Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

 

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பிரதேசத்தில் 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 100க்கு மேற்பட்ட முஸ்லிம்களின் சடலங்களை தோண்டுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கௌரவ சபாநாயகர்அவர்களே!

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது நிராயுதபாணிகளான குடிமக்கள் கொல்ப்பட்டார்களா? இல்லையா? என்பதை கண்டறிய ஜ.நா.மனிதஉரிமை கவுன்சில் விசாரணைக் குழு நியமிக்கும் தீர்மானத்தை ஏற்றுக் கொள்வதா? இல்லையா? என்பது தொடர்பில் விவாதிப்பதற்க்காக அரசாங்கம் பாராளுமன்றத்தில் பிரேரணை ஒன்றை முன்வைத்திருக்கிறது.

கடந்த கால வரலாற்றை திரும்பிப் பார்த்தால் தொடர்ந்து கொள்ளக்கூடிய உண்மைதான் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள், அபிலாசைகள் மறுதலிக்கப்டும் சந்தர்ப்பங்களில் எல்லாம் இவ்வாறான யோசனைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன என்பதாகும்.

அரசாங்கம் ஏகாதிபத்தியத்துக்கு எதிர்ப்பு தொரிவிக்கு முகமாக இந்த பிரேரணைக்கு ஆதரவு தரும்படி கேட்கிறது. ஜ.நா.வும் அவர்களுக்கு ஆதரவான பிரிவினரும் ஜனநாயகத்திற்காகவும் நியாயத்திற்காகவும் விசாரணைக்கு ஆதரவு கோரி நிற்கின்றனர். உண்மையில் இது பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விவகரமா?

மாவிலாற்றை வைத்து அரசியல் சூதாட்டமாடி, கிழக்கிலும் வடக்கிலும் பெருக்கெடுத்த இரத்த ஆறு, முள்ளிவாய்கால் வரை பாய்ந்தது. தெற்கில் இனவாத - மதவாத சக்திகளால் முஸ்லீம் சகோதரர்களின் இரத்தம் ஆறாய் ஓடுகையில், இப்போ மாவிலாறு இனங்களிடையேயான ஒற்றுமைக்கு வழிவகுத்துள்ளது.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மகாவலி கங்கை ஆற்றின் நீரைத் தடுத்து மாவிலாறு பக்கம் திருப்புவதற்காக விவசாயிகள் மண் மூட்டைகளை அடுக்கி வருகின்றனர்.

நீர் இன்றி ஆயிக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்படுவதாக அப்பகுதி விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

22.06.2014 இன்று மருதானை சி.எஸ்.ஆர் கேட்போர் கூடத்தில் அண்மையில் நாட்டில் எழுச்சி பெற்றிருக்கும் இன வன்முறைக்கு பொருத்தமான தீர்வு ஒன்றை காணும் நோக்கில் சம உரிமை இயக்கத்தினால் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டாளர் ரவீந்ர முதலிகே தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியிலான புத்திஜீவிகள், பேராசிரியர்கள், சமூகபற்றாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதி நிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இலங்கையில் முஸ்லீம் சகோதரர்கள் மீது பௌத்த அடிப்படைவாத அமைப்புக்களாலும், அரசினாலும் திட்டமிட்டு நிகழ்த்தப்படும் இனரீதியிலான வன்முறையினை கண்டித்து டென்மார்க் கொல்ஸ்ரபோ நகரிலும் அதனை அண்டிய நகர்களிலும் டென்மார்க் சம உரிமை அமைப்பினால் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

இப்படத்தை தமிழ் நாட்டில் வெளியிட முயற்சிகள் வெற்றியடைந்து சில காட்சிகள் சென்னையில் நடைபெற்றது. ஆனாலும் - தமிழ் இனவாத சக்திகள் இப்படத்தை சிங்களப் படம் என்று கூறி திரையிட்ட அரங்கங்களுக்கு கொலை மிரட்டல், தீ வைப்பதான மிரட்டல்கள் மூலம் திரையிடுவதனை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அளுத்கம முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து வவுனியா நகரின் பிரதான பள்ளிவாசல் அருகில் கண்டன ஆர்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனை சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் வவுனியா மாவட்டக்கிளையின் தலைவர் ந.தேவகிஸ்னன் தலைமையில் முன்னேடுத்தது. இதில் மூஸ்லீம்,  தமிழ் மக்கள் அணிதிரண்டிருந்தனர். மக்கள் மத்தில் புதிய ஜனநாகய மாக்சிச லெனினிச கட்சியின் வவுனியா மாவட்டக்கிளையினர் தோழர் ந.பிரதிபன் தலைமையில் முன்னின்றனர். அளுத்கம கொலை வெறித் தாக்குதல்களை கண்டித்தும் பொது பலசோனாவை தடைசெய்யக் கோரியும் ஆர்ப்பட்ட முழக்கம் இட்டனர்.

இலங்கையில், முஸ்லீம் சகோதரர்கள் மக்கள் மீது பௌத்த அடிப்படைவாத அமைப்புகளாலும், அரசாலும் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற இனரீதியிலான வன்முறையினை கண்டித்து லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றினை சமவுரிமை இயக்கத்தின் பிரித்தானிய கிளை நேற்றைய தினம் (20.06.2016) நடாத்தியது. குறுகிய அழைப்புக்காலம் எனினும் நூற்றுக்கு மேற்பட்ட அனைத்து இன மக்களும் பாதிக்கப்பட்ட சகோதரர்களுக்காக, அவர்களின் உரிமையை வலியுறுத்தி உணர்வு பூர்வமாகக் கலந்து கொண்டனர்.

முஸ்லிம் மக்களுக்கு எதிராக கொழும்பு அளுத்கம பகுதியில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டது.

அளுத்கம பகுதியில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான  கடந்த 15ம் திகதி தொடக்கம் நடைபெற்று வருகின்ற வன்முறைச் சம்பவங்களில்  3மாத குழந்தை உட்பட 4பேர் உயிரிழந்துள்ளதுடன் 80ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தும் பல கோடிக்கணக்கான சொத்துக்களும் சேதமாக்கப்பட்டன.

இலங்கையில் முஸ்லீம் சகோதரர்கள் மக்கள் மீது பவுத்த அடிப்படைவாத அமைப்புகளாலும், அரசாலும் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இனரீதியிலான வன்முறையினை கண்டித்து, லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றினை சமவுரிமை இயக்கத்தின் பிரித்தானிய கிளை இன்று (20.06.2016) நடாத்தியது. குறுகிய அழைப்புக்காலம் எனினும் நூற்றுக்கு மேற்பட்ட அனைத்து இன மக்களும், பாதிக்கப்பட்ட சகோதரர்களுக்காக, அவர்களின் உரிமையை வலியுறுத்தி உணர்வு பூர்வமாகக் கலந்து கொண்டனர். கடந்த நூறு வருடங்களாக கொடிய இனவாதத்திற்க்காக இரத்தம் வடித்தது போதும். எமது எதிர்கால சந்ததியினர் மனிதர்களாக வாழ ஒன்றிணைந்து எதிர்த்து நிற்போம். இனவாத, மதவாத அரக்கர்களை விரட்டி அடிப்போம் என்ற கோசத்துடன், போராட்டத்தில் பங்கெடுத்த சமவுரிமை இயக்கத்தின் தலைமைத் தோழர்களின் உரைகள் அமைந்தது .

இதேவேளை, பிரான்சின் தலைநகர் பாரிஸில் சம உரிமை இயக்கமும், அதன் சகோதர அமைப்புகளும் இன்று இனவாத - மதவாத வன்முறைகளுக்கு எதிரான பிரச்சார முன்னெடுப்பில் ஈடுபட்டனர். துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன், இனவாத- மதவாத வன்முறைக்கு எதிராகவும், முஸ்லீம் சகோதரர்களின் உரிமைகளை வலியுறுத்தியும் பிரச்சாரங்களை மேற்கொண்டனர். இது பற்றிக் கருத்துத் தெரிவித்த புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைமைத் தோழரும், சமவுரிமை இயக்கத்தின் பிரான்ஸ் கிளையின் செயற்பாட்டாளருமான ரஜாகரன் : "எமது தாய் அமைப்பு இலங்கையின் வராலாற்றில் பதியத்தக்க விதமாக பாரிய போராட்டத்தை 18.06.2014 அன்று கொழும்பில் நடத்தியது. அதன் தொடர்ச்சியாக இன்று (20.06..2014) லண்டனிலும், பாரிசிலும் வெற்றிகரமான முறையில் போராட்டங்களை நடத்தி முடித்துள்ளோம். இப்போராட்டங்கள் போல வரப்போகும் நாட்களில் இலங்கையிலும் தொடரவுள்ளது. அதேபோல ஐரோப்பிய நாடுகளில், இலங்கையில் ஒடுக்கப்படும் தேசிய இன மக்களின் உரிமையை வலியுறுத்தி - குறிப்பாக முஸ்லீம் சகோதரர்கள் மீதான திட்டமிட்ட தாக்குதலைக் கண்டித்து போராட்டங்கள் விதம் விதமான முறையில் நடத்தப்படும்" என்றார்.

இலங்கையில் முஸ்லீம் சகோதரர்கள் மக்கள் மீது பவுத்த அடிப்படைவாத அமைப்புகளாலும், அரசாலும் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இனரீதியிலான வன்முறையினை கண்டித்து, லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றினை சமவுரிமை இயக்கத்தின் பிரித்தானிய கிளை இன்று (20.06.2016) நடாத்தியது. குறுகிய அழைப்புக்காலம் எனினும் நூற்றுக்கு மேற்பட்ட அனைத்து இன மக்களும், பாதிக்கப்பட்ட சகோதரர்களுக்காக, அவர்களின் உரிமையை வலியுறுத்தி உணர்வு பூர்வமாகக் கலந்து கொண்டனர். கடந்த நூறு வருடங்களாக கொடிய இனவாதத்திற்க்காக இரத்தம் வடித்தது போதும். எமது எதிர்கால சந்ததியினர் மனிதர்களாக வாழ ஒன்றிணைந்து எதிர்த்து நிற்போம். இனவாத, மதவாத அரக்கர்களை விரட்டி அடிப்போம் என்ற கோசத்துடன், போராட்டத்தில் பங்கெடுத்த சமவுரிமை இயக்கத்தின் தலைமைத் தோழர்களின் உரைகள் அமைந்தது .

2009 இற்குப் பின்னர், இலங்கையின் நடந்த தமிழ் மக்கள் மீதான கொடுமைகளை, பாலியல் வதைகளை நியாயமான முறையில் பேச முற்படும் ஒரே திரைப்படம், "பிறகு" என்ற சிங்கள - தமிழ் திரைப்படமாகும். இதில் நடித்த நடிகர்கள் தொடக்கம், இயக்குனர் மற்றும் பணியாளார்கள் தமிழ் மக்களுக்காக நியாயம் கேட்பவர்கள். எமது உரிமைப் போரை ஆதரிபவர்கள். இதன் அடிப்படையில் தான், சமவுரிமை இயக்கம் மற்றும் சகோதர அமைப்புகள் இணைந்து இந்த திரைப்படத்தை உலகில் பல நாடுகளில் வெளியிட்டு வருகிறது .

நீர்கொழும்பு, புத்தளம் மற்றும் மேற்குக் கரையோர மீனவர்கள்  எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராகவும், எரிபொருள் மானியம் கோரியும் நேற்று 18.06.2014 காலையிலிருந்து சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர் . போராட்டம் நீர் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. இலங்கை அரசுக்கும் மீனவர்களுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் ஏற்பட்ட உடன்பாடு காரணமாகஉண்ணாவிரதம் இன்று (19..06.2014 ) தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.

இலங்கையில் முஸ்லீம் மக்கள் மீது அடிப்படைவாத அமைப்புகளாலும், அரசாலும் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இனரீதியிலான வன்முறையினை கண்டித்து, லண்டன் இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றினை சமவுரிமை இயக்கத்தின் பிரித்தானிய கிளை ஒழுங்கு செய்துள்ளது.

கடந்த நூறு வருடங்களாக கொடிய இனவாதத்திற்க்காக இரத்தம் வடித்தது போதும். எமது எதிர்கால சந்ததியினர் மனிதர்களாக வாழ ஒன்றிணைந்து எதிர்த்து நிற்போம். இனவாத, மதவாத அரக்கர்களை விரட்டி அடிப்போம்.

அண்மையில் நடந்து முடிந்த பேரழிவுகளுக்கு அடிப்படைவாத அமைப்புகளும், அவர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதித்த அரசாங்கமுமே பொறுப்பேற்க்க வேண்டும். இதிலிருந்து இருதரப்பும் விடுபட முடியாது. மீண்டுமொரு கறுப்பு ஜூலை வேண்டாம் என்ற தலைப்பில் ஜூலை 18 கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்க்கு முன்பாக சம உரிமை இயக்கம் நடாத்திய ஆர்பாட்டத்தி;ன் போது அந்த இயக்கத்தின் அமைப்பாளர் தெரிவித்தார்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE