமர்சனத்தை செய்யும் முன் கலை என்றால் என்ன என்ற தெளிவு அவசியமானது. குறிப்பாக விமர்சனம் செய்யும் அறிவியல் அறிஞன், கலை என்றால் என்ன என்ற தெளிவுடன் நின்று அதை அணுக வேண்டும்.

அறிவியலறிஞன் புறநிலை யதார்த்தத்தின் வெளிப்புற உலக நிகழ்வுகளைக் கொண்டு, பொருட்களின் அளவு ரீதியாக அம்சத்தை முதன்மைப்படுத்தியுமே ஆராய்கின்றான். கலைஞன் அகநிலை யதார்த்தத்தின் உட்புற உலக நிகழ்வுகளைக் கொண்டு, பொருட்களின் பண்பு ரீதியான அம்சத்தை கொண்டு ஆராய்கின்றான். அறிவியலறிஞனுக்கும் கலைஞனுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடும், அவர்கள் செயற்படும் தளம் மற்றும் சமூக பாத்திரமும் இதுதான். இந்த வகையில் அறிவியலறிஞன் தர்க்கரீதியாக, புறநிலை யதார்த்தத்தைக் கொண்டு ஆராய்கின்ற போது, கலைஞன் அகநிலைப்பபட்ட யதார்த்தத்தினை தளத்துக்கும் இசைக்கும் ஏற்ப கலையாக்குகின்றான். கலை உண்மையான வாழ்விலும் பார்க்க, வாழ்க்கையை செறிவுள்ளதாக ஒருமுகப்படுத்தப்படுத்துவதாக இலட்சியத்தை அண்மித்ததாகவும் காணப்படுகின்றது. இதைப் படைக்கும் ஒரு கலைஞன் புறநிலைத் தன்மை பற்றி, சரியாகவும் தெளிவாகவும் அறிந்திருக்க வேண்டும். இதை தெளிவாகக் கொண்டிராத போதே அறிவியலறிஞனின் விமர்சனத்தை எதிர்கொள்கின்றான்.

இயற்கை விவசாய விழிப்புணர்வை தமிழ்மண்ணில் விதைத்த நம்மாழ்வாரும், பகுத்தறிவு இயக்கத்தின் செயல் வீரரான திருவாரூர் தங்கராசுவும் தமது மூச்சை நிறுத்திக் கொண்டார்கள். நம்மாழ்வார் இரசாயன உரங்கள் மண்ணை நாசமாக்குவதையும், அந்த உரங்களில் விளைந்த தானியங்கள், காய்கறிகள் நச்சுத்தன்மை அடைவதையும் விவசாயிகளிற்கும், பொதுமக்களிற்கும் எடுத்து சொல்வதில் தமது வாழ்நாள் முழுவதும் உழைத்தார்.

தமிழ்நாட்டு பத்திரிகையாளர், தமிழ் பிரபாகரனை கைது செய்து இலங்கை அரசு சொல்லும் செய்தி என்ன?. "இன்னும் புலிகளும், புலிகளின் ஆதரவாளர்களும் ஓய்ந்து விடவில்லை. ஆனால் நாங்கள் உன்னிப்பாக வேட்டைநாய்கள் போல அவதானித்துக் கொண்டிருக்கிறோம். தமிழர்களிற்காக குரல் கொடுப்பவர்களை, தமிழ் மக்களின் இனப்படுகொலை தொடர்பான சாட்சியங்களை வெளிக்கொண்டு வருபவர்களை, காணாமல் போனவர்களை தேடுபவர்களை வேட்டையாடாமல் விடமாட்டோம்". இந்தச் செய்தியை யாருக்குச் சொல்கிறார்கள்? கொல்லப்பட்டு, காயப்பட்டு இரத்தம் வடிய வடிய மரணத்துள் வாழும் இலங்கைத் தமிழர்களை பயப்படுத்த சொல்கிறார்களா? மொட்டைப் பனை மரங்களும், வரண்ட வயல் வெளிகளும் மட்டுமே மிச்சமாக பாலையாகிப் போன வாழ்வை சுமந்து கொண்டிருக்கும் தமிழ்மக்களை பயப்படுத்த சொல்கிறார்களா?

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE