Language Selection

பி.இரயாகரன் -2012
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மனிதவுரிமையை நிலைநாட்டவா? தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளுக்கு தீர்வு காணவா? தமிழ் மக்களின் மீதான குற்றங்களுக்கு நீதி வழங்கவா? ஏகாதிபத்தியத்தை எதிர்க்கவா? தேசத்தின் சுயாதிபத்தியத்தை பாதுகாக்கவா? சொல்லுங்கள்? இதனால் எதற்காவது நியாயம் கிடைக்குமா? இல்லை நியாயம் கிடைக்கும் என்று கூறுகின்ற, காட்டுகின்ற அனைத்தும், ஏன் இந்த மோசடியை அம்பலப்படுத்தாத அனைத்தும் பொய்யானது புரட்டுத்தனமானது. இதை ஒட்டுமொத்தமாக முன்வைத்துக் கோராத, போராடாத அனைத்தும் மோசடியானது.

இதன் பின்னணியில் அமெரிக்காவுக்கு ஆதரவாகவும், இலங்கைக்கு ஆதரவாகவும் கொடிபிடிக்கும் காட்சிகள், செய்திகள், விவாதங்கள் முதல் அன்பான மிரட்டல்கள் வரை அரங்கேறுகின்றது. இப்படி எல்லா மனிதவிரோதிகளும் அங்குமிங்குமாக தம்மை கன்னை பிரித்து நிற்கின்றனர். இந்த பின்னணியில், இதற்குள் மனிதவுரிமை முதல் ஏகாதிபத்தியம் வரை பேசுகின்ற அரசியல் கேலிக்கூத்தை நாம் பார்க்கின்றோம். போலித் தேசியவாதிகள் முதல் போலிக் கம்யூனிஸ்ட்டுக்கள் வரை, அங்குமிங்குமாக ஆளுக்கொரு நியாயம்.

தங்கள் சொந்தத் தரப்பு மனிதவிரோதத்தை கேள்விக்குள்ளாக்காத தங்கள் அரசியல் பின்புலத்தில், மனிதவுரிமை பற்றிய வாய்ச்சவடால்கள். தீர்வுகள் பற்றிய எதிர்வு கூறல்கள். அரசியல் ஆய்வுகள் முதல் ஆர்ப்பாட்டங்கள் வரை ஜெனிவாவைச் சுற்றிக் காட்டப்படுகின்றது. இதனால் மக்களுக்கு என்ன தான் நன்மை? இதனால் தீர்வுதான் மக்களுக்குக் கிடைக்குமா?

இலங்கை மக்களின் மேலான எண்ணை விலையேற்றத்திலான அவலம் குறைந்துதான் விடுமா? அரசின்; அடக்குமுறை நின்றுதான் விடுமா? அமெரிக்காவின் உலக ஆதிக்கம் குறைந்துதான் விடுமா? சொல்லுங்கள். மக்களுக்கு வெளியில் மக்களை ஒடுக்கும் அரசியல் கூத்தாடிகள் மக்களின் பெயரில் கூத்தாடுகின்றனர்.

பாரிய குற்றங்களை மக்கள் மேல் இழைத்த அரசும் சரி, அதையே செய்த புலிகளும் சரி, எந்தவிதத்திலும் எவரும் பாதுகாக்க முடியாத குற்றக் கும்பல்கள். கடத்தல், கைது செய்தவர்களைக் கொல்லுதல், சரணடைந்தவர்களைக் கொல்லுதல் வரை, அனைத்துவிதமான மனிதவிரோத குற்றத்திலும் இருதரப்பும் ஈடுபட்டது. இதில் யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. ஆனால் இதில் ஒன்றைச் சொல்லி மட்டும் அரசியல் நடத்துபவர்கள் முதல் தரமான குற்றவாளிகள். இவர்கள் தான் முதல்தரமான மனிதவிரோதிகள்.

இந்த வகையில் இரண்டையும் அம்பலப்படுத்தி முன்னெடுக்காத அரசியல், பிரமுகர்த்தன இருப்புக்கான ஆய்வுகள் மனிதவிரோதத் தன்மை கொண்டவை. பொது அரசியல் தளத்தில் இதில் ஒன்றை பயன்படுத்துகின்ற அரசியல் மோசடியை நாம் காண்கி;றோம். இப்படியான அரசியல், எந்த விதமான கேள்விக்கும் இடமின்றி மனிதவிரோதத் தன்மை கொண்டவை.

இந்தக் குற்றங்களுக்கு வக்காலத்து வாங்குகின்ற அரசியல் பின்னணியில், மக்களுக்கு நீதி கிடைக்கக் போவதில்லை. இரண்டையும் எதிர்த்து மக்களைச் சார்ந்து நின்று நீதியைக் கோரிப் போராடாத அரசியல், தொடர்ந்து மனிதவிரோத குற்றத்தின் பின்னால் நின்று வேஷம் கட்டி அரங்கேற்றும் மனிதவிரோதக் கூத்துதான்.

இன்று அமெரிக்கா தலைமையிலான மேற்கின் உலகளாவிய குற்றங்கள் கூட இதற்கு நிகரானது தான். ஆக இங்கு புலி – அரசு – அமெரிக்கா பின்னணியில் அரங்கேறும் ஜெனிவா அரசியல், மக்களின் நியாயங்கள் மீதோ நீதியின் பாலானதோ அல்ல.

அமெரிக்காவோ தன் உலக மேலாதிக்கத்தை நிறுவ, இலங்கை அரசின் தொடர்ச்சியான மனித விரோத செயற்பாட்டை முன்னிறுத்தி காய் நகர்த்துகின்றது. இலங்கை அரசோ மக்கள் மேலான தன் ஒடுக்குமுறையை தக்கவைக்க, புலியின் மனித விரோத பக்கத்தை முன்னிறுத்தி கொய்யோ முறையோவெனக் குளறியபடி ஜெனிவா நோக்கி நாலுகாலில் ஓடுகின்றது.

இப்படி எண்ணையை விலையேற்றி மக்களைக் கொள்ளையடித்த பணத்துடன், வண்டி வண்டியாக இலங்கை அரச எடுபிடிகள் ஜெனிவாவில் இறங்குகின்றனர். அங்கு பணத்தை கொட்டி விலைக்கு வாங்கும் விருந்துகளும், அரசியல் விபச்சாரமும் ஒருங்கே அரங்கேறுகின்றது. சொந்த மண்ணில் சுதந்திரமாக வாய் பேச முடியாத ஊமைகள் எல்லாம் அணிவகுத்து நிற்க, அரங்கேறும் மனிதவிரோத விருந்துகளும் உரையாடல்களும்.

மொத்தத்தில் அனைத்து மனிதவிரோதிகளும் ஒன்றாகக் கூடி, தங்கள் மனிதவிரோத வக்கிரங்களையெல்லாம் கொட்டி அதை அரங்கேற்றத் துடிக்கின்றனர்.

அரச மற்றும் புலிப் பாசிசத்தினால் மக்கள் சந்தித்த துயரங்களுக்கும், இழப்புகளுக்கும், அவலங்களுக்கும் இந்த ஜெனிவா கூட்டம் ஒரு நாளும் தீர்வு காணாது. அரசோ – அமெரிக்காவோ இந்த அடிப்படையில், எதிரெதிராக ஜெனிவாவில் கூடவில்லை. மாறாக தங்கள் மனிதவிரோத சுயநலத்தின் அடிப்படையில் தான், இதை தங்கள் நலனுக்கு ஏற்ப பயன்படுத்துகின்றனர்.

இதற்கு பின்னால் மக்களை வழிகாட்டுகின்றவர்கள், இதை அம்பலப்படுத்த தவறுகின்றவர்கள் துணையுடன் தான், இந்த மனிதவிரோதம் மீண்டும் ஜெனீவாவில் அரங்கேறுகின்றது. இந்த வகையில் இதை எதிர்த்து எம்மை நாம் அணிதிரட்டுவதன் மூலம் தான் இந்த மனித விரோத அரசியல் மேடையில் இருந்து எம்மையும், எம் மக்களையும் விடுவிக்கமுடியும்.

 

பி.இரயாகரன்

26.02.2012

 

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது