Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

லலித் மற்றும் குகனை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இன்று (25.03.2015) முன்னிலை சோசலிச கட்சியினர் துண்டுப்பிரசுரங்களை யாழ். மத்திய பஸ் நிலையத்தில் பொது மக்களிடம் விநியோகித்ததுடன், ஊர்வலம் ஒன்றினையும் நடத்தினர்

சுன்னாகம் மின்நிலையத்தைச் சூழவுள்ள பிரதேசங்களில் அண்மைய ஆண்டுகளாக நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்து நன்னீர் மாசடைந்து வந்துள்ளது. இதனால் பாதிப்படைந்த மக்களும், பொதுஅமைப்புகளும், சமூக ஆர்வலர்களும், இதனை வெளிக்கொணர்ந்து வெகுஜன செயற்பாடுகளை முன்னெடுத்தனர்.

கடந்த மகிந்த ஆட்சியில் மக்களிற்கு மறுக்கப்பட்ட ஜனநாயகத்தை நிலை நாட்டுவதே தனது முதல் பணி என உறுதி வழங்கியதனால் அனைத்து இன மக்களின் பெரும் ஆதரவுடன் மைத்திரி ஜனாதிபதி ஆக்கப்பட்டார். ஜனநாயகத்தை உறுதி செய்வதற்க்கான 100 நாள் வேலைத்திட்டம் மற்றும் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையினை இல்லாது ஒழித்தல் என பல குறிக்கோள்களை முன் வைத்தனர்.

இலங்கையில் அதன் 7வது ஜனாதிபதித் தேர்தல் பலவிதமான  கருத்துக் கணிப்பீடுகளோடும் சாதக பாதக விவாதங்களுடனும் நீயா நானா என்ற போட்டிகளுடனும் ஜனநாயகமா சர்வாதிகாரமா என்ற தலைப்புகளோடும் நடைபெற்று முடிந்துள்ளது. ஜனநாயகத்தைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு திருவாளர் மைத்திரிபால சிறிசேனாவிடம் இலங்கைக் குடிமக்களால் (51.28 சதவீதம் வாக்குகளால்) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தமிழ் பாதுகாக்கப்பட வேண்டும் என்று முன்மொழிந்தவர்கள் தமிழை முறையாகப் பேசத்தெரியாத- ஆங்கிலத்தில் நாடாளுமன்ற அரசியல் விவாதம் நடாத்திக் கொண்டிருந்த தமிழ் தலைவர்கள். அதனால் சிங்களம் கற்க மறுத்து உத்தியோகத்தையும்- உத்தியோக உயர்வையும் இழந்தவர்கள் சாதாரண மக்களே.

கடந்த மகிந்த ஆட்சியில் மக்களிற்கு மறுக்கப்பட்ட ஜனநாயகத்தை நிலை நாட்டுவதே தனது முதல் பணி என உறுதி வழங்கியதனால் அனைத்து இன மக்களின் பெரும் ஆதரவுடன் மைத்திரி ஜனாதிபதி ஆக்கப்பட்டார். ஜனநாயகத்தை உறுதி செய்வதற்க்கான 100 நாள் வேலைத்திட்டம் மற்றும் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையினை இல்லாது ஒழித்தல் என பல குறிக்கோள்களை முன் வைத்தனர்.

சங்கானைக் என் வணக்கம்

எச்சாமம் வந்து எதிரி நுழைந்தாலும்

நிச்சாமக் கண்கள் நெருப்பெறிந்து நீறாக்கும்

இது அன்றைய இடதுசாரிகளின் போராட்ட அறைகூவலுக்கு சங்கானை நிச்சாமம் மக்களின் எழுச்சியினைப் போற்றுகின்ற கவிதைக்குரல். சுபத்திரன் கவிதையின் சூடேறிய வரிகள். சங்கானை சங்காயாய் மாறிக் கொண்டிருக்கின்றது என்று அமிர்தலிங்கம் அன்று பாராளுமன்றத்தில் அபாயச் சங்கொலி எழுப்பி ஒப்பாரி வைக்கும் அளவுக்கு போராட்டத் தீயானது சுவாலைகள் விட்டெரிந்து சமூகக் கொடுமைகளைப் பொசுக்கித் தள்ளிய காலம் ஒன்றிருந்தது.

கனடா சமஉரிமை இயக்கத்தினரால், "இஸ்லாமிய அச்சக்கோளாறு! இஸ்லாமிய எதிர்ப்புணர்வு!" எனும் தலைப்பில் கலந்துரையாடல் ஒன்று ஸ்காபரோ சிவிக் சென்ரறில் கடந்த 7ம் திகதி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. வின்சர் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறையில் விரிவுரையாளராக இருக்கும் பாதிமா காதர், சைலான் முஸ்லீம் ஒழுங்கமைப்பின் பிரதிநிதித் தலைவர் சமீம் முகம்மட், கலாநிதி சுல்பிகா இஸ்மாயில் ஆகியோர் இதில் உரையாற்றினர்.

கடந்த ஜனவரி 8 முதல் இலங்கையில் ஜனநாயகம் மீட்டு எடுக்கப்பட்டுள்ளதாகவும் நீதி-சட்டம்-ஒழுங்கு முறைகள் சுதந்திரமாக இயங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இனப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் பற்றி ஆராயப்படுவதாகவும் ஊடகங்களில் தினமும் அறிக்கைகளும் உத்தரவாதங்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

சைமன் விமலராஜன் முன்னாள் போராளி . தமயந்தி என்ற பெயரில் அறியப்பட்ட கவிஞன் புகைப்பட கலைஞன். தற்போது நோர்வேயின் ஓலசுண்ட நகரில் வாசித்து வருகிறார். தீவகத்தின் மெலிஞ்சிமுனைக் கிராமத்தைச் சேர்த்த இவர் தனது இளமைக் காலத்திலேயே தேர்ச்சி பெற்ற தென்மோடிக் கூத்துக் கலைஞர். ஆனந்தசீலன், தாவீது கொலியாத், ராஜகுமாரி, புனித செபஸ்தியார், மந்திரிகுமரன் போன்ற கூத்துகளில் இவரின் பாட்டும் நடிப்பும் இவரை ஒரு கவனிக்கத்தக்க கூத்துக்கலைஞனாக வெளிக்காட்டியது.

ஜனாதிபதித் தேர்தல் முடிந்துவிட்டது. மைத்திரிபால சிறிசேன இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்தத் தேர்தலில் இரு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களும் எப்படியான கொள்கைகளை முன்வைத்து தேர்தலில் இறங்கினார்கள்? இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அவர்கள் கையாண்ட உபாயங்கள் எவ்வாறு செயற்பட்டன என்பது குறித்து ஒரு சிறிய ஆய்வு மாத்திரமே இது.

இலங்கை ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் முடிந்து, யு.என்.பி தலைமையிலான கூட்டின் வேட்பாளர் மைத்ரி சிறிசேன வெற்றியடைந்துள்ளர். மைத்ரி வடக்குக் கிழக்கு மற்றும் மலையக தமிழ்மக்கள் மற்றும் முஸ்லீம் மக்களின் அமோக ஆதரவினாலேயே வெற்றியடைந்துள்ளார். மைத்ரிக்கு தமிழ் பேசும் மக்கள் (வடக்குக்கிழக்கு மற்றும் முஸ்லீம் மக்கள்) பெருமளவில் வாக்களித்துள்ளமை, மஹிந்தவின் ஆட்சியை கலைப்பதற்காக மட்டுமல்ல - அவர்கள் மீதான இனவாத ஒடுக்குமுறை மற்றும் தமக்கான அரசியல் தீர்வை எதிர்பார்த்தே!

நவதாராள தமிழினவாத சைவ வேளாள யாழ் மையவாத சாதிய சிந்தனை முறை குறித்து பேசும் போது அதிர்ந்து போகின்றனர் என்றால், அந்த சிந்தனைமுறை அவர்களுக்குள் இருக்கின்றது என்பதே அர்த்தம். மறுபக்கத்தில் இதை சாதியம் சார்ந்த ஒன்றாக குறுக்கி புரிந்து கொள்வது, சிந்தனைமுறை தொடர்பான சமூக விஞ்ஞான அறியாமையை மட்டுமின்றி, ஆதிக்கம் வகிக்கும் சிந்தனைமுறைமைக்கு எதிரான போராட்டமின்மையையும் எடுத்துக் காட்டுகின்றது. சமூகத்தை அரசியல் மயப்படுத்துவதில், சிந்தனைமுறைக்கு எதிரான போராட்டமே முதன்மைமானது.

கடந்த 362 நாட்களாக எந்த விசாரணைகளுமற்று தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஜெயக்குமாரி பாலேந்திரன் இன்று எந்தகைய குற்றச்சாட்டுகளுமின்றி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் கனடா சமவுரிமை இயக்கத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த "இஸ்லாமிய அச்சக்கோளாறும் இஸ்லாமிய எதிர்ப்புணர்வும்" என்னும் தலைப்பிலான உரையும் உரையாடலும் சிறப்புற நடைபெற்றது. இந்நிகழ்வில் முப்பதுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்தனர்.

செலக்டிவ் அம்னீசியா ஒருவகை மறதிநோய். தலையில் ஏற்படும் காயங்களினால் சில குறிப்பான ஞாபகங்கள் மட்டும் தொலைந்து போகும் நோய். தலையில் அடிபட்டவர்களிற்கு மிக அரிதாக உண்டாகும் பக்கவிளைவு இந்த செலக்டிவ் அம்னீசியா. இந்த மிக அரிதான குறிப்பிட்ட சில நினைவுகளை மறக்கும் வியாதி தமிழர்களிடையே பெருமளவில் காணப்படுவது மிக கவலைக்குரியதும் ஆய்வு செய்யப்பட வேண்டியதுமான ஒரு முக்கியமான விடயமாக இன்று நம் முன் உள்ளது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE