Language Selection

அகிலன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

“கைலாசபதி சாதி பார்த்தவரல்ல. ஆனால் நாவலர் பற்றிய ஆய்வின் பெரும்பகுதியை நாவலரின் சாதனை பற்றியதோடு சென்றும், பாதகமான விமர்சனங்களில் மென்மைப் போக்கோடும் செல்கின்றார். இப்படியான விமர்சனங்களை குறைத்து மதிப்பிடமுடியுமா?.  ஒவ்வோரினதும் எழுத்தின் பின்னால் அவர்களின் சமூக முத்திரை பதிந்திருக்கும்தானே?”

இது முன்னைய கட்டுரைக்கானதோர் பின்னோட்டம். அத்துடன் தாயகன் ரவி, தமிழகத்தின் அலெக்ஸ் போன்ற எழுத்தாளர் பலருக்கும் இந்த அபிப்பிராயங்கள் உண்டு. “இதில் என் நோக்கம் கைலாசதி வழிபாடு அல்ல. அவதூற்று விமர்சனங்கள்” பற்றியதில் இந் நோக்கோடு நான் அதை குறிப்பிடவில்லை. இதை  நீங்கள் சுட்டிக்காட்டியதிற்கு நன்றி.

கைலாசபதி நாவலர் பற்றிய தன் பதிவுகளை  “ஈழத்து இலக்கிய முன்னோடிகள்” எனும் நூலிலும் பதிவு செய்கின்றார். இந் நூல் அவரது மறைவுக்கு மூன்று தினங்களுக்கு முன்னர் அவரே முழுமையாகத் தயாரித்து அனுப்பிய நூல். இது நூல் வடிவில் வெளிவருவதற்கேற்ற வகையில் அவர் தயாரித்த இறுதி நூலும் இதுவே என்கின்றார்,  இந்நூலின் பதிப்புரையாளர்  மே. து. ராசு குமார்.  இருந்தும் இந்நூல் அவர் இயற்கை எய்திய நான்கான்டுகளின் பின்பே (1986-ல் மக்கள் பதிப்பக வெளியீடாக) முதற் பதிப்பாக வெளிவருகின்றது. இது பற்றியும் பலர் பற் பல விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

கைலாசபதி நாவலரை மட்டுமல்ல, அவருடைய மாணவரான சபாபதிப்பிள்ளை, குமாரசுவாமி புலவர் உள்ளிட்ட ஏனைய புலவர்கள், சி.வை.தாமோதரம்பிள்ளை,  பண்டிதமணி கணபதிப்பிள்ளை, ஈறாக சோமசுந்தரப்புலவர் வரை அவர்களின் படைப்புக்கள் பற்றி குறிப்பிடுகின்றார். இவர்களெல்லோரும் உயர் இந்து மேட்டுக்குடி வேளாளத்தின் பிரதிநிதிகளே!.  இவர்களில் ஓர்சாரார் பண்டிதத்தின் பாற்பட்ட (சாதாரண மக்கள் விளங்கிக் கொள்ளாத படைப்புக்களைப் படைத்தவர்களும்,   சாதித் திமிர் கொண்டவர்களும்) படைபப்புக்களைப் படைத்தவர்களே. ஆகவே கைலாசபதி இதற்குள்ளான் ஆய்வுடன் நின்று உளன்றடிக்கும் போக்கும், அதற்குள் சாதாரண மக்கள் பற்றி மட்டமான பார்வையுள்ளதென்பதையும்  நிராகரிக்க முடியாது. அதே நேரம் இந்நூலுக்கான எழுத்தும் ஆய்வும் இப்படித் தான் இருக்கும் என்ற வாதமும் இருந்தது. இங்கு தான் ஓவ்வொருவரின் எழுத்திற்குள் உள்ளது எதுவென்ற கேள்வி எழுகின்றது?


உதாரணமாக டானியலின் எழுத்துக்களைப் பார்ப்போம். பஞ்சமர் நாவலை எடுத்துக்கொண்டால், முதலில் அதை நாவல் என்பதை விட, ஓடுக்கப்பட்ட மக்களின் ஆவணமாக கொள்ளலாம். இதை டானியலும் ஒப்புக் கொண்டதுண்டு. அதில் விஞ்சி நிற்பது ஒடுக்கப்பட்ட மக்களின் மொழி- அரசியல்-பொருளாதார-கலை-இலக்கிய பண்பாட்டுப் விழுமியங்களே. உயர் இந்து மேட்டுக்குடி வேளாளம் சொல்வது போல், அது இழிசனர் இலக்கியம் தான். இதில் எந்த கௌரவப் பிரச்சினையும் இல்லை. ஆனால் உயர் இந்து வேளாளம் கொதித்தெழும் சமாச்சாரமும் இந்நாவலில் உண்டு.

டானியல் இந்நாவலில் மாத்திரமல்ல, ஏனைய நாவல்களிலும் கற்சிதமாக ஒன்றைச் சொல்வார். மிக வலிந்து உயர்சாதிப் பெண்களுக்கும், ஓடுக்கப்பட்ட ஆண்களுக்கும் இடையில் தொடர்புகள்-உறவுகளை ஏற்படுத்தி விடுவார்!.  இது கற்பம் முதல் கருக் கலைப்புவரை செல்லும். இது குறுந்சாதியத்தின் பாற்பட்டதல்லவா எனக் கேட்டால், இது உண்மை தானே, இல்லாதததையா டானியல் எழுதிவிட்டாரென விவாதிக்கும், தலித் கனவான்களும உளர்.

டானியலின் பஞ்சமர் நாவல் முதன் முதலாக (ஏப்ரல் கிளர்ச்சிக்கு பிற்பாடு) யாழ்பாபாணத்தில், கட்சியால் விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டது. நல்லூர் அரசடி வீதியிலுள்ள ஓர் கலைக்கல்லூரியில் ஆசிரியர் தங்கவடிவேல் அவர்களின் தலைமையில் இவ்விமர்சனக் கூட்டம் நடைபெற்றது. இதில் இதன் சாதக-பாதக அம்சங்கள் விரிவாக விமர்சனத்திற்குட்பட்டது. பஞ்சமர் நாவல் சம்பந்தமாக இக்கூட்டத்தில் கட்சியால் வைக்கப்பட்ட பெரும் விமர்சனம் டானியல் குறுந்சாதிய நோக்கில்  வலிந்து குறிப்பிடும் உயர்சாதிப் பெண்களுக்கும், ஓடுக்கப்பட்ட ஆண்களுக்கும் இடையில் தொடர்புகள்-உறவுகளை ஏற்படுத்தி விடுதல் பற்றியதே. கடைசியாக ஏற்புரை வழங்கிய டானியல், கட்சித் தோழர்கள் சொன்னவாக்கில் என்னால் இலக்கியம் படைக்க முடியாதெனக் கூறினார். இதன் பிற்பாடு டானியலின் நாவல்களில் இக்குறைபாடு தொடர் குறைபாடாய் இருந்தே வந்தது. இவரின் நாவல்களின் தலைப்புகளிற்கும், உள்ளடக்கத்திற்கும் உடன்பாடற்ற போக்குகளே பேரதிகம். இக்கூட்டத்தின் பின் டானியல் கட்சிக் காரியாலயத்திற்கு செல்வதென்பதே அரிது. ஏன் இல்லையென்று கூடச் சொல்லலாம். கட்சிக்கு செய்து வந்த உதவிகளை இடை நிறுத்தியதும் உண்டு. அத்தோடு இதன் பின்னான தன் நாவலுக்கான விமர்சனக் கூட்டங்களுக்கு கட்சியினரை அழைப்பதேயில்லை. தன்னோடு உடன்பட்டவர்களோடுதான் அவரின் விமர்சன நிகழ்வுகள் நடக்கும்.

இதுபோன்றதொரு நிகழ்வு மகாகவிக்கும் ஏற்பட்டது. ஓர் தடவை இலங்கை ஓலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் கைலாசபதி இலக்கியச் சர்ச்சசைகள் பற்றி உரையாற்றினார். இதில் மகாகவியின் கவிதை-தமிழ்த் தேசிய அரசியல் பற்றியும் விமர்சித்துள்ளார். இவ்விமர்சனத்தின் பாதிப்பில் இருந்து கிட்டத்தட்ட ஆறுமாத காலம் வரை விடுபடவேயில்லை. கலை-இலக்கிய நண்பர்களை சந்திப்பதுமில்லை.

எனவே இது ஏதோ டானியலுக்கு மட்டுமுரிய தனிக் குறைபாடல்ல.  அவருக்குரிய இக்குறைபாடு போன்று, ஒவ்வொருவருக்கும் அவர்களின் எழுத்துக்களிலான படைப்பில் அவைகளை சொல்லும் விதத்தில் நிறைவுகளும், குறைவுகளும் இருந்தேதீரும். இது கைலாசபதிக்கும்தான்.

“நாவலர் பற்றிய ஆய்வின் பெரும்பகுதியை நாவலரின் சாதனை பற்றியதோடு சென்றும், பாதகமான விமர்சனங்களில் மென்மைப்போக்கோடும் செல்கின்றார். இப்படியான விமர்சனங்களை குறைத்து மதிப்பிடமுடியுமா?”

குறைத்து மதிப்பிட முடியாது. முன்னையதற்கு கொடுத்த அழுத்தம், பின்னையதற்கு கொடுக்கப்படவில்லை. போதாதென்பதை நிராகரிக்க முடியாது. இப்போதாமையின் நிமித்தம் கைலாசபதி நாவலரின் மாணவன் போன்று செல்வதையும் காண முடியும்.  “அடியும் முடியும்”  நூலில் முருகையனை விமர்சிக்கும் துணிவு கூட நாவலரின் பாற்பட்டு செய்யப்படவில்லை.

இது போன்றதொரு குறைபாட்டை திருக்குறள் பற்றிய ஆய்விலும் செய்கின்றார். க.நா. சுப்பிரமணியம் திருக்குறள் இலக்கியமல்ல. அற நூல் என்பதை சொல்லி பின்னால் இலக்கியம் தான் என்ற நிலைக்கும் வந்தடைகின்றார். கைலாசபதி நாவலரின் அளவுகோலுக் கூடாகவே திருக்குறளை இலக்கியமாகப் பார்க்கின்றார். அதனால் தான் திருக்குறளை வணிக சார்பான நூலாக கணித்தாரோ என கேட்கத் தோன்றுகின்றது. சிலப்பதிகாரம், மணிமேகலை வணிக நூல் என்பதில் எச் சந்தேகத்திற்கும் இடமில்லை. ஆனால் வணிக சார்பிற்கான உள்கிடக்கைகள் திருக்குறளில் இல்லையென்றே சொல்லலாம். எனவே திருக்குறள் பற்றிய ஆய்வில் கைலாசபதி ஆழமாக செல்லவில்லை என்ற விமர்சனத்தை தட்டிக்கழிக்க முடியாது. இதனால் தான் கோவை ஞானி , கைலாசபதியின் ஆய்வுகளை வரட்டுத்தன்ம் கொண்டதெனச் சொல்கின்றார். கைலாசபதியின் ஆய்வுகள் தமிழ் இலக்கியப் பரப்பிலுள்ள ஆன்மீகம், அழகியல், பண்பாட்டுத்தளம் போன்றவற்றைப்பற்றி கண்டு கொள்வதேயில்லை என்கின்றார்.

(தொடரும்)

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது