பட்டதாரிகளிற்கு தொழில் வழங்குமாறு கோரி வேலையற்ற பட்டதாரிகள் சங்கங்கள் மாகாண ரீதியாக மாநாடு மற்றும் போராட்டங்களை இந்த மாதம் முழுவதும் நடாத்துகின்றனர். இன்று கிழக்கு மாகாணத்து வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு நகரில் மாநாடு ஒன்றினை நடாத்திதுடன், ஊர்வலமாக புறப்பட்டு நகரின் மத்தியில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இந்நிகழ்வில் அனைத்து வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர் தமிக்க முனசிங்காவுடன் தென்பகுதி வேயைற்ற பட்டதாரிகள் சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.