Language Selection

புதிய ஜனநாயகம் 2008
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

PJ_2008_1.jpg

மத்திய அரசு கொண்டு வர இருக்கும் கிராமப்புறக் கட்டாய மருத்துவ சேவைத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒரு சுற்றுப் போராட்டம் நடத்திய மருத்துவ மாணவர்கள், தமிழக முதல்வரும் மருத்துவத்துறை அமைச்சரும் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் தற்காலிகமாகத் தமது வகுப்பறைகளுக்குத் திரும்பியிருக்கின்றனர்.

 

ஏற்கெனவே உள்ள மருத்துவக் கல்வித் திட்டத்தின்படி, பள்ளிப் படிப்பு முடிந்த பிறகு, நான்கரை ஆண்டுகாலம் மருத்துவக் கல்லூரிப் படிப்புடன், 4,500 ரூபாய் உதவித் தொகையுடன் ஓராண்டு உள்பயிற்சி மருத்துவராகப் பணியாற்றித் தேறிய மாணவர்களுக்கு இளங்கலை மருத்துவர் பட்டம் (எம்.பி.பி.எஸ்.) வழங்கப்பட்டு வந்தது. புதிதாகக் கொண்டு வரப்படும் திட்டத்தின்படி, உள்பயிற்சி மருத்துவராகப் பணியாற்றிய பிறகு, நான்கு மாதம் கிராமப்புற மருத்துவமனையிலும், அடுத்த நான்கு மாதம் வட்டத் தலைநகர் மருத்துவமனையிலும், கடைசி நான்கு மாதம் மாவட்ட மருத்துவமனையிலும் — ஆக ஓராண்டு காலம் 8,000 ரூபாய் உதவித் தொகை பெற்றுக் கொண்டு வெளிப் பயிற்சி மருத்துவராகப் பணியாற்ற வேண்டும்; அதன்பிறகுதான் அவர்களுக்கு இளங்கலை மருத்துவர் (எம்.பி.பி.எஸ்) பட்டம் வழங்கப்படும்.

 

""இது கிராமப்புற ஏழை மக்களுக்கு மருத்துவச் சேவை செய்யும் நல்ல நோக்கத்துடன் கொண்டு வரப்படும் திட்டம். இதை எதிர்ப்பவர்கள் கிராமப்புற விவசாய மக்களுக்கு எதிரானவர்கள்'' என்று மத்திய ""சமூக நலத்துறை'' அமைச்சர் அன்புமணியும் அவரது குடும்பக் கட்சியின் நிறுவனர் இராமதாசும் பேசி வருகின்றனர்.

 

கிராமப்புற ஏழை மக்களுக்குச் சேவை செய்வதையே இத்திட்டம் நோக்கமாகக் கொண்டிருக்கிறது என்பது உண்மை அல்லவென்று அத்திட்டத்தைச் சற்றுக் கவனத்தோடு பார்த்த மாத்திரத்தில் அறிந்து கொள்ள முடியும். ஒரு நான்கு மாதங்களில் கிராமப்புற மருத்துவமனைகளில், போதிய பயிற்சியும் அனுபவமும் இல்லாத இளம் மருத்துவர்கள் கிராமப்புற மக்களுக்கு என்ன சேவை செய்து விட முடியும்! ஆகவே, இப்போது அரசு கொண்டு வந்திருக்கும் திட்டத்தை கல்லூரியில் மருத்துவப் படிப்பு முடித்த பிறகு ஓராண்டு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளில் உள் மருத்துவராகவும், மேலும் ஓராண்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அல்லாத வெளி மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவராகவும் பணியாற்றுவதைக் கட்டாயமாக்குகிறது என்று வேண்டுமானால் கருதலாம்.

 

இவ்வாறு, இளம் மருத்துவர்களின் பயிற்சிக் காலத்தை மேலும் ஓராண்டு நீட்டிப்பதை கிராமப்புறக் கட்டாய சேவைத் திட்டம் என்று அரசும், மருத்துவக் கல்விக் காலத்தை ஆறரை ஆண்டுகளாக அதிகரிப்பதாக மருத்துவ மாணவர்களும் தவறான கருத்தை மக்களிடம் கூறி வருகின்றனர். இரண்டு தரப்பாரிடமும் உண்மையைச் சொல்லும் நேர்மையான அணுகுமுறை இல்லை.

 

இத்திட்டத்தை எதிர்ப்பதற்கு மாணவர்கள் தரப்பில் சில காரணங்கள்கூறப்படுகின்றன. கல்விக் கடன் பெற்று மருத்துவப்படிப்பு முடிக்கும் தாங்கள் உடனடியாக வேலைக்குப் போய் கடனடைக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அரசு தரும் 8000 ரூபாய் உதவித் தொகையைக் கொண்டு கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்த இயலாமல் போகிறது. உடனடியாக வேலைக்குப் போகாவிட்டால் படிக்க வைத்த பெற்றோர்களின் சுமை ஏறி விடுகிறது. பட்டமேற்படிப்புக்குச் செல்வதில் பிரச்சினை ஏற்படும்; உரிய வயதில், குறிப்பாகப் பெண் மருத்துவர்களுக்கு திருமணம் செய்து கொள்ள இயலாமல் போகிறது இவ்வாறான தமது சொந்த நலன்களுக்கான காரணங்களோடு, சில பொதுநல மக்கள் நலப் பிரச்சினைகளையும் போராடும் மருத்துவ மாணவர்கள் சேர்த்துக் கொள்கிறார்கள்.

 

கிராமப்புற மருத்துவமனைகளில் மருந்து, கருவிகள், செவிலியர் போன்றவை போதிய அளவில் இல்லாதபோது எப்படி கிராம மருத்துவ சேவை செய்ய முடியும்? கிராம மருத்துவ மனைகளில் மருத்துவப் பணியிடங்கள் காலியாக உள்ளன. உரிய மருத்துவர்களை நியமிக்காமல் பயிற்சி மருத்துவ மாணவர்களை அனுப்புவதால், ஏற்கெனவே பட்டம் பெற்ற மருத்துவர்களின் வேலை வாய்ப்புகள் பறிக்கப்படும். மேலும் மருத்துவச் சேவைக்கான அரசுச் செலவைக் குறைக்கும்படி உலக வங்கி உத்தரவிட்டுள்ளது; அதற்காக பயிற்சி மாணவர்களை சுழற்சி முறையில் அனுப்புவதன் மூலம் புதிய மருத்துவர்களை நியமித்து, மருத்துவ வசதிகளைப் பெருக்க வேண்டிய கடமையிலிருந்து தவறும் அரசு மக்களை ஏய்க்கவே இத்திட்டத்தைக் கொண்டு வருகிறது.

 

கிராமப்புற மருத்துவ சேவையில் அரசின் பொறுப்பின்மை தவறுகள் குறித்துக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் உண்மைதான்; என்றபோதும் அவற்றுக்காக மருத்துவ மாணவர்கள் ஒருபோதும் கவனஞ் செலுத்தியதோ, குரல் கொடுத்ததோ கிடையாது; அதேசமயம் அரசின் புதிய திட்டத்தால் தாங்கள் பாதிக்கப்படுவதாக மருத்துவ மாணவர்கள் கூறும் எந்தக் காரணத்தையும் ஏற்க முடியாது.

 

உதாரணமாக, கல்விக் கடன் அடைப்பதில் பிரச்சினை வரும் என்றால், அதற்குரிய காலத்தை நீட்டிக்கும்படியும், எளிய தவணையாக்கும்படியும், உதவித் தொகையை அதிகரிக்கும்படியும் கோரலாமே! மருத்துவ உயர்கல்விக்கான தகுதிகளில் ஒன்றாக இந்தப் பயிற்சிக் காலத்தையும் கணக்கிடும்படி கோரலாமே! இந்தப் பயிற்சிக் காலத்திலேயே தேவையானால் திருமணம் செய்து கொள்வதை எது தடுக்கிறது?

 

எவ்வளவு விரைவில் பட்டம் பெற்று தொழில் தொடங்கி காசு பணத்தைப் பார்ப்போம், வரதட்சிணை பெற்று வசதிகளைப் பெருக்கிக் கொள்ளலாம் என்ற சிந்தனை கணிசமான அளவு மருத்துவ மாணவர்களைப் பிடித்தாட்டிக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை அவர்கள் மறுக்க முடியாது. கிராமப்புற மருத்துவமனைகளில் பணிநியமனம் செய்யப்பட்ட மருத்துவர்கள் அங்கு பொறுப்பேற்க மறுப்பதும், பொறுப்பேற்ற பிறகும் அருகிலுள்ள நகரங்களில் குடியேறி தனியே தொழில் செய்வதையும் காண்கிறோம். பலர் பணி நேரங்களில் மருத்துவமனைகளில் இருப்பதுமில்லை; நோயாளிகளை மரியாதையுடன் நடத்தி உரிய சிகிச்சையும் அளிப்பதில்லை.

 

எல்லாவற்றுக்கும் மேலாக மருத்துவப் படிப்பை முடித்து, இளங்கலை மருத்துவப் பட்டம் பெற்றிருந்தாலும், சுயமாக மருத்துவச் சேவை செய்வதற்கு ஒவ்வொருவரும் குறைந்தது ஐந்தாண்டுகளுக்காவது முதுநிலை மருத்துவர்களின் கீழ் பணியாற்றி அனுபவம் பெற வேண்டியது அவசியமென்பதை அவர்கள் உணர வேண்டும். இந்தக் காலத்தை உயர் கல்விக்கான தகுதியாகக் கருத வேண்டும் என்றும், ஏற்புடைய ஊதியத்தை அரசு வழங்க வேண்டும் என்றும் இளநிலை மருத்துவர்கள் கோருவதுதான் அவர்களின் தொழிலுக்கே அவசியமாக உள்ளது.

 

அரசு கொண்டு வரவிருக்கும் கிராமப்புறக் கட்டாய மருத்துவ சேவைத் திட்டம் உண்மையில் கிராமப்புறங்கள் நலனுக்கானதே கிடையாது. ஒரு நான்கு மாதமே கிராமப்புற மருத்துவமனைகளில் பணியாற்றுவதைப் புதிய திட்டம் கோருகிறது. மத்திய அரசு தனது மொத்த ஆண்டு வருவாயில் 18 சதவீதத்தை இராணுவத்திற்குக் கொட்டும் அதேசமயம், 1.3 சதவீதமே மருத்துவத்துறைக்கு ஒதுக்குகிறது; மாநில அரசு 5.5 சதவீதமே ஒதுக்குகிறது; மருத்துவப் பணியிடங்கள் பலவும் நிரப்பப்படாமல் காலியாக இருக்கின்றன. அரசு மருத்துவமனைகளில், குறிப்பாகக் கிராமப்புற மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகளோ, மருந்துகளோ கருவிகளோ கிடையாது. இவற்றையெல்லாம் கவனிக்காமல், ஒரு நான்கு மாதம் இளம்நிலை பயிற்சி மருத்துவர்களை அனுப்புவதைக் கிராமப்புற மக்களின் மருத்துவச் சேவையாக வாய் கிழியப் பேசுகிறார்கள், இராமதாசர்கள்.

 

உண்மையில் கிராமப்புற மருத்துவ சேவையில் அக்கறையுடையதாக செயல்படும் அரசாக இருந்தால், ஐந்தாண்டுகளுக்காவது வேலை உத்திரவாதமளித்து இளம்நிலை மருத்துவர்களைக் கிராமப்புற மருத்துவமனைகளில் நியமிக்க வேண்டும். அவர்கள் தொடர்ந்து அங்கு பணியாற்றுவதை ஊக்குவிக்கும் வகையில் ஊதிய விகிதங்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும். வசிப்பிடம், வாகன வசதிகள் போன்றவை வழங்க வேண்டும். போதிய மருத்துவக் கருவிகள், படுக்கை, பிற கட்டுமான வசதிகள், மருந்துகள், உதவியாளர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு பணிபுரியும் தகுதி அடிப்படையிலேயே மருத்துவ உயர்கல்விக்கு தேர்வு செய்யப்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக இந்த வகையிலான மருத்துவ சேவையை மேற்பார்வையிடும் மக்கள் பிரதிநிதிக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.

 

இவ்வாறு மக்கள் நலனில் அக்கறையுடைய கோரிக்கைகளுக்காக அல்லாமல், தங்கள் சொந்த நலனுக்காக மட்டும் போராடும் """வெள்ளுடை வேந்தர்களை'' மக்கள் ஏன் ஆதரிக்க வேண்டும்?


· ஆர்.கே.

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது