Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

தென்னாபிரிக்க அனுபவம் மற்றும் தீர்வின் அடிப்படையில், இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வு என்பது மக்களுக்கானதல்ல. தென்னாபிரிக்க தீர்வு என்பது மக்களுக்கு கறுப்பரின் ஆட்சியைத் தவிர, வேறு எதையும் பெற்றுக் கொடுக்கவில்லை. "தமிழ் மக்களுக்கு தீர்வு வேண்டும்" என்ற அடிமுட்டாள்தனமான அறியாமையை முன்னிறுத்தியே, மக்களுக்கு எதிராக இந்தப் பேச்சு வார்த்தை முன்னெடுக்கப்படுகின்றது. இந்த அடிப்படையிலேயே தென்னாபிரிக்கவின் மதிஸ்யத்தை அரசு நாடுகின்றது. கூட்டமைப்பு அதற்கு இணங்கிப் போகின்றது.

மேல் மாகாண சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் அனுஷா கோகுல, இலங்கையின் சனத்தொகையில் அறுபது வீதத்தினர் ஏதோ ஒரு வகையில் உள நோய்க்கு ஆளாகியிருப்பதாக கூறினார். அத்துடன் அவர் “சமூகப் பிரச்சினைகள் கட்டுமட்டில்லாமல் அதிகரிப்பதாக", அதை எதிர் கொள்ள தயராகுமாறு கேட்டுக் கொண்டார், குறிப்பாக "விவாகரத்து வீதம் உயர்வதாகவும், நீரிழிவு நோயினால் கால்கள் துண்டிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடியுள்ளதாகவும், வீதி விபத்துக்கள், சிறுவர் துஷ்பிரயோகம், பதின்ம வயதுக் கர்ப்பம், உளப்பாதிப்புக்குள்ளான குழந்தைகளைப் பிரசவித்தல் போன்றவற்றினால் சிதைவடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருதாக" எச்சரித்தார். இப்படி கூறியவர் இதைவிட அதிதமான உளநோய்களை இனம் காட்ட தவறியவர், இதற்கு காரணமனவர்களையும், இது ஏன் எற்படுகின்றது என்பதையும் கூட மூடிமறைத்து விடுகின்றார்.

உளவியல் சிகிச்சை மூலம் காணமல் போன விவாகரத்துக்கு தீர்வு காண வழிகாட்டுகின்றார், காணமல் போனவர் தொடர்பாக ஆராயம் ஆணைக்குழுவின் செயலர் குணதாச. இலங்கையில் எவரும் காணமல் போகவில்லை என்பதே அரசின் நிலைப்பாடு. அதை நிறுவவே ஆணைக் குழு. 

டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கில பேராசிரியராக பணியாற்றி வரும் ஜி.என். சாய்பாபாவை மாவோயிஸ்டுகளுடன் தொடர்பிருப்பதாக கருதி மகாராஷ்டிர காவல்துறையினர், அவரை பல்கலைக்கழக வளாகத்தில் கைது செய்தனர்.

பேராசிரியர் ஜி.என். சாய்பாபாவின் சட்டவிரோத கைது குறித்து மகாராஷ்டிரா பொலிஸாருக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவரை விடுதலை செய்ய கோரியும் ஆர்வலர்கள் இன்று சனிக்கிழமை இந்திய தலைநகர் டெல்லியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான குடிநீரை மக்களின் மேலான சமூக அக்கறையினாலா  அல்லது யாழ்பாணத்துக்கு தண்ணிரை விற்று காசாக்கும் அக்கறையினாலா முன்னெடுக்க முனைகின்றனர்.

ஆசிய வங்கியும், நவதாரள எடுபிடிகளும் யாழ்ப்பாணத்துக்கு தண்ணிரை கொண்டு செல்ல தலைகீழாக நிற்பதன் நோக்கம் பணம் சம்பதிப்பது தான். வன்னி எழை விவசாயிகளின் வயிற்றில் அடித்து, யாழ்ப்பாணத்து பணக்காரணுக்கு நீரை விற்று காசாக்குவது தான். உலகமயமயதாலோ தண்ணிரை தனியார் மயமாக்கி விற்கக் கோருகின்றது. வன்னி எழை விவாசயிக்கு தண்ணீரை விற்று பணம் பண்ண முடியாது என்பதால், யாழ்பாணத்து நீர் பற்றக்குறையை பணமாக்க முனைகின்றனர்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கும் மாணவர் பிரதிநிதிகளுக்கும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமைக்கு கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்து யாழ். பல்கலைக்கழக ஆசிரியர்கள் இன்று வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தியுள்ளனர்.

இத்தகைய அச்சுறுத்தல் நடவடிக்கைகள் நிறுத்தப்படுவதற்கு சம்பந்தப்பட்ட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பல்கலைக்கழக ஆசிரியர்கள் கோரியுள்ளனர்.

"எதிர்காலத்திலே வைத்தியர்கள் தமது சொந்தக் கிராமங்களிலே சேவையாற்றல் வேண்டும். தமது கிராமங்களிலே வாழ்ந்து மக்கள் பணியாற்றலே நோக்கமாகும். அதற்கு இணங்க மறுப்பவர்கள், வேறு தொழிலைத் தேடிக் கொள்ளலாம். ஈழத்தில் தமிழில் கற்க இணங்குபவர் மீண்டும் தமது கல்வியைத் தொடரலாம்" என்றும் தாம் இறந்தபின் ஒரு நினைவுக்கல் இருக்குமாயின் "தமிழருக்கான மருத்துவ ஊழியர்" (medichl Evangelist to the Tamils) என அதில் பொறிக்குமாறும் வேண்டிக் கொண்ட அமெரிக்கரான வைத்தியக்கலாநிதி சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் போன்ற மனிதாபிமானிகள், கன்டி பேரின்பநாயகம், ஒரேற்றர் சுப்பிரமணியம், கார்த்திக்கேசன் போன்ற சமுக உணர்வும், கடமை உணர்ச்சியும் கொண்ட ஆயிரம், ஆயிரம் ஆசிரியர்கள் உருவாக்கிய பெருவிருட்சம் தமிழ்மக்களின் கல்வி. அர்ப்பணிப்பு என்ற ஒரு சொல் மட்டும்தான் அவர்களிடம் இருந்தது. அதைத் தவிர வேறெந்த வசதியும் அவர்களிடம் இருக்கவில்லை. ஆனால் அயராது உழைத்தார்கள். கல்வி வெள்ளம் தமிழ் சமுதாய வாழ்வு எங்கும் நிறைந்தது.

முதலாளித்துவத்தின் நெருக்கடியை அம்பலப்டுத்தி,எதிர்ப்பு தெரிவிக்க என்றும்மில்லாத மக்கள்அணி அவர்களோடு முன்னிலை சோசலிச கட்சி, சமவுரிமை இயக்கம்.

சுவீஸ் நாட்டின் மக்களும், அந்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் பல்வேறு நாட்டைச்சேர்ந்த புலம்பெயர்ந்தவர்களும் கலந்து கொண்ட மாபெரும் மேதினமாக வர்ணிக்கப்படும் இம் மேதினத்தில் தொழிற்சங்கங்கள், கலாச்சார அமைப்புகள், கட்சிகள், இடதுசாரி அமைப்புகள், முதலாளித்துவ நெருக்கடிகளைப் புரிந்து கொண்ட தனிநபர்கள் என 14 ஆயிரம் மக்கள் கலந்து கொண்டனர்.

altஇன்று பல்கலைக்கழகங்களுக்குள்ளும் மாணவர்கள் மத்தியிலும் அரசு தேவையற்ற வன்முறைகளை பிரயோகித்து வருகின்றது.

ரஜரட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதித்து இன்றுடன் 150 நாட்கள் கடந்தும் எந்த விதமான முடிவும் இதுவரை மாணவர்களுக்கு இந்த அரசால் வழங்கமுடியவில்லை. இன்று முன்னிலை சோசலிச கட்சி நிப்போன் ஹோட்டலில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போது கட்சியின் பிரச்சார செயலாளர் புபுது ஜாகொட  இவ்வாறுதெரிவித்தார்.

 

 

பல்கலைக்கழக மாணவர்கள் ராஜபக்ச அரசின் நவதாரளவாத கல்விக் கொள்கைக்கு எதிராக பல கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ச்சியான போராட்டங்களை மிக நீண்ட நாட்களாக முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றனர். மகிந்த அரசு போராடும் மாணவர்கள் மீத பல அழுத்தங்களை பிரயோகித்து மாணவர் போராட்டங்களை மழுங்கடிக்க தொடர்ந்து முனைந்து கொண்டே இருக்கின்றது. இனந்தெரியாத நபர்களை மாணவர்களின் வீட்டுக்கு அனுப்பி பெற்றோரை மிரட்டுவது முதல் மாணவர்களை பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கவது பல்கலைக்கழக பிரதேசங்களிற்கு அருகில் வருவதனை தடை செய்வது வரை அனைத்து பாசிச அடக்குமுறைகளையும் தொடந்து கொண்டிருக்கின்றது.

பல்கலைக்கழக மாணவர்கள் ராஜபக்ச அரசின் நவதாரளவாத கல்விக் கொள்கைக்கு எதிராக பல கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ச்சியான போராட்டங்களை மிக நீண்ட நாட்களாக முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றனர். மகிந்த அரசு போராடும் மாணவர்கள் மீத பல அழுத்தங்களை பிரயோகித்து மாணவர் போராட்டங்களை மழுங்கடிக்க தொடர்ந்து முனைந்து கொண்டே இருக்கின்றது. இனந்தெரியாத நபர்களை மாணவர்களின் வீட்டுக்கு அனுப்பி பெற்றோரை மிரட்டுவது முதல் மாணவர்களை பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கவது பல்கலைக்கழக பிரதேசங்களிற்கு அருகில் வருவதனை தடை செய்வது வரை அனைத்து பாசிச அடக்குமுறைகளையும் தொடந்து கொண்டிருக்கின்றது.

விகிதாசார தேர்தல் முறை அறிமுகம் செய்ததில் இருந்து தேர்தல் கூட்டுகள் என்பது இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாதவைகளாக மாறியுள்ளன. இந்த தேர்தல் கூட்டுகள் பார்ப்பதற்கு பல்வேறு அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டவர்கள் இணைந்து செயற்படுவதாக தோற்றமளிக்கின்ற போதும் அவர்களுக்கிடையில் உள்ளூர ஐக்கியம் இருக்கின்றமை கவனிக்கத்தக்கது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் ஏறக்குறைய மைய நீரோட்டத்தில் உள்ள அனைத்து மலையக அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் அங்கம் வகிப்பதோடு அதற்கு ஆதரவு வழங்குபவர்களாகவும் காணப்படுகின்றனர். அந்த இ.தொ.கா., மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம், பெருந்தோட்ட தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் காங்கிரஸ் ஆகியன ஐ.ம.சு.மு அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவை வழங்கி அதன் கொள்கை நடைமுறைகளை ஏற்று அங்கீகரித்து வருகின்றனர். எனினும் மறுபுறம் மலையக மக்களிடம் தங்களுக்கிடையில் வேறுபாடுகள் இருப்பதான தோற்றப்பட்டடை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். எனினும் இவர்களுக்கிடையில் அரசியல் கொள்கை அடிப்படையில் உள்ள வேறுபாடு என்ன என்பது பற்றிய கருத்தாடல் இடம்பெறாமையானது துரதிஸ்டமே.

எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கையையும், அதன் மீள் உருவாக்கத்தையும் முளையிலேயே கிள்ளிவிடுவது மற்றும் பாதுகாப்பு தொடர்பில் கூடுதலான எச்சரிக்கையுடன் இருப்பது அரசாங்கத்தின் அதிமுக்கியமான கடமையாகும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார் என்ற செய்தியைப் படித்தான் வாழ்விழந்தோர் சங்கத் தலைவர் கந்தையா கார்த்திகேசு மயிலேறும் பெருமாள். வவுனியா வைத்தியசாலையில் சிறைச்சாலைக் காவலர்களின் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த போது தப்பிச் சென்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபர், பெண் வேடமணிந்து வவுனியா நகரில் சுற்றித்திரிந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அடுத்த செய்தி தெரிவித்தது.

இருபத்துநான்கு மணிநேரமும்

இயந்திரத்துடன்

தொழிலாளரும் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள்

இன்னம் வேகத்தை அதிகரிக்குமாறு

நிர்வாகம்

அழுத்தம் கொடுக்கிறது

முடியாதென

மூச்சுவிட்டால் வேலைபறிபோகலாம்

பாரிஸ்-பிரான்ஸ் மேதின ஊர்வலத்தில் சிங்கள-தமிழ் மக்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் சென்றதும், புலிகளின் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களின் எண்ணிகைக்கு நிகராக, சிங்கள - தமிழ் மக்கள் அணிவகுத்து சென்றதும், துரோகத்துக்குரியதாக கூறி, சிங்கள - தமிழ் மக்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டது.

"எதிர்காலத்திலே வைத்தியர்கள் தமது சொந்தக் கிராமங்களிலே சேவையாற்றல் வேண்டும். தமது கிராமங்களிலே வாழ்ந்து மக்கள் பணியாற்றலே நோக்கமாகும். அதற்கு இணங்க மறுப்பவர்கள், வேறு தொழிலைத் தேடிக் கொள்ளலாம். ஈழத்தில் தமிழில் கற்க இணங்குபவர் மீண்டும் தமது கல்வியைத் தொடரலாம்" என்றும் தாம் இறந்தபின் ஒரு நினைவுக்கல் இருக்குமாயின் "தமிழருக்கான மருத்துவ ஊழியர்" (Medical Evangelist to the Tamils) என அதில் பொறிக்குமாறும் வேண்டிக் கொண்ட அமெரிக்கரான வைத்தியக்கலாநிதி சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் போன்ற மனிதாபிமானிகள், கன்டி பேரின்பநாயகம், ஒரேற்றர் சுப்பிரமணியம், கார்த்திக்கேசன் போன்ற சமுக உணர்வும், கடமை உணர்ச்சியும் கொண்ட ஆயிரம், ஆயிரம் ஆசிரியர்கள் உருவாக்கிய பெருவிருட்சம் தமிழ்மக்களின் கல்வி. அர்ப்பணிப்பு என்ற ஒரு சொல் மட்டும்தான் அவர்களிடம் இருந்தது. அதைத் தவிர வேறெந்த வசதியும் அவர்களிடம் இருக்கவில்லை. ஆனால் அயராது உழைத்தார்கள். கல்வி வெள்ளம் தமிழ் சமுதாய வாழ்வு எங்கும் நிறைந்தது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE