Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

காலனித்துவத்தை விட நவகொலனித்துவ ஆட்சியின் கீழான நவதாராளவாத பொருளாதார கொள்கைகளும் நடைமுறைகளும் உழைக்கும் மக்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் பாரிய சவாலாக இருப்பதை கண்டு செயலிழக்காது தனித்துவமாக அவற்றை எதிர்கொண்ட தொழிற்சங்கவாதி பாலாதம்புவின் மறைவு தொழிற்சங்க இயக்கத்திற்கு பாரிய இழப்பாகும்.

புதிய-ஜனநாயக மாச்சிச-லெனினிசக் கட்சியின் 5 வது அனைத்திலங்கை மாநாட்டின் 4வது நிறைபேரவைக் கூட்டத்தின் அரசியல் அறிக்கை : 29,30-08-2014

வலதுசாரி தொழில் தருனர்களிமுடம் வலதுசாரி சம்பிரதாயங்களுடனும் சமரசம் செய்யாத, தொழிலாளர்களின் அக்கறையை மேலாக கொண்டிருந்த இலங்கை வர்த்தக, கைத்தொழில் பொது ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் பாலா தப்புவிற்கு இலங்கை கொம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம் புரட்சிகர இறுதி வணக்கத்தை செலுத்துகிறது.

 

சர்வதேச சினிமாவில் தடம் பதித்து புதுப்பாதையை திறந்துவிட்டிருக்கும் இயக்குனர் பிரசன்ன விதானகேயினது தலைசிறந்த திரைப்படம் "With you, Without you" - "நீ இல்லாமல், உன்னோடு" - (பிறகு) இங்கிலாந்தில் வாழும் உங்களுக்காக, எதிர்வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 7ம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு கரோ சபாரி சினிமா அரங்கில் (Harrow "SAFARI" Cenima) திரையிடப்படுகின்றது.

இலங்கையில் தமிழ்மக்களின் வாழ்க்கையினை போருக்கு முன் போருக்குப் பின் என்ற நிலை கொண்டு பார்க்க வேண்டியது இன்று அவசியமாகின்றது. இந்த போர் பல ஆயிரக்கணக்கான மக்களுடைய வாழ்க்கையினை பல இன்னல்களையும், இழப்புக்களையும், விரக்திகளையும் கொண்டதாக மாற்றியுள்ளது. மக்களால் தொலைக்கப்பட்டவை ஏராளம், அவற்றினை எதனைக் கொண்டும் ஈடுசெய்ய முடியாது.

மூத்த தொழிற்சங்கவாதியும், இலங்கை வர்த்தக மற்றும் பொது தொழிலாளர் சங்கத்தின் பிரதம செயலாளருமான சட்டத்தரணி பாலா தம்பு காலமானார். 

பத்தாண்டுகளுக்கு முன்னால் 2003 மார்ச் 19ந்தேதி அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படையினர் ஐ.நா. ஒப்புதல் இன்றி இராக் மீது அநியாயமாகவும், அக்கிரமாகவும் படை எடுத்ததனர். இதற்காக ஒரு பொய்யான, போலியான குற்றச்சாட்டை அவர்கள் கூறினர். பேரழிவு ஆயுதங்களை இராக் வைத்திருக்கின்றது என்பது தான் அந்தக் குற்றச்சாட்டாகும்.

வவுனியா மாவட்டத்தின் 29 கிராமங்களில் சிறுநீரக நோயால பாதிக்கப்பட்ட பலர் உள்ளதாக அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நோய் காரணமாக இதுவரை ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச காணாமல் போனவர்கள் தினத்தை முன்னிட்டு காணாமல்போனோர் உறவினர்களால் வவுனியா நகரில் கவனயீர்ப்பு போராட்டம் இன்று நடத்தப்பட்டது. ஊர்வலத்திற்கு பொலிஸார் மற்றும் படைப்புலனாய்வாளர்கள் கடுமையான அச்சுறுத்தல் விடுத்தபோதும் குறித்த போராட்டம், வெற்றிகரமான நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் சர்வதேச காணாமல்போனவர்கள் தினமாகும்.

ஊவா மாகாண சபை தேர்தலில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் தேர்தல் வன்செயல்கள் கடந்த வாரம் பாரதூரமாக அதிகரித்துள்ளது. இதுவரை வெளிவராத பாரதூமான சம்பவங்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணமுள்ளன. கடந்த ஞாயிறு இரவு ஆரம்பமான வன்முறைகள் தொடர்ந்து பரவலாகி வருகின்றன.

இந்நிலை மொணராகலை மாவட்டத்திலயே அதிகமாக காணப்படுகிறது. மொணராகலை மாவட்டத்தில் இரு நாட்களில் மட்டும் 13ஐக்கிய தேசியக் கட்சி அலுவலகங்களும், மக்கள் விடுதலை முன்னணியின் 4அலுவலகங்களும் தாக்கப்பட்டுள்ளன.

'பெருந்தோட்ட சமூக நடவடிக்கை குழு' (Plantation Community Action Group) என்ற பொது அமைப்பு உதயம்

மக்கள் தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் பண்டாரவளை லியோ மார்கா ஆஸ்ரமத்தில் கடந்த 16ஆம் திகதி, மலையக மக்களின் காணி, வீட்டு உரிமை தொடர்பாக இடம்பெற்ற பொதுக் கலந்துரையாடலில் குறித்த உரிமைகளை வென்றெடுப்பதற்காக அனைத்து அமைப்புகளையும் தனி நபர்களையும் இணைத்துக் கொண்டு பொதுவான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக 'பெருந்தோட்ட சமூக நடவடிக்கை குழு' எனும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டதுடன் மலையக மக்களின் காணி, வீட்டு உரிமையில் அக்கறையுடைய அனைத்து அமைப்புகளும் தனிநபர்களும் இவ்வமைப்பில் இணைந்து செயற்பட அழைப்பு விடுக்கப்பட்டது.

இனவாதத்தை தூண்டும் வெறிப்பேச்சுக்களின் வலதுசாரிய அரசியல் எம்மக்களைப் பலி கொண்டது. எம்மக்களின் வாழ்வை வறுமையில் தள்ளியது. ஆம் இனவாத அரசியல் முதலாளித்துவத்தின் கோரமுகம். சீமானினதும், அவரது நாம் தமிழர் இயக்கத்தினதும் அரசியல் அழிவு அரசியல். பாசிசத்தின் கூறுகளை, சர்வாதிகாரத்தின் கூறுகளை கொண்டிருக்கும் ஆபத்தான அரசியல். தமிழ்நாடு, ஈழம் என்று சொல்லிக் கொண்டு மக்களின் எதிரிகளுடன் கை கோர்த்துக் கொண்டிருக்கும் சீமான் தமிழ்நாட்டு ஆட்சியைப் பிடித்து, பின்பு ஈழம் அமைக்க அடுக்குப் பண்ண போகிறாராம். அவரின் அடித்தொண்டையில் இருந்து வரும் அலறல்களை அம்பலப்படுத்தி வெளிவந்த கட்டுரையை தமிழ்நாட்டு தேர்தலையொட்டி மறுபிரசுரம் செய்கிறோம்.

தேசபக்தி என்பது அயோக்கியர்களினது கடைசிப் புகலிடம் என்று சாமுவேல் ஜோன்சன் ஆயிரத்து எழுநூறுகளில் சொன்னார். சீமான் போன்ற தேசவெறி, இனவெறி யோக்கியர்கள் அதை இன்று வரை நிரூபித்து காட்டுகிறார்கள்.

ஈச்சமோட்டை மற்றும் பாசையூர் பகுதிகளில் இருந்து இராணுவத்திற்கு இணைந்த இளைஞர்கள் தற்போது விடுமுறையில் வீடுகளுக்கு வந்துள்ளனர். இவ்வாறு வந்தவர்கள் தாங்கள் இராணுவத்தினர் என்றும், தங்களை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்ற சிந்தனையில் அங்குள்ள பெண் பிள்ளைகளுடன் சேட்டை விட்டுள்ளனர். இதனையறிந்த பெற்றோர் ஈச்சமோட்டை சனசமூக நிலைய நிர்வாகத்திடம் தெரிவித்தனர் இதனையடுத்து அவர்களை சனசமூக நிர்வாகம் தட்டிக்கேட்டனர்.

'எழுக எம் இளம் தளிர்கள்" Brugdorf பெற்றோர் பேரவையின் நிகழ்வில்!!!

சுவீஸ்சின் தலைநகர் Bern ஐ அண்டிய சிறுநகரமே Brugdorf. அங்கு வாழும் தமிழ் பேசும் மக்களால் 8 வருடங்களுக்கு மேலாக பல நெருக்கடிகளையும் தாண்டி, தாங்கி இயங்கிக் கொண்டிருக்கும் பெற்றோர் பேரவை நடாத்தும் வருடாந்த நிகழ்வானது எப்போதும் பலதரப்பட்ட நிகழ்சிகளை உள்ளடக்கியதாகவே அமைந்திருக்கும். நாடகம், சிறுவர் சிறுமிகளுக்கான பலவகை நிகழ்ச்சிகள், இலக்கிய அறிமுகப்படுத்தல்கள் எனப் பலவகை நிகழ்வுகளோடு, சமூகமேம்பாட்டு நிகழ்வுகள் என்ற இன்னுமொரு பகுதியும் இணைந்ததாக அமைந்திருக்கும். இப்பகுதியில் சமூகவிடயம் சார்ந்து தாம் கடைப்பிடிப்பவற்றை மக்கள் முன் சொல்லுவதற்காக ஆன்மீகவாதிகள், மதச்சீர்திருத்தவாதிகள், எழுத்தாளர்கள், எனப்படுவோர் அழைக்கப்படுகிறார்கள். இம்முறை இப்பகுதியில் விசேடமாக இடதுசாரிக் கருத்துக்களைக் கொண்ட இருவர் அம்மக்கள் மத்தியில் உரையாற்றினர்.

அன்னிய ஆட்சிகாலங்களும் இலங்கை வரலாறும் என்ற பொருள்பட தோழர் தெரல் உரையாற்றினார். அடுத்ததாக இலங்கை தமிழ் பேசும் மக்கள் ஒருதேசிய இனம் சார்ந்தவர்கள் அவர்கள் அனைத்து உரிமைகளோடும் வாழ்வதற்கான அடிப்படையை உருவாக்கவும் அதற்கான செயற்பாட்டில் இறங்க வேண்டிய அவசியத்தை தோழர் கொட்டிக்கொட வலியுறுத்தினார். இச் சிங்களத் தோழர்களின் உரைகளை அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் பொறுமையாகச் செவிமடுத்து கரகோசம் செய்து வரறே;றனர்.

இவ்வுரைகளை செய்வதற்கான ஏற்பாட்டை, அனுசரனையை இவ்வமைப்பின் ஒட்டு மொத்த உறுப்பினர்களும் ஏற்றுக் கொண்ட சம்பவமானது தமிழ் பேசும் மக்களின் அரசியல் சூழலில் மிகப்பெரும் மாற்றமாகும். ஓரு ஜனநாயக சூழலை தோற்றுவிக்கவும், அதை உள்வாங்கவும் மக்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இவ் நிகழ்வுணர்த்துகிறது. இது அனைத்து தரப்பாலும் வாழ்தப்பட வேண்டிய விடயமாகும். Brugdorf பேற்றோர் பேரவையானது, April மாதம் புத்திஜீவிகளான சுவீநாட்டு பிரiஐகள் மத்தியில் இலங்கை வரலாறும் அன்னிய ஆட்சிகாலங்களும் தமிழர் போராட்டமும் என்ற தலைப்பில் கருத்தரங்கொன்றை நடாத்தியது. அதிலும் தோழர் தெரல் அவர்களே உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாவற்றுக்கும் மேலாக அவ்வமைப்பின் இளம் உறுப்பினரும் பல்கலைகழக மாணவர்ருமாகிய ஒருவர் கூறுவதைப் பார்போம் 'மிகத் தெளிவான, நேர்மையான, வரலாற்று அரசியல் விஞ்ஞான அடிப்படையில் கருத்துக்களைக் கொண்டவர்களான, பழகுவதற்கும், உபசரிப்பதிலும் இனிமையாகக் காணப்படும் இம்மனிதர்கள். எமக்கு எதிரிகளாக சித்தரிக்கப்பட்டனர். அரசியல் வறுமையுடைய கருத்துக்கள் எம்மவர்களிடம் வேரூண்டியுள்ளது. இப்போது என்னுள் புதிய சிந்தனைக்கான வேர்கள் ஊன்றத் தொடங்குகின்றன"

இக்கருத்தானது புதிய மாற்றத்தினை தமிழ் பேசும் மக்கள் மத்தியில், அதுவும் இளம் வட்டத்தினர் மத்தியில் தோற்றுவிக்கும் என்ற நம்பிக்கையைக் கொடுக்ககிறது.

நேரடித் தொகுப்பு

திலக்

24-5-2014

இலங்கைத் தமிழரிடம் அரசியல் ஆய்வாளர்கள் என்றொரு அறிஞர் கூட்டம் உருவாகி வந்துள்ளது. அது பத்திரிகைகளில், இணையங்களில், தொலைக்காட்சிகளில் வாழ்கிறது. தாம் அறிவு மிக்கவர்கள் என்ற பெருமிதம் கொண்டவர்கள் இவர்கள். அந்த அறிவின் துணை கொண்டு ஆராய்ச்சிகள் பல செய்து அரிய விஞ்ஞானக் கண்டு பிடிப்புகளை கண்டு பிடித்து வைத்திருக்கிறார்கள். இவர்களின் அரசியல் அறிவையும், பண்பாட்டின் உயர்வையும் பார்த்து மற்றவர்கள் மண்டை கிறுகிறுத்து போவார்கள்.

அந்த அறிவாளிகள் இன்று ஒரு மயிர் பிளக்கும் விவாதம் ஒன்றை செய்து கொண்டு இருக்கிறார்கள். லைக்கா என்ற தொலைத்தொடர்பு நிறுவனம் தமிழீழத் துரோகியா இல்லையா, அது தயாரிக்கும் படம் தமிழீழ விடுதலைக்கு வலுச் சேர்க்குமா இல்லையா என்று ஆய்வு செய்து கொண்டு இருக்கிறார்கள். லைக்கா, லிபரா தமிழ்மக்களிற்காக அன்றைக்கும் இருந்ததில்லை. என்றைக்கும் இருக்கப் போவதில்லை. ஏனென்றால் அவர்கள் வியாபாரிகள். வியாபாரிகளிற்கு, வியாபார நிறுவனங்களிற்கு மக்களைப் பற்றிய அக்கறைகள், மனிதாபிமானங்கள் என்றைக்குமே இருக்காது. அவர்களது ஒரே சிந்தனை பணம் சேர்ப்பது மட்டுமே. அன்றைக்கு புலிகள் இருந்த போது புலம்பெயர் தமிழ்மக்களிடம் வியாபாரம் செய்வதற்காக புலி ஆதரவு வேடம் போட்டார்கள். இன்றைக்கு இலங்கையில் வியாபாரம் செய்வதற்காக மகிந்தாவுடன் ஒப்பந்தங்கள் போடுகிறார்கள்.

அரசாங்கம் புதிதாக அறிமுகப்படுத்த உள்ள இலத்திரனியல் அடையாள அட்டை மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவது என முன்னிலை சோசலிசக் கட்சி தெரிவித்துள்ளது.

நாட்டு பிரஜைகளின் கைவிரல் அடையாளங்களை பெறும் அங்குலிமாலா நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் நாட்டையும் திறந்த வெளி சிறைச்சாலையாக மாற்ற அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும் முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரச்சார செயலாளர் புபுது ஜாகொட குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பு ராஜகிரிய பிரதேசத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE