வித்தியாவுக்கு நீதி கோரி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக போராட்டம், சுதந்திரப் பெண்கள் அமைப்பினால் (Free Women) ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
மாணவி வித்தியா சிவலோகநாதனுக்கு நடந்த பாலியல் வன்கொடுமைகளுக்கு நியாயம் கோரியும், அனைத்துப் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு எதிராகவும் அணிதிரளுமாறு போராட்ட அறைகூவலை வெளியிட்டுள்ளது சுதந்திரப் பெண்கள் அமைப்பு.
இடம் : கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக (In front Of Colombo Fort Railway Station)
காலம் : மே 25ம் திகதி (On May 25th)
நேரம் : காலை 9 மணிக்கு (morning 9:00)
பெண்களுக்கு மேலான பாலியல் வன்கொடுமைகள், ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் - வித்தியாவுக்கு நியாயம் கோரியும் அனைவரையும் இப்போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தோழமையுடன் அழைக்கிறது சுதந்திரப் பெண்கள் அமைப்பு (Free Women)