Language Selection

பி.இரயாகரன் -2012
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

முழு இலங்கை மக்கள் மேலான யுத்தம் ஒன்றை அரசு தொடங்கி இருக்கின்றது. இந்த யுத்தத்துக்கு இன அடையாளம் கிடையாது. சாதி அடையாளம் கிடையாது. மத அடையாளம் கிடையாது. ஆண் பெண் பால் அடையாளம் கிடையாது. இப்படி எந்தக் குறுகிய அடையாளமும் கிடையாது. முழு மக்களையும் பாதிக்கும் இந்த யுத்தத்தின் விளைவுகளை அனுபவிப்பதில் மட்டும்தான், இந்த அடையாளங்களும் வேறுபாடு;களும் குறிப்பாக வேறுபடுகின்றது. இப்படி அரசு வர்க்கரீதியான யுத்தத்தை முழு மக்கள் மேலும் நடத்துகின்றது. இனவழிப்பு யுத்தத்தின் பின், அரசு முழு மக்கள் மேலான வர்க்க ரீதியான ஒரு யுத்தத்தை உலக வங்கியின் துணையுடன் தொடங்கி இருக்கின்றது. பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்கள் முதல் இது யாரையும் விட்டு வைக்கவில்லை.

இப்படி உலக வங்கியின் அடியாளாக செயல்;படும் அரசு, அதன் கட்டளைக்கு அமைய எரிபொருள் விலையேற்றத்தையும் பணவீக்கத்தையும் இலங்கை மக்கள் மேல் திணிக்கின்றது. இதை அடுத்து அனைத்துப் பொருட்களும் கிடுகிடுவென் விலை ஏறுகின்றது. அரசு இந்த பொருளாதார யுத்தத்தை, இராணுவத்தின் துணையுடன் அமுல்படுத்துகின்றது. மக்களின் வாழ்வில் இதன் தாக்கம் பாரியது. பல எதிர் அரசியல் விளைவுகளைக் கொண்டது.

மண்ணெண்ணெய் விலையை 50 விகிதத்தாலும் (35 ரூபாவினாலும்), டீசல் விலையை 37 விகிதத்தாலும் (31 ரூபாவாலும் அதாவது ஒரு லீட்டர் டீசலின் விலை 76 ரூபாயிலிருந்து 115 ரூபாவாக), பெட்ரோல் விலையை 9 விகிதத்தாலும் (12 ரூபாவினாலும்), உயர்த்தி அரசு, மக்கள் மேல் வெடிகுண்டை வீசியிருக்கின்றது. இதன் மூலம் அனைத்து தொழில் துறைகள்; முதல் மக்களின் அன்றாட வாழ்வாதாரங்களும் அனைத்தும் மரணப்பொறியில் சிக்கியிருக்கின்றது.

எண்ணை விலையேற்றத்தால் எழுந்த போராட்டங்களை அடுத்து, மானிய விலையில் சில துறைக்கு எண்ணை வழங்க ஓப்புக்கொண்டது அரசு. இதன் பின்னணியில் போக்குவரத்து கட்டணம் 20 சதவீதத்தால் உயர்த்தியும், அதிகுறைந்த கட்டணத்தை 9 ரூபாவாக உயர்த்தியது. மின் பாவனையில் இதே அதிகிரிப்பு. 1 – 30 அலகுகளுக்கு 25 சதவீதமும் 31 – 60 அலகுகளுக்கு 35 சதவீதமும் 61க்கு மேற்பட்ட அலகுகளுக்கு 40 சதவீதமும் அதிகரித்துள்ளது. எரிவாயு விலை அதிகரித்துள்ளது. இப்படி பல தளத்தில்.

மொத்தத்தில் உற்பத்திக்கான மூலதனத்தின் அளவு அதிகரிக்கவும், நுகர்வின் அளவு குறைகின்றது. இது தேசிய உற்பத்தியின் அளவைக் குறைக்கும். தேசியம் சார்ந்த உற்பத்திகளின் அழிப்போ, இந்த விலையேற்றம் மூலம் மிகவேகமாக நடந்தேறும்;. அதேநேரம் இந்த விலையேற்றத்தால் சர்வதேச பொருட்களின் உற்பத்திக்கான செலவு குறைவதால், அது சந்தையை ஆக்கிரமித்து தேசியப் பொருட்களை அகற்றும். மொத்தத்தில் மக்களின் நுகர்வின் அளவு குறையும். வாழ்க்கைத் தரம் வீழ்ச்சியுற்று, தேசியத் தன்மையும் குறையும்.

இந்த விலையேற்றத்தை மூன்றாம் உலக நாடுகள் எங்கும் உலக வங்கி திணிக்கின்றது. மேற்கு சார்ந்த ஏகாதிபத்தியங்களில் தோன்றி வளரும் நெருக்கடிகளை கருத்தில்கொண்டு, அதன் உற்பத்தி பொருட்களை மூன்றாம் உலக சந்தையில் மலிவாக திணிக்கவும், அந்த நாடுகளின் மூலதனத்தின் நகர்வை மட்டுப்படுத்தவும் இந்த விலையேற்றங்கள் திட்டமிட்டு அமுலாக்கப்படுகின்றது.

இந்த விலை அதிகரிப்புக்கு முன்னமே, உலக வங்கியின் கட்டளைக்கு அமைய இலங்கை நாணயத்தை பண இறக்கம் செய்தனர். அதாவது இலங்கையில் "சுதந்திர" தினத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்னம், இலங்கை நாணயத்தை 20 சதவீதத்தால் பணவிறக்கம் செய்தனர். இந்தப் பணவீக்கம் இறக்குமதி பொருளின் விலையை, 20 சதவீதத்தால் திடீரென அதிகரிக்க வைத்துள்ளது. அதேநேரம் உற்பத்திக்கான செலவில் அதிகரிப்பு இதற்கு இருப்பதில்லை என்பதால், உள்ளுர் சந்தையை தீர்மானிக்கும் சக்தியாக, இது மாறுகின்றது. பணவீக்கத்தின் மற்றொரு விளைவு, சர்வதேச நாணயத்தில் உள்ள கடன் மற்றும் வட்டிக் கொடுப்பனவு பணவீக்கத்துக்கு அமைய 20 சதவீதத்தால் திடீரென அதிகரிக்கின்றது. பணத்தை கடனாக வாங்காமல், அதன் தொகை 20 சதவீதத்தால் அதிகரிக்கின்றது. இதற்கான வட்டி உட்பட அனைத்தையும், மக்களிடம் புடுங்கிக் கொடுக்கும் அளவு 20 சதவீதத்தால் அதிகரிக்கும்;. இப்படி நாட்டை உலக வங்கியின் கட்டளைக்கு ஏற்ப திவலாக்கி விற்கின்ற அரசு, மக்களை ஒடுக்க இராணுவத்தை பலப்படுத்துகின்றது.

இத்துடன் உலக வங்கி விடவில்லை. தனது புதிய கடனுக்கான வட்டி வீதத்தை மூன்று மடங்கால் அதிகரித்துள்ளது. முந்தைய கடன் கொடுப்பனவிற்கு 1.1 சதவீதமாக இருந்த வட்டி வீதத்தை, புதிய கடன் கொடுப்பனவுக்கு 3.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இப்படி பல உண்மைகள் இருக்க, அரசோ இதை மூடிமறைக்க சர்வதேச சந்தையில் எண்ணை விலையேற்றம் பற்றி பேசுகின்றது. உலக வங்கியின் கட்டளைக்கு ஏற்ப 20 சதவீத பண இறக்கம் செய்ததன் மூலம், சர்வதேச சந்தையில் எண்ணைக்கு 20 சதவீதம் அதிக விலை கொடுக்க வேண்டிய மற்றொரு நிலையை உருவாக்கியபடி, சர்வதேச எண்ணை விலையேற்றம் என்ற மகுடியை ஊதி மக்களை ஏய்க்க முனைகின்றனர். சர்வதேச எண்ணை விலை என்ன?, அதற்கான வரி என்ன, என்று எதையும் மக்களுக்கு சொல்வது கிடையாது. அரச படைகளுக்கு வாரிக்கொடுக்கும் அரசு, சலுகைகள் பல கொடுத்து மக்களை ஒடுக்கவே வழிகாட்டுகின்றது.

தான் ஆடம்பரமாக இருப்பதை தனது கொள்கையாகக் கொண்டு, மக்களை சூறையாடுகின்றது. தன்னை ஆடம்பரமாக விளம்பரம் செய்யவும், இராணுவத்தை பலப்படுத்தவும், தன்னை உலகெங்கம் சென்று நியாயப்படுத்தவும் கோடிகோடியாக இந்த அரசுதான் செலவு செய்கின்றது. தேசத்தின் மகுடம் என்ற தனது விளம்பரக் கண்காட்சிக்காக மட்டும் 2100 கோடி ரூபாவை செலவு செய்தது. சொகுசாக மக்கள் மேல் சவாரி செய்யும் அமைச்சர்களுக்கு 1454 கோடி ரூபா செலவில் சுகபோக ஆடம்பர வாகனங்கள் கொள்வனவு செய்தது. ஜனாதிபதியின் பாதுகாப்புத் தொடரணிக்காக 24 கோடி ரூபாவுக்கு வாகனங்கள் கொள்வனவு செய்தது. இப்படி அரசு சொகுசாக கவர்ச்சி காட்டி மக்களை ஏய்க்க செலவு செய்யும் அரசு, மக்களை ஒடுக்க இராணுவத்தைப் பலப்படுத்துகின்றது. இந்த சொகுசுத்தனங்கள் முதல் விலையேற்;றம் வரையான அனைத்துக்கும், மக்கள் தான் உழைத்துக் கொடுக்க வேண்டும். வானத்தில் இருந்து இதற்கு பணம் வருவது கிடையாது.

இப்படி மக்கள்விரோத அரசாக தன்னை முன்னிறுத்திக் கொண்டு, மக்களை ஒடுக்கி உலக மூலதனத்தை பெருக்க உதவுகின்றது. இந்த வகையில் இலங்கை மக்கள் மேல் இந்த விலையேற்றத்தை, உலக வங்கியின் துணையுடன் அரசு திணித்துள்ளது

பி.இரயாகரன்

18.02.2012

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது