Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

எமது மக்கள் பாரிய மனித அழிவைச் சந்தித்து ஜந்து வருடங்களாகின்றது. இது இந்த நூற்றாண்டில் நடந்த பாரிய மனித அவலமாகும். இலங்கைப் பேரினவாத அரசு எம் மக்கள் மீதான ஒரு இனப் படுகொலையை நடத்தியிருந்தது. சிறுவர்கள், பெண்கள், வயோதிபர்கள் என அனைவர் மீதும் ஈவிரக்கமற்று நடத்தப்பட்ட வன்முறை, இன்றும் ரணமாகி பாரிய வலியை எம் சமுதாயத்தில் ஏற்படுத்திய வண்ணமுள்ளது.

எம் மக்கள் மீது நடாத்தப்பட்ட படுகொலைகளுக்கும், ஆயுத வன்முறைக்கும் பொறுப்பேற்க வேண்டிய மஹிந்த – பாசிச அரசு, யுத்தத்தின் பின்னான காலத்தில் தனது அனைத்து அதிகார இயந்திரங்களையும் பயன்படுத்தி, திறந்த வெளிச் சிறைச்சாலையாய் மாற்றப்பட்ட எம் நிலத்தில் மக்களை சொல்லொணா அடக்குமுறைக்கு தொடர்ந்தும் உள்ளாக்குகின்றனர்.

புலிகளை வெற்றி கொண்ட இறுமாப்பில் நாட்டை இராணுவமயமாக்கி, நவதாராளவாத பொருளாதாரத்தை முன்னெடுக்கும் அரசுக்கு எதிராக இடியாக இறங்கியது மாணவர்களின் நவதாராளவாத கல்விக் கொள்கைக்கு எதிரான போராட்டங்கள். தொடரான தடைகளையும், அடக்குமுறைகளையும் மீறி, அலை அலையாக மாணவர்களின் போராட்டங்கள் எழுந்து வருகின்றன. நீதிமன்ற தடையையும், அதியுர் பாதுகாப்பு அரணையும் தாண்டி, ஜனாதிபதி வாசஸத்;தலமான அலரி மாளிகை வாசலிலேயே மாணவர்கள் போராடியதைக் கண்டு அரசும், ஆளும் வர்க்கமும் அதிர்ந்து போய் உள்ளன. பழிவாங்கும் உணர்வுடன், பாசிச வழியிலான அனைத்து ஒடுக்குமுறைகளையும் அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளது. கைதுகள், தேடுதல்கள், தாக்குதல்கள்... வரைமுறையின்றி தொடருகின்றன.

நேற்று (2014-05-16) காலை 10:30 மணியளவில்பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது. இதன் பின்னர் நான்கு மாணவ பிரதிநிதிகள் கைது செய்யப்பட்டு கிருலப்பனை காவல் நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

சிறிது நேரத்தின் பின்னர் ஆர்ப்பாட்டத்தினை முடித்து கோட்டை பஸ் நிலையத்திற்கு சென்றுகொண்டிருந்த மாணவர்களில் மாணவர் ஒருவரை பொய்யான பிடியாணை காட்டி கைது செய்ய முற்பட்ட கொம்பனித்தெரு பொலீசாரிற்கு எதிராக குரலெழுப்பிய மாணவர்களில் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

மாணவர்கள் மீதான ஒடுக்குமுறைகளைக் கண்டித்தும், இணைந்த சுகாதார பட்டப்படிப்பை மூன்று வருடங்களாக குறைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால், பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டம் இணைந்த சுகாதார கல்விபீட மாணவர்கள் சங்கம் மற்றும் அனைத்துப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்று (16.05.20014) முற்பகல் நடாத்தப்பட்டது.

மக்கள் பண்பாட்டுக் கழகத்தின் இம்முறை (14.05.2014) பௌர்ணமி ஒன்றுகூடலில் கழகத்தின் செயலாளர் பா. மகேந்திரனால் சமர்ப்பிக்கப்பட்ட மக்கள் பண்பாட்டுக் கழகத்தின் “பண்பாட்டுக் கொள்கை” பற்றிய அடிப்படை ஆவணம் ஏற்று அங்கீகரிக்கப்பட்டது. அந்த ஆவணத்தின் உள்ளடக்கம் பின்வருமாறு:

மக்கள் எனப்படுவோர்

உலக இயக்கத்துக்கு உந்து சக்தியான அதேவேளை தங்களின் உழைப்பின் பலாபலன்களில் இருந்து மூலதன உடைமையாளர்களினால் அந்நியமயப்படுத்தப்பட்டிருக்கும் பரந்துபட்ட ஏக பெரும்பான்மையான உழைப்பாளர்கள், தேசிய, இன, மத, பால், சாதி மற்றும் பலவிதமான ஒடுக்குமுறைகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் உட்பட்டு ஆதிக்க சக்திகளினால் நேரடியாகவோ மறைமுகமாகவோ விலங்கிடப்பட்டிருக்கும் அனைத்து மனிதர்களையும் உள்ளடக்கிய திரளை மக்கள் என்ற சொற்பதத்தில் அடங்குவதுடன் அவர்கள் அவ்விலங்குகளை உடைத்தெறிந்து விடுதலை அடையும் பெருமூச்சுடன் செயற்படுபவர்களாவர்.

இலங்கையில் அனைத்து இடைநிலைக் கல்வி நிறுவனங்களிலும் பாடசாலைகளிலும் மாணவர்களுக்கு ஒராண்டு பௌத்த தலைமைத்துவ பயிற்சியை இலங்கை இராணுவம் அளிப்பதற்கான முன்னெடுப்புக்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

நாட்டின் இரண்டு அதியுயர் பௌத்த பீடங்களில் ஒன்றான அஸ்கிரியப் பீடத்தினர் இது குறித்து வைத்த பிரேரணைகளை மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டுள்ளதாக அந்த பீடத்தின் பேச்சாளரான மெதகம தம்மானந்த தேரர் பிபிசியின் சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார்.

அய்ரோப்பாவில் நிலபிரபுத்துவ பொருளாதார முறையின் கீழ் அரசுகள் இருந்தன. நாடு, தேசம் என்ற ஒன்று அந்த பொருளாதார முறையின் கீழ் இருக்கவில்லை. அரசுகள் ஒன்றுடன் ஒன்று போர் செய்தன. மக்கள் பெரும் நிலப்பிரபுக்களின் விவசாய பண்ணைகளில் அடிமைகளாக இருந்தனர். நிலப்பிரபுக்களின் நிலங்களில் வேலை செய்தனர். நிலப்பிரபுக்களிற்கு சொந்தமான வீடுகளில் வசித்தனர். கத்தோலிக்க திருச்சபை, பால சிங்கமும் பசுவின் கன்றும் பக்கம் பக்கம் நின்று நீர் பருகும் காலம் வரும். அதுவரை ஒரு கன்னத்தில் அடித்தால் மறுபேச்சின்றி மற்றக்கன்னத்தை காட்டுங்கள் என்று நிலப்பிரபுக்களின் அடக்குமுறைகளிற்கு, பொருளாதார சுரண்டல்களிற்கு பணிந்து போகச் சொல்லி மூளைச்சலவை செய்தது.

அனைத்துப் பலகலைக்கழக மாணவர் ஒன்றியம் கடந்த வைகாசி 7 ஆம் திகதி மாணவர்களின் உரிமைகளை முன்னிறுத்தியும், அவர்களின் மனித உரிமைகளைக்கோரியும் மஹிந்த ராஜாபக்ஷவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகைக்கு முன் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடாத்தினார்கள். தற்போது வெளிவந்துள்ள தகவல்களின் படி, இப்போராட்டமானது பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய தலைமையினான இலங்கையின் பாதுகாப்புக்குப் பொறுப்பான போலிஸ், இராணுவம் மற்றும் புலனாய்வு நிறுவனங்களின் தலைமைகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இலங்கையின் அதிஉச்ச பாதுகாப்பு வலயத்திலுள்ள ஜனாதிபதி வாசஸ்தல பகுதிக்குள் எவ்வாறு திட்டமிட்ட முறையில் மாணவர்கள் புக முடிந்து என்பதைக் கண்டறிந்து அறிக்கை சமர்பிக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய அனைத்துப் பாதுகாப்புப் பிரிவினரையும் பணித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தெரிவிகின்றன.

அனைத்துப் பலகலைக்கழக மாணவர் ஒன்றியம் கடந்த வைகாசி 7 ஆம் திகதி மாணவர்களின் உரிமைகளை முன்னிறுத்தியும், அவர்களின் மனித உரிமைகளைக்கோரியும் மஹிந்த ராஜாபக்ஷவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகைக்கு முன் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடாத்தினார்கள். தற்போது வெளிவந்துள்ள தகவல்களின் படி, இப்போராட்டமானது பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய தலைமையினான இலங்கையின் பாதுகாப்புக்குப் பொறுப்பான போலிஸ், இராணுவம் மற்றும் புலனாய்வு நிறுவனங்களின் தலைமைகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இலங்கையின் அதிஉச்ச பாதுகாப்பு வலயத்திலுள்ள ஜனாதிபதி வாசஸ்தல பகுதிக்குள் எவ்வாறு திட்டமிட்ட முறையில் மாணவர்கள் புக முடிந்து என்பதைக் கண்டறிந்து அறிக்கை சமர்பிக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய அனைத்துப் பாதுகாப்புப் பிரிவினரையும் பணித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தெரிவிகின்றன.

எதிர்வரும் நாட்களில் ருகுணு பல்கலைக்கழகத்தில் “தேசத்தின் மகுடம்” கண்காட்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு மாணவர் எவராது இடையூறு விளைவித்தால் கடும் தண்டனையினை அனுபவிக்க வேண்டியிருக்கும். இடையூறு விளைவிக்கும் மாணவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினரும் இந்த நாட்டில் இடம் கிடையாது. வேறு நாட்டில் தான் வாழ வேண்டியிருக்கும் என உயர்கல்வி அமைச்சர் S. B. திஸ்சநாயக்கா எச்சரித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவை புறக்கணித்து, அலரி மாளிகைக்கு முன்னாள் கடந்த 7ம் திகதி மறியல் மற்றும் ஆர்ப்பாட்ட போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பு (ICUF) மாணவர்கள் கொழும்பில் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற உலக இளைஞர் காங்கிரஸ் முடிந்ததும் விரைவில் கைது செய்யப்படுவார் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் கூறியுள்ளார்.

இலங்கை அரசின் கல்விக் கொள்கை, மனித உரிமை மீறல்கள் , மாணவர்களில் கல்வி கற்கும் உரிமை மறுப்பு, கல்வியைத் தனியார் மயப்படுத்தல் போன்ற மாணவர் விரோத செயற்பாடுகளுக்கு எதிராக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பல்முனைப் போராட்டங்களை பலவடிவங்களிலும் நடாத்தி வருகின்றது. இப்போராட்டகளுடன், யாழ். மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளதற்கு எதிரான போராட்டங்களும் இணைக்கப்பட்டு முன்னெடுக்கப்படுகிறது.

இம் மாதம் 12ம் திகதி முதல் ஒரு கிழமைக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை மூடுவதற்கும் வடக்கில் யுத்தத்தால் உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூருவதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளமையை வன்மையாக கண்டித்து முன்னிலை சோசலிசக் கட்சி வௌியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளதாவது:

யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூருவதை தடுப்பதன் மூலம் மீண்டும் ஒரு பிரிவினைவாதம் தோன்றுவதற்கும் மற்றும் விடுதலைப்புலிகள் மீண்டும் உருவாவதை தடுக்க முடியாது ஆகிவிடும் என்று கூறி வடக்கு மக்களின் ஜனநாயக உரிமைகளை இப்படியான அச்சுறுத்தல்கள் மூலம் இந்த அரசாங்கம் மீறிவருகின்றது.

இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ வாசஸ்த்தலத்திற்கு முன்பாக கடந்த 07/05/2014 புதனகிழமை அன்று அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஆர்ப்பாட்டம் நிகழ்த்தப்பட்டது. இதே காலப்பகுதியில் அகில உலக இளைஞர் மகாநாடு கொழும்பில் மகிந்த அரசால் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதனை காரணம் காட்டி பொலீசாரால் கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்களிற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

மகிந்த ராஜபக்ஸ குடும்ப அரசால் முன்னெடுகப்பட்டுக் கொண்டிருக்கின்ற நவதாராளமயவாத பொருளாதாரக் கொள்ளையின் ஒரு அங்கமாக இலவசக் கல்வியனை இல்லாதாக்கும் உலக வங்கியின் திட்டத்திற்கு அமைய முன்னெடுக்கப்படும் நவதாராளவாத கல்விக் கொள்கைக்கு எதிராக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்த வண்ணமுள்ளது. அதாவது இலவசக் கல்வியை இலங்கையின் அனைத்து மக்களிற்கும் உறுதி செய்வதே இந்த தொடர்ச்சியான போராட்டங்களின் நோக்கமாகும். கல்வி என்பது பணம் படைத்தவனுக்கே என்ற நிலையினை நோக்கி நவதாராளவாத கல்விக் கொள்கை உலக வங்கியால் இன்று உலகெங்கும் முன்தள்ளப்பட்டுகின்றது. பண வசதி அற்றவர்கள் நவீன அடிமைகளாக மாற வேண்டிய நிலையினை நோக்கிய அபாயத்தில் எமது எதிர்கால சந்ததி உள்ளது.

அரசோ "பயங்கரவாதிகள்" என்று பெயரில் ஒரு பெயர் பட்டியலையும், அமைப்புகளுக்கு தடைகளையும் வெளியிட்டுள்ளது. அதேநேரம் இன்ரபோல் மூலம், கணிசமானோருக்கு சர்வதேச பிடிவிராந்துகளையும் வெளியிட்டுள்ளது. பிரித்தானிய தமிழர் பேரவையினர் "போர்க் குற்றவாளிகள்" என்று அடையாளப்படுத்திய ராணுவத்தினரின் படங்களையும், அவர்கள் குடும்பப் படங்களையும் வெளியிட்டு இருக்கின்றது.

மோடியின் ஆட்சி பற்றி பிரமைகளும், நம்;பிக்கைகளும், எதிர்பார்புக்களும் கொண்ட் "தீர்வு" பற்றிய "தமிழினின்" உணர்வுகள் எதார்த்தமானவையல்ல. தமிழகத்தைச் சேர்ந்த தமிழினவாதிகளின் சந்தர்ப்பவாத பிழைப்புவாத நிலைப்பாட்டை, குருட்டுத்தனமாக வழிபடுவதாகும். கடந்த 60 வருடத்துக்கு மேலாக நம்பி அழிந்த தமிழ் மக்களின் பகுத்தறிவற்ற முட்டாள்தனமுமாகும்.

இந்தியாவின் ஆளும் வர்க்கக் கொள்கை என்பது, பிராந்திய மற்றும் உலக மேலாதிக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. இதை மீறி எந்த தனிநபரோ, கட்சிகளோ முடிவுகளை எடுக்க முடியாது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE