வெளிப்படையாய் அச்சுறுத்தும் வெள்ளைவான் மெர்வின்சில்வா
மகிந்த அரசின் செல்லப்பிள்ளை மெர்வின்சில்வா சிறிலங்காவில் துள்ளி விளையாடுகிறார். கோத்தபாயவின் கட்டுப்பாட்டில் வெள்ளைவான்கள் ஊடகவியலாளரை இழுத்துச்சென்று புதைக்கப்படுகிறார்கள்.
வெளிப்படையாகவே ‘‘இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்துக்கு ஆதரவாகச் செயல்பட்ட இலங்கையின் மனித உரிமை ஆர்வலர்களின் கைகால்களை உடைப்பேன்’’ எனவும் ‘‘சுனந்த தேசப்பிரிய, நிமால் பெர்னாண்டோ, பாக்கியசோதி சரவணமுத்து" ஆகியோரைப் பெயர் குறிப்பிட்டுச் சொல்லி, அவர் இந்த அச்சுறுத்தலை விடுத்தார்.
மனித உரிமை விவகாரத்தில் இலங்கைக்கு எதிராகக் குரல் கொடுத்திருந்த பத்திரிகையாளர் பொத்தள ஜயந்தவை இலங்கையை விட்டு தானே விரட்டியடித்ததாகவும், அச்சுறுத்துபவர் மக்கள் தொடர்புத்துறை அமைச்சராக பாராளுமன்றத்தில் இருக்கின்ற அவலம் தான் மகிந்தஜனநாயகமான காட்டாட்சியின் உண்மைமுகம்.
-முரளி 24/03/2012