Language Selection

பி.இரயாகரன் -2012
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மேற்கு சார்பாக இந்திய மேலாதிக்கத்தை இலங்கையில் நிறுவுவதில் ஏற்பட்ட தோல்விதான், அமெரிக்காவை நேரடியாகக் களத்தில் இறக்கியிருக்கின்றது. இந்தியாவின் இழுபடும் நழுவல் ராஜதந்திரத்துக்குப் பதில், வெளிப்படையான மிரட்டலை இலங்கையில் வைத்தே அமெரிக்கா விட்டிருக்கின்றது.

தென்னாசியாவில் இந்தியாவின் பிராந்திய மேலாதிக்கமே மேற்கின் உலக மேலாதிக்கத்துடன் இணைந்துதான் இயங்குகின்றது. ஒன்றையொன்று சார்ந்தது. இந்த நிலையில் இலங்கை அரசு மேற்குக்கு எதிரான ஏகாதிபத்தியங்களான ருசியா, சீனா முதல் ஈரான் வரை இலங்கையில் முன்னிறுத்திய, அதன் அணுகுமுறை அமெரிக்காவின் வெளிப்படையான எதிர் தன்மை கொண்ட தலையீடாக மாறுகின்றது.

இதற்காக தன்னை ஒடுக்கப்பட்ட மக்களின் நண்பனாகவும், அநியாயத்துக்கு எதிராகக் குரல் கொடுப்பதும் போன்று வேஷம் போட்டுக்கொண்டு அமெரிக்கா களமிறங்கியுள்ளது. அது இலங்கை மண்ணில் நின்று, ஆட்சியாளர்களையே மிரட்டுகின்றது. பேரினவாத தேசியத்தை வைத்து வீரம் பேசி வந்த ஆளும் கூட்டமோ, பெட்டிப் பாம்பாக அடங்கியொடுங்கி சுருண்டு கிடக்கின்றது.

இந்த அமெரிக்காவின் உலக மேலாதிக்க அரசியல் பின்னணியில், அரசுக்கு எதிராக கூத்தடிக்கும் அரசியல் பிழைப்புகளும் கூடிக் கும்மியடித்து அரங்கேறுகின்றது. இலங்கையில் ஒடுக்கப்பட்ட மக்களின் துயரங்களுக்கு, அமெரிக்காவின் இந்த மேலாதிக்க நலன்கள் உதவுவதாக கூறி நடத்தும் "விடிவு" அரசியல், ஒட்டுமொத்த மனித இனத்துக்கே எதிரானது.

இது புலிகளின் கொடுமைக்கு எதிராக பேரினவாத அரசை ஆதரித்த புலியெதிர்ப்புக் கூட்ட அரசியல் போல், அரசின் கொடுமைகளுக்கு எதிராக உலக மேலாதிக்க அமெரிக்காவை ஆதரிக்கும் மனிதவிரோத அரசியலாகவே அரங்கேறுகின்றது.

உலகை மேலாதிக்கம் செய்யும் அமெரிக்காவும், சிறுபான்மை இனங்கள் மீது மேலாதிக்கம் செய்யும் பேரினவாத சிறிலங்கா அரசும், மக்கள் மேல் குறுந்தேசிய மேலாதிக்கத்தைச் செய்யும் தமிழ் தேசியவாதிகளும், ஒரே குட்டையில் ஊறிய மனிதவிரோத மட்டைகள் தான். இங்கு மக்கள் மேல் மேலாதிக்கம் செய்யும் நோக்கத்துடன், மக்கள் பிரச்சனைகளில் தமக்கு அக்கறை இருப்பதாக காட்டி தலையிடுகின்றனர்.

இந்த வகையில் இனவொடுக்குமுறையை முன்னிறுத்தி, தென்னாசியாவின் பிராந்திய நலனை இலங்கையில் இந்தியா நிறுவ முனைந்தது. இது உலக மேலாதிக்கம் செய்யும் அமெரிக்க நலனுடன் ஒன்றுபட்டது. இந்தவகையில் தென்னாசியாவில் இந்தியாவின் ஊடான அமெரிக்காவின் மேலாதிக்க யுத்ததந்திரத்தின் தோல்வியை அடுத்து, அமெரிக்கா நேரடியாக களம் இறங்கி இருக்கின்றது. அது இலங்கையில் வைத்து, தனது நிலையை பிரகடனம் செய்ததன் மூலம், இந்தியாவின் நழுவும் ராஜதந்திரத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

இலங்கை, ஏகாதிபத்தியத்துக்குள்ளான முரண்பாட்டைக் கொண்டு மேற்கு மற்றும் இந்தியாவுக்கு எதிராக நடத்திய அரசியலை முடிவுக்கு கொண்டு வருமாறு, அமெரிக்கா வெளிப்படையாக மிரட்டுகின்றது. ருசியா, சீனாவைச் சார்ந்தும், மேற்குடன் முரண்பட்ட ஈரான் முதல் கொண்ட நாடுகளின் பின்பலத்திலும் மேற்குக்கு எதிரான அரசியல் பின்புலத்தில் தான், அமெரிக்கா உலக மேலாதிக்க நோக்குடன் இலங்கைக்குள் மூக்கை நுழைக்கின்றது.

இதற்காகவே இது இலங்கை அரசின் யுத்தக்குற்றங்கள் பற்றியும், இனப்பிரச்சனைக்கான தீர்வு சார்ந்த விடையங்களையும் முன்னிறுத்தி, தன் மேலாதிக்க எல்லைக்குள் இலங்கையை அடங்கிப் போகக் கோருகின்றது.

அமெரிக்காவே சரணம், இந்தியாவே சரணம் என்று இலங்கை கூறுமாயின், அமெரிக்க மற்றும் மேற்கின் இன்றைய அணுகுமுறையில் மாற்றம் ஏற்படும். இந்தப் பின்னணியில் ஏற்கனவே இந்தியா இலங்கையை ஆக்கிரமித்துத் திணித்த 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதை தீர்வாக முன்வைக்கின்றனர். இதைத்தான் இன்று குறுந்தேசியத்துக்கு தலைமை தாங்கும் கூட்டமைப்பும் கேட்கின்றது. இப்படி இதற்குள் காய்நகர்த்தல்களும், அரசியல் கூத்தாடல்களும் கூடி அரங்கேறுகின்றது. தீர்வு என்பது ஏற்கனவே உள்ள சட்டத்தை, நடைமுறைப்படுத்தக் கோருவதாகத்தான் உள்ளது. இதற்குத்தான் பேச்சுவார்த்தை முதல் சர்வதேச நகர்வுகள் வரையான வெளி வேஷங்கள் அரங்கேற்றப்படுகின்றது.

மறுதளத்தில் இலங்கை இடதுசாரிய அரசியல் சக்திகள், இனபிரச்சனைக்கான தீர்வை முன்வைத்துப் போராடாத அரசியல் வெற்றிடத்தில் தான், படுபிற்போக்கான வலதுசாரிய கூட்டமைப்பு முதல் இந்தியா அமெரிக்கா வரை அவற்றை தன் கையில் எடுக்கின்றது. தன்னை மக்களின் நண்பனாகக் காட்டி வேஷம் போட முடிகின்றது. எப்படி இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டான யுத்தக்குற்றம், மற்றும் தீர்வை முன்வைத்து இலங்கை மீது மேலாதிக்க அரசியலை நடத்துகின்றதோ, அதுபோல் இடதுசாரிய அரசியலும் இனப்பிரச்சனைக்கான தீர்வை முன்வைக்காத மக்களை ஏய்க்கும் அரசியலை நடத்துகின்றனர்.

இப்படி அடிப்படை முரண்பாட்டுக்கான அரசியல் தீர்வை நிராகரித்தபடி, அடிப்படை முரண்பாட்டினால் சமூகம் சந்திக்கும் நெருக்கடிகள் மீதான தீவிரமான செயல்பாடுகள் மூலம் அரசியல் நடத்த முற்படுகின்றனர். இது மக்களை ஏய்த்தபடி, ஆள்பிடிக்கும் அரசியலையே முன் நகர்த்துகின்றனர்.

இந்தியாவும் அமெரிக்காவும் யுத்தக்குற்றம் மற்றும் இனப்பிரச்சனைக்கு தீர்வு என்று கூறி மேலாதிக்க அரசியல் நடத்துவது போல், காணாமல் போனவர்களை முன்னிறுத்தி குறுகிய இடதுசாரிய அரசியலை முன்தள்ளுகின்றனர். இது வெளிப்படையற்ற மூடிமறைத்த மக்களை ஏமாற்றும் அரசியலாகும். இது சாராம்சத்தில் இனப்பிரச்சனைக்கான தீர்வை முன்வைக்காது, மூடிமறைத்த பேரினவாதத்தை தக்கவைத்துக் கொண்ட இடதுசாரியத்தை முன்தள்ளுகின்றனர்.

இப்படி இடதுசாரிகள் முதல்கொண்டு வலதுசாரிய கூட்டணி வரை மக்களை ஏய்க்கின்ற பித்தலாட்ட அரசியலை இன்று நடத்துகின்றனர். இதைத்தான் இந்தியா முதல் அமெரிக்கா வரை தங்கள் மேலாதிக்க நலனுடன் செய்கின்றனர். இதற்கு வெளியில் மக்களைச் சார்ந்து, வெளிப்படையான அரசியல் மட்டும்தான், மக்களை அவர்களின் உண்மையான விடுதலைக்கு வழிநடத்தும். இன்று இதை நோக்கிய கவனமும் அக்கறையும் தான், புரட்சியாளர்களின் குறிப்பான மையமான நடைமுறையாக அமைய வேண்டும். வெளிவேஷங்களில் மயங்கிவிடுவது, அதை நம்பி கிடப்பது, மக்களுக்கு செய்யும் துரோகமாகும்.

பி.இரயாகரன்

16.02.2012

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது