Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

2014 சர்வதேச மகளிர் தினத்தில் சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பினால்  சரிபார்க்கப்டாத நிறம் என்னும் தலைப்பில் புகைப்பட கண்காட்சி (unseen colour) கட்டுநாயக சுதந்திர வர்த்தக வலய பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.

ஆட்சியாளர்கள் பரந்துபட்ட மக்களிடம் அம்பலப்படும் போது, ஆளும் வர்க்கங்கள் ஆட்சி மாற்றத்தை தீர்வாக முன்வைக்கின்றனர். அதாவது தேர்தல் மூலம் நாட்டை ஆளுகின்ற தனி நபர்களை மாற்றுவதன் மூலம், "ஜனநாயக" மாற்றம் நிகழும் என்கின்றனர். இதுவொரு அரசியல் பித்தலாட்டமல்லவா ? ஆளும் வர்க்கத்துக்கு எதிராக போராடும் மக்கள், அதிகாரத்துக்கு வந்துவிடக் கூடாது என்பதே, "ஆட்சி மாற்றம்" மூலம் முன்வைக்கின்ற அரசியலாகும்.

இந்த வகையில் மீண்டும் மக்களை ஏமாற்றுகின்ற திரிபு இன்று மக்கள் முன் வைக்கப்படுகின்றது. மகிந்தாவை தேர்தலில் தோற்கடித்து ஆட்சியை மாற்றுவதன் மூலம், நிலவும் ஜனநாயக விரோத சூழலை மாற்ற முடியும் என்கின்றனர். ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதியால், அரசியல் ரீதியாகவே இன்று "ஆட்சி மாற்றமே" ஒரு தீர்வு என்ற கோசம் முன்தள்ளப்படுகின்றது.

சர்வதேச விசாரணை குறித்து என்னை பேசவிடவில்லை: அனந்தி எழிலன்

ஜெனீவா சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சர்வதேச போர்க்குற்ற விசாரணை கோரிக்கைகள் தொடர்பாக எதுவும் முன்வைக்காத நிலையில் வடக்கு மாகாண சபையின் உறுப்பினரான என்னையும் பேசுவதற்கு அனுமதியளிக்கவில்லை என்று அனந்தி கூறியுள்ளார்.

கூட்டமைப்பு இதற்கொரு ஆணைக்குழு வைத்து ஜெனீவாவில் விசாரணையை ஆரம்பித்திருக்கலாமே? மெத்தப் படித்தவர்கள் பேசுமிடங்களில் இவவுக்கு என்ன வேலையென சம்பந்தன், சுமந்திரனின் கணிப்பு. இல்லை புலிகளின் உறவுகளும் பேசலாமென்பது ஸ்ரீதரன் எம்.பி. போன்றவர்களின் நிலைப்பாடு. இதனால் வந்த வினையாற்றல்தான் வடமாகாணசபைத் தீர்மானம். இதில் அனந்திக்கு கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லை.

இராக்களில் இருளடித்து மீண்டாலும்

ஊர்களில் நோய்நொடிகள் தீண்டாமல்

தெருமுனையில் காவல் நிற்கும்

சண்டிச் சாமி சிலைகளைப் போல்..,

 

கரைகளில் அலையடித்து மீண்டாலும்

திடுமென சீற்றங்கள் தீண்டாமல்

தடுமென காவல் நிற்கும்

ஈஸ்ட்டர்தீவு ரப்பாநூயி சிலைகளைப் போல்..,

ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து உழைக்கும் வர்க்கப் பெண்கள் தங்களுடைய உரிமைகளை வென்றெடுப்பதற்க்காக உலக மகளிர் உரிமைகளுக்கான போராட்ட தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் திகதி அனுஸ்டிக்கப்படுகின்றது. தங்களது உரிமைகளை வென்றெடுப்பதற்க்காக உழைக்கும் வர்க்க பெண்கள் நீண்ட காலமாக போராட்டங்களை தொடர்ச்சியாக நடாத்திக் கொண்டு இருக்கின்றார்கள்.

18ஆம் நூற்றாண்டில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றினர். மகளிர் வீட்டு வேலைகளை செய்யும் பொருட்டு வீடுகளில் முடக்கி வைக்கப்பட்டிருந்தனர். பெரும்பாலான பெண்களுக்கு ஆரம்பக் கல்வி கூட மறுக்கப்பட்டது. மருத்துவமும் சுதந்திரமும் என்னவென்று கண்ணில் காட்டப்படாமல் இருந்த காலம் அது.

ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து உழைக்கும் வர்க்கப் பெண்கள் தங்களுடைய உரிமைகளை வென்றெடுப்பதற்க்காக உலக மகளிர் உரிமைகளுக்கான போராட்ட தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் திகதி அனுஸ்டிக்கப்படுகின்றது. தங்களது உரிமைகளை வென்றெடுப்பதற்க்காக உழைக்கும் வர்க்க பெண்கள் நீண்ட காலமாக போராட்டங்களை தொடர்ச்சியாக நடாத்திக் கொண்டு இருக்கின்றார்கள்.

18ஆம் நூற்றாண்டில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றினர். மகளிர் வீட்டு வேலைகளை செய்யும் பொருட்டு வீடுகளில் முடக்கி வைக்கப்பட்டிருந்தனர். பெரும்பாலான பெண்களுக்கு ஆரம்பக் கல்வி கூட மறுக்கப்பட்டது. மருத்துவமும் சுதந்திரமும் என்னவென்று கண்ணில் காட்டப்படாமல் இருந்த காலம் அது.

வெகுஜன இயக்கங்களின் அடிப்படை என்பது, ஒடுக்கப்பட்ட பல்வேறு வர்க்கங்களின் முரணற்ற பொதுக்கோரிக்கையை இணைக்கும் பொதுத்தளம். இது பரந்துபட்ட வெகுஜனங்கள் பங்கு கொள்ளக் கூடிய, சமூக இயக்கத்துக்கு வழிகாட்டுகின்றது. இதில் பல்வேறு கட்சிகள், சமூக இயக்கங்கங்கள் கூட முரணற்ற (இந்த) ஜனநாயகக் கோரிக்கைளுடன், தங்களை இணைத்துக் கொண்டு போராடுவதற்கான வெளியும் கூட.

அதேநேரம் அவ் வெகுஜன இயக்கத்தில் பங்கு கொள்ளும் ஒரு கட்சி கொண்டிருக்கக் கூடிய அரசியல் நிலைப்பாடுகளை உள் நுழைப்பது அல்லது அதன் அடிப்படையில் வெகுஜன அமைப்புடன் முரண்படுவது, வெகுஜன இயக்க செயற்பாட்டையும் அதன் நோக்கத்தை அழிக்கின்ற அரசியல் முன்முயற்சியாகவே இருக்கும். ஒரு கட்சி கொண்டு இருக்கக் கூடிய உயர்ந்தபட்சத் திட்டங்களை, வெகுஜன இயக்கத்தில் தேடுவதும், அதன் அடிப்படையில் இந்த வெகுஜன இயக்கத்தை கேள்விக்கு உள்ளாக்குவதும் வெகுஜன இயக்கத்தின் அவசியத்தை மறுப்பதும், அந்த அரசியல் செயற்பாட்டை இல்லாதாக்குகின்ற அரசியல் முயற்சியுமாகும.

உலகம், நாங்கள், வாழ்க்கை இவை அனைத்தும் அடிக்கடி மாறுகிறது. இம் மாற்றங்களை கவனத்தில் கொண்டு, அதன் பின்னணியில் காணப்படும் உண்மையை விளங்கி கொள்ளாமல் வாழுகின்ற 'தார்மீகமற்ற உலகத்தில்" பெண்கள் என்ற வகையில் சாதிக்க வேண்டும் என நினைப்பதற்க்குப் பதிலாக, சாதிப்பதற்க்கான காலம் எழுந்துள்ளது. பெண்கள் என்ற வகையில் இந்த சமூகத்தில் நாங்கள் வாழ்ந்து வந்த வாழ்க்கையை திரும்பிப் பார்த்தால் உண்மையில் எமக்கு வாழ்க்கை இருந்ததா? பல நுற்றாண்டுகால வரலாற்றில், பெண்கள் என்ற வகையில் நாம் சமூகத்திற்கு சமமான சேவையை வளங்கியிருந்தாலும் இதுவரையில் அதற்க்குரிய பெறுமதி எமக்கு கிடைக்கவில்லை. இந்நிலைமையை முழுசமூகமும் சாதாரணமானதாக கருதியிருக்கலாம் ஏனெனில் நாம் பெண்கள் என்பதிலாகும்.

ஜெனீவாவில் மகிந்தாவிற்கு வழங்கப்பட்டுள்ள "அமெரிக்க நன்கொடையால்" அரச தரப்பு அளிவில்லா ஆனந்தத்தில் உள்ளது. ஐ.நா.வில் தர்மிஸ்டன் அறிக்கை, நவநீதம்பிள்ளையின் சர்வதேச விசாரணையுடன் கூடிய இன்னோரன்னவெல்லாம் இயலாமையின் பாற்பட்டு, கிடப்பில் போடப்படவுள்ளன. தவிரவும் தான் குற்றவாளியானால் தனக்கு மின்சார நாற்காலிதான் என கூறிவரும் மகிந்தாவை சரத் பொன்சேக விஞ்சுகின்றார்.

"போர்க்குற்றங்கள் தொடர்பாக எவரேனும் மின்சார நாற்காலியில் அமர்த்தப்படும் நிலை ஏற்பட்டால் அது நானாகவே இருக்கும் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். யுத்த களத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் அங்கு பணியாற்றிய தளபதிகளே பொறுப்புக்கூறக் கூடியவர்கள். கொழும்பில் அமர்ந்து கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் யுத்த களத்திற்கு பொறுப்பு சொல்ல முடியாது. போர்க்குற்றச்சாட்டுக்கள் முன்வைத்து மின்சார நாற்காலியில் அமர வைத்து தண்டிக்கப்பட்டால் அந்தத் தண்டனை எனக்கே விதிக்கப்பட வேண்டும்."

நீறு பூத்த நெருப்பு போல் இந்த அமைதிக்கு உள்ளே மறைந்து கிடக்கும் பல்வேறு சூழ்ச்சிகள் ரகஸியமாகவே வளர்ந்துக் கொண்டிருக்கின்றன. தமிழ் நாட்டில் நடக்கும் சிங்கள எதிர்ப்பும், இலங்கையில் சிங்கள மக்கள மத்தியில் நிலவும் தமிழ், முஸ்லிம் எதிர்ப்பும் அமைதியாக சுடர்விட்டுக் கொண்டிருக்கிறது.

எதிர்காலத்தில் பெரியதொரு பேரழிவை ஏற்படுத்தக் கூடிய விதத்தில் இது கொழுந்து விட்டு எரிய கூடிய ஆபத்தும் அந்த அமைதிக்குள் இருப்பதாகத் தெரிகிறது. இந்தப் பிரச்சினையிலுள்ள சிறப்பம்சம் என்னவென்றால் இது குறித்து காக்கப்படும் அமைதிதான். அரசாங்கம் தனது அரசியல் சூதாட்டத்திற்காக இந்த சூழ்ச்சிகளை உரமிட்டு வளர்த்து வருவது தெரிகிறது. இந்த நிலைமையில் எதிர்க்கட்சிகள் இஞ்சி தின்ற குரங்குகளைப் போல் செய்வதறியாது நிலை தடுமாறிப் போயிருக்கின்றன.

 

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? : பகுதி – 32

பாட்டளி வர்க்க சர்வாதிகாரத்தை பாதுகாக்கும் போராட்டத்தில், ஸ்டாலின் இழைத்த தவறுகள் என்ன? ஏன்? எப்படி இழைக்கப்பட்டது?

ஸ்டாலின் பற்றிய மார்க்சிய ஆய்வுகள் எப்போதும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பாதுகாக்க நடத்திய வர்க்கப் போராட்ட திசையில் பகுத்தாய்வு செய்கின்றது. ஆனால் இடதுசாரி பெயரிலும், புத்தக புத்திஜீவிகள் பெயரிலும் மார்க்சியமல்லாத நடைமுறையில் இருந்து, மார்க்சியத்தின் பெயரில் வெளிவரும் கருத்துகள், மார்க்சியத்துக்கும், ஏகாதிபத்தியத்துக்கும் இடையில் ஒரு இடை நிற்றல் ஊடாக கண்டறியும் நடுவழிப் பாதை வழியாக ஸ்டாலினை கொச்சைப்படுத்துகின்றன. சர்வதேச மனிதஉரிமை அமைப்பின் கோட்பாட்டு நிலையில் ஜனநாயகத்தையும், வன்முறையையும், சர்வாதிகாரத்தையும் கோட்பாட்டளவில் வகுத்துக் கொள்ளும் இவர்கள், ஸ்டாலின் இடத்தில் யார் இருந்தாலும் இதுதான் நடக்கும் என்கின்றனர். பின்தங்கிய நாட்டின் குறிப்பான நிலை, விவசாய குணாம்சம், ஸ்டாலினின் முரட்டுக் குணம், ஜனநாயகத்தை ஏற்காதன் விளைவு, மேற்கு நாட்டு ஜனநாயகத் தன்மையை புரிந்து கொள்ளாத சமூகத்தின் குறைபாடான குணாம்சம், சோசலிசத்தை வன்முறையூடாக கட்டும் கோட்பாடு, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கொண்டு தனி ஒரு கட்சியாக உருவான ஜனநாயகமற்ற போக்கு, ஆரம்பம் முதலே லெனின் தலைமையில் வன்முறையை அடிப்படையாக கொண்டமையும், சோவியத்தின் புரட்சிக்கு மேற்கு நாடுகளின் புரட்சி உதவாமை என பல காரணத்தைச் சொல்லி, ஸ்டாலினை மறுப்பதில் காலத்தை ஒட்டி, அவதூறுகளை பரப்புகின்றனர்.

altமாகாணசபை தேர்தல்கள் நடைபெறவிருக்கும் மேல் மற்றும் தென் மாகாண மாவட்டங்களில் கருத்தரங்குகளையும் கலந்துரையாடல்களையும் நடாத்த முன்னிலை சோஸலிஸக் கட்சி தீர்மானித்துள்ளது. 

"தமிழீழ விடுதலைப்புலிகள் பொதுமக்களை கொலை செய்த சந்தர்ப்பங்கள் ஒருபோதும் நிகழ்ந்திருக்கவில்லை. தமிழீழ விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரையில் பொதுமக்களை மிரட்டிய குற்றச்சாட்டுக்களை நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். அதனை நாம் மறுக்கவுமில்லை. ஆனால் ஒரு போதும் பொதுமக்களை அவர்கள் கொலை செய்தார்கள் என கேள்விப்படவில்லை. அவர்கள் அவ்வாறு செய்ததுமில்லை"

கதவைத் திறப்பதற்கு முன்னரே சத்தம் வெளியாலே பெரிசாய்க் கேட்டது. ஞானமண்ணையின்ரை பெருத்த குரல் கோபக் கனலாய் வெடித்துப் சிதறிக் கொண்டிருந்தது.

சந்திராக்கா ரெலிபோன் அடிச்சுக் கூப்பிட்டதால் தான் நான் இங்கே உடனே வந்தனான்.

வாடா வா... அப்ப சொல்லச் சொல்ல எல்லாத்தையும் பிழையெண்டு பேசுவாய்... இப்ப வந்து கேள்.... எல்லாம் எங்கே வந்து நிக்குதெண்டு.

அண்ணை முதலிலே இந்தச் சத்தம் போடுறதை கொஞ்சம் நிப்பாட்டுங்கோ.. அக்கம் பக்கத்தவன் கேட்டிட்டு பொலிசுக்கு அடிச்சுச் சொல்லப் போறான்.

ஜயோ.... இப்ப எத்தனை தரம் சொல்லிப் போட்டன்... இந்த மனுசன் ஏதோ குடி முளுகிப் போனது போலே ஆர்ப்பாட்டம் செய்து உந்தத் துள்ளல் துள்ளிக் கொண்டிருக்கிறது.

சர்வதேச விசாரணை இல்லாத பிரேரணையே ஜெனிவாவில்!

"ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையின் 25 ஆவது கூட்டத் தொடர் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் இம்முறை இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள பிரேரணையில் சர்வதேச விசாரணை என்ற பதம் உள்ளடங்காது என்றும் சுயாதீன விசாரணை என்ற விடயம் மட்டுமே இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.!"

கிளிஞ்சுது போங்க! சர்வதேச விசாரணை, மகிந்தாவுக்கு தூக்கு என்று தானே உங்கை எல்லாரும் குத்தி முறியுறாங்க. நீங்கள் என்னன்டா இப்பிடிப் போடுறியள். சர்வதேச விசாரணை சர்வஜன வாக்கெடுப்பு, தமிழ்ஈழம் எனப் புறப்பட்டுள்ள "தமிழகத்தின் உணர்வுகளிலும் மேலான உணர்வுகளுக்கு" வயித்திலை புளியைக் கரைத்து விட்டீர்களே! ஜெனீவா என்றால் இப்பிடிதான் என்று சொன்னால் சொல்லுறவர்களையும் துரோகிகள் என்று சொல்லுறவர்களும் விளங்கிக் கொண்டால் சரியுங்க.

தம் மழழை செல்வங்களை நினைத்தப்படி வைத்தியர்களாகவோ பொறியியலாளர்களாகவோ ஆக்கிட முடியாவிடினும் கனவேனும் காணக் கூடியதாகவுள்ளது. குறைந்த பட்ச கல்வி அறிவையேனும் பிள்ளைகளுக்கு பெற்றுக் கொடுக்க கூடியதாக உள்ளது. இதற்கு காரணம் கல்வி இலவசமாக கிடைப்பதாகும். ஆனால் தொடர்ந்து நிலைமை இப்படியே இருக்க போவதில்லை. அரசு இது வரை இலவசமாக வழங்கி வந்த கல்வியை மெல்ல மெல்ல தனியார் கைகளில் ஒப்படைத்து வருகின்றது. எதிர் காலத்தில் பெற்றோர்களிடம் எவ்வளவு பணம் இருக்கின்றதோ அந்தளவிற்கு தான் பிள்ளைகள் கல்வி கற்க முடியும்என்ற நிலை உருவாகி வருகின்றது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE