கேகாலை நகரத்தில் அமைந்துள்ள பள்ளிவாசல் மீது இனந்தெரியாத நபர்கள் நேற்றிரவு கற்களால் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இதனால் பள்ளிவாசலின் யன்னல், கண்ணாடிகள் சேதத்துக்கு உள்ளாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக கேகாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் மேல்மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரகுமான் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.