Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

சகோதரி வித்தியாவின் படுகொலைக்கு நியாயம் கோரி தெற்கின் சகோதர-சகோதரிகள், தோழர்கள் அமைதிப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர். கொழும்பு வாழ் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும். 26 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள போராட்டத்தில் எழுப்பப்படும் கோரிக்கைகளும், கோசங்களும்...

நாட்டில் நல்லாட்சி ஜனநாயம் மலர்ந்து சிறியதொரு இடைவெளி ஏற்பட்டு மக்கள் சிறிது மூச்சுவிட்டுத் தங்களை ஆசுவாசப்படுத்தத் தொடங்கு முன்னரே குடாநாட்டில் மக்கள் வன்முறைச் சூழலுக்குள் தள்ளப்பட்டு விட்டார்கள். அதற்கான காரணமாக புங்குடுதீவில் பாடசாலை மாணவி இளைஞர் குழுவினால் பாலியல் வன்முறைக்குள்ளாகிப் படுகொலை செய்யப்பட்டமை அமைந்துவிட்டது.

இது வித்தியாவின் படுகொலை தொடர்பாக சகோதரி Shamila Daluwatte எழுதிய கவிதை:

அவர்கள் மன்னம்பேரியை

பாலியல் பலாத்காரம் செய்து

அவளை உயிருடன் புதைத்தார்கள்

நான் பேசவில்லை

ஏனெனில்

கிளர்ச்சி எழுச்சிபெற்றிருந்தது.

பின்னர் அவர்கள்

ககவத்த பெண்களிடம் வந்தார்கள்

நான் பேசவில்லை

மலையக மக்களுக்கு காணி உரித்துடனான வீட்டு உரிமையை உறுதிப்படுத்தக் கோரி மக்களின் பங்குபற்றலுடன் பல்வேறு வடிவங்களில் போராட்டங்களும் பரப்புரைகளும் இடம்பெற்றன. சில மலையக பாராளுமன்ற அரசியல் தலைமைகளும் இதற்கு குரல் கொடுத்தனர். இப்பின்னணியில் மீரியபெத்த அவலம் மலையக மக்களின் ஏற்படுத்திய காணி, தனி வீட்டு உரிமைக்கான எழுச்சி கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட முதன்மை வேட்பாளர்கள் இருவரையுமே மலையக மக்களின் வீட்டுரிமை பற்றி தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் பேச வைத்தது.

நாட்டில் பெண்கள் யுவதிகள், மாணவிகள் சிறுமிகள் என்போர் மீதான பாலியல் வக்கிர செயற்பாடுகளும் சித்திரவதைகளும் வன்புணர்வுக் கொலைகளும் ஏனைய ஒடுக்குமுறைகளும் சமூகக் கொடுமைகளாகத் தொடர்கின்றன. இவற்றில் ஒன்றாக அண்மைய கொடூரச் சம்பவமாக வடபுலத்தின் புங்குடுதீவு வித்தியாலய மாணவி சி.வித்தியா (18) மீதான வன்புணர்வுப்படுகொலை இடம் பெற்றிருக்கின்றது. இவ் ஈனச் செயலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக மக்கள் மத்தியில் கண்டணங்களும் எதிர்ப்புகளும் கவனயீர்ப்புப் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வைகாசி 20. 2015. இராணுவமும், கடற்படையும், அதிரடிப்படையும் முக்கிய இடங்களில் குவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பல வருடங்களுக்குப் பின் புகை மண்டலமாகக் காணப்படுகிறது. இம்முறை இலங்கை அரச படைகளல்ல இப் புகை மண்டலத்துக்குக் காரணம். மனிதக் குரல்கள் எங்கும் ஓலங்களாய்-கூக்குரலாய் ஒலிக்கிறது. ரணில் - மைத்ரி அரசால் அனுப்பப்பட்ட குண்டு வீச்சு விமானங்களல்ல இக்கூக்குரலுக்குக் காரணம். தமிழ் இளையோரும், மாணவர்களுமே இதற்க்குக் காரணம். வீதிகளெங்கும் முடக்கப்பட்டு பழைய ரயர் மற்றும் குப்பை குவிக்கப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளது. அதன் முன்னால், இளைஞர்கள் கூடி நின்று செல்பி எடுகின்றனர். புலம்பெயர் மற்றும் உள்ளூர் இணைய மீடியா நிருபர்கள் பல பத்துப்பேர் ஒவ்வொருதருக்கும் தேவையான கோணத்தில் "எக்ளுசிவாக" போஸ் கொடுக்கிறார்கள்.

புங்குடுதீவு பாடசாலை மாணவி சகோதரி வித்தியா சிவலோகநாதன் கொடூரமான முறையில், பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிகழ்வானது ஒட்டு மொத்த தமிழ் சமூதாயத்தையும் நிலை குலைந்த - அதி உச்ச ஆத்திர உணர்வு நிலைக்குள்த் தள்ளியுள்ளது.

குரூரமாக பாலியல் வன்முறைக்குள்ளாக்கி கொல்லப்பட்ட புங்குடுதீவு மாணவியின் மரணமும், இந்தக் குற்றப் பின்னணியில் கைது செய்யப்பட்டவர்கள், சுற்றுவட்டார அயலவர்களும் - உறவினர்களும் என்பதும், சமூகம் குறித்தான பொதுக் கேள்வியை எழுப்புகின்றது. மனித விரோத குற்றங்களுக்கு தண்டனையை நாம் கோருவதும், அதற்காக போராடுவதுடன் எமது கடமை முடிந்துவிடாது. குற்றங்களுக்கு தண்டனை அவசியமானது தவிர்க்க முடியாது என்பது, குற்றங்கள் தோன்றுவதை தடுப்பதற்குரிய தீர்வாகிவிடாது. சமூகப் பொறுப்பற்ற தனிமனிதர்களின் இந்த குற்றப் பின்னணியைக் குறித்து தெரிந்து கொள்வதன் மூலமே, சமுதாய ரீதியான மாற்றம் குறித்து உண்மையாக நாம் ஈடுபடமுடியும்.

சமவுரிமை இயக்கத்தின் அமைப்பாளர் யூட் பேர்ணான்டோ புள்ளே மற்றும் தோழர் கிருபாகரன் ஆகியோர் நேற்றைய தினம் (16-05-2015) வவுனியா கிளிநொச்சி யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் குடும்பத்தினரையும் உறவினர்களையும் சந்தித்து உரையாடல் ஒன்றினை நடாத்தியுள்ளனர். இந்த சந்திப்பின் நோக்கமானது பல வருடங்களாக எந்தவித குற்றச்சாட்டுக்களும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நாடு தளுவிய பாரிய போராட்டங்களை முன்னெப்பதே.

கடந்த சில மாதங்களாக யாழ்ப்பாணத்தின் மையப் பகுதியான சுண்ணாகத்திலும், அதைச் சூழ உள்ள நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஏற்பட்ட பெரும் வாழ்வாதார நெருக்கடியாக நிலத்தடி நீரில் கலக்கவைக்கப்பட்ட கழிவு எண்ணெய் தொடர்பான பிரச்சினை விளங்குகின்றது.

அண்மையில் திருமலையில் நகர சுத்திகரிப்பு தொழிலாளர்களினால் போராட்டம் ஒன்று இரு நாட்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக இந்த போராட்டம் திருமலை நகரசபைக்கு எதிராக நகர சுத்தி தொழிலாளர்கள் மீதான சாதிய ரீதியான பாகுபாடு மற்றும் அடக்குமுறை ஒடுக்கு முறைகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டது.

சாதி இப்ப இல்லை. சாதி ஒழிந்துவிட்டது. இப்ப ஆர் சாதி பாக்கினம். சாதியை சொல்லி சொல்லி பிழைக்கினம். அதனைப் பற்றி ஏன் கதைக்கவேணும். பேசாமல் விட்டாலே அது மறைந்துவிடும். இப்படியாக எங்கள் மத்தியில் உரையாடல்கள் இடம்பெற்று வருகிறது. இதனையொட்டி போட்டிக்குப் போட்டி பேட்டிகளும் இதழ்களில், தளங்களில், ஊடகங்களில் ஊற்றெடுத்துப் பாய்கின்றன. அரங்குகளில் கருத்துப் பொறிகள் பறக்கின்றன. சாதி இருக்கு என்போரும், இல்லை என்போரும் வரிந்து கட்டிக்கொண்டு மேடைக்கு மேடை தாவுகிறார்கள். இதுதான் தமிழர்களுக்கு உரித்தான தனிச் சிறப்பு. தமிழர்களின் தனித்துவ அடையாளம்.

ஜனவரி 08ம் திகதிக்குப் பின்னர் புதிய ஜனாதிபதியொருவரும், பிரதமரொருவரும் நியமிக்கப்பட்டு அரசாங்கமும் அமைந்தாயிற்று. இப்போது மைத்திரி, ரணில் மற்றும் சம்பிக போன்றவர்கள் அமைச்சரவையில் அங்கம் வகிக்க, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் சந்திரிகாவும் சேர்ந்து குசினி கபினட்டில் அங்கம் வகிக்கும் கூட்டரசாங்கம் நடக்கிறது. இப்போது 100 நாட்கள் முடிந்துவிட்டன. மக்களின் வயிற்றெரிச்சல் எப்படிப் போனாலும், ஜனாதிபதி தேர்தல் காலத்தில் புதிய அரசாங்கத்தை அமைத்தவர்களின் ஆர்ப்பரிப்பானது ஜனநாயகத்தையும், நல்லாட்சியையும் உருவாக்குவது.

சக்கிலியர்கள் என்று இந்துசாதி அமைப்பு என்னும் கொடிய பேய்களினால் அழைக்கப்படும் துப்புரவுத் தொழிலாளர்கள் வழமையான மனிதர்கள் அல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த திருகோணமலை நகரசபை உபதலைவரான சேனாதிராஜா ஸ்ரீஸ்கந்தராஜா என்ற சாதிவெறி பிடித்த நாய் ஒன்று ஊளையிட்டிருக்கிறது. இந்த இருபத்தொராம் நூற்றாண்டிலும் ஒரு மனிதன் தன் சக மனிதர்களை தமக்கு சமமில்லாதவர்கள், வழமையான மனிதர்கள் அல்ல என்று சொல்லும் கொடுமை, இழிவு, காட்டுமிராண்டித்தனம் நடந்திருக்கிறது. அதுவும் தமிழ்மக்களிற்காக போராடுவதற்காகவே அவதாரம் எடுத்திருக்கிறோம் என்று சொல்லிக் கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த இந்த நாய் தன் சக தமிழ் மக்களைப் பார்த்து இப்படிக் குரைத்திருக்கிறது.

அம்மாவில்லாமலும் அப்பா இல்லாமலும் நாங்கள் பிறப்பதில்லை. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் வீட்டில் சச்சரவும், தர்க்கங்களும், மனத்தாங்கல்களும் இல்லாத வீடுகளும் இருப்பதில்லை. அம்மா பெறுமாதம் வரைக்கும் சுமக்கின்றாள். ஈன்ற ஒவ்வொரு பொழுதிலும் பிரசவ வலியில் துடிக்கின்றாள். அவள் ரணப்படுகின்றாள். பிள்ளையின் பசி அழுகுரல் கேட்டால் அவளுக்கு நெஞ்சில் பால் சுரக்கின்றது. பாலூட்டுகின்றாள். இதுவரையும் அப்பாவால் செய்ய முடியாதவைகள் இவைகள்.

"தமிழனுக்கு" ஒரு அளவுகோள், "சக்கிலியனுக்கு" வேறு அளவுகோள். இது தான் தமிழ்த் தேசியம். திருகோணமலை நகரசுத்தி "தமிழ்" தொழிலாளர்களை சாதி ரீதியாக ஒடுக்கும் "தமிழனின்" நடத்தை, வேறு விதத்தில் இதனை விளங்கிக் கொள்ள முடியாது. திருமலை நகர சுத்தி தொழிலாளர்களின் பிரச்சனை குறித்து கள்ள மௌனம் சாதிக்கும் அனைவரதும் பொதுப் புத்தியானது, அவர்களுக்கு உள்ளேயான சாதிய புத்தி மட்டும் தான்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE