Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

யுத்தம் நடந்த காலத்தில் வங்கி ஒன்றில் இருந்து 220 கிலோ தங்க நகைகள் எடுக்கப்பட்டதாகவும், அதை அரசிடம் ஒப்படைத்ததாகவும் கூறும் சரத்பொன்சேகா, இது எங்கே என்று கேட்கின்றார். சட்டப்படியாக மக்களால் வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகைளைப் பற்றியவை.

இந்த தங்கத்தை யுத்தப் பின்புலத்தில் உருவான திடீர் பணக்கார கும்பலிடமும், அரசாங்கத்தின் அதிகாரத்தை பங்கு போட்டுள்ளவர்களின் பொக்கற்றுக்குள் தேட வேண்டும்.

அனைவருக்கும் வணக்கம். அமிர்தலிங்கம் குலரத்தினம் அவர்களது இறுதி நிகழ்விற்காக கூடியிருக்கிறோம். இது அவரின் உடலிற்கான இறுதி நிகழ்வு மட்டுமே. அவரின் பெளதிக தோற்றத்திற்கான பிரியாவிடை மட்டுமே. ஆனால் அவர் தனது சமத்துவ, பொதுவுடமை, சாதி மறுப்பு கொள்கைகளை அடுத்த தலைமுறைக்கு கொடுத்து சென்றதன் மூலம் வாழ்கிறார். அவரதும்,அவர் போன்ற ஆயிரம் ஆயிரம் தோழர்களினதும் போராட்டங்கள் நமது சமுதாயத்தில் ஏற்படுத்திய மாற்றங்களில் வாழ்கிறார்.

பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் மிகுந்த அந்தக் காலத்தில் அவர் தனது தங்கையாரை, தான் பங்கு கொண்ட எல்லா போராட்டங்களிலும் கலந்து கொள்ள வைத்தார். மற்றவர்களை போராடச் சொல்ல முதல் தானும், தன்னுடைய குடும்பத்தினரும் முதலில் பங்கு கொள்ள வேண்டும் என்ற உறுதி அவரிடம் இருந்தது.

"தற்போதைய காலங்களில் அரச பாடசாலைகளினுள் மாணவர்களிடமிருந்து பணம் அறவிடப்படுதல், பெற்றோரிடம் பலவகையான வேலைகளை சுமத்துதல் போன்ற அரச கல்வி முறைமையினை அதாவது இலவச சுதந்திர கல்வித் திட்டத்தினை பாதிக்கின்ற பல செயற்பாடுகள் நடைபெற்ற வண்ணம் உள்ளன.

அன்புக்குரிய தாய்மாரே, தந்தையரே, சகோதரர்களே, சகோதரிகளே!

நாடு முழுவதும் உள்ள வெளிநோயாளர் பிரிவில் வைத்திய சேவையை பெற்றுக்கொள்வதற்காக தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையில் தமது முறை வரும்வரை காத்து நிற்பதை நாம் அன்றாடம் காண்கிறோம். அதிகாலையில் இருந்தே மருந்தை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் படுகின்ற துயரம் கொஞ்சநஞ்சமல்ல.

'தனியார் வைத்தியசாலைகள், சனல் நிலையங்கள் போதியளவு இருக்கும் போது நீங்கள் ஏன் அரச வைத்தியசாலையை நாடுகிறீர்கள்?"

பதில் தெளிவானது, பணம் இல்லாமையால் தானே? அதேபோல் உங்களுக்கு வைத்தியசாலையில் தரப்படும் மருந்து சிட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள மருந்துகளில் சில அத்தியாவசிய மருந்துவகைகள் சிலவற்றை 'பார்மஸியில்" வாங்கும்படி அவர்கள் கூறுவது ஏன்? அவை வைத்தியசாலையில் இல்லாதது ஏன்?

இந்தப்பிரச்சினைக்கு நாம் அனைவரும் பதிலை தேடியாக வேண்டும். சுதந்திர வைத்திய சேவை நீடிக்கப்போவதில்லை. தற்போது எம்முன் இருப்பது அதனை வென்றெடுக்கும் போராட்டம்.

பிரசன்ன விதானகே இயக்கிய "பிறகு" (சிங்களத்தில் "ஒப நத்துவா ஒப எக்கா" ஆங்கிலத்தில் "வித் யூ, வித்அவுட் யூ") கதையானது, யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வெவ்வெறு மொழி பேசுகின்ற இருவர் இணைந்த வாழ்க்கையைச் சுற்றிய கதையாகும்.

சிங்களவரான சரத்சிறி மலையகத்தில் அடகுகடை நடத்துகின்றார். உணர்ச்சியை இனம் காண முடியாது விறைத்துப்போன வெறுமையுடன், மோட்டார் சைக்கிளும் அமெரிக்கா வகை மல்யுத்த சண்டையை பார்ப்பதையுமே வாழ்க்கையாகக் கொண்ட ஒருவன்.

இலங்கையில் 4 வருட காலத்திற்குள் சிறுவர் துஸ்பிரயோகம் சார்ந்து 2 இலட்சத்து 10 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி அனோமா திசாநாயக்க தெரிவிக்கின்றார்.

சமூகமே தன் குழந்தைளைக் குதறுகின்றது என்பதேயே இது எடுத்துக் காட்டுகின்றது. குற்றத்தில் ஈடுபடுபவர்களை மட்டும் குற்றவாளிகளாக குறுக்கிவிட முடியாது. மாறாக சமூகத் தன்மை சிதைந்து வருவதும், தன்னலம் அதிகரித்து வருவதையுயே எடுத்துக் காட்டுகின்றது.

ருசிய ஏகாதிபத்தியத்தின் இராணுவ பொருளாதார செல்வாக்கு மண்டலமாக இருந்த உக்கிரைனை, மேற்கு ஏகாதிபத்தியங்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான  ஒரு உள்நாட்டு யுத்தத்தை நடத்துகின்றன.

மக்களின் வாழ்வுக்கான போராட்டத்தினை பயன்படுத்தி கொண்டு மேற்கு ஏகாதிபத்தியங்கள்,  தேசியவாத நாசிச பாசிட்டுகளின் துணையுடன் அதிகாரத்தை கைப்பற்றியது முதல் ஒரு உள்நாட்டு யுத்தத்தை நடத்துகின்றது.

எம்மிற் பலருக்கு 11 செப்டெம்பர் என்றால் நினைவில் வருவது 11 செப்டெம்பர் 2001 அன்று அல்கையிடா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், உலக முதலாளித்துவத்தினதும், அமெரிக்கப் பொருளாதார ஏகாதிபத்தியத்தினதும் குறியீடாகவிருந்த வோர்ல்ட் ரேட் சென்டர் (World trade center) மற்றும் அமெரிக்கப் பாதுகாப்பு நிறுவனமான பெந்ரகோன் (Pentagon) மீதும் விமானத்தைச் செலுத்தி அவற்றை தகர்த்தது தான். இத்தாக்குதலில் பெந்ரகோன் (Pentagon) மிகக் குறைந்த பாதிப்புடன் தப்பியது. ஆனால் வேர்ல்ட் இரெட் சென்ட்ர் (World trade center) முற்றாக அழிந்தது. இந்நடவடிக்கையில் மொத்தமாக 2986 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் இதைவிட பலமடங்கு அழிவு 40 வருடங்களுக்கு முன், 11 செப்டெம்பர் 1973இல் அமெரிக்க அரசின் ஜனாதிபதியாக இருந்த நிக்ஸனின் தலைமையில் அவரது அரசின் பாதுகாப்பு செயலாளராகவிருந்த ஹென்றிக் கிஸ்ஸிங்கரால் சிலி நாட்டில் ஏற்படுத்தப்பட்டது.

அரசு மூலம் இனப்பிரச்சனைக்கான தீர்வு காண்பது தொடர்பாக அதிருப்தியும், அவநம்பிக்கையும் தொடருகின்றது. மறுபக்கம் அலட்சியம், புறக்கணிப்பு, அக்கறையின்மை காணப்படுகின்றது.

தனித்தனியாக போராடுவதோ, அதிலிருந்து ஒதுங்கி இருப்பதோ தீர்வுகளை காண்பதற்கான பாதையுமில்லை.

இதிலிருந்து மீள்வதற்கும், தீர்வுகளை காண்பதற்குமான வழி என்ன? மக்கள் இனம் மொழி மதம் சாதி கடந்து தமக்கு இடையில் ஒன்றிணைந்து வாழ்வதன் மூலமே, தமக்கு இடையிலான இனப் பிரச்சiனைக்குத் தீர்வு காணமுடியும். இது தான் ஒரேயொரு  வழி.

இனரீதியான ஒடுக்குமுறையை, அதே இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு இனரீதியாக எதிர்கொள்வது சரியானதா!? இது இனவொடுக்குமுறைக்கு தீர்வைத் தருமா? இனரீதியாக ஒடுக்குபவனின் அரசியல் பொருளாதார நோக்கத்தை ஆராய்ந்து அதற்கு எதிராக போராடுவதற்கு பதில், இனவொடுக்குமுறை வடிவத்தை மட்டும் எதிர்க்கின்ற இனவாத அரசியல் தவறானது. இது அதே இனவாதத்தைப போற்றி தனதாக்குவதுடன், ஒடுக்குபவனின் அரசியல் பொருளாதார நோக்கத்தை பாதுகாக்கின்ற படுபிற்போக்கான அரசியலாகி விடுகின்றது.

இந்தியாவில் புத்தூர் மற்றும் சுல்லியாவில் வாழ்ந்து வரும் 926 இலங்கை அகதி குடும்பங்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளதாம்!

இப்படி இலங்கை அகதிக்கு சாதி அடையாளம் கொடுக்கும் இந்திய அரசு தான் இலங்கையில் இன வேறுபாட்டை நீக்கி நல்லாட்சியை அமைக்க உதவுமென்று கூறி, மக்களை கனவுலகில் வாழக் கோருகின்றது தமிழ் இனவாதம்.

சமவுரிமை இயக்கம் இனவாதம், மதவாதம், சாதியம் (குலவாதம்) போன்ற ஒடுக்குமுறைகளை எதிர்த்து மாநாடொன்றை இன்று (15-07-2014) கொழும்பில் நடாத்தியது.

கொழும்பு பொது நூலக மண்டபத்தில் நடைபெற்ற இம் மாநாட்டில், நாட்டின் எல்லாப் பகுதியிலிருந்தும் இடதுசாரிக்கட்சிகளின் பிரதிநிதிகள், புத்திசீவிகள், கல்வியாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராகக் களப்பணியாற்றும் தோழர்களும் பங்குகொண்டனர். மாநாடு நடைபெற்ற கொழும்பு பொதுநூலக வளாகம் முழுவதும் இன, மத வாதத்துக்கு எதிரான பதாதைகள் வைக்கப்பட்டிருந்தது. அத்துடன் நாட்டின் முக்கிய நகரங்களின் நடத்தப்பட்ட "மீண்டுமொரு கறுப்பு ஜூலை வேண்டாம்" என்ற பதாதையில் மக்கள் இனவாதத்துக்கும் மதவாதத்துக்கும் எதிராகக் கையெழுத்திட்டிருந்தனர். அப்பதாதைகளும் அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

பீரிஸ்- சுஸ்மா சந்திப்பு அதிர்ச்சி தருவதாக கூறி, மோடிக்கு வைகோ கடிதம் எழுதி உள்ளாராம். இந்த அரசியல் மோசடி தான் அதிர்ச்சியளிக்கின்றது.

இதேபோன்று 2009 மே மாதம் இந்திய தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி வென்று புலியை பாதுகாக்கும் என்று கூறி, பிரபாகரன் உள்ளிட்ட புலிகளை பலி கொண்ட சதிக்கு வைகோ தலைமை தாங்கிய உண்மை தான், அதிர்ச்சி அளிக்கின்றது.

வடமாகாண சபையில் ஆட்சிக்காலம் வரை சந்திரசிறி தான் ஆளுநர் என்பதும், மாகாண சபை மூலம் அதிகாரத்தை அனுபவிக்க முடியாத துயரத்தில் கூட்டமைப்பு மூழ்கி இருக்கின்றது. இதற்குள் முதலமைச்சர் ராஜினாமா என்ற தகவலால் பதைபதைத்துப் போய் அதை மறுத்து அறிக்கை விடுமளவுக்கு விக்கினேஸ்வரனின் அதிகார துயரம் மலையளவானது.

தேசிய மீனவர் இயக்கம் பத்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து யாழ்ப்பாணத்தில் நடத்த திட்டமிட்ட ஆர்ப்பாட்டம், தடை செய்யப்பட்ட நிலையில், அது கண்டனக் கூட்டமாக இன்று நடைபெற்றது.

அரசு இதை தடுத்து நிறுத்த நீதிமன்றம், பொலிஸ் .. என்று எல்லாவகையான ஆட்சி அதிகார உறுப்புகளை பயன்படுத்திய போதும், அதை மீறி மக்கள் ஒன்றிணைந்து வருகின்றனர். அரசு இன்று

நாளை 15.07.2014 கொழும்பு பொது நூல் நிலையத்தில் இனவாதத்திற்கும், மதவாதத்திற்கும், குலவாதத்திற்கும் (சாதியத்திற்கும்) எதிரான நாங்கள் மனிதர்கள் என்ற கருப்பொருளில் சமவுரிமை இயக்கத்தால் மாநாடு நடக்கவிருக்கும் நிலையில், சனிக்கிழமை அன்று நுவரெலியாவில் மீண்டும் ஒரு கறுப்பு யூலை வேண்டம் என்ற கையேழுத்து போராட்டம் இடம் பெற்றுள்ளது. இதில் மூவின மக்களும் இனைந்து தமது ஆதரவை தெவித்துள்ளனர். இதுவரை நடந்த இடங்களை விட அதிகமாகவர்கள் ஆர்வத்துடன் பங்களித்தமை சமவுரிமை இயக்கத்தில் செயற்பாட்டை மேலும் வலியுறுத்தியுள்ளது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE