Language Selection

பி.இரயாகரன் -2012
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

"தமிழ் சமூகத்திற்கும் அதனுடைய சிவில், அரசியல் பிரதிநிதிகளுக்கும் ஒரு வேண்டுகோள்" என்ற தலைப்பில், புலம்பெயர்ந்தவர்கள் உள்ளடங்கிய ஒரு அறிக்கை வெளியாகியிருக்கின்றது. பிபிசி தமிழ் சேவை கூட அதை முன்னிறுத்தி பேட்டி கண்டது. குறிப்பாக இந்த அறிக்கை 1990 களில் புலிகள் வடக்கில் வாழ்ந்த முஸ்லீம் மக்களிடம் இருந்த அனைத்தையும் புடுங்கிவிட்டு துரத்திய முஸ்லீம் மக்களைப் பற்றிய கருசனையின் பெயரில் வெளியாகி இருக்கின்றது. முதலில் இதன் அரசியல் பின்னணியையும், அரசியல் அடிப்படையையும் என்ன என்பதைப் பார்ப்போம்.

 

அரசைக் கண்டிக்காத புலியெதிர்ப்பு அரசியல் தான், தமிழரைக் கண்டிக்கும் தமிழின எதிர்ப்பு அரசியலாக மாறியிருக்கின்றது. இப்படி வெளியாகிய அறிக்கை தான் இது. புலிகள் இருந்தபோது புலியெதிர்ப்பு அரசியல் அரசை ஆதரித்தன அல்லது அரசு மேலான மென்மையான கண்டன அணுகுமுறையைக் கையாண்டது. இன்று அது தமிழினவெதிர்ப்பு அரசியலாக இடம் மாறியிருக்கின்றது. தமிழ் சமூகத்தின் பிற்போக்கான சமூகக் குணாம்சத்தை முன்னிறுத்தி, இந்த தமிழினவெதிர்ப்பு அரசியல் அரங்கேறுகின்றது. நேர்மையாக தமிழ் சமூகத்தின் பிற்போக்கை எதிர்த்துப் போராடும் எவரும், அரசுக்கு எதிரான கண்டனம் மற்றும் போராட்டத்தின் ஊடாகத்தான் அணுகுவாhர்கள். தனித்துக் குறுக்கி அணுகுவதன் மூலம் இதற்கு தீர்வைக் காணமுடியாது. இதற்குள் தீர்வை முன்னிறுத்துவது, குறுகிய உள்நோக்கம் கொண்ட அரசியலால் வழிநடத்தப்படுவதாகும். "தமிழ் சமூகத்திற்கும் அதனுடைய சிவில், அரசியல் பிரதிநிதிகளுக்கும் ஒரு வேண்டுகோள்" என்பதில் கையெழுத்திட்டவர்கள், அரசுக்கு எதிராக எந்தவகையான போராட்டத்தையும், கண்டனத்தையும் இவர்கள் கொண்டுள்ளனர்!

புலிகள் இருந்தபோது புலியை எதிர்த்தவர்கள், அரசுக்கு எதிராகவும் போராடியிருக்க வேண்டும். இல்லாத அனைத்தும் உள்நோக்கம் கொண்ட புலியெதிர்ப்பு அரசு சார்பு அரசியலாக இருந்தது. இதுபோல் இன்று தமிழ் மக்களின் பிற்போக்குக் கூறுகளை எதிர்ப்பவர்கள், அரசுக்கு எதிராக போராட வேண்டும். இல்லாதவரை அரசுக்கு சார்பான, தமிழ் மக்களுக்கு எதிரான எதிர்ப்பு அரசியலாகும். இதில் கையெழுத்திட்ட பலர் முன்னாள் புலியெதிர்ப்பு பிரமுகர்கள். இன்று தமிழினவெதிர்ப்புப் பிரமுகராக வெளிப்படுகின்றனர்.

இன்று இதையொத்த முன்னாள் இடதுசாரி பிரமுகர்கள், பிற்போக்கான தமிழ் சமூக கூறுகளை எதிர்க்கின்ற அரசு சார்பு பிரிவு ஒன்று இதற்கு சமாந்தரமாக இயங்கி வருகின்றது. அவர்கள் அடியெடுத்துக் கொடுக்க, வலதுமிடதும் கலந்த அறிக்கையாக வெளியாகி இருக்கின்றது.

இங்கு "சமூகத்தின் பன்முகத்தன்மையினை எம்மத்தியில் ஊக்குவிப்பதற்கும், ஜனநாயகம், நீதி, சமத்துவம் என்பவற்றின் நலனை மையமாகக் கொண்ட பல்வேறு சமூகங்களையும் இணைத்துச் செயற்படுகின்ற ஓர் அரசியலினைப் பற்றிக் கொள்ளவும் நாம் எதுவித தயக்கமும் இன்றி உறுதி பூணுவோம்." என்ற அறிக்கையிடும் போது, அரசுக்கு எதிரான ஒட்டுமொத்த சமூகத்தை நோக்கிய ஒரு அறைகூவலாகவே இருக்கவேண்டும். தமிழ் சமூகத்தை நோக்கி மட்டும் கோருவதும், அரசுக்கு எதிராக கோராததும், பேரினவாததுக்கு ஏற்ற சமூகமாக தமிழினத்தை மாறக் கோருவதுதான். இது புலியெதிர்ப்புக்கு பிந்தைய தமிழினவெதிர்ப்பு அரசியலாகும். தமிழினவெதிர்ப்பு என்ற புதிய அரசியல் வரையறைக்குள்ளான, புதிய அரசியல் போக்கு ஓன்று புலியெதிர்ப்பில் இருந்து இடம்மாறி தோன்றி வருவதை இந்த அறிக்கை மூலம் நாம் அரசியல் ரீதியாக இனம் காணமுடியும்.

இன்று முஸ்லீம் மக்களின் துயரங்கள், புறக்கணிப்புகள், தொடரும் இனவொடுக்குமுறைகள் அனைத்தும் எந்த விதிவிலக்குமின்றி தமிழ் சமூகமும், அதற்குள்ளான பிரதேசரீதியாக தமிழ் பிரிவுகளும் கூட அனுபவிக்கின்றன. இதைவிட சாதிப்பிரிவுகளும் ஏன் பெண்களும் கூட இதை வேறு விதத்தில் அனுபவிக்கின்றனர். இதற்கு இந்த சமூக அமைப்பை கட்டிப் பாதுகாக்கும், அரசு தான் தலைமை தாங்குகின்றது. அரசின் மனிதவிரோத செயற்பாடுகளின் பின்னணியில் தான், பிற்போக்கான அனைத்துக் சமூகக் கூறுகளும் இயங்குகின்றன. அரசுக்கு எதிரான போராட்டம் தான், பிற்போக்கான அனைத்துக் சமூகக் கூறுகளுக்கும் எதிரான போராட்டத்தையும் வழிநடத்த முடியும். இல்லாதவரை அவை குறுகிய அரசியல் நோக்கம் கொண்டது. இதைத்தான் இந்த அறிக்கை செய்கின்றது. இது தமிழினவெதிர்ப்பு அரசியலாக பரிணமிக்கின்றது.

இங்கு அறிக்கை இட்டவர்கள் "தமிழ், முஸ்லிம் சமூகங்களின் இடையிலான உறவுகள் துருவப்பட்டுப்போவதற்கு நாம் எவ்வாறு காரணங்களாக இருந்திருக்கிறோம் என்பது பற்றிய ஒரு சுயவிசாரணை முப்பது ஆண்டு காலப் போரின் முடிவின் பின்னரும் கூட எம்மத்தியில் உருவாகவில்லை" என்று கூறி கையெழுத்திட்ட இவர்களில் எத்தனை பேர், இது தொடர்பாக தங்கள் தங்களை சுயவிசாரணையைச் செய்துள்ளனர்? கடந்த காலத்தில் இவர்களின் அரசியல் பாத்திரம் என்ன? மக்களை அணிதிரட்டிப் போராடாத, அதற்கு முயலாத அரசியல் அக்கறை தங்கள் பிரமுகத்தனத்;தைத் தாண்டியதல்ல. மக்களை அணிதிரட்டாத பிரமுக அரசியல், கடந்த காலத்தில் புலியெதிர்ப்பு, நிகழ்காலத்தில் தமிழினவெதிர்ப்பாக வெளிப்படுகின்றது. அரசியல் என்பது மக்களைச் சார்ந்தது என்கின்ற போது, மக்களை அதற்காக அணிதிரட்டுவதை அடிப்படையாகக் கொண்டது. இதைச் செய்யாத அரசியல், தங்கள் பிரமுகத்தனத்தை தக்கவைக்க, மக்களுக்கு எதிரானதாக குறுக்கி வெளிப்படுகின்றது.

இப்படி ஒரு அறிக்கையை தயாரித்தவர்கள், முதலில் இதை பரந்தளவிலான ஒரு விவாதம் மூலம் இதை தயாரிக்க முன்வரவில்லை, இந்த அடிப்படையில் இருந்து முன் வைக்கவுமில்லை. இன்று இந்த விவகாரத்தை முன்வைப்பது, இன்றைய அரசியல் சூழலில் உள் நோக்கம் கொண்டவை. அத்துடன் குறுகிய பார்வை கொண்டது.

அரசு - கூட்டணி பேச்சுவார்த்தையில், கூட்டணிக்கு எதிரான, அரசு மீதான பொது நிர்ப்பந்தத்தைக் குறைக்கும் வண்ணமே இந்த அறிக்கை வெளியாகி இருக்கின்றது. இதன் பின்னான அரசியல் தமிழினவெதிர்ப்பை, புலியெதிர்ப்பு அரசியல் பின்னணி ஊடாக கையில் எடுத்து இருக்கின்றது.

இலங்கையில் மக்கள் மீதான ஒடுக்குமுறை, சிறுபான்மை இனங்கள் மீதான வன்முறை, பெரும்பான்மை மக்கள் மீதான எதிர் வன்முறை யாவற்றையும் பரந்த தளத்தில் நாம் இனம் காணமுடியும். இன்று வரை அதை ஒட்டுமொத்த சுயவிசாரணைக்கு உள்ளாக்கவில்லை. அதை ஓட்டிய சமூகப் பார்வை கொண்ட சமூகமாக, எந்தச் சமூக பிரிவுகளும் தம்மை மீள் பார்வை செய்யவில்லை. இப்படி இருக்க ஓட்டுமொத்த சமூகப் பார்வையை மையப்படுத்திக் கோராத, குறுகிய ஓன்றை மையப்படுத்திய கோரிக்கை குறுகிய அரசியல் உள்நோக்கம் கொண்டவை.

இப்படி அறிக்கையிட்டவர்கள் தமிழினத்தையும் மையப்படுத்தி அரசியல் செய்பவர்கள் அல்ல. குறிப்பாக தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு அரசியல் ரீதியான தீர்வை முன்வைக்காதவர்கள், அதை எதிர்க்கின்ற பிரிவை உள்ளடக்கியவர்களைக் கொண்டு வெளியானதே இந்த அறிக்கை. இது, இதன் அரசியல் பின்னணியை அம்பலமாக்குகின்றது.

இன்றைய அரசியல் சூழலில், திசைதிருப்புகின்ற அரசியல் பின்னணியைக் கொண்டது. இன்று இலங்கையில் பாசிசமும், இனவொடுக்குமுறையும் ஒருமுகமாக ஒரு புள்ளியில் சந்தித்து பயணிக்கின்றது. இது சிங்கள மக்களை ஒடுக்க, தமிழ்மக்களை அடக்கி தன்னை சிங்கள அரசாக முன்னிறுத்துகின்றது. இதற்கு எதிரான அரசியல் அறைகூவல் மூலம் தான், முஸ்லீம் மக்களின் நலன்களை மட்டுமல்ல, இணக்கமாக சமூக போராட்டங்களை கூட முன்னெடுக்க முடியும். ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைந்து வாழவும், போராடவும் முடியும்.

 

பி.இரயாகரன்

01.07.2011

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது