Language Selection

பி.இரயாகரன் -2012
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மார்க்சியம் முன்னேறிய பிரிவைக் கடந்து நடைமுறை இயக்கமாக மாறாத இலங்கைச் சூழலை பயன்படுத்திக் கொண்டு, பலர் மார்க்சியத்தின் பெயரில் பலவிதமாக பிழைக்கின்றனர். தங்கள் அறிவுசார்ந்த மேலாண்மையைக் கொண்டு, இந்த அரசியல் பொதுவில் அரங்கேறுகின்றது. புலிக்கு பிந்தைய திடீர் இடதுசாரிகளின் ஒரு பிரிவினர் மார்க்சிய சொற்றொடர் மூலமான மூடிமறைத்த சந்தர்ப்பவாதத்தைக் கொண்டு, சர்வதேச புரட்சியாளர்களை ஏமாற்றி மோசடி செய்கின்றனர்.

இப்படி மூடிமறைத்த அபாயகரமான எதிர்ப்புரட்சி பற்றி லெனின் கூறும் போது "உழைக்கும் மக்களுக்கு உடனடியாக வெறுப்பூட்டும், அப்பட்டமான சந்தர்ப்பவாதம் மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதத்தைப் போன்று அபாயகரமானதும் ஊறு விளைவிக்கக் கூடியதும் அல்ல. மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதம் தனது சந்தர்ப்பவாத நடைமுறைக்கு உரிய தருணம் வரவில்லை என்றும் இன்ன பிறவாகும் நிரூபிக்க அடுக்கடுக்காக மார்க்சிய சொற்றொடர்களைப் பயன்படுத்துகிறது" என்றார்.

சொந்த மக்கள் முன் அவியாத தங்கள் திடீர் இடதுசாரிய சந்தர்ப்பவாத அரசியலை மூடிமறைத்துக் கொண்டு, சர்வதேச மற்றும், மாற்று மொழி புரட்சியாளர்களை ஏமாற்றுவதற்கு தொடங்கியிருக்கின்றனர். தங்கள் சந்தர்ப்பவாத எதிர்ப்புரட்சி அரசியலையும், தன் சொந்த நடைமுறையையும், புரட்சியின் பெயரில் முன்தள்ளுவது புலிக்கு பிந்தைய திடீர் இடதுசாரிகளின் அரசியல் நடைமுறையாக மாறியுள்ளது. முதலில் அது தன்னைத்தான் மூடிமறைத்துக் கொள்கின்றது. மார்க்சியம் சமூக அரசியல் இயக்கமாக இலங்கையில் உருவாகாத சூழலை பயன்படுத்திக்கொண்டு, அறிவுசார்ந்த மேலாண்மை மூலம் மோசடி செய்கின்றனர்.

இந்த அரசியல் நுகர்வு சந்தையைக் கைப்பற்றும், அதே அரசியல் அடிப்படையில் முன்தள்ளப்படுகின்றது. மூலதனம் நுகர்வு சந்தையைக் கைப்பற்ற மோசடிகளைச் செய்வதும், ஏமாற்றுவதும், பொருள் பற்றிய பிரமையை ஏற்படுத்துவதும், மிதமிஞ்சி விளம்பரம் செய்வதும் என்ற எல்லாவிதமான அற்பத்தனமான மூலதனத்தின் உணர்வுடன்தான் நுகர்வுச் சந்தை கைப்பற்றப்படுகின்றது. இதே அடிப்படையில் தங்கள் பிரமுகத்தனத்தை சர்வதேச புரட்சியாளர்கள் முன் முன்னிறுத்தி மோசடியுடன் விளம்பரம் செய்கின்றனர். மக்களின் விடுதலைக்கு வழிகாட்டும் இடதுசாரிய அரசியலை, தங்கள் பிழைப்புக்கு ஏற்ப விளம்பரப்படுத்தி முன்தள்ளுகின்றனர்

சொந்த மக்கள் முன் தங்கள் அரசியல் நேர்மையை மெய்ப்பிக்க முடியாதவர்கள், நேர்மையான புரட்சிகர அரசியலை முன்னெடுக்க முடியாதவர்கள், மற்றைய நாட்டு புரட்சியாளர்களையும், வேறு மொழி பேசும் புரட்சிகரப் பிரிவினரையும் ஏமாற்றிப் பிழைக்கும் எதிர்ப்புரட்சி அரசியலை முன்தள்ளி வருகின்றனர்.

இலங்கையிலும், புலத்திலும் புரட்சிகர மக்கள் அமைப்புகளை உருவாக்கி தாம் போராடுவதான ஒரு அரசியல் பிரமையை உருவாக்கி, போலியான விம்பத்தின் பின்னணியில் தான் "மார்க்சிய" பிரமுகத்தனங்கள் அரங்கேறுகின்றது.

மார்க்சியத்தையும் அதன் அடிப்படையிலான புரட்சிகர அரசியலையும், தங்கள் மூடிமறைத்த சந்தப்பவாதத்துடன் கூடிய, தங்கள் பிரமுகர் தன அரசியலுக்கு அமைவாக இதை முன் தள்ளுகின்றனர். சர்வதேச புரட்சியாளர்களையும், மாற்று மொழி புரட்சியார்களையும் மோசடி செய்கின்ற, திட்டமிட்ட மூடிமறைத்த அபாயகரமான எதிர்ப்புரட்சி அரசியல் இது.

இது நேர்மையான வெளிப்படையான அரசியல் முன்னெடுப்பையும், சரியான புரட்சிகரமான போக்கையும் மறுதலிக்கின்றது. இரகசியமான மூடிமறைத்த சதிகளில் இறங்குகின்றது. லெனின் கூறுவது போல் சரியான அரசியல் "போதனைகளை சமூகத்திற்கு விரோதமானது என்கிறது. ஆத்திரத்தால் துவேஷிக்கிறது. கருத்து திரிபுவாதம் செய்ய பொய்ப் பிரசாரம் செய்ய முற்படுகிறது. அவதூறு செய்வதற்காக இயக்கங்கள் நடத்துகிறது. ஒடுக்கப்பட்டவர்களுக்கு திருப்தியளிக்கும் பொருட்டு, ஒடுக்கப்பட்டவர்களை ஏமாற்றும் பொருட்டு, புரட்சி வீரர்கள் இறந்த பின் அவர்களை பூஜிக்கத்தக்க விக்கிரகங்களாக்கி, அவர்கள் பெயரிலேயே புனிப்படுத்தப்படும் கருத்து திரிபுவாதகளை முன்னெடுக்கின்றனர். இதன் மூலம் புரட்சிகரமான சித்தாந்தங்களின் உண்மையான கொள்கைகளின் கூர்முனையை மழுங்கடித்து, ஆண்மையை அழித்து கொச்சைப்படுத்துகின்றனர். நிகழ்காலத்தில் மார்க்ஸியத்தை களங்கப்படுத்தி இழிவுபடுத்தும் வேலையில் பூர்ஷீவா வர்க்கமும், தொழிலாளி இயக்கத்திலுள்ள சந்தர்ப்பவாதிகளும் சேர்ந்து முனைந்திருக்கின்றனர். மார்க்ஸிஸ்ட் போதனைகளின் புரட்சிகரமான அம்சத்தையும், புரட்சிகரமான ஜீவனையும் போலிகள் புறக்கணிக்கின்றனர், திரித்துவிடுகின்றனர். பூர்ஷீவா வர்க்கம் ஒப்புக்கொள்ளக் கூடியதாய் இருப்பதை அல்லது ஒப்புக்கொள்ளக் கூடியதாய் தோன்றுவதை அவர்கள் முன்னணிக்கு கொண்டு வந்து போற்றிப் புகழ்கின்றனர். பின்புறமோ அவர்களுக்கு குழிபறிக்கின்றனர்." இப்படி போலிகள் பற்றி கூறுகின்றார் லெனின். இந்தப் போலியான புரட்டுப் பேர்வழிகள், திடீர் இடதுசாரிய வாய்ப்பந்தல் அரசியல்வாதிகளின் குழிபறிப்பு அரசியல் இரகசியமானது சதித்தனமானது.

கடந்த காலத்தில் சீரழிந்த கம்யூனிசக் கட்சிகள், திரிபுவாத்தை முன்னெடுத்த சர்வதேச கம்யூனிச போக்குகள், மார்க்சியத்தின் பெயரில் மூடிமறைத்த சந்தர்ப்பவாதம் மூலம் புரட்சிகர அரசியலைச் சிதைத்தது. மார்க்சியத்தையும், புரட்சிகர நடைமுறை அரசியலையும் பயன்படுத்திக் கொண்டுதான், அனைத்து எதிர்ப்புரட்சியும் மார்க்சியத்தை குழிதோண்டி புதைத்தது. புலிக்கு பிந்தைய திடீர் இடதுசாரிகள், புலி இருந்த காலத்தில் என்ன அரசியலைச் செய்தனர், என்ன பிழைப்பை நடத்தினர் என்பதைத் தோண்டினால், அவர்கள் எப்படிப்பட்ட மோசடிப் பேர்வழிகள் என்பது வெளிப்படையானது.

புலிகள் கால தங்கள் வாழ்வியல் மற்றும் அரசியல் உள்ளடக்கத்தில் சொந்த மக்கள் மத்தியில் எதிர்ப்புரட்சி அரசியலை முன்தள்ளி, அதை புரட்சிகர அரசியலாக காட்டி மோசடி செய்யமுடியாது போனவர்கள், இன்று பிறநாட்டு புரட்சியாளர்களை பிற மொழி புரட்சியாளர்களையும் ஏமாற்றி மோசடி செய்யத் தொடங்கியுள்ளனர்.

இது புலிக்கு பிந்தைய திடீர் இடதுசாரிய பிரமுகர்களின் எதிர்ப்புரட்சி அரசியல் வெளிப்பாடுகளில் மற்றொரு அரசியல் முகமாகும். மூடிமறைத்த இந்த எதிர்ப்புரட்சி சந்தர்ப்பவாத அரசியலை, சர்வதேசரீதியாக அம்பலப்படுத்தி, எமது புரட்சிகர அரசியலை பாதுகாக்க வேண்டிய போராட்டமும் ஒருங்கே நடத்தவேண்டியுள்ளது. இந்த எதிர்ப்புரட்சி அரசியலை முறியடிக்கும் போராட்டமும், இலங்கை புரட்சியாளர்களுக்கு மேலதிகமான வரலாற்றுச் சுமையாக மாறியிருக்கின்றது.

 

பி.இரயாகரன்

01.01.2012

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது