Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

இலங்கையின் 66வது சுதந்திர தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது. இந்த 66 வருடங்களை திரும்பிப் பார்போமானால் இந்த நாட்டின் சகல மக்களிற்கும் சுதந்திரம் மறுக்கப்பட்டு அவர்கள் ஆளும் வர்க்கத்தால் தொடர்ச்சியான அடக்குமுறைக்கு உள்ளாகி வருவதனையே காணலாம்.

அண்மையில் நடந்தேறிய வடமத்திய மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தலில் பலத்த அடிவாங்கிய ஐ.தே. கட்சி அடங்கலான எதிரணிக் கட்சிகள், மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கான மாகாணசபை தேர்தல் அறிவிப்பு வெளியானதும் தம்மை சுதாகரித்துக் கொண்டு, இவ்விரு மாகாணசபை தேர்தல்களை ஆட்சிமாற்றத்திற்கான ஆரம்பப் படியாக்கிக் கொள்ள வேண்டும் என்ற பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் தீவிரமாக முன்னெடுத்துச் செல்வதை காணக்கூடியதாக உள்ளது.

காவத்தை பெருந்தோட்ட கம்பனியின் நிர்வாகத்துக்கு உட்பட்ட காவத்தை வெள்ளாந்துரை தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகள் சில வசிப்பதற்கு எவ்விதத்தில் பொருத்தமற்று காணப்படுவதுடன் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக அதில் வசிப்பவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

கடந்த 29 ஆம் திகதி கொஸ்லாந்த மீரியபெந்த தோட்டத்தில் நடந்த அனர்த்தத்தினை தொடர்ந்து நாடெங்கிலும் மழை பெய்து வரும் நிலையில் கஹவத்தை எந்தானை தோட்டத்திலும், மண்சரிவு அபாயம் காரணமாக கடந்த 30 திகதி இரவு எந்தானை கீழ் பிரிவிலுள்ள சுனாமி வீடமைப்புத் திட்டம், தேயிலைத் தொழிற்சாலை லயம், உத்தியோகத்தர் விடுதிகள் என்பனவற்றில் வசித்து வந்த 35 தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்த 105 பேர் எந்தானை ந. மீனாட்சியம்மாள் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

இன்று அரசியல், சமூகம், பொருளாதரம், இனங்களுக்கு இடையிலான சமத்துவம் என அனைத்துத் தளங்களிலும் இலங்கை பாரிய சீரழிவைச் சந்தித்த வண்ணமுள்ளது. பொருளாதராம் சீனா, இந்தியா உள்ளடங்கிய ஆதிக்க நாடுகளில் கட்டுப்பாட்டில் உள்ளது.

பதுளை மாவட்டத்தின் கொஸ்லாந்த மீரியபெத்த தோட்டத்தில் இடம்பெற்ற பாரிய மண் சரிவினால் பாதிக்கப்பட்ட ஏழு லயன்கள் மண்ணிற்குள் புதையுண்டுள்ளன. அதனால் சுமார் முந்நூறு பேர் வரை மண்ணிற்குள் புதையுண்டிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

இந்த கலந்துரையாடலில் பல முக்கிய தோழர்கள் கலந்து கொள்கிறார்கள்.

காலம்:   9.11.014 (ஞாயிறு)

இடம்:    Roswiesen str-16. 8051- Zürich.

மணி:    பிற்பகல் இரண்டு ( 14.00)

அந்த இனப்படுகொலையில் வழிந்தோடிய இரத்தத்தின் சுவடுகள் இன்னும் உலரவில்லை. புதைக்கப்பட்ட மனிதர்களின் எலும்புகள் சின்னமழைத் தூறலிற்கும் முளை கொண்டு எழுகின்றன. இலங்கை அரசின் இராணுவத்தால் கசக்கப்பட்ட பெண்களின் கதறல்கள் வன்னிக்காடுகளில் கத்துகின்ற பறவைகளின் ஒலிகளை மேவி இன்றைக்கும் எழுகின்றன.

பொருளாதார அடியாட்கள் என்று அழைக்கப்படுபவர்கள் பல்லாயிரம் கோடி டாலர் மதிப்புள்ள மோசடிகளில் ஈடுபட்டு வருபவர்கள். உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டையும் கொள்ளையிட்டு வருபவர்கள். இந்தக் கொள்ளையடிக்கும் பணிக்காக அவர்களிற்கு பெரும்பணம் ஊதியமாக அளிக்கப்பட்டு வருகிறது.

எங்கள் பிரதான எதிரி பேரிவாத அரசே.

உங்கள் எதிரி யார்?

அரசு என்றால்,

உங்கள் அதே எதிரிக்கு எதிராக

எங்களுடன் இணைந்து போராடாமல்

எதற்காக எதிர்க்கின்றீர்கள்.

எங்கள் போராட்டம்

சிங்கள அரசுக்கு எதிரானதே ஒழிய.

சிங்கள உழைக்கும் மக்களுக்கு எதிரானதல்ல.

நிலச்சரிவில் புதைந்த மலையக மக்களுக்கோ இது துயரமல்ல இதற்கு முன்பும், இதுதான் அவர்களின் வாழ்கையாகும். "துயரத்துக்குரிய", "அனுதாபத்துக்குரிய", "நிவாரணத்துக்குரிய" மக்களாக காட்டுவது வக்கிரம்.

கொஸ்லந்த மீரியபெத்த தோட்டத்தில் இடம்பெற்ற நிலச்சரிவில் பாதிப்புற்ற மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால அனர்த்தங்களில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான முன் ஆயத்த செயற்பாடுகள் பற்றிய கலந்துரையாடல், அப்புத்தளை சைவ இளைஞர் மன்றம் மற்றும் மக்கள் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் 01.11.2014 அன்று ஹப்புத்தளையில் இடம்பெற்றது.

நிலங்களை கொள்வனவு செய்ய விரும்புகின்ற முதலாளிகளும், பெரும் முதலீட்டாளர்களும் அவர்கள் விரும்புகின்ற நிலங்கைளப் பார்வையிடுவதற்காக பொதுப் பணம்  செலவுசெய்யப்பட்டு ஹெலிகொப்டர்களில் அழைத்துச் செல்லப்படுகிற அதேவேளை ஏழை எளிய மக்களை  புறந்தள்ளி ஒதுக்குகின்ற அரசியலையே அரசாங்கம் நடைமுறைப்படுத்துகின்றது என முன்னிலை சோஷலிஷக் கட்சியின் சார்பில் அதன் மத்தியகுழு உறுப்பினரான துமிந்த நாகமுவ இன்று (31) இராஜகிரியவில் நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

இலங்கையில் முஸ்லீம் மக்களுக்கு எதிரான பேரினவாத வன்முறையை எதிர்த்து கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக சமவுரிமை இயக்கம் நடத்திய போராட்டம் போன்று, பாரிஸ் கலை விழா புதிய காலடியை எடுத்து வைத்திருக்கின்றது. இனவாத வரலாற்றை மாற்றி அமைக்கக் கூடிய நிகழ்வுகளாக, இனவாதத்தை எதிர்த்து இவை முன்னெடுக்கப்பட்டமையே இவற்றின் சிறப்பாகும்.

"தேர்தல் செயலகம் முழுமையாக சுயாதீனமானதாக இயங்கவில்லை" எனறு பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஸ் சர்மா தெரிவித்துள்ளார்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE