Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

லலித், குகன் தோழர்கள் உட்பட காணாமல் போன அனைவரினதும் விபரங்களை உடனடியாக வெளியிடுமாறு முன்னிலை சோசலிசச் கட்சி குற்றப் புலனாய்வு பிரிவிடம் முறைப்பாடு செய்துள்ளது.

முகமாற்றம் நடந்து முடிந்திருக்கின்றது. முகப் பூச்சுகள் நடந்து வருகின்றது. இந்த பின்னணியில் மாற்றங்களுக்கு ஏற்ற எதிர்பார்ப்புகளுடன் கூடிய பொது அரசியல் மேலெழுந்து காணப்படுகின்றது. இதற்கு பின்னால் இடதுசாரிய அரசியல் முடங்கிவிட முடியுமா?   

 

பல்வேறுபட்ட நாடகங்கள் அரசியல் மேடையில் அரங்கேறிக் கொண்டுள்ள இச்சந்தர்ப்பத்தில் நாம் உங்களை சந்திக்கின்றோம். மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு பதிலாக புதிய அரசாங்கமொன்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்தரப்பை சார்ந்த பல கட்சிகளின் ஆதரவோடு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதிப் பதவியில் அமர்ந்துள்ளார். ஆட்சிக்கு வந்து நூறு நாட்களுக்குள் அநேகமானவற்றை மாற்றுவதாக அவர் வாக்குறுதியளித்துள்ளார். அந்த நூறு நாட்களுக்கு இடைப்பட்ட காலத்திலேயே நாங்கள் உங்களை சந்திக்கிறோம்.

கிரேக்க இடதுசாரிக் கட்சிகளின் கூட்டான SYRIZA கிரேக்கப் பாராளுமன்ற தேர்தலில் 25.01.2015, இரவு 9:40 வரையான வாக்கு எண்ணிக்கையின்படி 149 ஆசனங்களை வென்று பாரிய வெற்றியடைந்துள்ளது!

கிரேக்க  இடதுசாரி கட்சியான - SYRISA கிரேக்கப் பாராளுமன்ற தேர்தலில் பாரிய வெற்றியைடையும் என்று தற்போது வெளிவந்துள்ள கருத்துக் கணிப்புகள் தெரிவிகின்றன.

ஏழையிலும் ஏழையான தமிழ்ப்பட கதாநாயகன் ஒரே ஒரு பாட்டுப்பாடி முடிப்பதற்குள் உலக மகா பணக்காரன் ஆவதை ரசிகசிகாமணிகள் விசிலடித்து கொண்டாடுவதைப் போல ஊழலிலும், அதிகார மீறல்களிலும், கொலைகளிலும், கொள்ளைகளிலும் ஊறிப் போயிருக்கும் இலங்கையின் அதிகாரவர்க்கம் ஒரே ஒரு நாளில் நீதிமான்களாக, மக்கள் தொண்டர்களாக, அகிம்சா மூர்த்திகளாக மாறி விட்டதாக படம் காட்டுகிறார்கள்.

18.01.2014 பாரிஸ்சில் "வன்னி வரலாறும் - பண்பாடும்" என்ற நூலின் வெளியீடு நடைபெற்றது. இந்த நூலை சுந்தரலிங்கம் தொகுத்து வெளியிட்டு இருக்கின்றார்.

எண்பத்துமூன்று (1983) ஆடி இனக்கலவரம். இனவெறி அரசின் காடைத்தனம் கண்டு பொங்கி எழுகிறார்கள். இனி இது பொறுப்பதில்லை என்று ஆண்களும், பெண்களும் வீடுகளை விட்டு வீதிக்கு வருகிறார்கள். மக்களிற்காக, மண்ணிற்காக மரணத்தையும் எதிர்கொள்வோம் என்று அலை அலையாக எழுந்தார்கள். பெற்ற தாய், தந்தையரை விட்டு, காதலுக்குரியவர்களை விட்டு, கைக்குழந்தைகளைக் கூட விட்டு விட்டு இனி ஒரு விதி செய்வோம் என்று விண்ணதிர வந்தார்கள். பாசம் அறுத்து, நேசம் மறந்து, ஆசை துறந்து நம்தேசம் மீட்போம் என்று வெஞ்சமர் புரிய வந்தார்கள்.

சமவுரிமை இயக்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பின் அறிக்கை

22.01.2015 இன்று மருதானை டீன்ஸ் வீதியில் அமைந்துள்ள சமூக சமய மையத்தில் சமவுரிமை இயக்கம் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. ஜனாதிபதித் தேர்தலின் பின்பதான நாட்டின் அரசியல் நிலவரம் தொடர்பில், கொள்கை அளவில் தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் சமவுரிமை இயக்க அமைப்பின் தேசிய ஏற்பாட்டாளர் ரவீந்திர முதலிகே மற்றும் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களான தர்மலிங்கம் கிருபாகரன், எஸ்.எம்.கிரிசாந்த ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தியாவில் ஆதிக்க சக்தியாக, மக்களை ஒடுக்குகின்ற கோட்பாடாக பார்ப்பனியம் ஆயிரம் வருடங்களாக இருந்து வருகின்றது. இப்படிச் சொன்னால் உடனே பார்ப்பனியர்கள், பார்ப்பனிய அடிமைகள் ஏன் மற்ற சாதிகள் ஒடுக்குவதில்லையா, அவை ஆதிக்கம் செய்வதில்லையா என்று பூணூலை இழுத்துப் பிடித்தபடி கேள்வி எழுப்புவார்கள்.

இலக்கியம் - மொழி - பேச்சாற்றல்... என எஸ்.பொ திறமையும் அறிவும் கொண்டவர். அடிபணிய மறுக்கும் திமிரும், ஒடுக்கபட்ட சாதியில் பிறந்தவர்... என்ற அடையாளங்களையும் கொண்டவர். இதனாலேயே அவர் கொண்டாடப்படுவதானது, சமூகம் பற்றிய பொது அக்கறையை கேள்விக்கு உள்ளாக்கி விடுகின்றது. முதலாளித்துவத்தை போற்றுகின்றதைத் தாண்டி, சமூகம் பற்றி எந்த மனித அறத்தையும் கொண்டதல்ல.

நிலத்தடி நீரில் கழிவு ஓயில் கலப்பதற்கு காரணமாக இருக்கின்ற சுன்னாகம் அனல் மின்னிலையத்தை மூடும்டபடி முற்றுகை போராட்டம் இன்று பொதுமக்களாலும் பல்வேறு அரசியல் தரப்பினராலும் முன்னெடுக்கப்பட்டது.

கடவுள் ஆறுநாளில் உலகத்தைப் படைத்து களைச்சுப் போய் ஏழாம் நாளான ஞாயிற்றுக்கிழமை லீவு எடுத்தார் என்று உலகம் தோன்றிய வரலாற்றை அறிவியல் பூர்வமாக விளக்குகிறது ஒரு சமயம். சுட்ட களிமண்ணால் மனிதன் படைக்கப்பட்டான் என்று மனிதர்களின் மண்டைக்குள் களிமண்ணை போட்டு அடைக்கிறது ஒரு சமயம்.

மகிந்த சிந்தனை ஆட்சியின் கீழ் நாட்டு மக்கள் எதிர்நோக்கி வந்த மோசமான பொருளாதார நெருக்கடிகளும், ஜனநாயகவிரோத பாசிச குடும்ப சர்வாதிகாரமும், சட்ட ஆட்சி - நீதித்துறை மீதான நிறைவேற்று அதிகார அத்துமீறல்களும், ஊழல் முறைகேடுகளுடன் அதிகார துஸ்பிரயோக அடக்குமுறைகளும், குறிப்பாகத் தமிழ், முஸ்லீம், மலையகத் தழிழ்மக்கள் மீதான பேரினவாத ஒடுக்குமுறைகளும் அனைத்து மக்கள் மத்தியிலும் பலநிலை அதிருப்திகளையும், எதிர்ப்புகளையும் தோற்றுவித்தது.

நான் பள்ளன் தானடா பறையன் தானடா

விஞ்சும் கடலலை கொஞ்சும் மீனவ ஜாதி நானடா

பஞ்சம் பிணியினில் நெஞ்சம் கொதிக்கையில்

உனைக் கெஞ்சி வாழ்வதும் வாழ்தலாகுமோ!

மலையக மக்களின் காணி, வீட்டுரிமையை வென்றெடுக்கும் கருத்தில் ஒரே நிலைப்பாட்டை கொண்ட பல்வேறுப்பட்ட சமூக நிறுவனங்கள், இடதுசாரிக்கட்சிகளுடன் சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பும் ஒன்றிணைந்து பலமான பொது அமைப்பொன்றை கட்டமைத்து வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்கின்றது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE