Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினக்கூட்டம் பண்டாரவளையில் நடைபெற்ற போது, ஆறுமுகன் தொண்டமான் தனது பாதுகாப்பு அதிகாரிகள் புடைசூழ மேடைக்கு வருகை தந்தார். அந்த மேடையில் ஊடகவியலாளர் சிலர் தமது கடமைகளை செய்து கொண்டிருந்தார்கள். ஆறுமுகன் மேடைக்கு வந்தவுடனேயே வெறிகொண்ட யானைபோல் கடமையில் இருந்த ஊடகவியலாளரை தூக்கித் தள்ளி விட்டார்.

பாரிஸ்-பிரான்ஸ் மேதின ஊர்வலத்தில் சிங்கள-தமிழ் மக்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் சென்றதும், புலிகளின் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களின் எண்ணிகைக்கு நிகராக, சிங்கள - தமிழ் மக்கள் அணிவகுத்து சென்றதும், துரோகத்துக்குரியதாக கூறி, சிங்கள - தமிழ் மக்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டது.

தமிழ்-சிங்கள மக்கள் இணைந்து இலங்கை அரசுக்கு எதிரான வர்க்க ரீதியான கோசங்களைத் தாங்கிய பதாதைகளும், ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களின் உரிமையை முன்னிறுத்திய கோசங்களும், பாரிஸ் மேதின ஆர்பாட்டங்களில் பங்கு கொண்ட லட்சக்கணக்கான உலக தொழிளார்களின் கவனத்தை ஈர்த்து, அவர்களை எம்பால் திரும்ப வைத்தது. அத்துடன் புரட்சிகர பாரம்பரிய அடிப்படையில் கோசங்களை கைகளில் எந்திய எமது ஊர்வலம், இலங்கையை சேர்ந்தவர்கள் பங்கு கொள்ளும் ஊர்வலங்களின் வழமைக்கு மாறானதாகவும் இருந்ததனால், எம்முடன் அரசியல் அடிப்படையில் கருத்து ரீதியாக முரண்பாடு கொண்டவர்கள் கூட எம்முடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொண்டனர்.

இலங்கையர் ஒருமைப்பாட்டு மையத்தின் 'மே-1" தொழிலாளர் தின ஊர்வலம் பிரான்ஸ் தலைநகர் பஸ்டில் சுதந்திர சதுக்கத்தில் பிற்பகல் 4மணிக்கு ஆரம்பமாகி நசியோன் சதுக்கத்தில் மாலை 6 மணியளவில் நிறைவுபெற்றது.

இந்த ஊர்வலத்தை இலங்கையர் ஒருமைப்பாட்டு மையம் தனது உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோருடைய பங்களிப்புடன் ஏனைய தோழமை அமைப்புக்களுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

யாழ்ப்பாணம் - வவுனியா மேதினக்கூட்டங்களில் சி.கா.செந்திவேல் ஆற்றிய உரை.

மகிந்த ராஜபக்ச தலைமையிலான நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சியானது பேரினவாத ஒடுக்குமுறை என்ற மூலதனத்தை முதலிட்டே ஆட்சி அதிகாரம் செலுத்தி வருகிறது. அது பாசிச சர்வாதிகாரமாகவே முன்னெடுக்கப்படுகிறது இத்தகைய ஆட்சியானது தமிழ் முஸ்லீம் மலையக மக்களை மட்டுமன்றி சிங்களத் தொழிலாளி விவசாயி மற்றும் உழைக்கும் மக்களையும் அடக்கி ஒடுக்கியே வருகிறது பொருட்களின் விலைகள் அதிகரிப்பிலும் கட்டணங்களின் உயர்விலும் சம்பள உயர்வு மறுப்பிலும் ஜனநாயக மனித உரிமை மீறல்களிலும் இதனைக்காண முடிகிறது இச்சூழலில் இலங்கை முன் என்றுமில்லாத அளவிற்கு மோசமான பொருளாதார அரசியல் சமூக நெருக்கடிக்குள் புதையுண்டுவருகிறது. எனவே இந்நாட்டின் அனைத்து மக்களும் வர்க்க - இன அடிப்பபடைகளில் ஒன்றிணைந்து தமது அடிப்படைஉரிமைகளை வென்றெடுப்பதற்கு ராஜபக்ச சகோதரர்களது ஆட்சிக்கு எதிராக வெகுஜனப் போராட்டங்களில் அணிதிரள வேண்டிய அவசியமும் தேவையும் எழுந்துள்ளது இதனை ஒடுக்கப்படும் நிலையில் உள்ள தமிழ் மக்கள் உணர்ந்து கொள்வது அவசியமாகும்.

நெடுங்கேணி பிரதேசத்தில் கடந்த ஏப்ரல் 11 ஆம் திகதி விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று கூறப்பட்ட கோபிதாஸ், அப்பன் மற்றும் தேவியன் ஆகிய மூவரையும் சுட்டுக் கொன்றதுடன் திறமையாக செயற்பட்ட இராணுவ அதிகாரிகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

"மிகவும் சுதந்திரமானதும், ஜனநாயகமானதுமான முறையில் மே தினக் கொண்டாட்டங்களில் ஈடுபட தொழிலாளர்களுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கக் கிட்டியமை தனக்கு பெருமகிழ்ச்சி அளிப்பதாகத் நம்ம ஜனாதிhதி மேதினச் செய்தியாக தெரிவித்துள்ளார்.

நேற்றைய மேதினத்தில்,  சமவுரிமை இயக்கத்தின் ஜரோப்பிய கிளைகள் அந்தந்த நாடுகளில் இடம்பெற்ற மேதின ஊர்வலங்களில் பங்குபற்றியுள்ளன. ஜரோப்பிய நாடுகளில் உள்ள பாரிய தொழிற்சங்கங்களினாலும் இடதுசாரிகளினாலும் இந்த மேதின ஊர்வலங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சமவுரிமை இயக்கமானது முன்னிலை சோசலிசக் கட்சி மற்றும் இலங்கை சார்ந்த ஜனநாயக அமைப்புக்களுடன் இணைந்து இந்த நிகழ்வழில் கலந்து கொணடது குறிப்பிடத்தக்கது. மேதின ஊர்வல படங்களை இங்கு காணலாம்.

 

இருபத்துநான்கு மணிநேரமும்

இயந்திரத்துடன்

தொழிலாளரும் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள்

இன்னம் வேகத்தை அதிகரிக்குமாறு

நிர்வாகம்

அழுத்தம் கொடுக்கிறது

முடியாதென

மூச்சுவிட்டால் வேலைபறிபோகலாம்

நம்நாட்டின் ஏகப்பெரும்பான்மையான மக்கள் வெறுத்தொதுக்கும் இனவாதத்தை, இனவாத வெறியை விரல்விட்டு எண்ணக்கூடிய இனவாத சக்திகள் தம் கைகளில் எடுத்துள்ளார்கள். இருந்தும் இவர்களின் இனவாதச் சேட்டைகள் இனங்களுக்கிடையில் எடுபடவில்லை என்பதே எதார்த்தமாகும். மேலும் இவர்கள் மகிந்த அரசின் செல்லப்பிள்ளைகளாக இருப்பதையும் சிங்கள் மக்கள் அறியாதவர்கள் அல்ல.

மே தின கூட்டத்தில் மக்கள் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்

காணி வீட்டுரிமையை வென்றெடுக்க அனைத்து தோட்டத் தொழிலாளர்களும் தொழிற்சங்க அரசியல் கட்சிகளின் வேறுபாடுகளுக்கப்பால் பொதுவான வேலைத்திட்டத்தின் கீழ் செயற்பட வேண்டிய காலமிதுவாகும். அத்துடன் அவற்றை வென்றெடுக்க இந்நாட்டின் ஏனைய தொழிலாளர்களினதும் விவசாயிகளினதும் உழைக்கும் மக்களினதும் ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கையையும், அதன் மீள் உருவாக்கத்தையும் முளையிலேயே கிள்ளிவிடுவது மற்றும் பாதுகாப்பு தொடர்பில் கூடுதலான எச்சரிக்கையுடன் இருப்பது அரசாங்கத்தின் அதிமுக்கியமான கடமையாகும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார் என்ற செய்தியைப் படித்தான் வாழ்விழந்தோர் சங்கத் தலைவர் கந்தையா கார்த்திகேசு மயிலேறும் பெருமாள். வவுனியா வைத்தியசாலையில் சிறைச்சாலைக் காவலர்களின் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த போது தப்பிச் சென்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபர், பெண் வேடமணிந்து வவுனியா நகரில் சுற்றித்திரிந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அடுத்த செய்தி தெரிவித்தது.

தேசிய ஒடுக்குமுறையினை தோற்கடிக்க சமவுரிமைக்காக போராடுவோம்!

ராணுவவாதத்தினை தோற்கடிப்போம்!.

நவதாராளவாத முதலாளித்துவத்தினை தோற்கடிக்க கடலலை போன்று ஜக்கியப்படுவோம்!

வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சியை அகற்று!

மே தினம் என்பது கட்சி அரசியலுக்கு அப்பால் சென்ற தொழிலாளர்களுக்காக குரல் கொடுக்கும் தினமாகும். சர்வதேச தொழிலாளர்கள் தமது உரிமைகளுக்காக உரத்துக் குரல் கொடுக்கும் தினமாகும்.1886 மே மாதம் முதலாம் திகதி அமெரிக்காவின் சிகாகோ நகர ஹேமார்ட சதுக்கத்தில் ஒன்று கூடிய தொழிலாளர்கள் தமக்கு 8 மணிநேர வேலை நேரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக கோஷமெழுப்பினார்கள்.

அனைத்துமே போராட்டங்கள் மூலமாகவே கிடைக்கின்றன. வரப்பிரசாதங்களால் அல்ல. மே தினம் சிக்காகோ பேரெழுச்சியின் விளைவாக இருந்தாலும் அது இரத்தக் கரைகளுடனும் போராட்டங்களுடனும் தூக்குக் கயிற்றின் முடிவிலுமே ஆரம்பமானது. இதற்கு முன்பும் 18ம் நூற்றாண்டின் இறுதியிலும் 19ம் நூற்றான்டின் ஆரம்பத்திலும் வளர்ச்சியடைந்த நாடுகளின் தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 12 -18 மணித்தியாலங்கள் வரை கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர் இதற்கெதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களில் குறிப்பிடத்தக்க கோரிக்கையாக இருந்தது. 10 மணித்தியால வேலை என்பதாகும்.

இதே போராட்டம் பிரான்ஸ், அவுஸ்திரேலியா, ரஸ்யா என இன்னும் பல நாடுகளிலும் நடைபெற்றன. அனைத்துத் தொழிலாளர்களினதும் ஓரே கோரிக்கையாக இருந்தது வேலை அதற்குப்பின்னரான ஓய்வு ஆனால் அது சிக்காகோவில் நடைபெற்ற போராட்டத்தின் காரணமாகத்தான் நாளொன்றுக்கு வேலை செய்யும் நேரம் 8 மணித்தியாலங்களாக ஆக்கப்பட்டது.

நம்நாட்டின் ஏகப்பெரும்பான்மையான மக்கள் வெறுத்தொதுக்கும் இனவாதத்தை, இனவாத வெறியை விரல்விட்டு எண்ணக்கூடிய இனவாத சக்திகள் தம் கைகளில் எடுத்துள்ளார்கள். இருந்தும் இவர்களின் இனவாதச் சேட்டைகள் இனங்களுக்கிடையில் எடுபடவில்லை என்பதே எதார்த்தமாகும். மேலும் இவர்கள் மகிந்த அரசின் செல்லப்பிள்ளைகளாக இருப்பதையும் சிங்கள் மக்கள் அறியாதவர்கள் அல்ல.

மகிந்த அரசின் திட்டமிட்ட இனவாத (இன-ஐக்கியத்தை சீர்குலைத்தல்) சூட்சுமங்களுக்கும், பொதுபல சேன போன்ற மத வெறியர்களின் கலாட்டக்களுக்கும், சிங்கள மக்கள் துணை போகவில்லை என்பதை சமகால நாட்டு நடப்புகள் எடுத்துக்காட்டுகின்றது. இதனால்தான் சிங்கள மக்களுக்கிடையில் வாழும் முஸ்லிம் மக்கள் மாத்திரம் அல்ல ஏனைய சிறுபான்மை இன மக்களும் சமதானமாக வாழ்கின்றார்கள் என்ற உண்மையை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும்.

சிக்காக்கோ நகரம்

மனிதக் குருதியில் குளித்து

உழைக்கும் வர்க்கத்தின் முகம் மலர

விழித்தெழுந்த மகத்தான நாளே மே தினம்!

 

நான்கு தோழர்களின்

மரண வாசலில் பிரசவமாகி

இன்று நாடெங்கும் வலம் வரும்

உழைப்பாளர் தினமே மே தினம்!

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE