Language Selection

செங்கொடியின் சிறகுகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தொடரும்…சீனா மீது ஜெயமோகன் வைத்திருக்கும் விமர்சனம் எதையும் மறுப்பதற்கில்லை. அது சமூக ஏகாதிபத்திய வல்லாதிக்க நாடுதான். ஆனால் இந்திய அரசின் சார்பில் அந்த விமர்சனந்த்தை வைக்க முடியுமா? அளவு வித்தியாசத்தைத்தவிர இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இதில் வேறுபாடு ஒன்றுமில்லை. சீனாவை விலக்கிவிட்டு இந்தப் பிரச்சனைகளை விவாதிப்பது அயோக்கியத்தனம் என்றால், இந்திய ஆளும்வர்க்கத்தின் சார்பில் இந்த விமர்சனங்களை வைப்பதும் அயோக்கியத்தனமானது தான். சாமான்ய புத்தியுடன் சிந்திப்பவர்களுக்கு கூட இந்திய சீன அரசியலை பின்புலமாக வைத்துத்தான் இதை யோசிக்க முடியும் என்று கூறிக்கொண்டே இந்தக் கட்டுரையின் இந்திய அரசியல் குறித்த விமர்சனம் எதையும் முன்வைக்காத அவரின் ஆளுமைக்கு கிடைத்த ஊதியமென்ன?

 

மாவோயிஸ்டுகள் தங்களின் போராட்டத்திற்காகவும் ஆயுதத்திற்காகவும் மக்கள் தரும் நிதியை மட்டுமே சார்ந்திருக்கவில்லை. ஒப்பந்ததாரர்கள், ஜமீந்தார்கள் என உள்ளூர் முதலாளிகளையும் சார்ந்திருக்கிறார்கள். அவர்களின் ஆயுத பலம் காவல் நிலையங்களை சூறையாடுவதையும் சார்ந்திருக்கிறது. இந்தக் தொடர்கட்டுரைகளுக்காக ஆங்காங்கே ஜெயமோகன் பயன்படுத்தியிருக்கும் படங்களில் கூட பயிற்சி செய்வதற்கு மாவோயிஸ்டுகள் காவல்நிலைய துப்பாக்கிகளை பயன்படுத்துவது தெளிவாகவே தெரிகிறது. அவர்களின் இராணுவவாதப் பாதையும், ஆயுதங்களுக்காக உள்ளூர் முதலாளிகளைச் சார்ந்திருப்பதும் சரியா தவறா என்பது வேறு. அடிப்படையின்றி சீனாவின் வளர்ப்பு மிருகங்கள் என்பது வேறு. முன்னது சித்தாந்தப் பிரச்சனை பின்னது ஆளும்வர்க்க அவதூறு. அவர்கள் போராடுவது மக்களுக்காக, அவர்களை வேட்டையாடும் அரசை எதிர்த்து. அவர்களின் பாதையில் தவறிருக்கிறது, அது வேறு விசயம். ஆனால் அவர்களின் அரசியலில் தவறு ஒன்றுமில்லை.

 


அவர் ஏன் அரசின் மீதான விமர்சனங்களை தவிர்க்கிறார் என்பதற்கான காரணம் ஆளும்வர்க்க அடிப்படையில் நின்று சீனா குறித்து பேசுவதில் வெளிப்படுகிறது. சீனா ஒரு கம்யூனிச நாடல்ல, அது ஒரு சமூக ஏகாதிபத்திய நாடு. பிராந்திய வல்லரசு, பிராந்திய அளவிலும், உலக அளவிலும் தன்னுடைய மேலாதிக்கத்தை பேணும் ஒரு ஆதிக்க நாடு. அதேநேரம் அளவிலும் பலத்திலும் குறைந்திருந்தாலும் இந்தியாவும் அப்படியான ஒரு நாடு தான். தன்னுடைய ஆதிக்க நலன்களுக்காக இந்தியாவுக்குள் சீனா உள்ளடி வேலைகளைச் செய்யக்கூடும். ஆனால் மாவோயிஸ்டுகள் அப்படியானவர்களா? இது எந்த அடிப்படையும் இல்லாமல் முஸ்லீம்கள் தீவிரவாதிகள் என்று பரப்பப்பட்டிருக்கும் கருத்தியலைப் போன்றது. அரசுக்கு எதிராகப் போராடுபவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் அன்னியக் கைக்கூலிகள் எனும் ஆளும் வர்க்க கருத்தைத்தான் ஜெயமோகன் பிரதிபலிக்கிறார். இதற்கு ஆதரவாக ஒரு கேள்வியையும் எழுப்பியிருக்கிறார்.

மாவோயிஸ்டுகளின் மீதான விமர்சனத்தைத் தொடர்ந்து இந்தியாவெங்கும் சுற்றி மக்களைக் கண்ட, எழுத்தாள மனோபாவத்தின் ஆளுமை அடுத்து வந்தடைய வேண்டிய மையப்புள்ளி அரசின் மீதான விமர்சனம் தான். ஆனால் அதை லாவகமாக தவிர்த்துவிட்டு அந்த விமர்சனத்தை மாவோயிஸ்டுகளை ஆதரிக்கும் அறிவுத்துறையினரின் தனிச்செயல்பாடுகளின் மீது வைத்து அவர்கள் உண்ணும் உணவில் பாதியாவது அவர்களுக்கு கிடைக்க வேண்டாமா என்று தர்மகத்தா பாணி இரக்க உணர்ச்சியில் கொண்டுவந்து சேர்க்கிறார்.


அந்தப் பகுதி மக்கள் இன்னும் அரசியல்மயப் படுத்தப்பட்டிருக்க வேண்டும். அரசியல் ரீதியான விழிப்புணர்வுடன் மக்களை ஒன்று திரட்டி சமரசமற்ற போராட்டங்களை கட்டியமைத்து அரசுக்கு நெருக்குதல் தொடுத்திருக்க வேண்டும். இதில் மாவோயிஸ்டுகள் தவறியிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் அரசியலில் தவறொன்றுமில்லை. மவோயிஸ்டுகளின் இந்த தவறை முதன்மையானதாக எடுத்துக் கொண்டு அதையே கம்யூனிசத்திற்கு எதிராய் முன்வைத்த ஜெயமோகன்; நடப்பு முதலாளித்துவ ஊழல்களுக்கு ஆட்பட்டு. பசியிலிருந்து விடுதலை பெற்ற ஏனைய பகுதி மக்களைப் போலல்லாது நிலப்பிரபுத்துவத்திலேயே ஊறிக்கிடக்க வைக்கப்பட்டதற்கு மாவோயிஸ்டுகளைக் குற்றம் சாட்டும் ஜெயமோகன்; மாவோயிஸ்டுகள் வந்து வன்முறைப் பாதையைக் கையிலெடுத்தது சரியல்ல என்று கூறும் ஜெயமோகன், மாவோயிஸ்டுகள் அந்தப் பகுதியைக் கையிலெடுக்கும் வரை அந்த மக்களை கண்டுகொள்ளாமல் ஒதுக்கித்தள்ளி வைத்திருந்த அரசின் மீது செய்த விமர்சனம் என்ன?


இந்த இடத்தில் ஒன்றை தெளிவுபடுத்துவதும் அவசியமாகிறது. மாவோயிஸ்டுகளின் இராணுவாத கண்ணோட்டத்தை அப்படியே ஏற்றுக் கொள்வது சரியான நிலைபாடல்ல. இதில் ஜெயமோகன் விமர்சனத்திற்கும் எங்களுடைய விமர்சனத்திற்கும் (முதல் கட்டுரையில் சுட்டி கொடுக்கப்பட்டுள்ளது) இடையே ஒன்றுமை இருப்பது போல் தோன்றினாலும் இரண்டின் தளங்களும் வேறானவை. ஒரு கம்யூனிஸ்ட் குறிப்பிட்ட ஒரு மதத்தை விமர்சிப்பதற்கும், அந்த விமர்சனந்த்தை வேறொரு மதத்தை பின்பற்றும் ஒரு மதவாதி செய்வதற்கும் இடையிலான வேறுபாடு இதில் தொழிற்படுகிறது என்பது முக்கியமானது.


தமிழகத்தின் தென்பகுதியின் தேரிக்காடுகளில் அமைக்கபடவிருந்த டைட்டானியம் ஆலை மக்களின் அடையாளப் போராட்டங்களால் கைவிடப்பட்டது என்பது அப்பட்டமான பொய். அன்றைய கருணாநிதி அரசாங்கத்திற்கும் டாடாவிற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருந்தாலும், என்ன காரணத்தாலோ, அவர்களுக்கிடையேயான உள் ஒப்பந்தத்தில் உடன்பாடு காணப்படாததாலோ நிலத்தை கையகப்படுத்தித் தருவதிலிருந்து அரசு விலகி விட்டது. தேவைப்படும் பத்தாயிரம் ஏக்கர் நிலத்தை அரசின் உதவியில்லாமல் கையகப்படுத்த முடியாத நிலை. விற்க முன்வந்த சிலரும் ஏக்கருக்கு ஐந்து லட்சம் கேட்க டாடாவின் தமிழக நிர்வாகி பி முத்துராமனோ ஏக்கருக்கு ஐம்பதினாயிரம் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பதாக அறிவித்தார். மட்டுமல்லாது திட்டத்திற்கான மொத்த செலவினம், மற்றும் ஆலை செயல்படும் போது வெளியேற்றும் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பிற்கு ஏற்படும் எதிர்ப்பு ஆகியவைகளை உத்தேசித்து திட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அத்தோடு மறுபடியும் திமுக ஆட்சியின் கடைசியில் டாடா டைடானியம் தொழிற்சாலைக்கான முயற்சிகளை தொடங்கியது. உகந்த ஒரு சூழலில் அந்த ஆலை மீண்டும் ஏற்படுத்தப்படுவதற்கே வாய்ப்புள்ளது. இதை மக்கள் போராட்டங்களால் விரட்டி விடப்பட்டதைப் போல் காட்டுவதற்கு தேவையான துணிவு தம்மிடம் இருப்பதாக ஜெயமோகன் கருதுகிறார். அதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் துணிவு வாசகர்களுக்கு இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்.


ஒருபகுதி முதலாளிகளுக்கு தேவைப்படாதபோது அங்கு அரசு எந்த வசதிகளையும் ஏற்படுத்தாது மக்களை ஏழ்மையிலும் நிலப்பிரபுத்துவத்திலும் உழலவிடும். அதே பகுதிகளில் முதலாளிகள் தங்கள் லாபத்தைக் கண்டு கொண்டாலோ, அங்குள்ள மக்கள் அதுவரை தங்கள் வாழ்வாதாரங்களுக்கு எதை ஏற்படுத்திக் கொண்டிருந்தாலும் அனைத்தையும் துறந்துவிட்டு அரசு கை காட்டும் இடத்திற்கு இடம்பெயர்ந்துவிட வேண்டும். நலத்திட்டங்கள் எனும் பெயரில் அவர்கள் அதுவரை செய்து கொண்டிருந்த மரபு சார்ந்த இயற்கை சார்ந்த தொழிலகளையும், விவசாயம் இன்னபிறவற்றையும் விட்டுவிட்டு அரசிடம் கையேந்த வேண்டும். அப்படிச் செய்தால் ஊழல் மலிந்திருந்தாலும் முதலாளித்துவம் அவர்களின் பசியைப் போக்கிவிட்டது என்று குதூகலிக்கலாம், எழுதித்தள்ளலாம். ஆனால் அந்தப் பகுதிகளிலேயே மக்களின் விருப்பங்களை கணக்கில் கொண்டு அவர்களின் மரபுமுறைகளை மேம்படுத்த அரசு செயல்பட்டால் ஊழல் மிகுந்த முதலாளித்துவம் பசியாற்றியதைவிட அவர்கள் சிறப்பாக இருப்பார்களே எனும் சிந்தனை மட்டும் வந்து விடக் கூடாது. வந்துவிட்டால் அது எழுத்தாள ஆளுமைக்கு பங்கமாகிவிடும்,


இந்திய சூழலில் நடப்பிலிருக்கும் ஜனநாயகமான வழிமுறைப் போராட்டங்களின் மூலம் ஒரு பெருநிறுவனத்திற்கு எதிராக மக்கள் வெற்றியைப் பெற்றுவிட முடியும் என்பது கற்பிதமாகவே இருக்க முடியும். பீகாரில் கடந்த சில ஆண்டுகளாக போஸ்கோ நிறுவனத்திற்கு எதிராக மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். கிராமங்களில் நுழைவதற்கே கூட தடைவிதிக்குமளவிற்கு அவர்களின் போராட்டம் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனாலும் மக்கள் எதிர்க்கிறார்கள் என்று போஸ்கோ நிறுவனம் தன்னுடைய திட்டத்தை கைவிட்டுவிடவில்லை. ஆனால் நந்தி கிராமில் டாடா வெருண்டோடியது. நடப்பு ஜனநாயக வழிமுறை போராட்டங்கள் அரசுக்கெதிராகவும், பெருநிறுவனங்களுக்கு எதிராகவும் குறிப்பிடத்தகுந்த எந்த வெற்றியையும் பெற்றுவிடவில்லை என்பதற்கு ஏராள எடுத்துக்காட்டுகளைக் கூறமுடியும். ஐரோம் ஷர்மிளாவின் போராட்டத்திற்கு அரசு என்ன மதிப்பளித்தது? நர்மதா அணைக்கட்டு இழப்பீடுகளுக்காக இருந்த உண்ணாவிரதங்கள் என்ன பலனை சாதித்தன? அரசோ, எந்த ஒரு நிறுவனனமுமோ தாங்கள் எதிர்கொள்ளும் எதிர்ப்புகளை எப்படி சரிசெய்வது எனும் கோணத்தில் தான் சிந்திக்கின்றனவே அன்றி அவர்களின் எதிர்ப்புக்கு மதிப்பளிப்பதில்லை, கவனத்தில் கொள்வதில்லை. சத்திஸ்கர் மக்களின் போராட்டங்கள் தீவிரவாதமாக சித்தரிக்கப்பட்டன. அதனால் சல்வாஜுடும் எனும் கூலிப்படை அமைப்பை அரசே ஏற்படுத்தியது. அவர்கள் கிராமம் கிராமமாக கொழுத்திய போது மக்கள் உண்ணாவிரதம் இருக்கவேண்டுமா?


ஜெயமோகன் தன்னுடைய கட்டுரையின் கடைசிப் பகுதியில் சில கேள்விகளை எழுப்புகிறார். முதலில் பொருளியலில் பின் தங்கியிருக்கும் அந்தப் பகுதி மக்களுக்கு ஆயுதப் போராட்டத்தைத் தவிர வேறு வழியில்லையா? எனக் கேள்வி எழுப்பி தமிழகத்தின் தென்பகுதியில் தேரிக்காட்டில் டாடா டைட்டானிய ஆலை அமைக்க முற்பட்டதை மக்கள் ஜனநாயக போராட்ட வழிகளில் விரட்டிக் காட்டவில்லையா என எடுத்துக்காட்டும் வழங்கியிருக்கிறார்.

மாவோயிச வன்முறையும் ஜெயமோகன் வன்முறையும் - 3

மாவோயிச வன்முறையும் ஜெயமோகன் வன்முறையும் 2

மாவோயிச வன்முறையும், ஜெயமோகன் வன்முறையும் 1

http://senkodi.wordpress.com/2011/08/04/mavoist-jeyamokan-2/

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது