Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

ஈராக் போருக்கு முன்பு அந்த ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதற்காக அமெரிக்க அரசு பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டது. மேற்குநாடுகளின் ஊடகங்களில் அமெரிக்க மந்திரிகள் உலக சமாதானத்திற்கான போர் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான போர் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று ஊளையிட்டார்கள். பிரித்தானியாவின் தொலைக்காட்சியான சனல் 4இல் அப்போது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த கொண்டோலீசா ரைஸ் அப்படியான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். பொதுநலவாய நாடுகளின் மாநாட்டின் போது யாழ்ப்பாணம் சென்று வந்த ஜோன் சிநோ (John Snow) தான் நிகழ்ச்சியை தொகுத்து நடத்தினார்.

கேள்வி நேரத்தின் போது ஒரு சோமாலியப்பெண் சொன்னார். "நான் பெரிதாகப் படிக்கவில்லை உலகத்து அரசியலும் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் தெரியும் உலகத்தின் முதலாவது பெரிய பயங்கரவாதி அமெரிக்கா தான். நீங்கள் தான் வேறு எந்த நாட்டையும் விட அதிகமாக மற்ற நாடுகளுடன் போர் செய்திருக்கிறீர்கள்.

"மனித உழைப்பும், உழைப்பு சார்ந்த மனிதர்களின் கூட்டுவாழ்வும் தான் விஞ்ஞானத்தின் ஆதாரம். இன்று அப்படித்தான். உழைப்பிற்கான பொது உடமையின்றி தனிமைப்பட்டுப் போன விஞ்ஞானமும், ஆய்வுகூடத்தில் கண்டறியும் நுட்பக் கருவி சார்ந்த அறிவும் கூட, கூட்டு உழைப்பில் மட்டும் தான் மனிதனின் தேவைக்கு ஏற்ப மாற்றிப் பயன்படுத்த முடியும்."

 

உழைத்து வாழும் ஒவ்வொருமனிதனும் உழைப்பைச் செலுத்தும் போது, உழைப்புக்கு உள்ளாக்கும் பொருட்கள் பற்றிய அறிவைக் கொண்டிருக்கின்றான். இந்த அறிவு தான் விஞ்ஞானம். இந்த உழைப்புத் தான் விஞ்ஞானத்தின் மூலம். இரண்டையும் ஒன்றிலிருந்து வேறொன்றாகப் பிரிக்க முடியாது. உழைப்பும் அறிவும் இணைந்தது தான் விஞ்ஞானமாகவும், மனித வாழ்வுக்கான அடிப்படையாகவும் இருக்கின்றது.

தேசத்தின் பெயராலும் தேசபக்தியின் பெயராலும் அபிவிருத்தியின் பெயராலும் மேற்குலக அன்னிய சக்திகளின் ஆசீர்வாதத்தோடு பேரினவாத ஆட்சி அதிகாரம் கோலோச்சி நிற்கும் இன்றைய இலங்கைச் சூழலில் ஜனநாயக மறுப்பும் மக்கள் விரோதச் செயற்பாடுகளும் மிகப்பெரும் சவாலாக எழுந்து நிற்கிறன. ஏகாதிபத்தியத்தின் வழிகாட்டலோடு தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்பன வலிந்து திணிக்கப்பட்டுவருகிறன. இந்தப் பின்புலத்தில் ஆளும் அரச குடும்பத்தின் சர்வாதிகாரத்திற்குப் பின்னால் வாய்பொத்திக் கைகட்டி நிற்கும் அரசியல் கலாசாரமே இன்று மேலோங்கி வருகிறது. இச்சூழலில் தொழிலாளர்களின் புரட்சிகர தினமான மேதினம் ஆளும் வர்க்கதினதும் அதன் அடிவருடிகளினதும் பொய்ப் பிரச்சார மேடைகளாக மாறி வருகின்றன. எனவேதான் மாற்று அரசியற் தலைமைக்கான வெகுஜனத் தளத்தைப் பலப்படுத்துவதே இன்று நாடு வேண்டி நிற்கும் முதன்மைக் கடமையாக உள்ளது. எனவே தொடர்ந்தும் மக்கள் சார்பாக நின்று குரல் கொடுத்து வரும் புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் புரட்சிகர மேதினத்தில் அணிதிரளுமாறு கட்சியின் தேசிய அமைப்பாளர் வெ. மகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ளதோர் சிறு கிராமத்தை எம்மக்கள் கிணறு காவிகள் என கிண்டலாக சொல்வதுண்டு. அதுபோல் தண்ணியில்லாத இரணைமடு குளத்தையும் வடக்கிற்கு காவிச்செல்லும் நிலைக்கு ("இரணைமடு குளக்காவிகள்") வந்துள்ளார்கள் வன்னியின் தமிழ்த்தேசியர்களும், இவர்களின் பாற்பட்ட அரசியல் இஞ்சினியர்களும்.

அண்மைக்காலங்களில் இரணைமடு குளநீரை யாழ் கொண்டுபோகும் திட்டம் பற்றிய வடமாகாண சபையின் மந்திரிகள் பிரதானிகள் உட்பட்ட ஏனைய எதிரும் புதிருமான தமிழ்தேசியர்களுக்கும், இஞ்சினியர்களுக்கும் இடையில் பயங்கரப் பட்டிமன்ற விவாதங்கள் நடைபெற்றதை யாவரும் அறிவீர்கள். ஒரு சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் பொறியியலாளராகி, "குளக்காவலுக்கு" எதிரானவரான எம்.பி. ஸ்ரீதரனையும் எச்சரித்த சம்பவுமுண்டு.

இலங்கை இராணுவத்துக்கு இந்தியா உதவியதாகக் கூறி வழக்கு

இலங்கை இராணுவத்துக்கு இந்தியா உதவியதாகக் கூறி வழக்கு

இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் இந்திய இராணுவம், இலங்கை இராணுவத்துக்கு துணையாகக் களத்தில் செயற்பட்டது என்று குற்றஞ்சாட்டி அதனை விசாரிக்கக் கோரி பொதுநல வழக்கு ஒன்று இந்திய உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காமன்வெல்த் அமைப்புக்கு இலங்கை தலைமை வகிக்கும் காலகட்டத்தில் இந்த அமைப்பின் செயலகத்துக்கு வழங்கிவரும் தன் பங்கு நிதியை இடை நிறுத்தி வைக்கப்போவதாக கனடா அறிவித்திருக்கிறது.

இலங்கையின் மனித உரிமைச் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து கவலைகள் நிலவுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கனடா வெளியுறவு அமைச்சர் ஜான் பேர்ட் கனடியச் செய்தியாளர்களிடையே பேசுகையில் கூறினார்.

செய்தியாளர் தாக்கப்பட்டதற்குக் கண்டனம்

சித்திரைப் புத்தாண்டு தினமாகிய திங்கட்கிழமையன்று யாழ்ப்பாணம் வடமராட்சியைச் சேர்ந்த உள்ளுர் செய்தியாளர் சிவஞானம் செல்வதீபனை அடையாளம் தெரியாதவர்கள் தாக்கியதை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வன்மையாகக் கண்டித்திருக்கின்றது.

அவரைத் தாக்கியவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும், யாழ் செய்தியாளர்கள் சுதந்திரமாகச் செயற்படுவதற்கும் காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கோரியிருக்கின்றது.

இலங்கை ஆளும் வர்க்கம் இனவாத மூலமாக மட்டும் மக்களை அடக்கியாள முடியாத நிலையில், இன்று புலி தேவைப்படுகின்றது. 30 வருடமாக புலியைக் காட்டி ஆண்டவர்கள், புலியை தோற்கடித்தன் மூலம் அரசியல் ரீதியாக தனிமைப்பட்டு விட்டனர். பெரும்பான்மையின மக்களுக்கு எதிரியை காட்டி ஏமாற்ற முடியதா நிலையில், அவர்கள் அரசிற்கு எதிராக அணிதிரண்டு போராட எழுவதனை தவிர்க்க, மீண்டும் புலி தேவைப்படுகின்றது. அதாவது மக்கள் தமது எதிரியாக அரசைப் பார்க்காமல் இருக்க வேண்டுமென்றால், மக்களுக்கு ஒரு எதிரியை உருவாக்கிக் கொடுக்க வேண்டி நிர்ப்பந்தத்தில் அரசு தடுமாறுகின்றது. புதிய புலி வேட்டை, இப்படித்தான் மேடையில் அரங்கேறியது.

 

இலங்கை ஆளும் வர்க்கத்தால் இன்று இதைத் தாண்டி எதையும் வழங்க முடியாது. தேர்தல் மூலம் ஆட்சியாளர்கள் மாறலாம் ஆனால் ஆளும் வர்க்கத்தின் ஆட்சி கட்டமைப்பு மாறுவதில்லை. இன்றைய இலங்கை ஆட்சி அதிகார கட்டமைப்பானது இனவாதம் மதவாதத்தை அடிப்படையாக கொண்டது. எனவே ஆட்சியாளர்களை மாறுவதால் இந்த ஆட்சி அதிகார கட்டமைப்பானது ஒழித்துவிடப் போவதில்லை. உலகமயமாகிவிட்ட ஒற்றைப் பொருளாதாரக் கொள்கைக்கு மாறாக, மக்களை ஆள்வதற்கு வேறு அரசியல் தெரிவு இந்த ஆளும் வர்க்கத்திடம் இன்று கிடையாது.

 

காலனியவாதிகளிடம் அதிகாரத்தைப் பெற்ற சுதேசிகள், தொடர்ந்து இனவாதம் மூலமே மக்களைப் பிரித்தாண்டனர். இந்த அரசியலின் விளைவாகவே, புலிகள் தோன்றினர். புலி-அரசும் கையாண்ட எதிர் எதிரான இனவாத அரசியலும், அதன் இராணுவாதமும் இணைந்து பாசிசத்தை தோற்றுவித்தது. இறுதியில் புலிகள் அழிக்கப்பட்ட போதும்

பாரிஸ் கூட்டத்தில் முன்னிலை சோஸலிசக் கட்சியின் பிரசாரச் செயலாளர் - தோழர் பூபுடு ஜெயக்கொட

கடந்த அரை நூற்றாண்டிற்கு மேற்பட்ட இனவாத அரசியலால், நாடு இனவாத சகதிக்குள் மூழ்கியுள்ளது. இதனால் எம்நாட்டின் இனப்பிரச்சினை தீர்வில்லா பிரச்சினையாகவே தொடர்கின்றது. இந்நிலையில் எம்மீதான அரசின் அடக்குமுறைகளுக்கு மத்தியிலும், நாம் தமிழ்மக்கள் பிரச்சினைகளை, சிங்கள மக்கள் மத்தியில் நேர்மையாக எடுத்துச் சொல்லி வருகின்றோம். இலங்கை அரசு இன்று தமிழ்-முஸ்லிம் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள இன அடக்கு முறைகள், திட்டமிட்ட முறையில் அம்மக்ககளின் பிரதேசங்கள் மீது செய்துவரும் இனவொழிப்பு நடவடிக்கைகளை ஏன்தான் செய்கின்றது.? என்பதையும் விளக்கி வருகின்றோம்.

உக்ரைன் நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிப்பதற்காக சர்வதேச எல்லைக்கு அப்பால் இருந்து பணத்தின் மூலம் சட்டத்துக்குப் புறம்பான செயல்களில் ரஷியா ஈடுபடுவதுடன், பிரிவினைவாதிகளையும் ஊக்குவிக்கிறது.!

கிழக்கு உக்ரைனில் பிரிவினைவாதிகளை ஒடுக்கவும், சர்வதேச சமுதாயத்துடன் இணைந்து உக்ரைனின் சுதந்திரத்தை நிலைநாட்டவும், கிழக்கு மற்றும் மேற்கு உக்ரைனுக்கு ஒரு பாலமாக திகழவும் ரஷியாவுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இதற்கு போரை ஒரு கருவியாகப் பயன்படுத்தக் கூடாது. உக்ரைனின் நலனில் அக்கறை கொள்ளவில்லை எனில் சர்வதேச சமூகத்தில் இருந்து ரஷியா மேலும் தனிமைப்படுத்தப்படும் நிலையை எதிர்கொள்ளும்!

மோடி வந்தால் மோட்சம் கிடைக்கும்! பொன் ராதாக்கிருஸ்னன்

இஸ்லாமியர்களுக்கு நரேந்திர மோடி அரசுதான் முழுமையான, பாதுகாப்பான அரசு என்பதை பல்வேறு புள்ளி விவரங்களுடன என்னால் தெரிவிக்க முடியும்…வை.கோ.

பா.ஜ.கட்சி ஆட்சி அமைத்தால் அயோத்தியில் ராமர் கோயில்! – பாஜக தேர்தல் அறிக்கை

தேர்தலுக்கு பிறகு மதச்சார்பற்ற ஆட்சி அமைப்போருக்கு ஆதரவு: கருணாநிதி!

பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையில் இந்தியாவை பிளவுபடுத்தும் நச்சுக் கருத்துகள் இடம் பெற்றுள்ளது….. சிதம்பரம்

தமிழர்கள் வாழவேண்டுமெனில் ஜெயலலிதா பிரதமராக வேண்டும்: சீமான்

அரசாங்கம் தற்போது வடமாகாண சபைக்கு எதிரான அடக்குமுறையை கையாண்டு வருகிறது. வடமாகாண சபையை சுயாதீனமாக செயற்பட மத்திய அரசாங்கம் தடையாக இருக்கிறது. இந்தியாவின் உதவியுடன் வடமாகாண சபையை தனித்து இயங்குவதற்கு முயற்சிகளை மேற்கொள்வோம் என்று ஐக்கிய தேசிய கட்சி எச்சரித்துள்ளது

நிப்பொன் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பொதுபல சேனவின் மரண பயம் கொண்ட நடவடிக்ககைகளாலேயே மன்னிப்பு கேட்டேன் எனக் கூறியுள்ளார் விஜிததேரர்.

இந்நிலையில் பொறுத்தது போதும் தக்க நடவடிக்கை வேண்டுமென…. அசாத்சாலியும், பொதுபல சேனாவின் நடவடிக்கையை மேலிடம் கொண்டு செல்லப் போகின்றேன் என….ரிசாத் பதியூனும்பொலிஸ் நடவடிக்கையை எதிர்பார்க்கின்றேன்!... நீதி அமைச்சரும் மகிந்த சரணம் கச்சாமி போடுகின்றார்கள்.

தடை செய்யப்பட்ட இயக்கங்களின் பாற்பட்டவர்கள் தங்கள் பக்க நியாயங்களை நீதிமன்றில் வெளிப்படுத்தி. குற்றமற்றவர்கள் என நிரூபிக்க முடியுமென பாதுகாப்பு அமைச்சு ஆலோசனையும் சொல்கின்றது. இது மட்டி-மடையன் கதைபோலதான் உள்ளது.

"சிறிலங்காப் படைகளால் தேடப்பட்டு வந்த கோபி அப்பன் தேவிகன் ஆகிய மூவரும் நெடுங்கேணிப் பகுதியில்  சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. நெடுங்கேணி வெடிவைத்தகல்லுப் பகுதி காட்டுப் பகுதியை அண்டிய வீடொன்றைச் சுற்றி வளைத்த  போது இவர்கள் தப்பிச் செல்ல முயன்றதாகவும்இ அப்போது இடம்பெற்ற மோதலில் கோபி எனப்படும் செல்வநாயகம் கஜீபன் தேவிகன் எனப்படும் சுந்தரலிங்கம் கஜீபன் அப்பன் எனப்படும் நவரத்தினம் நவநீதன் ஆகிய மூவரும் கொல்லப்பட்டதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது".

நெடுங்கேணி பிரதேசத்தில் புலிகள் இயக்கத்தின் இலங்கை தலைவர் என கருதப்படும் கோபி மற்றும் அவருடன் சேர்த்து மேலும் இருவரை சுட்டுக் கொன்றுள்ளதாக அரசு திடீரென அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் வடக்கில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையில் 50க்கும் மேற்பட்டோர் சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் மாஅதிபர் அறிவித்திருந்தார்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE