மகிழ்ச்சியில்லை... சுதந்திரமில்லை...
சம்பளமில்லை... வாழ்க்கையில்ல...
மாற்றமில்லை- திரும்புவோம் இடதுபக்கம்
விரைவில் நடத்துவதாகக் கூறும் தேர்தலின் பக்கம் பெரும்பாலான மக்களின் கவனம் திரும்பியிருக்கிறது. ஜனநாயகம், நல்லாட்சி, ஊழல் முறைகேடுகளை ஒழித்தல் போன்ற கோசங்கள் வெறும் வார்த்தைகளாகி விட்டன. ஜனாதிபதித் தேர்தலின்போது அள்ளி வீசிய வாக்குறுதிகள் இந்த வெற்று வார்த்தைகளுக்குள் நீர்த்துப் போய்விட்டன. ஜனாதிபதித் தேர்தலின் போதும் எமது உண்மையான பொருளாதாரப் பிரச்சினைகள் மறைக்கப்பட்டு உண்மையான ஜனநாயகம் சம்பந்தமான பிரச்சினை கைவிடப்பட்டு வேறு பொய்யான பிரச்சினைகளுக்குள் நாங்கள் சிறைபடுத்தப்பட்டோம்.