Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

இன்னுமொரு சர்வதேச தொழிலாளர் தினம் நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் நாங்கள் உங்களை நாடி வந்திருப்பது பெரிய செய்தியொன்றின் ஆரம்பத்திற்காகத்தான்.

எமது நாட்டில் அநேகமானோர் சர்வதேச தொழிலாளர் தினத்தை மே தினம் என்றே அழைக்கின்றனர். தலைநகர் கொழும்பு வீதிகளை அதிரச் செய்யும் விதத்தில் மே முதலாம் திகதி நடக்கும் ஊர்வலங்கள் பிற்பகலில் நடக்கும் அரசியல்வாதிகளின் ஆவேசப் பேச்சுக்களினாலும், அவற்றில் சில இசை நிகழ்ச்சிகளுடனும் நிறைவு பெறும். வாராந்திரப் பத்திரிகைகள், தினசரிப் பத்திரிகைகள் போன்ற அனைத்து பத்திரிகைகளும் மே தினத்திற்காக பல பக்கங்களை ஒதுக்குகின்றன. பெரும்பாலும் புறக்கோட்டையில் வியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளர் தோழர்களின் துன்ப ரேகைகள் படர்ந்திருக்கம் முகங்களுடனான புகைப்படங்கள் அவற்றை அலங்கரிக்கின்றன. ஆனால் அந்த மே தின ஊர்வலங்களில் எப்போதாவது அந்த தோழர்களை நீங்கள் கண்டதுண்டா?

சமவுரிமை இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர். நிகழ்வின் தொடக்கமாக "மலரும்பூக்கள்" என்ற அமைப்பின் உதவியும் அதன் செயற்பாடு முறைபற்றியும் விபரிக்கப்பட்டது. தொடர்ந்து இவ்வுதவிப்பணி கிடைக்கும் பிள்ளைகள் Skype மூலம் இவ்வுதவியின் பயன்பற்றியும் அதற்கான நன்றியையும் தெரிவித்தனர். அப்பணிகளுக்கு பொறுப்பாக நாட்டில் இருந்து ஒழுங்கமைப்போர் மேலதிக விளக்கங்களையும் இப்பணியின் அவசியம் பற்றியும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இயற்கைக்கும், உழைப்புக்கும், நுகர்வுக்கும் இடையிலான மனித உறவுகள் பற்றிய எதார்த்தமே அறிவாகும். இயற்கையில் இயற்கையாக வாழ்தல் அறிவல்ல. இயற்கையைச் சார்ந்து வாழும் மிருகங்கள் கொண்டிருக்கக் கூடிய வாழ்தல் முறை, அதன் அறிவின் பாலானதல்ல. மாறாக தன்னுணர்வு இன்றி அவை செயற்படுகின்றது. இயற்கையுடன் இணைந்த தகவுத் தன்மை கொண்டு இயங்குகின்றது. இயற்கையின் சூழலுடன் படிப்படியாக தன் நிலை மறுத்தல் மூலம் தன்னை இசைவாக்கிக் கொள்கின்றது.

இன்று கொள்கைளும், நோக்கங்களும், நடைமுறைகளுமற்ற, உதிரி வர்க்கங்களைக் கொண்டு குறுங்குழுக்கள் தோற்றுவிக்கப்படுகின்றன. இதேயடிப்படையிலேயே தனிநபர்கள் கூட அரசியல் குதர்க்கங்களையும், தர்க்கங்களையும் முன்வைத்து, தங்களை வேறுபடுத்துவதன் மூலம் தம்மை முன்னிறுத்துகின்றனர். இவை அனைத்தும் இலங்கையின் ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்து முன்னெடுக்கப்படும் பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் தோற்றத்துடன், அதற்கு எதிரான ஒன்றாக முனைப்பு பெற்று வருகின்றன.

 

புலி - அரசு சார்ந்த இரு பாசிசங்கள் அக்கம்பக்கமாக நிலவிய காலத்தில், தமில் பேசும் மக்கள் மத்தியில் இருந்த எல்லாவிதமான சமூக செயற்பாட்டுக் கூறுகளையும் புலிகளும் அரசும் அழித்தனர். இக்காலத்தில் நடைமுறை சார்ந்த சமூக-அரசியற் செயற்பாடுகள் அனைத்தும் முடக்கப்பட்ட நிலையில், ஒடுக்கப்பட்ட வர்க்க விடுதலைக்கான அரசியல் முற்றாகச் செயலிழந்து போனது. இந்த விசேடமான வரலாற்றுச் சூழலில் குழுக்கள் மற்றும் தனிநபர்கள் சார்ந்த சிந்தனைகளும் செயற்பாடுகளும் தவிர்க்க முடியாதாகவும், சில சந்தர்பங்களில் இவர்களின் இருப்புதேவையானதாகவும் தர்க்க ரீதியானதாகவும் கூட இருந்தது.

கிளிநொச்சியில் மூதாட்டி ஒருவரை பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் 64 வயதான பத்மாவதி என்று காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹண பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

மீளிணைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள விடுதலைப் புலிகளின் எதிர்காலப் பயன்பாட்டிற்காக காணி ஒன்று இந்தப் பெண்ணின் பெயரில் வாங்கப்பட்டிருப்பதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.

தமிழர் நலன் சார்ந்த போராட்டங்களில் என்னுடன் இணைந்து பணியாற்றியவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு கொள்கைகளைக் கொண்ட கட்சிகளோடு இணைந்து தேர்தலைச் சந்திக்கிறார்கள். இந்த நிலைப்பாட்டில் எனக்கு உடன்பாடு இல்லை. இதனால் இதுபோன்ற கொள்கை முரண்பட்ட கூட்டணிகளை ஆதரிக்க இயலவில்லை'

வாய் பேசா நகைச்சுவை நடிப்பால் உலக அரசியல் அதிகார வர்க்கத்தின் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் சார்லி சாப்பிளின். The Great Dictatorபடத்தில் சாப்ளின் இறுதியில் பேசும் வசனங்கள் மெய் சிலிர்க்க வைக்கும் வசனங்கள் ஆகும்.

"மிக அதிகம் சிந்திக்கிறோம், மிகச் சிறிதே உணர்கிறோம்.

இயந்திரங்களை விடவும் நமக்குத் தேவையானது மனிதத்தன்மை.

கெட்டித்தனத்திலும் மேலாக நமக்குத் தேவையானவை

இரக்கமும், மென்மையும்.

இப்பண்புகளின்றி வாழ்க்கை வன்முறையானதாகும்

யாவும் இழக்கப்பட்டுவிடும்".!

பிரபல தென் அமெரிக்க இலக்கியவாதியான கேப்ரியல் கார்ஸியா மார்குவேஸ், நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த மார்ச் 31 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு வார சிகிச்சைக்குப் பின் மெக்ஸிகோ நகரில் உள்ள சொந்த வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் வியாழக்கிழமை இறந்தார். "கேபோ' என இலக்கிய வட்டத்தில் செல்லமாக அழைக்கப்பட்டார் மார்குவேஸ்.

அரிது அரிது இலங்கையில் இடதுசாரிகளைப் பெறுதல்! அதனிலும் அரிது இடதுசாரிகளில் இவர்போல் ஒருவரைப் பெறுதல்! அதனிலும் கொடிது இடதுசாரியத்தின் கொள்கைகளை பேரினவாதத்திடம் அடகு வைத்து தங்கள் அரசியல் சீவியத்தை ஓட்டுவது!

பொதுபல சேனா இயக்கத்தின் பௌத்த பிக்குகளின் ஒழுக்கக் கேடான செயற்பாடுகள் வீடியோ ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படும் என ஜாதிக பலசேனா இயக்கம் அறிவித்துள்ளது. தம்மை துண்டு துண்டாக வெட்டப் போவதாக பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் அச்சுறுத்தியதாக வட்டரக்க விஜித தேரர் தெரிவித்துள்ளார்.!

தமிழர் பிரதேசத் தமிழர்கள் இனி ஒரு போதும் தங்களை சுத்தமான தமிழர்கள் என கூற முடியாதாம். ஏனெனில்…. எங்கள் இராணுவ வீரர்களின் இரத்தம் அனைத்துத் தமிழர்களிடம் (இரத்தம் கொடுப்பதால்) ஓடுகின்றதென  வடபகுதி "இராணுவப்பிரிவின் உயர்தர வாலில்லா வானரம்" ஒன்று இப்படியொரு இனவெறிக உளவியல் கருத்தியலை இட்டுக்கட்டுகின்றது.

புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை தடை செய்வதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானம் புத்திசாதூரியமான தீர்மானமாகாது என ஆளும் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்! மிதவாத கொள்கைகளைப் பின்பற்றும் தமிழர்களையும் சந்தேக கண் கொண்டு பார்ப்பதனால் நன்மைகள் ஏற்படப் போவதில்லை! உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளுக்கு அமைய புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் சுமூக உறவுகளைப் பேண வெளிவிவகார அமைச்சு முனைப்புக் காட்டத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தினக்குரல் பத்திரிகையின் யாழ். வடமாரச்சிக்கான பிரதேச நிருபர் சிவஞானம் செல்வதீபன் கடந்த 14ம் திகதி இரவு அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு கடுமையான காயங்களுடன் பருத்தித்துறை மாந்தை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செல்வதீபன் இற்றைக்கு சில வருடங்களுக்கு முன்னர் செல்வதீபனின் சகோதரர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டதற்கு எதிராக குரலெழுப்பியவராகும்.

 

அம்பாறை மாவட்டம் ஒலுவில் பிரதேச முஸ்லிம்கள்  மக்கள் வியாழக்கிழமை இரவு கடற்படையினருக்கு எதிராக வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமது பகுதியில் இருக்கும் பாடசாலை கட்டிடமொன்றில் அமைந்துள்ள கடற்படை முகாமை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் அவர்களால் முன் வைக்கப்பட்டிருந்தது.

குடிக்க சுத்தமான குடிநீர் கேட்ட போராடிய மக்கள் மீது, பாய்ந்து குதறியது அரச பயங்கரவாதம். மூன்று பேர் கொல்லப்பட, 50 மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். பொது மக்களின் சொத்துகள் சேதமாக்கப்பட்டது. இராணுவ வன்முறைக்கு அஞ்சி தேவலாயத்தில் புகலிடம் பெற்ற மக்களை, இராணுவம் அடித்து துவைத்துள்ளது. சுதந்திரமாக தகவல்களை சேகரிக்கவும், தெரிவிக்கவும் முடியாத வண்ணம், ஊடகங்கள் மிரட்டப்படுகின்றன. அரச பயங்கரவரத்தை மூடிமறைக்கும் வண்ணம், அனைத்தையும் கண்காணிக்கின்றது. விசாரணையின் பெயரில் இராணுவவிசாரணைக்கு உத்தரவுவிட்டு நாடகமாடுகின்றது. விசாரணை பெயரில், மக்களையும் ஊடகவியளாளர்களையும் தனது இராணுவ முகாமுக்கு வருமாறு மிரட்டி வருகின்றது. வெலிவேரியாவுக்கு இராணுவத்தை யார் வரவழைத்தது, யார் துப்பாக்கி பிரயோகத்துக்கு உத்தரவை வழங்கியது என்று எதையும் கண்டறிய முடியாதுள்ளதாக கூறுகின்ற பாசிச கோமாளிகளின் கேலிக் கூத்துகளின் பின்னணியில் தான், விசாரணைகள் அனைத்தும் அரங்கேற்றப்படுகின்றது.

இலங்கை ராணுவம் கையகப்படுத்தியுள்ள காணி

இலங்கை ராணுவம் கையகப்படுத்தியுள்ள காணி

இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலை மாவட்டம் சீனன்குடாவை அண்மித்த வெள்ளைமணல் கடலோர பகுதியில் பொதுமக்கள் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டுவந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் காணி விமானப்படையினரால் திடீரென கையகப்படுத்தப்படுவதாக உள்ளுர் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மபுள்பீச் தொடக்கம் கருமலையூற்று வரையிலான நிலப்பகுதியை விமானப்படை சுவீகரிப்பதற்கான எல்லைகள் அடையாளமிடப்பட்டு, முட்கம்பி வேலிகளும் போடப்பட்டு, இந்த நிலம் விமானப்படைக்குரியது என்கிற அறிவிப்பு பலகைகளும் அந்த பகுதியில் நடப்பட்டுள்ளன.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE