சுதந்திரத்திற்கான மகளீர் அமைப்பு - Free Women, சர்வதேச ஒடுக்கப்பட்ட பெண்கள் போராட்ட தினத்தை முன்னிட்டு, மாபெரும் ஆர்பாட்ட பேரணியை இன்று தலைநகரில் நடாத்தியது . பிற்பகல் 2.00 மணிக்கு, ஹைட்பார்க் மைதானத்திலிருந்து ஆரம்பமாகிய ஆர்பாட்ட பேரணியில் நான்கயிரதுக்கு மேற்பட்ட தோழர்களும், மக்களும் பங்கு கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேரணியின் பின்பு அதன் "அன்பு பிறக்கும் சமூகம்" என்ற தொனிப்பொருளில், கொழும்பு புதிய நகரசபை மண்டபத்தில் கருத்தரங்கு நடை பெற்றது.