இதுவரை காலமும் மக்கள் போராட்ட இயக்கம் என்று செயற்பட்டு வந்ந மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சிக்குழு "முன்னிலை சோஷலிஸக் கட்சி" என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.
கட்சியை ஆரம்பிப்பதற்கான அறிவிப்பை வெளியிடும் மாநாடு சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் எதிர்வரும் ஏப்ரல் 9ம் திகதி நடைபெறவுள்ளது. அதனைத்தொடர்ந்து முன்னிலை சோஷலிஸக் கட்சியின் உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.