Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

என்னமோ இனப்பிரச்சினைத் தீர்விற்கு கருணாநிதியும், சீமானும் தான் பிரதான காரணிகள் போல் கத்துகின்றீர்கள். அரசியல் யதார்த்தம் தெரிந்துதான் கதை சொல்கின்றீர்களா? மகிந்தா சகல நிறைவேற்று அதிகாரங்களையும் கொண்டதோர் ஐனாதிபதி. அதுகொண்டு ஓர் சிறு தீர்வைத்தானும் தமிழ் மக்களுக்கு வழங்கி தமிழ் மக்களும் இந்நாட்டு மக்கள் தான் என நிருபித்தால், கருணாநிதி-சீமான மட்டுமல்ல, லண்டன் விமான நிலையத்தில் கூட மகிந்தாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டமே நடக்காது.

இன்று பேரினவாதத்துடன்-கூடிய புத்தமத வெறி தமிழர் தாயகம் எங்கும் தலை விரித்தாடுகின்றது. இவ்வெறி கொண்ட புத்த பிக்குகள் தமிழ்-முஸ்லிம் மக்களுக்கு எதிராக மூர்க்கமாக செயற்படுகின்றனர். இம்மக்கள் வந்தேறு குடிகள். இவர்களுக்கு இங்கொன்றும் இல்லையென சொல்லி சகலதையும் செய்கின்றனர். இதை மகிந்தா இன்றுவரை கண்டுகொள்ளவில்லை. மௌனமாக இருந்து எரியும் பேரினவாத நெருப்பிற்கு எணணெய் வார்க்கின்றார்!

பிரதான எதிரியின் நடவடிக்கைகள் உங்களின் கண்களுக்கு தெரியாது. ஏனெனில் நீங்கள் மகிந்த ரசிகர்கள். ரசிகர்களுக்கு யதார்த்தம் புரியாது.  பிரதான எதிரியை அம்மணம் ஆக்காமல் நிற்கும் நீங்கள், தமிழ் மக்கள் முன் முழு நிர்வாணிகள் தான்-

அகிலன் 5/6/2012