Language Selection

பி.இரயாகரன் -2012
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சிரியாவின் ஜனநாயகத்துக்கான மக்கள் போராட்டத்தை, முரண்பட்ட ஏகாதிபத்தியங்கள் தங்கள் நலனுக்கான உள்நாட்டு யுத்தமாக மாற்றிவிட்டது. அரபு உலக எழுச்சிகள் அனைத்தும், உலகை மறுபடியும் ஏகாதிபத்தியங்கள் தமக்கு இடையில் மறுபங்கீடு செய்து கொள்ளும் வண்ணம் ஏகாதிபத்தியங்களுக்கே பயன்பட்டது. நிதி மூலதனம் மற்றும் உற்பத்தி மூலதனம் மூலம், அரபுலகம் மீது மேற்கு அல்லாத நாடுகள் பெற்றுக் கொண்டு வந்த செல்வாக்கை, ஜனநாயகப் போராட்டங்கள் மூலம் மேற்கு தனக்கு சார்பாக மறுபங்கீடு செய்து கொண்டது. இதுதான் அரபுலக எழுச்சியின் அரசியல் விளைவு. இந்த வகையில் சிரியாவில் நடைபெறுவதை தடுக்கும் வண்ணம், மேற்கு அல்லாத ஏகாதிபத்தியங்களின் முயற்சி வெளிப்படையான ஏகாதிபத்திய மோதலாக மாறியிருக்கின்றது. அது சிரியாவில் உள்நாட்டு யுத்தமாக மாறியிருக்கின்றது.

அரபுலக ஜனநாயகப் போராட்டங்களை மேற்கு ஏகாதிபத்தியங்கள் தனக்குச் சார்பாக பயன்படுத்திய விதமே, மக்கள் எதை "ஜனநாயகம்" என்று கருதினரோ அதுவே ஏகாதிபத்திய "ஜனநாயகமாகவும்" இருந்தது. இதன் அரசியல் சாரம் வர்க்க சர்வாதிகாரத்தைக் கொண்ட அமைப்பில், அதை ஆளும் கூட்டத்தை தேர்ந்து எடுக்கும் உரிமையைத் தான் இவர்கள் "ஜனநாயகம்" என்கின்றனர். வர்க்க சர்வாதிகாரத்தைக் கொண்ட சமூக அமைப்பை இது மாற்றாது. இதை வழிநடத்தும் பிரிவை தேர்ந்தெடு என்கின்றது. இதையே "ஜனநாயகமாக", ஏகாதிபத்தியங்கள் முன்வைக்கின்றது

.

ஆளும் வர்க்கத்தை அல்ல, அதற்கு தலைமை தாங்கும் பிரிவை தேர்தல் மூலம் தெரியும் உரிமை தான் "ஜனநாயகம்" என்ற அரசியல் வரையறைக்குள், அரபுலக மக்கள் எழுச்சி தோற்கடிப்பட்டது. சட்டம், நிர்வாக அமைப்புகள் முதல் இதைக் கையாளும் அதிகாரிகள், இதை பாதுகாக்கும் இராணுவம், நீதிபதிகள் இங்கு மாற்றப்படுவதில்லை. சுரண்டல் அமைப்பு முறையிலான சர்வாதிகார அமைப்பு மாற்றப்படுவதில்லை.

ஆளும் வர்க்க சர்வாதிகாரம் என்பது, அதிகாரவர்க்கமும், சுரண்டும் வர்க்கமும் ஒருங்கே கொண்ட ஆட்சி அமைப்பு முறையாகும். இதை தேர்தல் மூலம் மக்கள் தெரிவு செய்வதில்லை. இதற்கு சட்டரீதியாக பாதுகாத்து, சட்டங்களை இயற்றும் பிரிவை தேர்ந்தெடுப்பதைத்தான் "ஜனநாயகம்" என்றும், இதை தெரிவு செய்;யும் உரிமை மக்களுக்கு உரியது என்கின்றனர்.

சர்வாதிகார ஆளும் வர்க்கம் தலைமைதாங்கும் சர்வாதிகார வர்க்க அமைப்பு வடிவிலான ஆட்சி அமைப்புக்கு, தலைமை தாங்கும் உறுப்பை மக்கள் தெரிவு செய்கின்ற நிகழ்வையும் உரிமையையும் தான் "ஜனநாயகம்" என்று காட்டுகின்ற, கூறுகின்ற அரசியல் பின்னணியில் வர்க்க சர்வாதிகாரம் மக்களை ஒடுக்கியும் சுரண்டியும் ஆளுகின்றது.

அரபுலகில் ஆளும் வர்க்க சர்வாதிகாரத்தை ஆளுகின்ற உறுப்பைத் தெரிவு செய்வதற்கான உரிமையை முன்னிறுத்தி, அரபுலக எழுச்சியை மேற்கு தனக்கு ஏற்ற பொம்மை ஆட்சியாக மீண்டும் மாற்றியது. ஆளும் வர்க்க சர்வாதிகாரத்தை தூக்கி எறியாத, அதைப் பாதுகாக்கின்ற ஆளும் வர்க்க உறுப்பை, மாற்றீடாகக் காட்டி அதை அரபுலகப் புரட்சியாகக் காட்டினர். இப்படி அரபுலக மக்கள் மீண்டும் ஏகாதிபத்தியத்தின் கீழ் அடிமைப்படுத்தப்பட்டனர். இங்கு ஏகாதிபத்திய முரண்பாடுகளும், மறுபங்கீடும் கூர்மையாக நடந்தேறியது.

இந்த அரசியல் பின்னணியில் மக்கள் கையில் அதிகாரம் செல்லாத வண்ணம், ஆளும் வர்க்க சர்வாதிகாரம் தொடரும் வண்ணம், ஆட்சிகளை தூக்கி எறியும் வண்ணம், ஏகாதிபத்திய ஆதரவும் வழிகாட்டலும் அதற்குக் கிடைத்தது. இதன் பின்னணியில், ஏகாதிபத்திய சமநிலை அங்கு குலைந்து, ஏகாதிபத்திய முரண்பாடுகள் கூர்மையாகியுள்ளது. இந்த நிலையில்தான் சிரியாவில் உள்நாட்டு யுத்தம் மூலம், முரண்பட்ட ஏகாதிபத்தியங்கள் தீர்வுகளைக் காண முற்பட்டு இருக்கின்றது.

சிரிய மக்கள் போராட்டங்கள் தனக்காக சொந்த அரசியல் வழியை முன்வைத்து போராடாததால், அவை ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்வனவாக மாறிவிட்டது. இந்த வகையில் தான் முரண்பட்ட ஏகாதிபத்தியங்களின் போராட்டக் களமாக சிரியா மாறிவிட்டது. ஐ.நா தலையீடு மூலம், மேற்கு ஏகாதிபத்தியங்கள் இராணுவத் தலையீட்டை நடத்த முனைந்தது இந்த வகையில் தான். லிபிய விவகாரத்தை அடுத்து, மேற்குக்கு எதிரான ஏகாதிபத்தியங்கள் "வீடோ" அதிகாரத்தை மேற்குக்கு எதிராகப் பயன்படுத்தின. இதன் பின்னணியில் உள்நாட்டு யுத்தம் ஒன்றை, ஏகாதிபத்தியங்கள் சிரியாவில் தீவிரமாக்கியுள்ளது. இப்படி அங்கு நடக்கும் யுத்தம் ஜனநாயகத்துக்கானதல்ல. மாறாக ஏகாதிபத்திய நலன் சார்ந்த கூலிப்படை யுத்தமாக மாறிவிட்டது.

ஐ.நா தீர்மானத்தை மோசடியாகப் பயன்படுத்தி லிபியாவில் மேற்கு நடத்திய யுத்தம் மூலம், லிபிய எண்ணை வயல்களை மேற்கு கொள்ளையிட்டது. இந்த பின்னணியில் தான் "வீட்டோ"வை, சிரிய விவகாரத்தில் ருசியாவும் சீனாவும் பயன்படுத்தியது. மீண்டும் உலகம் வெளிப்படையான ஏகாதிபத்திய கெடுபிடி யுத்தத்துக்குள் நுழைந்து இருக்கின்றது. மேற்கில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியும், அந்த நாடுகளே திவலாகும் நிலையில் உலகை மறுபங்கீடு செய்வதன் மூலம் நெருக்கடிகளுக்கு தீர்வு காணமுனைகின்றனர்.

மேற்கில் அதிகரிக்கும் வேலையில்லாத் திண்டாட்டம், சமூக நலத்திட்ட வெட்டுகள், கொந்தளிப்பான நிலைக்குள் மேற்கை தள்ளிச் செல்லுகின்றது. மேற்கில் மக்களின் கிளர்ச்சிகள் தவிர்க்க முடியாததாகிவிட்டது.

உலகைச் சூறையாடுவதன் மூலம், உலகை மறுபங்கீடு செய்வதன் மூலம், மேற்கு தன் உள்நாட்டு நெருக்கடிக்கு தீர்வு காணமுனைகின்றது. இந்த வகையில் ஏகாதிபத்திய எதிர்ப்பைக் கொண்டிராத அரபுலக மக்கள் எழுச்சிகள் அனைத்தையும், தனக்கு ஏற்ற ஏகாதிபத்திய பொம்மை ஆட்சிகளாக உருவாக்கியது. இது முன்னைய சர்வாதிகாரிகளுக்கு எதிரானதான அரசியல் அடிப்படையில் இருந்தல்ல. கடந்தகாலத்தில் அரபுலக எண்ணை வயல்களை மேற்கு சூறையாடிய பின்னணியில், அரபுலக சர்வாதிகாரிகள் அனைவரும் ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்தபடியே தங்களை தக்கவைத்துக் கொண்டனர்.

இதற்கு அப்பால் இஸ்ரேலுக்கு எதிரான அரபு மக்கள் போராட்டம் சார்ந்த சவடால்கள் மற்றும் யுத்தங்கள், அரபு தேசியம் பேசியபடி நடந்த ஆட்சிக் கவிழ்ப்புகள், தேசியவாதம் மூலமான ஆட்சிகள், இஸ்லாமிய தேசியவாத ஆட்சிகள் அனைத்தும் மக்களை ஏய்த்து, தங்கள் சொந்த சர்வாதிகாரத்தையே பலப்படுத்தவே பயன்படுத்தினர். அதேநேரம் முரண்பட்ட ஏகாதிபத்திய முகாமைச் சார்ந்து தங்களை தக்கவைத்துக் கொண்டனர்.

உண்மையில் ஏகாதிபத்திய எதிர்ப்பை முன்வைத்து, அரபுலக தேசிய அரசுகள் உருவாகவில்லை. அரபு எழுச்சியும் இந்தவகையில் உருவாகவில்லை. சர்வதேச ஏகாதிபத்திய முரண்பாட்டுக்குள் தான், அரபுலக தேசியவாதங்கள் முதல் எழுச்சிகள் வரை வேஷம் கட்டியாடின.

காலத்துக்குக் காலம் கொடுமையான கொடூரமான ஏகாதிபத்திய ஆட்சியாளராகவே, அரபுலக சர்வாதிகாரிகள் முதல் மக்கள் தேர்ந்தெடுத்த ஆட்சிகள் வரை நீடித்தன. இந்தப் பின்னணியில் ஏகாதிபத்தியங்கள் அரபுலக எண்ணை வயல்களையும், மக்களையும் ஓட்டச் சுரண்டினர்.

ஏகாதிபத்தியம் தொடர்ந்து சூறையாடும் அமைப்பை யார் தேர்ந்தெடுப்பது என்பதை "ஜனநாயகமாக" காட்டி, அந்த உரிமையை மக்களுக்கு கொடுப்பதுதான் "ஜனநாயகம்" என்ற எல்லைக்குள், அரபு மக்களை மீண்டும் ஏகாதிபத்தியம் தோற்கடித்திருக்கின்றது. சிரியாவில் அதைக் கூறி, மேற்கு அல்லாத ஏகாதிபத்தியத்துக்கு எதிரான உள்நாட்டு யுத்தத்தை மேற்கு நடத்துகின்றது. இதுதான் இன்று அரபுலகில் நடந்தேறியது, நடந்தேறுகின்றது.

 

பி.இரயாகரன்

10.02.2012

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது