Language Selection

புதிய ஜனநாயகம் 2008
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

PJ_2008_02.jpg

மலேசியாவில் கடந்த இரு மாதங்களாக இந்திய வம்சாவளித் தமிழர்கள் தமது உரிமைகளுக்காக நடத்திவரும் போராட்டம், மலேசியாவில் நிலவும் இனப் பாகுபாட்டையும் அடக்குமுறையையும் உலகிற்கு நிரூபித்துக் காட்டி விட்டது.

 

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், தோட்டத் தொழிலில் ஈடுபடுத்துவதற்கென்று தமிழகத்திலிருந்து தமிழர்கள் மலேசியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். காடுகளைத் திருத்தி ரப்பர் தோட்டங்களாக மாற்றி மலேசியாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர்கள் தமிழர்களே. 1957இல் மலேசியா பெயரளவிலான சுதந்திரமடைந்தபோது, அரசியல் சட்ட வரைமுறைகளுக்காக ரீட் என்பவர் தலைமையில் பிரிட்டிஷ் அரசு ஒரு கமிசன் அமைத்தது. அதில் தமிழர்கள் சார்பில் சமத்துவ உரிமைகளுக்காக வைக்கப்பட்ட கோரிக்கைகளைப் பிரிட்டிஷ் அரசு புறக்கணித்து விட்டது.

 

மலேயரும் தமிழரும் சீனரும் கொண்ட மலேசியாவில் 1970களிலிருந்து மண்ணின் மைந்தர் கொள்கை பின்பற்றப்பட்டு, மலாய்காரர்களுக்குச் சிறப்புச் சலுகைகள் வழங்கும் சட்டமியற்றப்பட்டு, தமிழர்களும் சீனர்களும் இரண்டாம்தர குடிமக்களாக்கப்பட்டனர். காலனியாதிக்கத்திற்கெதிராகச் செம்படைகளைக் கட்டி ஆயுதப் போராட்டம் நடத்திய மலேசியக் கம்யூனிஸ்டுக் கட்சி தடைச் செய்யப்பட்டு, கம்யூனிஸ்டுகள் மிருகத்தனமாக ஒடுக்கப்பட்டனர். தொழிற்சங்க உரிமைகள் பறிக்கப்பட்டன. பாசிச சர்வாதிகார பிரதமர் மகாதிர் முகம்மது, மலேசியாவை இஸ்லாமிய நாடாக அறிவித்தார். மலாய் மொழியே ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது. அதற்கடுத்த நிலையில் ஆங்கிலம்தான் அரசின் செல்வாக்கைப் பெற்றுள்ளது. தமிழ், அலுவல் மொழியாகக்கூட இல்லை. தமிழ் புறக்கணிக்கப்படுவதால் தமிழ்ப் பள்ளிகூடங்கள் மதிப்பிழந்துள்ளதோடு, அரசு போதிய நிதியுதவி செய்யாததால் படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன. "மண்ணின் மைந்தர்' சட்டப்படி, சீனரோ தமிழரோ வெளிநாட்டினரோ மலேசியாவில் தொழில் தொடங்கினால். மலேயாக்காரர்களுக்கு 30% பங்கு மூலதனமும், ஊழியர்களில் 30% மலேயாக்காரர்களாகவும் இருக்க வேண்டும்.

 

காலனிய ஆட்சிக் காலத்தில் ரப்பர் தோட்டத் தொழிலாளியாக உரிமைகளற்ற அடிமைகளாக உழன்ற தமிழர்கள், பின்னர் மகாதிர் முகம்மது ஆட்சிக் காலத்தில் ஏகாதிபத்திய மறுகாலனியாக்கத்திற்கேற்ப மேற்கொள்ளப்பட்ட பெருந்திட்டங்கள், பாமாயில் பண்ணைகளால் ரப்பர் தோட்டத் தொழிலிலிருந்து பிடுங்கப்பட்டு மாற்று நிலமின்றி நகர்ப்புறங்களுக்கு விரட்டப்பட்டனர். இடம் பெயர்ந்தவர்கள் நகர்ப்புறத்தில் வேலையின்மையாலும், புதிய நிலைமைக்கேற்ப மாறிக் கொள்ள முடியாமலும் ஏமாற்றமும் விரக்தியும் அவர்களைக் கவ்வியுள்ளது. இதன் காரணமாக சம்சு (சாராயம்) மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையாவதும் சிலர் குற்றச் செயல்களில் ஈடுபடுவதும் தொடர்கிறது. இதனால் தமிழர்கள் என்றாலே மோசமானவர்கள், கிரிமினல்கள் என்ற தோற்றம் மலேசிய அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. அரசுத்துறைகள் மட்டுமின்றி, பொது இடங்களில் தமிழர்கள் மீதான அணுகுமுறை மோசமாக உள்ளது. தமிழர்களை ""கெலிங்'' என்று நாக்கூசும் கெட்ட வார்த்தையால் மலேசியர்கள் அழைக்குமளவுக்கு அங்கே இனவெறியூட்டப்பட்டுள்ளது.

 

குமுறிக் கொண்டிருந்த மலேசியத் தமிழர்கள், ""இன்று அனுபவிக்கும் புறக்கணிப்புக்கும் இன்னல்களுக்கும் பிரிட்டிஷ் அரசின் காலனியக் கொள்கையே காரணம்; அந்தக் குற்றத்துக்காக பிரிட்டிஷ் அரசு மலேசியத் தமிழர் ஒவ்வொருவருக்கும் ஏறத்தாழ எட்டேகால் கோடி ரூபாய் இழப்பீடாகத் தரவேண்டும்'' என்று கோரி பிரிட்டன் உயர்நீதி மன்றத்தில் சிவில் வழக்கொன்றை கடந்த 30.8.07 அன்று பதிவு செய்து, இதையொட்டி ஒரு லட்சம் தமிழர்கள் கையெழுத்திட்ட மனுவை பிரிட்டிஷ் மகாராணியிடம் சமர்ப்பிக்க மலேசிய பிரிட்டிஷ் ஆணையர் அலுவலகத்தை நோக்கி கடந்த நவம்பர் 25ஆம் நாள் ஊர்வலம் நடத்தத் தீர்மானித்தனர்.

 

மலேசியாவில் எவ்வித ஊர்வலமோ, ஆர்ப்பாட்டமோ, பொதுக்கூட்டமோ நடத்த அனுமதியில்லாத "ஜனநாயகம்' நிலவுவதால், தடையை மீறி பல்லாயிரக்கணக்கில் திரண்ட தமிழர்கள் மீது மிருகத்தனமான அடக்குமுறையை ஏவிய மலேசிய அரசு, தமிழர்களை அமைப்பாக்கிப் போராடி வரும் ""இந்து உரிமைகள் நடவடிக்கைப் படை'' (ஏடிணஞீணூச்ஞூ)யின் முன்னணித் தலைவர்கள் ஐந்துபேரை ""இசா'' எனப்படும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைத்துள்ளது. நூற்றுக்கணக்கான தமிழர்கள் மீது பொய் வழக்குகள் சோடிக்கப்பட்டுள்ளன.

 

இவ்வளவுக்குப் பின்னரும், மலேசியத் தமிழர்கள் சமத்துவமாக நடத்தப்படுவதாகவும் ""ஹிண்ட்ராப்'' அமைப்பினர் சமய ஒற்றுமையைச் சீர்குலைப்பதாகவும், கூசாமல் புளுகிய மலேசிய இந்திய காங்கிரசின் தலைவரும் தமிழ் அமைச்சருமான டத்தோ சாமிவேலு அம்பலப்பட்டுத் தனிமைப்பட்டு போயுள்ளார். இதே கருத்தோடு, இஸ்லாமிய அரசை முட்டுக் கொடுத்து ஆதரிக்கும் இங்குள்ள சில இஸ்லாமிய அடிப்படைவாத பிற்போக்கு பத்திரிகைகள், இந்தியாவிலிருந்து மலேசியாவுக்கு சுற்றுலாப் பயணிகள் பெயரில் வரும் இந்துத்துவவாதிகள் ""ஹிண்ட்ராப்'' அமைப்பை நிறுவித் தூண்டிவிட்டுள்ளதாகக் கூசாமல் புளுகுகின்றன. இந்து பெயரில் போராடுகிறார்கள் என்பதாலேயே, தமிழர்களின் நியாயமான உரிமைப் போராட்டத்தைப் புறக்கணித்துவிட முடியாது.

 

மலேசிய அரசின் அடக்குமுறைகளையும் பிழைப்புவாதிகளின் அவதூறுகளையும் துச்சமாக மதித்து தமிழர்கள் தொடர்ந்து அமைதியான முறையில் போராடி வருகின்றனர். தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னணித் தலைவர்களை விடுவிக்கக் கோரி சிறப்புப் பிரார்த்தனைகள், மலேசிய அரசின் ஒடுக்குமுறையை எதிர்த்து கனடா வாழ் தமிழர்களின் ஆர்ப்பாட்டம், ஹிண்ட்ராப்பின் தலைவர் வேதமூர்த்தி வெளிநாடுகளில் ஆதரவு திரட்டும் முயற்சிகள், தமிழக அரசியல் தலைவர்களின் கண்டன அறிக்கைகள் முதலானவற்றால் உலகின் கவனத்தை ஈர்ப்பதில், போராடிவரும் மலேசியத் தமிழர்கள் முதற்கட்ட வெற்றியைச் சாதித்துள்ளனர்.

 

அதேசமயம் மதச்சார்பின்மை, ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டு அனைத்து இந்திய வம்சாவளியினரையும் மலேய, சீன உழைக்கும் மக்களையும் இந்நியாயமான போராட்டத்துக்கு ஆதரவாக அணிதிரட்டி எதிரிகளையும் துரோகிகளையும் தனிமைப்படுத்துவது மலேசியத் தமிழர்களின் உடனடிக் கடமையாகும். தற்போதைய முதற்கட்ட வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ளவும் அடுத்தகட்ட வெற்றியை அறுவடை செய்யவும் இது மிகவும் அவசியமாகும்.

 

· தனபால்

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது