கொழும்பு சுதந்திர வர்த்தக வலயத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தமது உரிமைகளிற்காகவும் அவர்கள் மீதான அரச அடக்குமுறைகளிற்கு எதிராகவும் ஆர்ப்பாட்ட போராட்டத்தை மேற் கொண்டிருந்தனர். இவர்களிற்கு ஆதரவாக இடதுசாரிய கட்சிகள், முற்போக்காளர்கள், தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு தமது ஆதரவினை வழங்கியிருந்தனர்.