Language Selection

புதிய ஜனநாயகம் 2008
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

PJ_2008_02.jpg

தமிழ்நாட்டில் இருக்கும் சி.பி.எம். அணியினர் இனிமேல் இருமுடி கட்டிக் கொண்டு ""சாமியே சரணம் அய்யப்பா'' என கோசமிட்டபடியே சபரிமலை ஏறலாம். செய்வினை, பில்லிசூனியம் வைப்பதற்கென்றும் குறி சொல்வதற்கென்றும் தனிப்பிரிவை கட்சியே இனி அமைக்கலாம். எல்லாவற்றிற்கும் ""கேரளத்தைப் பார்'' என நமக்கு வழிகாட்டும் இவர்களது கேரள சி.பி.எம். கட்சி காட்டும் பாதை அப்படித்தான் உள்ளது.

 

சென்ற டிசம்பர் மாதம் 30ஆம் தேதியன்று சபரிமலையில் தேவசம் போர்டால் கட்டப்பட்ட மருத்துவமனையைத் திறந்து வைக்கச் சென்ற கேரள முதல்வர் அச்சுதானந்தன் 6 கி.மீ. வரை பாதயாத்திரையாகவே நடந்து மலை ஏறியுள்ளார்.

 

கால்நடையாக நடக்கும் பக்தர்களின் சிரமத்தை அறிந்து கொள்ளத்தான் "காம்ரேட்' நடந்து சென்றதாக இச்செயலை நியாயப்படுத்துகின்றனர். அவருக்கு அப்படியே தீக்குழி இறங்குவதன் வேதனையையும், வேப்பிலை கட்டி கையில் தீச்சட்டி எடுப்பதன் மகிமையையும் அறிந்து கொள்ளக் கோரி யாராவது ஆலோசனை சொன்னால் பொருத்தமாயிருக்கும். எப்படியும் அடுத்த ""பொலிட் பீரோ'' கூடும் முன்பே செய்து முடித்து விடுவார்.

 

மருத்துவமனையைத் திறக்கத்தான் சென்றார் என்றால், அதனை ஒரு ரிப்பன் வெட்டியே செய்திருக்க முடியும். ஆனாலும் ""கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை'' எனப் பாடாத குறையாக நடந்த தோழர், கேரள வகைக் குத்துவிளக்கை ஆன்மீக முறைப்படி ஏற்றிவைத்து, அய்யப்பன் கோவிலுக்கு வந்த முதல் "கம்யூனிஸ்ட்' தலைவராகி இருக்கிறார்.

 

அங்குள்ள அய்யப்பன் கோவிலில் வெடி வெடித்தும் வழிபட்டிருக்கிறார் "தோழர் அச்சு சுவாமி'. இவரை இனி "தோழர்' என்று அழைப்பதா, "குருசாமி தோழர்' என்று அழைப்பதா என்று சி.பி.எம்.காரர்கள் விவாதித்துக் கொண்டுள்ளார்களாம்!

 

சிறு குழந்தைகளைப் பார்ப்பன முறைப்படி பள்ளிக்கூடங்களில் சரஸ்வதி பூசை அன்று சேர்க்கும்போது, மந்திரங்கள் ஓதி குழந்தையின் நாக்கில் எழுதிடும் "அட்சர' பூசைச் சடங்கையும் ஏற்கெனவே நடத்தியவர்தான் அச்சுதானந்தன்.

 

இவர் மட்டும் என்றில்லை. இவருக்கு எதிராக செயல்படும் பினாரயி விஜயன் கோஷ்டியும் மூடநம்பிக்கையில் மூழ்கி முத்தெடுப்பவர்கள்தான். சென்ற ஆண்டு விஜயனின் குடும்பத்தினர் அவரது மகன் தலைமையில் இரகசியமாக "சத்ரு சம்கார' பூசை ஒன்றை அச்சுதானந்தனுக்கு எதிராக நடத்தி இருக்கின்றனர். தனக்கு வேண்டாத ஒருவனை இப்பூசை மூலம் சாகடித்து விட முடியும் என்ற பார்ப்பன நம்பிக்கை கேரளத்தில் நிலவுகிறது. அதற்காகத்தான் இந்த "சிவப்புப் பூசை'!

 

அச்சுதானந்த சுவாமியின் குருசாமியான மறைந்த இ.எம்.எஸ். நம்பூதிரிபாடோ, பழனிக்கு பாதயாத்திரை வந்தவர்தான். சோம்நாத் சாட்டர்ஜி உள்ளிட்ட முன்னணியினர் பலரும் பூணூல் பூசை நடத்தி பார்ப்பனியத்திற்கு பாதபூசை செய்பவர்கள்தான்.

 

கேரளத்தில் பத்தாண்டுகளுக்கு முன்னர் வரை ஓட்டுக்காக இந்துவெறி ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிராக சி.பி.எம். இளைஞர் அமைப்பினர் களத்தில் இறங்கித் திரும்பித் தாக்கிடும் அளவிற்கு செயல்பட்டிருக்கின்றனர். இன்று நிலைமை மாறி இருக்கின்றது. இன்றோ இந்து மதவெறியுடன் அனுசரித்துப் போகின்றது கட்சியின் தலைமை. அதனால்தான் இன்றைக்கு வெளிப்படையாகவே அச்சுதானந்தன் தனது பக்தியை ஊரறியச் செய்கிறார்.

 

சபரிமலை தந்திரி கண்டரேரு மோகனருவின் காமவெறிக் களியாட்டங்கள் புழுத்து நாறியபோதும் அவர் சம்பந்தப்பட்ட வழக்குகளை அப்படியே அமுக்கி விட்டது போலி கம்யூனிஸ்ட் அரசு. அவ்வளவு பக்தி! இப்போது பக்தி முற்றிப்போய், பக்தர்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாதென்று, சபரிமலைக் கோவில் அமைந்திருக்கும் பத்தனம்திட்டா மாவட்டத்தில் மண்டல பூசை நடைபெறும் இரண்டு மாதங்களுக்கு எவ்வித ஆர்ப்பாட்டமோ அரசியல் இயக்கங்களோ நடத்தமாட்டோம் என்று பா.ஜ.க.; காங்கிரசுக் கட்சியுடன் சேர்ந்து சி.பி.ஐ., சி.பி.எம். கட்சியினரும் மாவட்ட ஆட்சியரிடம் கையெழுத்துப் போட்டுக் கொடுத்து அதனை நடைமுறைப்படுத்தியும் உள்ளனர்.

 

மக்கள் போராட்டங்கள் அய்யப்பனுக்குச் சரணம். கட்சியோ தரகு முதலாளிகளுக்குச் சரணம். நல்ல முன்னேற்றம்தான்!

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது