Language Selection

2016
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இன்று 31-07-2016 கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் மாநாடு மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்ச்சிக் கல்லுரியில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் கிருஸ்ணா அவர்களின் தலைமையில் இந்த நிகழ்வில், ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத் தலைவர் தமிக்க முனசிங்கா மற்றும் தென்னிலங்கை வேலையற்ற பட்டதாரிகள் சங்கங்களின் முக்கியஸ்த்தர்கள் பலர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

இந்நிகழ்வில் அதிகளவில் வேலையற்ற பட்டதாரி பெண்கள் கலந்து கொண்டிருந்தனர். அங்கு உரையாற்றிய கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் கிருஸ்ணா அவர்கள், வேலையற்ற பட்டதாரிகளிற்கு வேலை கொடு!, நீண்ட காலமாக வேலையற்று இருக்கும் பட்டதாரிகளிற்கு முன்னுரிமைஅளி!, நாடு முழுவதும் வெற்றியடமாக உள்ள பல ஆயிரக்கணக்கான ஆசிரிய வெற்றிடங்களை உடனடியாக நிரப்பு! மற்றும் பல கோரிக்கைகளை முன்வைத்து கலந்து கொண்ட அனைவரினதும் கையொப்பமிட்ட கடிதம் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இதற்காக தாம் தொடர்ந்து போராடவுள்ளதாக தெரிவித்த அவர், விரைவில் நாட்டிலுள்ள ஏனைய வேலையற்ற பட்டதாரிகளுடன் இணைந்து கொழும்பில் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கு இருப்பதாகவும் அங்கு தெரிவித்தார்.