Language Selection

தேவன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அரைவாசி வண்டில் நிறைந்து விட்டாலும் இன்னும் ஒரு சில பொருட்கள் எடுக்க வேண்டியிருக்கிறது. தான் வாங்க வந்ததை.., பிள்ளைகள் சொல்லிவிட்டது.., எல்லாம் எடுத்தாச்சு. ஆனால், மனுசி சொல்லி விட்டதைத் தான் இன்னும் எடுக்கவில்லை.

அதை எந்த மூலைக்குள் கொண்டுபோய் வைச்சிருக்கிறாங்களோ..?

நேரம் பன்னிரண்டு மணி ஆகப்போகிறது. ஒரு மணிக்கு வேலைக்கு வேறை இறங்க வேணும். ஆனா, மனுசி சொன்னதை வாங்காமல் போகமுடியாது. வாங்காது விட்டால், வெள்ளிக்கிழமை அதோ கதியாகிவிடும்.

 

 

 

இந்த நகரத்திலேயே பெரிய ‘சுப்பர் மார்க்கட்” இதுதான். எந்த நேரமும் சனக்கூட்டம் அதிகமாக இருக்கும். அவசரத்திற்கு வாங்கிக் கொண்டு போகமுடியாது. அங்கும் இங்கும் கண்களை ஓடவிட்டபடி, வண்டிலை வேகமாக தள்ளிக் கொண்டு அவன் நடந்தான்.

பன்னிரண்டு மணிக்கு பத்து செக்கன்கள் இருக்கிறது. ஒலிபெருக்கியில் ஒரு பெண்ணின் இனிமையான குரல் ஒலித்தது…!

‘… இப்போது சரியாக 12மணி..!” எல்லோரும் சிலையாக நின்றார்கள்…!

ஆனால் அவனோ எதையும் உள்வாங்கி கொள்ளாதவனாய்.., யாரையும் சட்டை செய்யாமல் தலையை சற்று குனிந்தபடி, மற்றவார்களைப் பார்க்காமல், தான் வாங்க வேண்டிய பொருளைத் தேடி நகர்ந்து கொண்டிருந்தான். சிலையாக நின்றாலும் சிலர் தன்னை வெறித்துப் பார்ப்பதை அவனால் உணர முடிந்தது..! ஆயினும் அவன் தொடர்ந்து தேடிக்கொண்டே இருந்தான்.

‘இதோ.., இடதுபக்கம் சவுக்காரத்துக்குப் பக்கத்துத் தட்டில் இருக்குது…” வண்டிலை கரையிலை விட்டிட்டு, விரைந்து சென்று அதை எடுத்து வந்து வண்டிலுக்குள் போட்டான். பின்னர் அவசர அவசரமாக வண்டிலை இழுத்துக் கொண்டு கவுண்டரை நோக்கி நடந்தான். அந்த கவுண்டரில் இரண்டு பேர் மட்டும் தான் நின்றார்கள். அவர்களும் சிலை போலத் தான் நின்றார்கள். அவன் வண்டிலை அவர்களுக்குப் பின்னால் நிறுத்தி விட்டு, வண்டிலில் கைகளை ஊன்றிச் சரிந்தபடி அமைதியாக நின்றான்.

‘நேரம் பன்னிரண்டு மணி… ஒரு நிமிடம்…!” ஒலிபெருக்கியில் அதே இனிய பெண் குரல்..! ‘நன்றி” என்று மட்டும் சொன்னது.

எல்லோரும் நகரத் தொடங்கினார்கள். ஒரு சிலர் அவனை வித்தியாசமாகப் பார்த்தார்கள். அவன் எதையும் பொருட்படுத்தாதவனாக வெளியில் வந்து.., காரை நோக்கி நடந்தான். அவனுக்கு முன்னால் நின்ற வயது போன தம்பதிகளில் ஒரு கிழவி, தன் கணவனுக்கு இவனைக் காட்டி ஏதேதோ சொல்லிக் கொள்ள, கிழவன் அவனை நிமிர்ந்து பார்த்தார். அவன் மெல்லியதாக புன்னகைத்து விட்டு காரிலே ஏறிக் கொண்டான்.

‘பாவம் இவர்கள்..! இந்த அதிகார வர்க்கத்தின் கருத்துக்களாலேயே வளர்க்கப்பட்டவர்கள். ‘ஒஸ்லோவில் நூறுபேர் கொலை செய்யப்பட்ட கவலை இவர்களோடு..!” ‘எங்களுக்கோ, சாவு பழக்கப்பட்டுவிட்டது. 30 வருடங்களாக மௌனமாக நின்று நின்று, இந்த ஒரு நிமிடம் என்பது எங்களுக்கு பழக்கமாகி விட்டது.” ஆனால் இவர்கள் எப்போதாவது ஒருநாள் தான் இதை சந்திக்கிறார்கள்.

‘எதற்காக இந்த மௌன அஞ்சலி..! இந்த மௌனம் இழப்புக்களை திருப்பித்தருமா..!! இது இன்னொரு இழப்பு ஏற்படாமல் தான் தடுத்துவிடுமா, என்ன..!?”

‘நாங்களும் பல தடவை மௌனமாகி நின்று விட்டோம். ஆனால், மாவீரரின் எண்ணிக்கை கூடிக்கொண்டு தான் போனதேயொழிய, வேறு ஒன்றும் நடக்கவில்லை. எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாத, இந்த மௌன அஞ்சலி எதற்காக..?”

‘எல்லாமே ஒரு நாடகம் தான்..,”

மக்களை சுரண்டிப் பிழைப்பவர்கள் மக்களை ஏமாற்றவும், தங்களை மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களாக காட்டிக் கொள்ளவும், இந்த ஒரு நிமிடத்தினை பயன்படுத்திக் கொள்கின்றார்கள்.

இந்த மேலைத்தேய அதிகாரவர்க்கமும் இந்த ஒரு நிமிடத்திற்குள் தங்கள் போலி ஜனநாயகத்தை மறைத்துக் கொள்கிறார்கள். தங்கள் சுரண்டலுக்கும் சுய இலாபத்திற்கும் அப்பாவி இளம் இராணுவ வீரர்களை ஆசை காட்டி, தாங்களே அவர்களை போருக்கு அனுப்பி வைத்து.., ஆப்கான் மண்ணிலும், ஈராக் மண்ணிலும் அவர்களை மரணிக்க வைத்து.., அவர்களின் மனைவி பிள்ளைகளை அனாதையாக்கும் இந்த ஜனநாயகவாதிகள், இந்த ஒரு நிமிட மௌன அஞ்சலிக்குள், தங்களின் கொலைகளை மக்களுக்கு மறைத்து விடுகின்றார்கள்.

‘மக்களை ஏமாற்ற இதுவும் ஓர் சிறந்த வழி” இதை எல்லாம் இந்த அப்பாவி மனிதர்களுக்கு எப்படி புரியவைக்க முடியும்..? சொன்னாலும் இவர்கள் யாரும் இதை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை..!

‘இதுபோல இன்னும் எத்தனை.., ஒரு நிமிடங்கள் வரப்போகின்றதோ..?”

நினைவு வன்னியை நோக்கிச் செல்ல, மனசு கனக்கத் தொடங்கியது. காரை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு, பொருட்களை இறக்கத் தொடங்கினான்.

‘மனசை ஏதோ ஒரு பாரம்.., தொடர்ந்து அழுத்திக் கொண்டே இருந்தது…!!!”

தேவன்

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது