Language Selection

புதிய ஜனநாயகம் 2008
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

PJ_2008_02.jpg

இராசஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து 50 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது, சக்வாரா கிராமம். இங்கு வசித்து வரும் 700 குடும்பங்களில், 70 குடும்பத்தினர் ""பைரவா'' என்ற தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள். இக்கிராமத்திலுள்ள பொதுக்குளம், அரசின் உதவியோடும், மக்களின் பங்களிப்போடும் தாழ்த்தப்பட்டவர்கள் கொடுத்த நன்கொடை, அவர்களின் உடல் உழைப்பையும் பயன்படுத்திதான் கட்டப்பட்டது.

 எனினும், இப்பொதுக்குளத்தைத் தாழ்த்தப்பட்டவர்கள் பயன்படுத்துவதற்குத் தடை விதித்து, பார்ப்பனர்களும், ஜாட் சாதியினரும் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தீண்டாமையைக் கடைப்பிடித்து வந்தனர்.

 

இத்தீண்டாமைக்கு எதிராக மனதிற்குள்ளேயே குமுறிக் கொண்டிருந்த தாழ்த்தப்பட்டோர், டிசம்பர் 14, 2001 அன்று கலகத்தில் குதித்தனர். இத்தீண்டாமையை முறியடிக்கும் அடையாளமாக, பாபுலால், ராதேஷாம் என்ற இரண்டு தாழ்த்தப்பட்டோர் பொதுக்குளத்தில் இறங்கிக் குளித்தனர். ""அக்குளம் எங்களுக்குப் பயன்படுகிறதோ, இல்லையோ, தீண்டாமைக்கு எதிரான கோபத்தின் காரணமாகவே அக்குளத்தில் இறங்கிக் குளித்ததாக''க் கூறினார், ""கலகக்காரர்'' பாபுலால்.

 

இக்கலகத்தால் இரத்தம் கொதித்துப் போன பார்ப்பன ஜாட் சாதி வெறியர்கள் சாதி பஞ்சாயத்தைக் கூட்டி, தாழ்த்தப்பட்டோர் சாதிக் கட்டுப்பாட்டை மீறியதற்கான தண்டனையாக 50,000 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் எனக் கட்டளை போட்டனர்; மேலும், கிராமத்திற்குள் தாழ்த்தப்பட்டோருக்கு அத்தியாவசியப் பொருட்களை யாரும் விற்கக் கூடாது; அவர்களை வயல் வேலைக்குக் கூப்பிடக் கூடாது; அவர்களுக்கு கடன் தரக் கூடாது எனப் பல்வேறு ""ஃபத்வா''க்களையும் போட்டுச் சமூகப் புறக்கணிப்பும் செய்தனர்.

 

இந்த உருட்டல், மிரட்டல்களுக்கெல்லாம் பயப்படாத பாபுலால், தனது மக்களின் ஆதரவோடு, மேல் சாதிவெறியர்களின் சட்டவிரோதச் சமூகப் புறக்கணிப்புப் பற்றி போலீசில் புகார் கொடுத்தார். ஆனால், மாவட்ட நிர்வாகமும், போலீசும் மேல்சாதி வெறியர்களுக்கு ஆதரவாக நின்றுகொண்டு, ""அந்தக் குளத்தை நீங்கள் பயன்படுத்தத் தேவையில்லை'' எனக் கட்டைப் பஞ்சாயத்து செய்தன.

 

சமாதானம் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்தக் கட்டைப் பஞ்சாயத்துக்கும் தாழ்த்தப்பட்டோர் பணிந்து போகவில்லை. அவர்கள், பல்வேறு மனித உரிமை அமைப்புகளின் ஆதரவோடு, செப்.2002இல் கிராமப் பொதுக் குளத்தில் தண்ணீர் எடுக்கும் உரிமை கோரி ஆர்ப்பாட்ட பேரணியொன்றை நடத்தினார்கள். மேல்சாதி வெறியர்கள், இப்பேரணி மீது கல்வீச்சுத் தாக்குதலை நடத்திக் கலைக்க முயன்றதோடு, பேரணியில் கலந்து கொண்ட தாழ்த்தப்பட்டோரைக் குண்டாந்தடிகளைக் கொண்டு தாக்கவும் செய்தனர்.

 

இவ்வன்முறைத் தாக்குதலால் தாழ்த்தப்பட்டோர் அடங்கிப் போய்விடுவார்கள் என எதிர்பார்த்துக் காத்திருந்த மேல்சாதிவெறிக் கும்பல், ஏமாந்து போனது. தாக்குதல் நடந்த மறுநாளே சக்வாரா கிராமத் தாழ்த்தப்பட்டோர், கிராமப் பொதுக் குளத்தில் இறங்கியதோடு, அக்குளத்தைத் தங்களின் தேவைகளுக்காகத் தினந்தோறும் பயன்படுத்தத் தொடங்கினர்.

 

இதன்பின் மேல்சாதி வெறிக் கும்பலோ தீண்டாமையைப் புதிய வடிவில் கடைப்பிடிக்கச் சதித் திட்டம் போட்டது. இதன்படி, அக்கிராமக் குளம் புனிதத் தன்மையை இழந்து விட்டதாகப் பிரச்சாரம் செய்தனர். தீண்டாமைக்கு அங்கீகாரம் அளிக்கும் இந்து மத நம்பிக்கைகள், மேல்சாதி வெறிக்குக் கை கொடுத்தன. மேலும், தாழ்த்தப்பட்டோர் பயன்படுத்தத் தொடங்கிய அக்குளத்தில், காலைக் கடன்களைக் கழிப்பது; குப்பைகளைக் கொட்டுவது போன்ற அடாவடித்தனங்களில் இறங்கி, குளத்தையே மாசுபடுத்தத் தொடங்கினர். தற்பொழுது, கிராம கழிவுநீரெல்லாம் அந்தக் குளத்தில் போய் கலக்கும் வண்ணம் ஒரு வடிகாலையும் வெட்டி விட்டனர். இதன் மூலம், சக்வாரா கிராமத் தாழ்த்தப்பட்ட மக்கள் போராடி அடைந்த வெற்றியை, நடைமுறையில் அர்த்தமற்றதாகச் செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறது, பார்ப்பன ஜாட் சாதிவெறிக் கும்பல்.

 

தண்ணீரைப் பயன்படுத்தும் சமூக உரிமையைக் கூட அனுபவிக்க விடாமல் தாழ்த்தப்பட்டோரைத் தடுக்கும் தீண்டாமைக் கொடுமைகள், இராசஸ்தான் போன்ற பின்தங்கிய மாநிலங்களில்தான் நடக்கும் என முடிவு செய்து விடாதீர்கள். எழுத்தறிவு பெற்றதில் நாட்டிலேயே முதல் மாநிலமாகத் திகழும் கேரளாவின் பாலக்காடு மாவட்டம் சித்தூர் வட்டத்தில் அமைந்துள்ள பல கிராமங்களில், ""பொதுக் குழாய்களில் தண்ணீர் வரும் சமயங்களில், மேல்சாதியினர் பிடித்த பிறகுதான், தாழ்த்தப்பட்டோர் தண்ணீர் பிடிக்க வேண்டும்'' என்ற தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டு வருவது தற்பொழுது அம்பலமாகியிருக்கிறது.

 

அம்பேத்கர் தாழ்த்தப்பட்டோர் பொதுக் குளங்களில் தண்ணீர் எடுக்கும் உரிமையை அங்கீகரிக்கக் கோரி, எண்பது ஆண்டுகளுக்கு முன்பு ""மஹத்'' என்ற கிராமத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினார். காலனி ஆட்சியில் நடைபெற்ற அந்த உரிமைப் போர், இன்றும் தொடர்கிறது, இந்தியாவோ, தன்னை வெட்கமின்றி ""குடியரசு'' என்று கூறிக் கொள்கிறது.


· குப்பன்

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது