வல்லரசுகளின் நாடகங்களும், சதுரங்கக் காய் நகர்த்தல்களும் எல்லை தாண்டிப் போய்க்கொண்டிருக்கின்றன.
இன்னுமொரு இரத்தவெறி மிகுந்த ஊழுக்குள் இலங்கை போவதை மனிதர்கள் மீது அக்கறை கொண்ட எவருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
ரொபேர்ட் பிளேக் என்ற காட்டேறி இலங்கையில் போர் வெடிக்கும் என்கிறான். ஏகாதிபத்தியக் கையாள் சம்பிக்க ரணவக்க இனக்கலவரம் வெடிக்கும் என்கிறான். இலங்கையில் இரத்தம் குடிப்பதற்கு... எப்போதும் காத்திருக்கும் இந்தியாவோ, ஜெனீவாவில் அடவு கட்டி ஆடுகிறது.
இவர்களது ஆட்டங்கள் எல்லாம் இங்கே அரங்கேறுவதற்கு சாதகமாக அமைவது ஒரே ஒரு பலவீனம்தான். ஒரே ஒரு ஓட்டைதான். அதுவே காலகாலமாக சிங்கள மக்கள் மீது திணிக்கப்பட்டு அவர்களை அமிழ்த்தி வைத்திருக்கும் பௌத்த சிங்கள பேரினவாத மனநிலை.
சிங்கள மக்களிடமிருந்து இந்த மனநிலையைப் பிரித்துத் தோற்கடித்து விட்டோமானால் இலங்கை அமைதியான புது வாழ்வினைத் தொடங்கும்.
இதனைச் சிங்கள மக்களோடு கைகோர்த்துக்கொண்டுதான் செய்ய முடியுமே ஒழிய ஒட்டுமொத்த சிங்கள மக்களையும் "எதிரிகள்" ஆக்கிக்கொண்டல்ல. அவ்வாறு எதிரிகளாக்குவதும், பிரிவினைவாதமும் சிங்கள-பௌத்தப் பேரினவாதத்தை மேலும் மேலும் பலமுறவும் வெற்றிகொள்ளவுமே செய்யும்.
-Guest 19/03/2012