Language Selection

2016
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

குமார் குணரத்தினத்தின் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்துமாறு கோரியும் மற்றும் அரசியல் காரணங்களிற்க்காக புலம்பெயர்ந்தவர்கள் மீண்டும் இலங்கையில் அரசியல் செய்யும் உரிமையினை உறுதிப்படுத்துமாறு கோரியும் நேற்றைய தினம் இத்தாலி, மிலான் நகரில் உள்ள இலங்கை தூதராலயம் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இதில் இத்தாலியில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் கலந்து கொண்டு, குமார் குணரத்தினத்தை சிறையிலடைத்தது அரசியல் காரணங்களிற்க்காகவே என கோசமிட்டு தமது கண்டனத்தை தெரிவித்திருந்தனர். இதனை முன்னிலை சோசலிசக் கட்சியின் இத்தாலிய கிளை ஒழுங்கு செய்திருந்தது,