Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவரும், மத்திய குழு உறுப்பினருமான தோழர் குமார் குணரத்தினம் அவர்களை நாடு கடத்த தற்போது ஆட்சி அதிகாரத்தில் உள்ள மைத்திரி ஸ்ரீசேன அரசு முயன்று வருகிறது. இதை எதிர்த்து முன்னிலை சோசலிசக் கட்சி மற்றும் ஜனநாயக இடதுசாரிக் கட்சிகளும் இணைத்து நாளை ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர். இப்போராட்டம் கீழ் வரும் இரண்டு கோரிக்கைகளை முன் வைத்து நடத்தப்படுகிறது.

*தோழர். குமார் குணரத்தினத்தின் அரசியல், ஜனநாயக, குடியியல் உரிமைகளை அங்கீகாரி!

*மஹிந்த ராஜபக்ஷ அரசால் துரத்தப்பட்ட அரசியல் செயற்பாட்டாளர்கள் அனைவரையும் நாட்டுக்குள் வர விடு!

போராட்ட விபரம்

இடம் : கொழும்பு மைத்திய புகையிரத நிலையம் முன்பாக

காலம் : சனிக்கிழமை 31.01.2015

நேரம் : 12 மணிக்கு