Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

இலங்கை ஆளும் வர்க்கம் இனவாத மூலமாக மட்டும் மக்களை அடக்கியாள முடியாத நிலையில், இன்று புலி தேவைப்படுகின்றது. 30 வருடமாக புலியைக் காட்டி ஆண்டவர்கள், புலியை தோற்கடித்தன் மூலம் அரசியல் ரீதியாக தனிமைப்பட்டு விட்டனர். பெரும்பான்மையின மக்களுக்கு எதிரியை காட்டி ஏமாற்ற முடியதா நிலையில், அவர்கள் அரசிற்கு எதிராக அணிதிரண்டு போராட எழுவதனை தவிர்க்க, மீண்டும் புலி தேவைப்படுகின்றது. அதாவது மக்கள் தமது எதிரியாக அரசைப் பார்க்காமல் இருக்க வேண்டுமென்றால், மக்களுக்கு ஒரு எதிரியை உருவாக்கிக் கொடுக்க வேண்டி நிர்ப்பந்தத்தில் அரசு தடுமாறுகின்றது. புதிய புலி வேட்டை, இப்படித்தான் மேடையில் அரங்கேறியது.

மழை போல் பொழிந்து தள்ளபட்டுக்கொண்டிருந்த குண்டுகளிடம் இருந்து தப்ப பதுங்கு குழிகளை தேடி பாய்ந்து ஓடினார்கள். காடுகளிற்குள் பாம்புகள் சீறிக் கொண்டிருந்த பற்றைகளிற்கு பக்கத்தில் பயந்து ஒளிந்திருந்தார்கள். ஆண்களிற்கும், பெண்களிற்கும் மரணம் அங்கு பொதுவாக இருந்தது. ஆனால் பெண்கள் மீது அங்கு இன்னுமொரு கொலை நடந்தது. அது மரணத்தை விட கொடுமையானது. மரணத்துடன் எல்லாம் முடிந்து விடும். ஆனால் கரும் பச்சை சீருடை அணிந்தவர்களால் சிதைக்கப்பட்ட பெண்களது உடலும், உயிரும் வாழ்நாள் முழுதும் மரணத்தில் வாழும். அவர்கள் சிறுமிகள், இளம் யுவதிகள், நடுத்தரவயது பெண்கள், உடல் தளர்ந்த முதியவர்கள் என்று எவரையும் விட்டு வைக்கவில்லை. இறந்த பெண் போராளிகளின் உடல்களை கூட வெறி கொண்டு சிதைத்தார்கள்.

இனரீதியான ஒடுக்குமுறையை, அதே இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு இனரீதியாக எதிர்கொள்வது சரியானதா!? இது இனவொடுக்குமுறைக்கு தீர்வைத் தருமா? இனரீதியாக ஒடுக்குபவனின் அரசியல் பொருளாதார நோக்கத்தை ஆராய்ந்து அதற்கு எதிராக போராடுவதற்கு பதில், இனவொடுக்குமுறை வடிவத்தை மட்டும் எதிர்க்கின்ற இனவாத அரசியல் தவறானது. இது அதே இனவாதத்தைப போற்றி தனதாக்குவதுடன், ஒடுக்குபவனின் அரசியல் பொருளாதார நோக்கத்தை பாதுகாக்கின்ற படுபிற்போக்கான அரசியலாகி விடுகின்றது.

மகிந்தா இனவெறிக்கு குழலூதும் கண்ணனாகியுள்ளார்!

ஜாதிக பல சேனா எனும் அமைப்பு நேற்றைய தினம் கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் காடையர்கள் போல் புகுந்த பொது பல சேனா அமைப்பினர் ஊடகவியலாளர் மாநாட்டை தடுத்து நிறுத்தியதோடு, வந்திருந்த ஒரு சில பிக்குமாரையும் மௌலவிமாரையும் அங்கிருந்து விரட்டியடித்தனர்.

மன்னார் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், வில்பத்து பிரச்சினை உட்பட பொது பல சேனாவினர் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தெளிவு படுத்துவதற்காகவே இந்த ஊடகவியலாளர் மாநாடு ஏற்பாடு செய்திருப்பதாக ஏற்பாட்டாளர்கள் பக்ஸ் மூலம் அறிவித்திருந்தனர்.

பொன்டாராஎன்ற பன்னாட்டு நிறுவணத்தின் உற்பத்தியான அங்கர், மெலிபன், டயமன்ட் பால்மாவில் டி.சி.டி. (டைசை யான்டியாமைட்) என்ற இரசாயனப் பொருள் கலந்துள்ளதாக கூறி தடை செய்த அரசு, மக்கள் நலனில் இருந்து இதைச் செய்யவில்லை. மக்கள் நலன் சார்ந்த அக்கறையிலான முடிவுவல்ல, வேறு சொந்த நலன்கள் சார்ந்த முடிவாகும். இலங்கை அரசு மக்களின் உடல் நலத்தில் அக்கறை கொண்ட ஒரு அரசு அல்ல. வெலிவேரியாவில் சுத்தமான நீரை கேட்ட மக்களையே, சுட்டுக் கொன்ற அரசு அல்லவா இது.

 

இரசாயனம் அங்கர், மெலிபன், டயமன்ட் பால்மாவில் மட்டுமல்ல, எல்லா உணவு சங்கிலித் தொடரிலும் காணப்படுகின்றது. வடமத்திய மாகாணத்தில் அதிகரித்த சிறுநீரகம் தொடர்பான நோய்களுக்கு காரணம் விவசாய உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இரசாயான உரவகைகளும், கிருமிநாசினிகளும் காரணமாக இருக்கின்றது. இந்த வகையில் ஆசனிக், கட்மியம், ஈயம் என்பன நிலத்திலும், நிலத்தடி நீரிலும், உற்பத்தி பொருட்களிலும் காணப்படுவதுடன் பலவித நோய்கள் உருவாகின்றது. இதை உணவாகக் கொள்ளும் கால்நடை உணவுகள் ஊடாகவும், மனித உடலில் புகுகின்றது.

இன்று கொள்கைளும், நோக்கங்களும், நடைமுறைகளுமற்ற, உதிரி வர்க்கங்களைக் கொண்டு குறுங்குழுக்கள் தோற்றுவிக்கப்படுகின்றன. இதேயடிப்படையிலேயே தனிநபர்கள் கூட அரசியல் குதர்க்கங்களையும், தர்க்கங்களையும் முன்வைத்து, தங்களை வேறுபடுத்துவதன் மூலம் தம்மை முன்னிறுத்துகின்றனர். இவை அனைத்தும் இலங்கையின் ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்து முன்னெடுக்கப்படும் பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் தோற்றத்துடன், அதற்கு எதிரான ஒன்றாக முனைப்பு பெற்று வருகின்றன.

இலங்கையையும், சிங்கள மக்களையும், புத்த மதத்தையும் காப்பாற்றிய இலங்கேஸ்வரன், துட்ட கைமுனு எல்லாளனோடு வாள் சண்டை போட்டு தமிழர்களிடமிருந்து இலங்கையை காப்பாற்றினான். நவீன கைமுனு மகிந்தா கொழும்பிலிருந்து கொண்டே இலங்கையை காப்பாற்றினார் என்றெல்லாம் மண்டையில் மயிரை வழித்தால் மட்டும் போதும் புத்த பிக்குவாகி விடலாம் என்ற மகத்தான கொள்கை கொண்ட இலங்கை பிக்குகளால் போற்றப்படும் அதி உத்தம ஜனாதிபதி மகிந்த கவலையோடு ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தார். அடுத்த தேர்தலிலே வெல்ல முடியுமா என்ற பெரும் கவலையில் அவர் ஆழ்ந்திருந்தார்.

இறந்தவர்களுக்கும் அரசு தடை விதித்துள்ளது!

இலங்கை அரசினால் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் மற்றும் தொடர்புடைய நபர்கள் பற்றி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில் இறந்தவர்களின் பெயர்களும் வெளியாகியுள்ளன. இவர்களால் தடை செய்யப்பட்டுள்ள கருணாநிதி துரைரத்தினம் எனும் நபர் கடந்த 2012 ம் ஆண்டு மார்ச் மாதம் 19 ம் திகதி மரணமடைந்துள்ளார் அவரது மரண அறிவித்தல் மற்றும் கண்ணீர் அஞ்சலி இணையங்களில் வந்துள்ளதை அரசின் துப்பறியும் பிரிவின் கவனத்திற்கும் சமர்ப்பணமாக்கலாம். இனிமேல் கட்டுநாயக்காவில் துரைரத்தினம் எனும் புலமபெயர் நபர் யாரேனும் பிரயாணம் செய்ய முற்பட்டால் அவர் கதி அதோ கதிதான். இவர்களால் அவசரம் அவசரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள கோபி புலிகள் அமைப்பு பற்றியும் முன்னுக்குப் பின் முரணனான பல கிண்டக்க முண்டக்கங்க சோடனைகளையும் காணமுடிகின்றது.

அது ஒரு வைத்தியக் கலாநிதியின் வீடு. அப்போது எனக்கு பத்து வயதிருக்கும். அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு உள்ளே நுழைகிறேன். ஊதுபத்திகள் வாசத்தைப் பரப்பியபடி புகை விடுகின்றன. சந்தனமும், பன்னீரும் சேர்ந்து நறுமணம் வீசுகின்றன. காவியுடை அணிந்த ஒருவரின் படத்திற்கு முன்னால் விழுந்து கும்பிடுகிறார்கள். அவரின் படத்திலிருந்து குங்குமம் கொட்டுகிறதாம். அவர் கடவுளின் அவதாரம் என்று அம்மா சொன்னா. அவரின் தலை பொப் பாடகர் ஏ.இ.மனோகரனின் தலை போல சுருள், சுருளாக ஸ்பிரிங் தலையாக இருந்தது. குங்குமம் கொட்டுவதற்கு பதிலாக இனிப்பு கொட்டினால் எப்படி இருக்கும் என்று யோசித்தேன். அதுவும் அய்ந்து சதத்திற்கு ஒன்று என்று விற்ற தோடம்பழ இனிப்பு எனப்படும் சிவப்பு நிற இனிப்பாக இருந்தால் இன்னும் நல்லது என்று நினைத்தது இன்றும் ஞாபகம் இருக்கிறது. ஆனால் படத்தில் இருந்து இனிப்பு ஒருநாளும் கொட்டவில்லை. கடவுளின் அவதாரமும் கான்சர் வந்து செத்துப் போய் விட்டார்.

 

"71ஏப்பிரல் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களின் வீரப்பிரதாபங்களை ஞாபகப்படுத்துவது மட்டுமே இந்த நினைவு கூரும் நிகழ்வுகளின் மையமான விடயமாக இருக்கக் கூடாது. கிளர்ச்சி வீரர்களின் வீரபிதாபங்கள் பேசப்படல் வேண்டும். அத்துடன் ஏன் இந்த வீரர்களின் போராட்டம் தோற்றுப்போனது? அதற்க்கான காரணங்கள் என்ன? இனி எவ்வாறு போராட்டத்தை முன்னெடுத்து செல்வது? பற்றி சிந்திப்பதும், பேசுவதும் தான் இந்த நிகழ்வுகளின் வெற்றியாக இருக்க முடியும்.

லண்டனில் 05/04/2014, 43வது ஏப்பிரல் வீரர்கள் தினம் முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரித்தானிய கிளையினரால் அனுஸ்டிக்கப்பட்டது. இங்கு 71 ஏப்பிரல் கிளர்ச்சி பற்றிய தெரிந்தெடுக்கப்பட்ட கவிதைகள் வாசிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து கலந்து கொண்டவர்கள் 71 கிளர்ச்சியின் போது தாம் சிறுவர்களாக இருந்ததாகவும், அப்போது கிளர்ச்சி குறித்து தாம் கேட்ட கதைகளை ஏனையவர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

புதிய திசைகள் அமைப்பினது குரல் இணைய செய்திகளின் படி, இனியொரு இணையத்தளம் மீது அதில் பிரசுரமாகிய கட்டுரை ஒன்றின் காரணமாக சைபர் தாக்குதல் நடாத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ளதாக அறிகின்றோம். மக்கள், அரசியலாளர் மற்றும் ஊடகங்கள் மீது அடிப்படை ஜனநாயக சுந்திரங்களான பேச்சு, கருத்து, எழுத்து சுதந்திரங்களிற்கு எதிராக நடாத்தப்படுகின்ற எத்தகைய வன்முறைகளையும் நாம் அனுமதிக்க முடியாது.

ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் உரிமைப்போர் சரியான திசை நோக்கின் தடைகள் தானாகத் தகரும்!!

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்துடன் பதினைந்து மேலதிக இயக்கங்களும் தடை செய்யப்பட்டுள்ளதுடன், இந்த அமைப்புக்களுடன் தொடர்வுள்ளவர்கள் என நம்பப்படுகின்ற 424 பேருக்கு இலங்கைக்கு வருவதற்க்கான தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கையிலிருந்து இந்த இயக்கங்களுடன் தொடர்பு வைத்து கொள்பவர்களும் அவற்றின் நிதி உதவிகளை பெறுவோரும் குற்றவாளிகளாக காணப்படுவார்கள்.

அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டை கோபுரத் தாக்குதலின் பின்னர் ஐக்கிய நாடுகள் பாதுக்காப்புச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 1373இன் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் இந்த அமைப்புக்களை வெளிநாட்டுப் பயங்கரவாதிகள் எனத் தடைசெய்கின்றது.

ஐ.நாவில் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட 1373 தீர்மானத்தின் அடிப்படையில் பயங்கரவாதத்தை அழிப்பதற்காக ஒரு நாடு மற்றதற்கு உதவி புரிய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.!

ஒடுக்கப்பட்ட இனங்களுக்கு சமவுரிமையை வழங்கக் கோரி ஒடுக்கும் இனங்கள் போராடுவதும், சமவுரிமையை வழங்கக் கோரும் இந்தப் போராட்டத்துடன் ஒடுக்கப்பட்ட இனங்கள் ஒன்றுபட்டு, சமவுரிமையை பெற்றுக் கொள்வதற்காக போராடுவதுமே சமவுரிமையின் அரசியல் சாரம்.

எந்த இனத்துக்கும் தனிச் சலுகை கிடையாது. ஒரு இனம் அனுபவிக்கக் கூடிய உரிமைகைள் அனைத்தும், எல்லா இனத்துக்கும் உண்டு என்பதே சமவுரிமையின் கொள்கை விளக்கம். தேசங்கள் கொண்டு இருக்கக் கூடிய தன்னாட்சியும் கூட, சமவுரிமையின் அடிப்படையிலானதே ஒழிய ஒரு இனத்திற்கான விசேட சலுகையின்பாலனதல்ல.

தம் மழழை செல்வங்களை நினைத்தப்படி வைத்தியர்களாகவோ பொறியியலாளர்களாகவோ ஆக்கிட முடியாவிடினும் கனவேனும் காணக் கூடியதாகவுள்ளது. குறைந்த பட்ச கல்வி அறிவையேனும் பிள்ளைகளுக்கு பெற்றுக் கொடுக்க கூடியதாக உள்ளது. இதற்கு காரணம் கல்வி இலவசமாக கிடைப்பதாகும். ஆனால் தொடர்ந்து நிலைமை இப்படியே இருக்க போவதில்லை. அரசு இது வரை இலவசமாக வழங்கி வந்த கல்வியை மெல்ல மெல்ல தனியார் கைகளில் ஒப்படைத்து வருகின்றது. எதிர் காலத்தில் பெற்றோர்களிடம் எவ்வளவு பணம் இருக்கின்றதோ அந்தளவிற்கு தான் பிள்ளைகள் கல்வி கற்க முடியும்என்ற நிலை உருவாகி வருகின்றது.

 

இதனை பெற்றோர்கள் தற்போதும் உணர ஆரம்பித்திருக்கின்றார்கள். வீட்டில் உயர்தரம், சாதாரணதரம் அல்லது புலமை பரீசில் பரீட்சைக்கு தோற்றும் பிள்ளைகள் இருக்கும் பெற்றோர்களுக்கு இது தொடர்பான நல்ல அனுபவம் இருக்கும். தனியார் வகுப்புக்களுக்கு சென்றால் தான் நல்ல பெறுபேறுகளை பெற முடியும் என்ற நிலை. மாதாமாதம் ஆயிரக்கணக்கில் மேலதிக வகுப்பு கட்டணங்களிற்காக செலிவழிக்க முடிந்தவர்களாலேயே மேற்படிப்பு பட்டபடிப்பு தொடர்பாக சிந்திக்க முடியும். இதனை தவிர பாடசாலைகளில் அறவிடப்படும் கட்டணங்களும் அதிகம். தற்போது பாடசாலைகளில் பெற்றோர்கள் சிரமதான பணிகளிலும் ஈடுபட வேண்டியுள்ளது.

 

தற்போது பெற்றோர்களாக இருப்பவர்கள் மாணவர்களாக இருந்த போது காணப்பட்ட நிலைமைக்கும் தற்போதைய நிலைமைக்கும் பாரிய வித்தியாசங்கள் ஏற்ப்பட்டுள்ளன. முன்பு பாடசாலையில் சீருடைகள், பாடபுத்தகங்கள் என்பன இலவசமாக வழங்கப்பட்டன. உணவு நிவாரண அட்டைகள் வழங்கப்பட்டன. அரச பேரூந்துகளில் பயணிக்க பருவ சீட்டுக்கள் வழங்கப்பட்டன. பாடசாலைகளில் தவணைக் கட்டணமாக வருடாந்தம் சிறு தொகையே அறவிடப்பட்டது. ஆனால் இன்று நிலைமை வேறு. உணவு நிவாரண அட்டை நிறுத்தப்பட்டு இருபது வருடங்களுக்கு மேலாகிவிட்டது. பாடசாலைகளில் அறவிடப்படும் கட்டணங்களிற்கு அளவே இல்லை.

ஒடுக்கப்பட்ட இனங்களுக்கு சமவுரிமையை வழங்கக் கோரி ஒடுக்கும் இனங்கள் போராடுவதும், சமவுரிமையை வழங்கக் கோரும் இந்தப் போராட்டத்துடன் ஒடுக்கப்பட்ட இனங்கள் ஒன்றுபட்டு, சமவுரிமையை பெற்றுக் கொள்வதற்காக போராடுவதுமே சமவுரிமையின் அரசியல் சாரம்.

எந்த இனத்துக்கும் தனிச் சலுகை கிடையாது. ஒரு இனம் அனுபவிக்கக் கூடிய உரிமைகைள் அனைத்தும், எல்லா இனத்துக்கும் உண்டு என்பதே சமவுரிமையின் கொள்கை விளக்கம். தேசங்கள் கொண்டு இருக்கக் கூடிய தன்னாட்சியும் கூட, சமவுரிமையின் அடிப்படையிலானதே ஒழிய ஒரு இனத்திற்கான விசேட சலுகையின்பாலனதல்ல.

முதலாளித்துவ தேசியவாதிகள் தங்கள் வர்க்க நலன் சார்ந்து, சமவுரிமையை ஒரு நாளும் அங்கீகரிப்பதில்லை. ஜனநாயகப் பிரச்சனையான தேசியத்தை கையில் எடுக்கும் இரண்டு வர்க்கங்களுக்கு இடையில் உள்ள அரசியல் வேறுபாடு, சமவுரிமைக்காக போராடுவதா இல்லையா என்பது தான். அதாவது முரணற்ற ஜனநாயகத்துக்காக போராடுவதா இல்லையா என்பது தான்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE