SAITM தனியார் மருத்துவ கல்லூரி மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களை எதிர்த்தும் இலவச கல்வியினை வலியுறுத்தியும், பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ச்சியான பல போராட்டங்களை கடந்த சில வருடங்களாக நடாத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக மருத்துவ பீட மாணவர்கள், SAITM தனியார் மருத்துவ கடையினை உடனடியாக இழுத்து மூடும்படி கோரிக்கையினை முன்வைத்து கடந்த 100 நாட்களாக சுழற்சிமுறையில் சத்தியாககிரக போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
சத்தியாககிரக போராட்டம் நேற்றைய தினம் 100 நாட்களை கடந்துள்ள நிலையில், மருத்துவபீட மாணவர்கள் இன்று கொழுப்பில் பாரிய போராட்டம் ஒன்றினை நடாத்தினர். ஊர்வலமாக ஜனாதிபதி செயலகத்தை நோக்கி சென்று கொண்டிருந்த வேளையில் இடைமறித்த கலகம் அடக்கும் படையினர் நீர்த்தாரகையினாலும், கண்ணீர்புகை குண்டுகளாலும் மருத்துவ பீட மாணவர்களை தாக்கியுள்ளனர்.