சையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியை மூடக்கோரியும், இலவச கல்வியை உறுதி செய்யவும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்துடன் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 16ம் திகதி முதல் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களால் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு (SAITM) எதிராக ஒரு வாரத்திற்கு பூரண பகிஷ்கரிப்பு மற்றும் சத்தியாககிரகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து மருத்துவ பீட மாணவர்கள், யாழ் மாவட்ட பாடசாலைகள் மற்றும் தனியார் வகுப்புகளில் "மாலபே SAITM கடையை இல்லாது ஒழிப்போம்" விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.