Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வாதிகாரி மகிந்தாவை பதவியிலிருந்து வீட்டிற்கு அனுப்புவதற்காக இடதுசாரிய கட்சிகள் தவிர்ந்த ஏனைய கட்சிகள் ஒரு பொது வேட்பாளரை முன்னிறுத்தி தேர்தலை எதிர்கொள்கின்றன. இன்றைய பொதுக்கோசமாக இருப்பது சர்வாதிகாரி மகிந்தாவையும் அவரது குடும்பத்தினரையும் ஆட்சியதிகாரத்திலிருந்து விரட்டுவதே.

 

ஜனாதிபதி தேர்தல் விசேட பதிப்பு வெளிவந்து விட்டது.

1. இடதுசாரிய மாற்றீடு ஏன் அவசியம்!

2. சுதந்திர வாழ்விற்க்காக சமத்துவ வாழ்விற்க்காக போராடுவோம்!

எமது இடதுசாரிய முன்னணியை நோக்கி மகிந்தாவை தோற்கடிக்கும் வாக்குகளை பிரித்து விடுவதாக விவாதம், தர்க்கம், கேள்வி முன்வைக்கப்படுகின்றது. மக்கள் மீண்டும் ஒருமுறை இந்த சமூக அமைப்பு முறையிடம் தோற்பதல்ல பிரச்சனை, மகிந்த என்ற தனிநபர் தோற்கடிக்கப்பட வேண்டும் என்கின்றனர்.

தற்போது எம்மிடையே மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விடையம் ஜனாதிபதி தேர்தல். இத் தேர்தலே சில பல அரசியல் செயற்பாட்டின் வெளிச்சமாகவும் அவ்வரசியலை வரையறுக்க வகைசெய்யும் ஒரு புள்ளியாகவும் காணக்கூடியதாக உள்ளது.

"தேர்தலில் வெல்லப் போவது மகிந்தாவா அல்லது மைத்திரியா" எனக் கேள்வியை கேட்பதும், விவாதிப்பதுமே இன்று பெருபான்மையினரது அரசியலாகக் காண முடிகின்றது.

காணமல் போனவர்களிற்காக குரல் கொடுக்க போய் காணமல் போனவர்களை மட்டும் விடுதலை செய் என்று ஒரு போராட்டம். எந்த காணமல் போனவர்களிற்காக குரல் கொடுக்க போனார்களோ அந்த காணமல் போனவர்கள் பற்றி ஒரு போராட்டமும் இல்லை. இவர்கள் செய்யும் அரசியல் உண்மையில் காணமல் போனவர்களிற்காக அல்ல என்பது வெட்ட வெளிச்சம். அதனால் தான் காணமல் போனவர்களிற்காக குரல் கொடுக்க போய் காணமல் போனார்களோ?

ஞாயிறு  14.12.2014 ஜரோப்பிய நேரம் இரவு 10.30 க்கு ரி.ஆர்.ரி. தமிழ் ஒலி வானொலியில்  ஜனாதிபதி தேர்தலில் நாம் என்ன முடிவை எடுத்தல் வேண்டும்?

அறுவைதாசன் வீட்டிற்குள்ளே நுழைய மகன் ஓடி வந்து "அப்பா நரி தோட்டத்திலே படுத்திருக்கு, வந்து பாருங்கோ" என்றான். நல்ல வெய்யில் காலத்தில் யாழினி தோட்டத்தில் படுத்திருந்து வெய்யிலை அனுபவிப்பதுண்டு அதைத் தான் மகன் சொல்கிறான் என்று நினைத்த அறுவைக்கு முகம் முழுக்க சிரிப்பு மலர்ந்தது.

அரசாங்கத்திற்குள்ளும் வெளியிலும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை பற்றிப்பேசப்படுகின்றது. ஒரு சாரார் அதை நீக்க வேண்டும் என்றும், இன்னொரு சாரார் அதை பாதுகாக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.ஆனால் இடதுசாரிய முன்னணியாகிய எங்களுக்கு இது சம்பந்தமாக கருத்துக் கிடையாது. நாங்கள் இந்த முறைமையை மாற்ற வேண்டும் என்று சொல்கின்றோம்.

எமது இடதுசாரிய முன்னணியையும், அதில் அங்கம் வகிக்கும் முன்னிலை சோசலிசக் கட்சியையும் தமிழ் மக்களுக்கு எதிரானதாக காட்டுகின்ற பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இடதுசாரிய முன்னணியில் இருக்கக் கூடிய முன்னிலை சோசலிசக் கட்சி "இனப்பிரச்சனைக்கு" எந்தத் தீர்வையும் கொண்டு இருக்கவில்லை என்பதே, உண்மைக்கு புறம்பாக அவர்கள் முன்வைக்கின்ற குற்றச்சாட்டு.

இடதுசாரி முன்னணியின் அங்கமான மற்றைய கட்சித் தலைவர்கள், இடதுசாரிய முன்னணியின் ஜனாதிபதி தேர்தல் பொது வேட்பாளர் துமிந்த நாகமுவ அவர்களுடனன் இணைந்த, இன்று யாழ்ப்பாணத்தில் நடாத்திய பத்திரிகையாளர் சந்திப்பும் துண்டுப்பிரசுர விநியோகமும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் தலைவிதியை 2015 இல் இருந்து தீர்மானிக்கப் போவது யார்? என்னும் அதிகாரத்துக்கான போட்டியே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளான, இனவாத- மேல்தட்டு வர்க்க பிரதிநிதிகள் மைத்ரி மற்றும் மகிந்தாவை முன்னிறுத்தி நாடாத்தப்படும் தற்போதைய தேர்தலாகும்.

இன்று (09) பி.ப. 03 மணியளவில் நுகேகொடையில் இடதுசாரிய முன்னணியின் முதலாவது பொதுக்கூட்டம் "முகமாற்றம் போதும், அமைப்பு மாற்றத்திற்க்காக அணிதிரள்வோம்" என்ற கோசத்தின் அடிப்படையில் இடம்பெற்றது.

உலக நாகரீகங்கள் மனிதன் நன்றாக வாழ்வதற்காகவே நாள் தோறும் மாறி வருகின்றன. வாழ்கையை மேம்படுத்த மனிதர்கள் பலவகையான இன்னல்களுக்கும் துயரங்களுக்கும் முகம் கொடுக்கின்றார்கள். சிலர் போராடி வாழ்கிறார்கள். பலரோ சாவை எதிர் கொள்கிறார்கள். மனித குலத்தில் ஒரு சிறு கூட்டமே போராட தயாராக இருக்கின்றது. மனிதர்களுக்கு உதவவும் தயாராக இருக்கின்றது. அவ்வாறு போராடியவர்களே தோழர்கள் லலித்தும் குகனும்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE