Language Selection

பி.இரயாகரன் -2012
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இந்திய மீனவர்கள் இந்திய "எல்லை தாண்டுவது தான்", அவர்கள் மேலான வன்முறைக்கு காரணம் என்று இந்திய மத்திய அரசு மதுரை நீதிமன்றத்தில் கூறியுள்ளது. இப்படி இலங்கைக் கடற்படையின் தொடர்ச்சியான குற்றங்களுக்கு, நீதிமன்றத்தில் விளக்கம் கொடுத்து இருக்கின்றது இந்திய மத்திய அரசு. இந்த வகையில் இந்தக் குற்றத்தை செய்வதற்கான தனது பக்கத் தர்க்கத்தை முன்வைத்ததன் மூலம், இதற்கான தனது ஓத்துழைப்பை நியாயப்படுத்தி இருக்கின்றது. இலங்கைக்கடற்படை எல்லை கடந்து இனப்படுகொலைக் குற்றத்தில் ஈடுபடவில்லை என்றும், எல்லை தாண்டிய குற்றத்தில் ஈடுபடவில்லை என்றும், சுயவிளக்கம் ஒன்றை இந்திய அரசு வழங்கி இருக்கின்றது. மறுதளத்தில் எல்லை தாண்டியதால் தான் இந்த நிலையென்று எடுத்துக் கொண்டால்;, அவர்கள் கொல்வதும் தாக்குவதும் சரியென்ற தர்க்கத்தையும், நியாயப்படுத்தலையும் வழங்கி இருக்கின்றது. எல்லை தாண்டினால் இதுதான் தீர்வா? சர்வதேச சட்டங்கள், மனிதவுரிமை கோட்பாடுகள் அனைத்தையும், மத்திய அரசு தன் காலில் போட்டு மிதித்திருக்கின்றது. அனைத்துக்கும் "எல்லை கடத்தல்" மற்றும் "தடைசெய்யபட்ட வலை"யைத்தான் காரணமாக காட்டியிருக்கின்றது.

இதன் பின்னணியில் இந்திய இலங்கை சர்வதேச கடற்பரப்பில் "இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதை தடை செய்ய வேண்டும்" என்று கோரி இருக்கின்றது. இப்படி தன் சொந்த நாட்டு மீனவர்களை தனது பிராந்திய மேலாதிக்க நலன் சார்ந்து நின்று குற்றம் சாட்டி இருக்கின்றது.

இதன் பின்னணியில்

1. "எல்லைகடத்தல்", மற்றும் "தடை செய்யப்பட்ட வலையை" பாவிப்பதற்கு அனுமதித்தது யார்? தொடர்ந்து அனுமதிப்பது யார்? மத்திய - மாநில அரசுகள் தானே. எப்படிக் குற்றம்சாட்ட முடியும்?

2. எல்லை கடந்துதான் மீனவர்கள் மீன்பிடித்து வாழவேண்டிய நிலைக்கு, கடல் வளத்தை அழிக்கும் மீன்பிடி முறைமையை புகுத்தியது யார்? நிச்சயமாக இந்திய மத்திய - மாநில அரசுகள் தான்.

3. மீனவர் நலன் சார்ந்து கடல்வளத்தை பாதுகாத்து மீட்டு எடுக்கும் கொள்கையை தொடர்ந்து மறுப்பது யார்? நிச்சயமாக இந்திய மத்திய மாநில அரசுகள் தான்.

இப்படி இருக்க "எல்லை தாண்டுவதாலும்" "தடைசெய்யப்பட்ட வலையை" பயன்படுத்துவதாலும் தான் இந்திய மீனவர்களைக் கொன்றனர், தாக்கினர் என்பது அப்பட்டமான மற்றொரு பொய்.

இதே கடலில் பல ஆயிரம் இலங்கை தமிழ்மக்களை இதே கடற்படை கொன்று இருக்கிறது. அரசின் பயணிகள் கப்பலான குமிதினிப் படகில் சென்ற 36 பயணிகள் முதல் அகதிகளாக சென்றவர்கள், மீனவர்கள், இயக்கப் போராளிகள் என்று பல ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்று குவித்து இருக்கின்றது. இவை எல்லாம் இனப்படுகொலையாகவே இலங்கை அரசு அரங்கேற்றியது. இதில் இருந்து வேறுபட்டதல்ல இந்திய மீனவர்கள் படுகொலை. ஒரே அடிப்படையையும், ஒரே நோக்கையும் கொண்டது இது. இங்கு மத்திய அரசு இந்த உண்மையைத் திரிக்க, "எல்லை தாண்டுவதாலும்" "தடைசெய்யப்பட்ட வலையை" பற்றியும் பேசுகின்றது.

இங்கு இலங்கை மீனவர்களின் கோரிக்கையை தனக்கு சாதகமாகத் திரித்து, தனக்கு ஏற்ற சுயவிளக்கத்தை வழங்கி இருக்கின்றது. இலங்கை மீனவர்கள் தங்கள் சொந்தக் கடலில் தடைசெய்யப்பட்ட வலை மூலமான றோலர் வகை மீன்பிடியை மட்டும்தான் "எல்லை தாண்டும்" பிரச்சனையாக முன்வைத்து எதிர்க்கின்றனர். மற்றும்படி எல்லை தாண்டி இந்திய மீனவர்கள் தங்கள் கடலில் மீன் பிடிப்பது தொடர்பான, இணக்கமான ஒரு நடைமுறைக்கு தயாராகவே அவர்கள் உள்ளனர். இலங்கை மீனவப் பிரதிநிதிகள் இதை இந்தியாவில் வைத்துக் கூட, இந்திய மீனவர்கள் சங்கத்தின் முன் தெளிவுபடுத்தி வந்துள்ளனர்.

ஆக இந்த வகையான மீன்பிடி இணக்கத்தை இலங்கை அரசும் விரும்பவில்லை. இந்திய மத்திய அரசும் விரும்பவில்லை. தமிழக அரசும் கூட இதை விரும்பவில்லை. இந்த வகையில் தமிழினவாதிகளும் கூட விரும்பவில்லை. தடைசெய்யப்பட்ட வலை மற்றும் வள்ளத்தை அனுமதிக்காது, எல்லைதாண்டி மீன்பிடிக்கும் வகையில் இந்தப் பிரச்சனைக்கு இலகுவாக தீர்வு காணமுடியும். இதை முன்வைத்து தீர்வு காணத் தயாரற்ற போக்குத்தான் அரசுகள் நிலை என்றால், இதன் அடிப்படையில் போராட தயாரற்ற அரசியல்வாதிகளின்; குறுகிய போக்கும்தான் பொதுவில் வெளிப்படுகின்றது. இது இந்திய மீனவர்கள் வாழ்வையும், வாழ்வுரிமையையும் மறுக்கும் அடிப்படையில், இந்திய இலங்கைக் கடல் எல்லையில் மீன்பிடியை "தடைசெய்வதை" மத்திய அரசின் கோரிக்கையாக மாறுகின்றது. இந்த பின்னணியில் தான் "எல்லைதாண்டு" விவகாரமாக இதை திரித்துக் காட்டுவதன் மூலம், இந்த கடற்பரப்பை இந்திய - இலங்கை அரசு சூனியப் பிரதேசமாக்க முனைகின்றது. இதன் மூலம் இக் கடலை பெரு மூலதனத்தின் மீன்பிடி உரிமையாக்க மறைமுகமாக முனைகின்றது.

"எல்லை தாண்டுதல்" மற்றும் "தடைசெய்யபட்ட" வலையை காரணம் காட்டி கடல் மீதான மீனவர்கள் உரிமையை பறித்துவிடக் கோரும் மத்திய - தமிழக அரசின் சதிகளை முறியடிக்கும் வண்ணம் போராட்டத்தின் கோரிக்கைகள் அமைய வேண்டும்.

இந்த வகையில் தடைசெய்யப்பட்ட வலை மற்றும் றோலர்களை முற்றாக தடைசெய்யக் கோருவதன் மூலமும், இலங்கை மீனவர்கள் முன்வைக்கும் இணக்கமான சர்வதேச மீன்பிடிக்கும் உரிமையை அங்கீகரித்து, அதை அமுல்படுத்துமாறும் கோர வேண்டும். தடைசெய்யப்பட்ட வலையை தொடர்ந்து அனுமதிப்பதை எதிர்த்துப் போராட வேண்டும்;. மற்றும் இந்திய மீன் வளத்தை அழிக்கும் மந்திய மாநில அரசுகளின் மீன்பிடிக் கொள்கைக்கு எதிராகப் போராட வேண்டும். இதற்குப் பொறுப்பான அரசு, இதன் பின்னணியிலான விளைவுகளை காரணமாகக் காட்டி இலங்கை அரசின் குற்றத்தை மூடிமறைப்பதை எதிர்த்துப் போராட வேண்டும். இந்த குற்றங்களுக்கு "எல்லை தாண்டுவதோ" "தடை செய்யப்பட்ட வலையோ" காரணமல்ல. இனவழிப்புக் கொள்கை தான் காரணம். இதன் மூலம் இரண்டு நாட்டு மீனவர்களும் ஒன்றிணைந்து வாழ்வதை தடை செய்ய விரும்புகின்றனர். இதன் பின்னணியில் இக்கடலை தங்கள் பெருமூலதனக் கொள்கைக்கு ஏற்ப, சிறு மீன்பிடியை தடை செய்து அதை பெருமூலதனத்;திடம் தாரைவார்க்க முனைகின்றனர்.

இனவாத எல்லைக்குள் நின்று கொண்டு, தடை செய்யப்பட்ட வலையைக் கொண்டு மீன்பிடிப்பவர்களை மீனவர்களாக ஏற்றுக்கொண்டு முன்வைக்கும் அரசியல் கோசங்களையும், அரசியலையும் தான், மத்திய அரசு தனக்கு சாதமாகக்கொண்டு இக்கடல் மீதான மீன்பிடியை தடை செய்யமாறு நீதிமன்றத்தில் கோரியிருக்கின்றது. தடைசெய்யப்படாத வலை கொண்டு மின்பிடிக்கும் மீனவர்கள் உரிமையை கோரியும், இதற்கு இலங்கை மீனவர்களின் இணக்கமான எல்லை தாண்டி மீன்பிடிக்கும் உரிமையை முன்வைத்தும் போராட வேண்டும்.

பி.இரயாகரன்

10.01.2012

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது