Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

இலங்கை உற்பத்தியை மையமாகக் கொண்ட பெருளாதாரத்தைக் கொண்ட நாடல்ல. மொத்த தேசிய உற்பத்தியில் விவசாயம் மற்றும் கைத்தொழில் துறைகள் முறையே 11.1%, 30.4% வீத பங்கைக் கொண்டிருக்கும் அதேநேரம் சேவைத் துறையோ 58.5% பங்கைக் கொண்டிருக்கின்றது. இது சேவைத்துறை இலங்கையின் பொருளாதாரத்தின் வகிக்கும் பங்கின் முக்கியத்துவத்தினை வெளிப்படுத்துவதோடு, உற்பத்தியை அடிப்படையாக கொண்ட பொருளாதாரம் கட்டியெழுப்பப்படவில்லை என்பதை வெளிப்படுத்துகின்றது. விவசாய உற்பத்தியில் ஏற்றுமதி பயிர்களான தேயிலையும் இறப்பரும் இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியில் கிட்டத்தட்ட 2 வீத பங்களிப்பினை வழங்குகின்றன. இதில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பங்கு, இன்று சிறு தோட்டங்கள் பெருகிவருகின்ற போதும், குறிப்பிட்டுச் சொல்லத்தக்கதாகும். சிறு தோட்டங்கள் வளர்ச்சியை காரணம் காட்டி பெருந்தோட்டங்களின் உற்பத்தி குறைந்துள்ளது என்ற வாதங்கள் கடந்த பத்தாண்டுகளில் வெளிப்பட ஆரம்பித்துள்ளன. உண்மையில் பெருந்தோட்டங்களில் உற்பத்தி அதிகரித்தே வந்துள்ளது. பெருந்தோட்ட உற்பத்தியை அளவை சிறுருந்தோட்ட உற்பத்தி அளவுடன் ஒப்பிட்டு அதனை அடிப்படையாக கொண்டு பெருந்தோட்டங்களில் உற்பத்தி குறைந்துள்ளது என்பது பிழையான அடிப்படையில் கட்டியெழுப்பப்படும் வாதமாகும்.

“புதிய தாராளமய முதலாளித்துவத்திற்கும் ஜனநாயகத்திற்கு முரணான நிருவாகிகளுக்கும் எதிராக மாணவர்களும் மக்களும் ஒன்றிணைத்தல்“ எனும் கருப்பொருளில் இன்று (10 ஜூன் 2014) மாபெரும் நடைப்பயணம் மற்றும் பேரணியும் ஆரம்பமாகியது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

விவசாயிகள், மீனவர்கள் மற்றும் கிராமங்களிலுள்ள சாமான்ய மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுக்கப்படும் இந்த நடைப்பயணமானது இன்று (10.06.2014) பிற்பகல் 3 மணியளவில் கொழும்பிலுள்ள ஹயர் மைதானத்தில் ஏற்பாடு செய்யபட்ட பேரணியுடனும், போராட்ட முழக்கங்களுடனும் ஆரம்பமாகியது. ஹயர் மைதானத்தில் ஏற்பாடு செய்யபட்ட ஆரம்ப நிகழவில் இடதுசாரிக் கட்சித் தலைவர்கள், உழைப்பாளர் சங்கங்கள் மற்றும் ஒடுக்கப்பட மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு உரையாற்றினர். உரைகள் இரு மொழிகளிலும் அமைந்துடன், போராட்ட கோசங்கள் மும்மொழிகளிலும் முழக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாதைகளைத் தாங்கிய வண்ணம் பல்லாயிரம் மாணவர்களும், உழைப்பாளர்களும், தலைவர்களும் நடைபயணத்தின் ஆரம்பத்தில் இணைந்து கொண்டனர்.

தமிழ்க்கவி புலிகளின் மீது விமர்சனம் வைத்ததும் நெற்றிக்கண்ணை காட்டினும் குற்றம், குற்றமே என்று வாழும் கவியரசுகள், கொள்கை ஒன்றுக்காகவே பேனா பிடித்திருக்கும் பத்திரிகை ஆசிரிய திலகங்கள் எல்லாம் பொங்கி எழுந்தன. இதை எல்லாம் புலிகளில் இருந்த காலத்தில் சொல்லியிருக்கலாமே என்று அவரைக் குற்றம் சாட்டுகின்றன. அவர் வைத்த விமர்சனங்களிற்கு அவர்களிடம் மறுமொழி இல்லை. தமிழ்க்கவியை குற்றம் சாட்டுவதன் மூலம் அவரின் விமர்சனங்களை பொய்யாக்க முனைகிறார்கள்.

விவசாயத் தாய்மாரே! தந்தையரே! தோழரே! தோழியரே!

நாட்டு மக்களின் பட்டினியை போக்குவது நாங்கள். சேற்றை கழுவிக் கொண்டால் அரசாள்வதற்கும் தகுதியானவர்கள் என்று கூறப்படுகிறது. அது கூட ஒருவகையில் ஏமாற்றுதான். எது எப்படியிருந்தாலும், விவசாயிக்கு இன்று என்ன நடந்திருக்கிறது? விவசாயத்திற்கு என்ன நடந்திருக்கிறது? விவசாயி அரசுகட்டில் ஏறியிருக்கிறாரா? கேவலமாகிவிட்டாரா?

“புதிய தாராளமய முதலாளித்துவத்திற்கும் ஜனநாயகத்திற்கு முரணான நிருவாகிகளுக்கும் எதிராக மாணவர்களும் மக்களும் ஒன்றிணைத்தல்“ எனும் கருப்பொருளில் ஜூன் 10 ஆம் திகதியன்று மாபெரும் நடை பயணம் மற்றும் பேரணி ஆனது அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளது.

தமிழ்க்கவி புலிகளின் மீது விமர்சனம் வைத்ததும் நெற்றிக்கண்ணை காட்டினும் குற்றம், குற்றமே என்று வாழும் கவியரசுகள், கொள்கை ஒன்றுக்காகவே பேனா பிடித்திருக்கும் பத்திரிகை ஆசிரிய திலகங்கள் எல்லாம் பொங்கி எழுந்தன. இதை எல்லாம் புலிகளில் இருந்த காலத்தில் சொல்லியிருக்கலாமே என்று அவரைக் குற்றம் சாட்டுகின்றன. அவர் வைத்த விமர்சனங்களிற்கு அவர்களிடம் மறுமொழி இல்லை. தமிழ்க்கவியை குற்றம் சாட்டுவதன் மூலம் அவரின் விமர்சனங்களை பொய்யாக்க முனைகிறார்கள்.

தமிழ்க்கவி அரச ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து இந்த விமர்சனங்களை வைக்கிறார் என்று சொல்வதன் மூலம் அவரின் விமர்சனங்களை பொய்யாக்க முயலுகின்றனர். அவர் என்ன நிலைப்பாட்டில் இருந்து சொன்னாலும் அவர் வைத்த விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்கள் எதுவும் புதியன அல்ல. மக்களைப் பணயக்கைதிகளாக வைத்திருந்தது, பிள்ளைகளை கடத்தியது என்ற அராஜகங்களை அவரும் பதிவு செய்கிறார். அதற்கு இவர்களால் என்ன மறுமொழி சொல்ல முடியும். மனச்சாட்சி என்ற ஒன்று இந்த பிழைப்புவாதிகளிற்கு இருக்குமாயின் குறைந்தபட்சம் மெளனமாகவேனும் இருந்திருப்பார்கள். இவர்கள் தான் வியாபாரிகள் ஆச்சே. நேர்மை, மனச்சாட்சி என்றால் என்ன விலை என்று கேட்கிறார்கள்?

இலங்கையின் அரசியல் களத்தில் ஜனநாயக முற்போக்கு சக்திகளின் குரலாயும், இடதுசாரி ஆதரவு நிலைப்பாட்டாளராகவும் இருந்து வந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.டி.பண்டாரநாயக்கா கடந்த 03.06.2014 அன்று தனது 98ஆவது வயதில் இயற்கை எய்தினார். அவரது இழப்பு இலங்கையின் ஜனநாயக முற்போக்கு இடதுசாரி சக்திகளுக்கும் ஒடுக்கப்படும் உழைக்கும் மக்களுக்கும் துக்கம் தரும் இழப்பாகும்.

வடக்கு - கிழக்கு மாணவர்களின் உரிமைகள், கல்வியைத் தனியார் மயப்படுதல், "சர்வதேச மயமாக்கல்" என்ற போர்வையில் கல்வியின் தரம் குறைக்கப்படுதல், மாணவ - மற்றும் சமூக உரிமைகளுக்காகப் போராடும் மாணவர்களைக் கடத்துதல், கொலை செய்தல், அவதூறான வழக்குகளை தொடுத்தல், அவர்களில் கல்வி உரிமைகளைப் பறித்தல் போன்ற பிரச்சனைகளை முன்னிறுத்தி அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பு பல மாதங்களாக போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

விவசாயத் தாய்மாரே! தந்தையரே! தோழரே! தோழியரே!

நாட்டு மக்களின் பட்டினியை போக்குவது நாங்கள். சேற்றை கழுவிக் கொண்டால் அரசாள்வதற்கும் தகுதியானவர்கள் என்று கூறப்படுகிறது. அது கூட ஒருவகையில் ஏமாற்றுதான். எது எப்படியிருந்தாலும், விவசாயிக்கு இன்று என்ன நடந்திருக்கிறது? விவசாயத்திற்கு என்ன நடந்திருக்கிறது? விவசாயி அரசுகட்டில் ஏறியிருக்கிறாரா? கேவலமாகிவிட்டாரா?

விவசாயியை பொறுத்தவரை இன்றுள்ள பிரச்சினை தண்ணீர் வழங்காமைதான். குளங்களில் நீர் நிரம்பி வழிகின்றது. ஆனால் வயலில் பாதியை விதைப்பதற்காக மட்டுமே நீர் வழங்கப்படுகிறது. அது ஏன்?

"வர்த்தக அமைப்பின் பரிந்துரைகள் என்ற பெயரில் முழு உலகத்தையும் அழிப்பதற்காக இராட்சதன் அவிழ்த்து விடப்பட்டிருக்கிறான்"

ஒரு கவிஞன் கூறியதைப் போன்று எமது ஊர், தோட்டம், துரவுகள் மிகவும் செழிப்பானவை. அவற்றில் எதைப் போட்டாலும் துளிர்விட்டு வளரும். சிறுவர்கள் மத்தியில் பிரபலமான ஒரு சிங்களப்பாடல் இருக்கிறது. 'மொனவத முத்தே" (என்ன தாத்தா) என்று. வருங்கால சந்ததியினருக்காக மரம் வளர்க்க வேண்டியதன் முக்கியத்துவம் அந்தப் பாடலின் மூலம் உணர்த்தப்படுகிறது.

நாம் சாப்பிட்ட மாம்பழத்தின் கொட்டையையும் விதைக்க வேண்டும். ஆனால் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் சட்டத்தின் மூலம் மாங்கொட்டை, பலாக்கொட்டை, அந்த விதை, இந்த விதை என்று கூறி எவற்றையாவது விதைகளாக பயன்படுத்துவது சிறை செல்வதற்கான பாதையாக அமையலாம். '2013 விதைகள் மற்றும் நடுகைப் பொருள் சட்டமூலம்" என்ற பெயரிலான புதிய சட்டத்தின் மூலம், தற்போது அமுலிலிருக்கும் '2003ன் 22ம் இலக்க விதைகள் சட்டமூலம் இரத்துச் செய்யப்பட்டு புதிய சட்டம் அமுலுக்கு வரவிருக்கின்றது.

உத்தேசிக்கப்பட்டுள்ள விதைகள் சட்டம் விவசாயிகளின் பாரம்பரிய உரிமையை பறிப்பதாக குற்றச்சாட்டு

சனத்தொகைப் பெருக்கம், பருவநிலை மாற்றங்கள் இப்படியான சவால்களை எதிர்கொண்டிருக்கின்ற உலக நாடுகளுக்கு விவசாயத்திற்குத் தேவையான விதைகளை விருத்தி செய்வதும் பாதுகாப்பதும் இன்று பெரும்பிரச்சனைக்குரிய விடயமாகியுள்ளது.

இலங்கையில் இது சர்ச்சைக்குரிய அரசியல் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

கடந்த காலப் போரின் பின்னால் அந்தப் போர் நடந்த பூமியில் விஸ்வரூபம் எடுக்கப் போகின்றது இயற்கைக்கும் எமக்குமான கொடிய போர். இப் போர் தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம்.

அதவாது, உலகின் சகல மனிதர்களுக்கும் அவர்களது உயிர் வாழ்க்கைக்கும் மிகவும் அத்தியாவசியமானது குடிநீர். அந்த வகையில் யாழ்.குடாநாட்டிலும் இன்றுள்ள பிரச்சினைகள் எவ்வளவு முக்கியமோ அந்தளவுக்கு நீர் விநியோகமும் சிக்கலானதாக அமைந்துள்ளது.

இரண்டாம் உலக யுத்தத்தின் பின் பல நாடுகள் சந்தித்த இயற்கை மாற்றத்துடனான எதிர்பார்ப்புக்கள் பற்றி எமக்கு நன்றாகவே தெரியும். அவ்வாறானதொரு குடிநீர் குறித்த பெரும் பிரச்சினைக்கு இப்போது யாழ். குடாநாட்டு மக்கள் சிக்கிக்கொண்டுள்ளார்கள்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இலவசக் கல்வியையும், அதன் மதிப்பையும் பற்றி இந்நாட்களில் பிதற்றித் திரிகிறார்.

திடீரென தூக்கத்தில் விழித்தவரைப் போன்று ஏதேதோ கூறுகிறார். சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து அரசாங்கம் செயற்படுவதாகவும் அதன்படி, கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்படுவதாகவும் கூறும் அவர், இவற்றை தடுப்பதற்காக சமூகமுறையில் மாற்றத்தை கொண்டுவர வேண்டுமெனவும் கூறுகிறார். இதில் முக்கியமான விடயம் என்னவெனில், அவர் வரலாறை மறந்துவிட்டிருப்பதுதான்.

இப்ப ஆக்களை விட வாகனங்கள் தான் கூடிப்போச்சு. சும்மா நாட்களிலேயே கார்கள் விட இடமில்லை. அதுவும் சனிக்கிழமையெண்டால் சொல்லவா வேண்டும்...? சுற்றிச் சுற்றிக் களைச்ச எனக்கு கடைசியிலே ஓர் இடம் கிடைச்சது. காரை விட்ட இடத்துக்கு முன்னால் ஒரு சின்ன மரக்கூடல், அதுக்கு கீழே இருக்க நாலைந்து வாங்குகள். அதிலேயிருந்து சில பேர் வைனும், பியரும் குடித்துக் கொண்டிருந்தார்கள். சில பேர் புகைத்துக் கொண்டிருந்தார்கள்.

வேலையில்லாத ஆக்கள், குடிகாரர்கள், குடும்பத்தைத் துலைத்தவர்கள், வாழ்க்கையை வெறுத்தவர்கள், நிரந்தர வீடில்லாதவர்கள், என்று பல தரப்பட்டவர்கள் இப்படிக் கூடி சேர்ந்து குடிப்பது இங்கே ஒரு வழக்கம், இவர்கள் எதிலும் சுதந்திரமானவர்கள் சந்தோசமானவர்கள் எண்டும் சொல்லலாம்.

இந்த நாட்களில் தான் யாழ்ப்பாண பொதுசன நூலகம் கிழட்டு நரி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் அடியாட்களான காமினி திசாநாயக்கா, சிறில் மத்தியு கும்பலால் எரிக்கப்பட்டது. யாழ்ப்பாண வைபவமாலையின் ஏட்டுச்சுவடி, ஆனந்த குமாரசுவாமியின் ஆய்வுகள், பேராசிரியர் ஜசாக் தம்பையாவின் நூல்கள் போன்ற 97000 நூல்கள் தீயில் எரிந்து போயின. நூலகம் எரிந்த செய்தி கேட்ட அதிர்ச்சியில் பிதா. டேவிட் மரணமடைந்தார். நூலகத்தினை எரித்த நெருப்பு அடங்கிய போதும் தமிழ்மக்களின் மனதில் எழுந்த கோபம் ஒரு போதும் அணைந்துவிடவில்லை.


யாழ்ப்பாண நூலக எரிப்பை வைத்து சுஜாதா "ஒரு இலட்சம் புத்தகங்கள்" என்னும் ஒரு கதை எழுதினார். நூலகத்தை பொலிஸ்காரர்கள் எரித்தார்கள் என்று கதையில் சொல்கிறார். அதாவது ஜே.ஆர் ஜெயவர்த்தனா, காமினி திசைநாயக்கா, சிரில் மத்தியு போன்ற எரிக்கச் சொன்னவர்களை மிகக்கவனமாக தவிர்த்து விட்டு உத்தரவிற்கு கீழ்ப்படிந்து எரித்த பொலிஸ்காரர்களை குற்றவாளி ஆக்குகிறார். இது தான் அவர்களது வழக்கமான தந்திரம். இந்தியாவின் ஊழலைப் பற்றி சொல்லும் போது இந்தியாவின் ஜனாதிபதி, பிரதம மந்திரி தொடக்கம் மந்திரி, பிரதானிகள் வாங்கும் ஊழலைப் பற்றி சொல்லாமல் அய்ந்திற்கும், பத்திற்கும் கையேந்துபவர்களின் ஊழல்களை விலாவாரியாக எழுதுவார்கள். அதிகாரவர்க்கத்தை பகைத்து பிரச்சனைப்படாத அதேநேரம் ஊழலை பதிவு செய்த தார்மீகக்கடமை முடித்த திருப்தியோடு பத்திரிகை அலுவலகத்திற்கு கதையை அனுப்புவார்கள்.

இந்த நாட்களில் தான் யாழ்ப்பாண பொதுசன நூலகம் கிழட்டு நரி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் அடியாட்களான காமினி திசாநாயக்கா, சிறில் மத்தியு கும்பலால் எரிக்கப்பட்டது. யாழ்ப்பாண வைபவமாலையின் ஏட்டுச்சுவடி, ஆனந்த குமாரசுவாமியின் ஆய்வுகள், பேராசிரியர் ஜசாக் தம்பையாவின் நூல்கள் போன்ற 97000 நூல்கள் தீயில் எரிந்து போயின. நூலகம் எரிந்த செய்தி கேட்ட அதிர்ச்சியில் பிதா. டேவிட் மரணமடைந்தார். நூலகத்தினை எரித்த நெருப்பு அடங்கிய போதும் தமிழ்மக்களின் மனதில் எழுந்த கோபம் ஒரு போதும் அணைந்துவிடவில்லை.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE