Language Selection

பி.இரயாகரன் -2012
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

புலியெதிர்ப்பு புலியழிப்பைக் கோரியது போல், இனவெதிர்ப்பு இனவழிப்பைக் கோருகின்றது. புலியெதிரிப்பு அரசியல், புலியில்லாத வெற்றிடத்தில் இன்று இனவெதிர்ப்பு அரசியலாக மாறியிருக்கின்றது. இதை மூடிமறைக்க, குறித்த இனத்தின் உள்ளார்ந்த சமூக முரண்பாடுகளை முன்னிலைப்படுத்தி நிற்கின்றது. இதன் மூலம் தன்னை முற்போக்காகவும், மக்கள் சார்பாகவும் காட்டிக் கொள்ள முனைகின்றது. இனத்தின் இருப்பும், இன அடையாளமும் தான், சமூகத்துக்குள்ளான சமூக ஒடுக்குமுறைக்கு எல்லாம் காரணம் என்று கூறி, தாம் போராடத் தடையாக இதுதான் இருப்பதாகக் கூறியும், இனவழிப்பைக் கோருகின்றது. அந்த வகையில் இனவொடுக்குமுறைக்கு உதவுகின்றது.

புலிகள் இருந்தவரை புலிகள்தான் இனத் தீர்வுக்கும், தாம் மக்களுக்காக போராடுவதற்கு தடையும் என்றவர்கள், புலியழிப்பைக் கோரி அதற்கு உதவினர். இதன் பின், அவர்கள் மக்களுக்காக போராடியது கிடையாது. இன்று இனவெதிர்ப்பு மூலம், இனவழிப்பைக் கோருகின்றனர். இனவழிப்புக்கு உதவும் வண்ணம், இனத்தின் உள்ளார்ந்த முரண்பாடுகளை முன்னிறுத்திய அரசியலை மீள முன்தள்ளுகின்றனர்.

இந்த மக்கள் விரோத அரசியல் சாரம், மக்களை சார்ந்தது நிற்பதல்ல. மக்களை சார்ந்து நின்று செயல்படுவதற்கு எதிராக, தங்களைத் தாங்கள் பிரமுகராக தக்கவைத்துக் கொள்வதில் இருந்துதான், இது தொடங்குகின்றது.

இந்த வர்க்க சமூக அமைப்பில் எல்லா இனமும், தன் சொந்த இன அடையாளத்துக்குள் சமூகரீதியான ஒடுக்குமுறைகளைக் கொண்டுதான் இயங்குகின்றது. இது எந்த இனத்துக்கும் விதிவிலக்கல்ல. இனரீதியான ஒடுக்குமுறை இனம் மீது நிலவும் போது, அதுவும் ஒரு ஓடுக்குமுறைதான். எல்லா ஒடுக்குமுறையையும் போல், இது எந்த விதத்திலும் வேறுபட்டதல்ல. இது இந்த வர்க்க சமூக அமைப்பில் தனித்துவம் கொண்டதல்ல. இப்படி பிரித்த புலி அரசியல் முதல் புலியெதிர்ப்பு அரசியல் வரை ஒரே விதமானதும், படுபிற்போக்கானதுமாகும்.

இங்கு ஒரு ஒடுக்குமுறையை முன்னிறுத்தி மற்றைய ஒடுக்குமுறையை மறுப்பது அல்லது மற்றைய ஒடுக்குமுறைகளை முன்னிறுத்தி இன்னொரு ஒடுக்குமுறையை மறுப்பது, சாராம்சத்தில் படுபிற்போக்கானது. குறுகிய எல்லைக்குள் நின்று, ஒடுக்க உதவுவது தான்.

தமிழினவாதிகள் இனவொடுக்குமுறையை முன்னிறுத்தியபடி, தன் சமூகத்தின் உள்ளான மற்றைய ஒடுக்குமுறைகளை பாதுகாக்கின்றனர். இப்படித்தான் மற்றைய முரண்பாடுகளை முன்னிறுத்தி, இனமுரண்பாட்டை மறுக்கின்றவர்கள் அரசியலும். இது ஒரே அடிப்படையைக் கொண்டது. இரண்டும் படுபிற்போக்கானது.

தேசியம் பேசினாலும் சரி, தலித்தியம் பேசினாலும் சரி, ஜனநாயகம் பேசினாலும் சரி, பெண்ணியம் பேசினாலும் சரி, இடதுசாரியம் பேசினாலும் சரி, மொத்த ஒடுக்குமுறையையும் பேசத்தவறினால், அதில் ஒன்று இல்லை என்று மறுத்தால், அதைக் கண்டுகொள்ள தவறினால், விளைவு படுபிற்போக்கானதாகவே இருக்கும். புலிகள் நேரடியான உதாரணம் என்றால், எதிர்மறையில் புலியெதிர்ப்பு இனவெதிர்ப்பு தளத்திலும் இதுதான் நடக்கின்றது.

அதாவது இனவொடுக்குமுறைக்கு எதிரான தேசியம், தன்ளுள்ளான மற்றைய சமூக ஒடுக்குமுறைகளைத் தக்கவைத்தபடி தான் குறுந்தேசியமாக மாறியது. இதனால் அது படுபிற்போக்கான ஒன்றாக மாறித் தன்னை வெளிப்படுத்தியது. இதை ஒத்ததுதான், தேசிய ஒடுக்குமுறையை மறுக்கும் எந்த சமூக கூறுக்கும் கூட பொருந்தும். இதில் எந்த விதிவிலக்கும் கிடையாது.

ஒரு சமூக முரண்பாட்டுக் கூறை முன்னிலைப்படுத்தி, அதன் மூலம் முற்போக்காக காட்டிக்கொள்ளும் அதே தளத்தில், மற்றைய கூறுகளில் படுபிற்போக்கான கூறாகவே தன்னை வெளிப்படுத்தி நிற்பது மூடிமறைபட்ட மக்கள் விரோத அரசியலாகும்;. இதுதான் எங்கும் அரங்கேறுகின்றது.

தேசியம், தலித்தியம், பெண்ணியம்… என்று சமூக ஒடுக்குமுறைகளில் ஒன்றை அல்லது இதில் ஒன்றை விட்டுவிட்டு நடத்துகின்ற அரசியல் படுபிற்போக்கானது. ஒடுக்குமுறைக்கு எதிரான இந்தக் குறுகிய கண்ணோட்டம் முரணுள்ளது மட்டுமின்றி படுபிற்போக்கானதும் கூட.

ஒட்டுமொத்த சமூக ஒடுக்குமுறையை முரணற்ற வகையில் எதிர்த்துப் போராடாத அனைத்தும் படுபிற்போக்கானது. அது மனிதவிரோதத் தன்மை கொண்டது. ஒடுக்குமுறைக்கு மறைமுகமாக உதவுவதாகும்.

இந்த வகையில் புலியெதிர்ப்பு அரசியல் தன்னை முற்போக்காகக் காட்ட, புலித்தேசியம் ஒடுக்கிப் பாதுகாத்த சமூக முரண்பாடுகளை முன்னிலைப்படுத்தினர். அதேநேரம் தேசிய ஒடுக்குமுறையை மறுதலித்தனர். இப்படி குறுந்தேசிய புலி அரசியல் போல், புலியெதிர்ப்பு அரசியலும் குறுகியது. இந்த அடிப்படையில் தான் புலியெதிர்ப்பு அரசியல் என்ற அரசியல் வரையறையை, ஆரம்பம் முதலாக நாங்கள் வரையறுத்தது மட்டுமின்றி அதை அம்பலப்படுத்தியும் வந்தோம்.

இந்தப் புலியெதிர்ப்பு புலியழிப்பு அரசியல் மக்களுக்காகப் போராடுவதற்காக அல்ல என்ற உண்மையின் அடிப்படையில், இதை நாம் கடந்தகாலத்தில் தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி தனிமைப் படுத்தினோம்.

இன்று புலிகள் இல்லாத நிலையில், இனவெதிர்ப்பு அரசியலாக இது வெளிப்படுகின்றது. இதன் அரசியல் வரையறை என்பது, இனவொடுக்குமுறையை மறுப்பதுதான். சாராம்சத்தில் இனத்துக்குள்ளான ஒடுக்குமுறையை முன்னிறுத்தி, இனவொடுக்குமுறையைக் கண்டுகொள்ள மறுப்பதாகும் அல்லது கண்டுகொள்ளாது இருக்கக் கோருவதாகும். இது இனவொடுக்குமுறைக்கு உதவுவதே ஓழிய, மக்களுக்காக போராடுவதல்ல இதன் அரசியல் சாரம். இது தன்னை மூடிமறைக்க, மீண்டும் இனத்துக்குள்ளான முரண்பாடுகளை முன்னிறுத்தியே வெளிவருகின்றது.

இலங்கையில் பிரதான முரண்பாடு இன்னமும் இனமுரண்பாடாகவே நீடிக்கின்ற நிலையில், அதை மையப்படுத்திப் பேசாத அரசியல் இனவொடுக்குமுறைக்கு உதவுவது தான். அதைத்தான் இனவெதிர்ப்பு அரசியல், தன் அரசியல் அடிப்படையாகக் கொண்டு இன்று இயங்குகின்றது. ஒரு நாட்டின் ஓட்டுமொத்த ஒடுக்குமுறைக்கும் எதிராக, அனைத்து மக்களையும் முரணற்ற வகையில் ஒன்றிணைக்காத அரசியல் கூட படுபிற்போக்கானது. அதாவது ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் அனைத்து சமூக ஒடுக்குமுறையையும் முரணற்ற வகையில் எதிர்த்துப் போராடாத, ஓடுக்கும் இன மக்களுடன் முரணற்ற வகையில் ஓன்றிணையாத ஓன்றிணைக்க முனையாத அரசியலும் கூட இங்கு படுபிற்போக்கானது.

இந்த வகையில் புலியெதிர்ப்பு, இனயெதிர்ப்பு அரசியல் மட்டுமின்றி இனத்தை மையப்படுத்திய குறுகிய இனவரசியலும், இனத்தை மையப்படுத்திய "இடது" அரசியலும் கூட படுபிற்போக்கானது. இவை அனைத்தும் மக்கள் விரோதமானது.

 

பி.இரயாகரன்

14.01.2012

 

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது