Language Selection

அகிலன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

என்னிடம் கல்வி கற்ற மாணவர்களில் பெரும்பாலானோர் தம் கல்விச் செயற்பாட்டை சமுதாய முன்னேற்றம்-சமூக சேவையின் பாற்பட்டு செயலாற்றினர். ஆனால் கைலாசபதி தன் கல்விச்செயற்பாட்டை சமுதாயமாற்றம்-அடக்கி ஒடுக்கபபட்ட மக்களின் பாற்பட்டு செயலாற்றினார். நான் கல்லூரியில் கைலாசபதிக்கு கல்விப் பயிற்சிப் பட்டறை நடாத்தவில்லை. ஆர்வமான சிலவற்றை நெறிப்படுத்தினேன். அவ்வளவுதான்.  ஆனால் அவன், என்னை விட பலவற்றில் பல தடங்களை பதித்துள்ளான்.  அதன் ஓர் அங்கம் தான் யாழ்-பல்கலைக்கழகத்திற்கான உபவேந்தர் பதவி”. கைலாசபதிக்கு  இப்பதவி கிடைத்த போது, ஆசிரியர் கார்த்திகேசன் அவர்கள் கைலாசபதி தன் மாணவன் என்ற ஆதங்கத்திலருந்து கூறிய வார்த்தைகள் இது.

 

கைலாசபதி யாழ்-பல்கலைக்கழகத்தில் மூன்று ஆண்டுகள் மாத்திரமே (74-77) உபவேந்தராக இருக்க முடிந்தது. இவர் இடதுசாரி ஐக்கியமுன்னணியின் ஊடாக தெரியப்பட,  77_ல் யூ.என்.பி.  தமிழர்கூட்டணி ஐக்கியத்திற் கூடாக வித்தியானந்தன் தெரிவானார். கைலாசபதியின் 3-ஆண்டு காலம் பல்கலைக்கழகத்திற்குரிய பல அம்சங்களை யாழ் பல்கலைக்கழகம்  கொண்டிருந்ததது. (இதை மறுப்போரும் உளர்) அதன் பின் தமிழ்த் தேசியத்தின்-புலிகளின் கூடாரமே. இது பற்றிய வாதப்பிரதிவாதங்கள் பலவுண்டு.

“யாழ் பல்கலைக்கழகம் – முப்பத்தாறு வருடங்கள் – முழுமையான சீரழிவு”:—-நட்சத்திரன் செவ்விந்தியன்

“கட்டுரையைப் படித்தபின் எனக்கு எழுந்த சந்தேகங்கள் சில”:—–தாமிரா மீனாஷி

செவ்விந்தியன் குறிப்பிட்ட வெளிநாட்டார் பாராட்டிய தமிழ் அறிஞர்கள் தமிழரசுக் கட்சியின் கொள்கைகளுக்கு முரணாக யாழ்ப்பாண வளாகத்தின் தலைவர் பதவியை ஏற்றிருப்பார்களா? ( வித்தியானந்தன் உட்பட)

வளாகம் ஆரம்பிக்கப்பட்ட பின்பும் அது தமிழர் கூட்டணியின் தலைவர்களின் தொடர் தாக்குதலுக்கும் கண்டனத்திற்கும் ஆளாகிக் கொண்டிருந்ததே இதற்கு என்ன காரணம்..?

“கைலாசபதிக்கும் வித்தியானந்தனுக்கும் உள்ள திறமை வேறுபாட்டை சரியான ஆதாரங்களின்றி கணிப்பது நன்றெனப் படவில்லை. யாழ். பல்கலைக் கழகம் அதிக காலம் வித்தியானந்தனின் கட்டுப் பாட்டில் தான் இருந்தது. இந்தக் காலத்தில் தான் அது ஒரு செக்கண்டரி ஸ்கூலின் அடுத்த நிலை என்ற தரத்திற்கு மாற்றப் பட்டது என்பதை யாராலும் மறுக்க முடியாது” —-இது தேசம் நெற்றில் யாழ் பல்கலைக் கழகம் பற்றி வந்த கட்டுரையும் பின்னோட்டமும்.

கைலாசபதியின் அரசியல் கருத்துக்கள்

கைலாசபதியின் எந்தக் கட்டுரைக்குள்ளும் சமூக-விஞ்ஞான அரசியல் கருத்துக்கள் பொதிந்திருக்கும். இருந்தும் தேசாபிமானி, தொழிலாளி போன்ற பத்திரிகைகளிலும் அரசியல் கட்டுரைகள் எழுதியதாக அறிய முடிகின்றது. ஆனால் 78-ற்கு பிற்பாடு, சண்முகதாசன் தலைமை நிராகரிக்கப்பட்டு, கம்யூனிஸ்ட்கட்சி (இடது) வெளியிட்ட “செம்பதாகை”  பத்திரிகையில் “ஜனமகன்”  எனும் புனை பெயரில் எழுதுகின்றார். அத்தோடு அக்கட்சி வெளியிட்ட “ரெட்பனர்” பத்திரிகையிலும் விஷேட நிருபராக எழுதுகின்றார்.

கைலாசபதியின் அரசியல் கட்டுரைகள் அந்தந்தக் காலங்களில் கம்யூ. கட்சி கொண்டிருந்த கொள்கை-கோட்பாடுகளையே உள்ளடக்கியிருந்தது. பிரதிபலித்திருந்தது. இதில் தேசிய இனப்பிரச்சினையில் கட்சியின் தவறுகளையும் அவர் உள் வாங்கியிருந்தார். அதன் அடிப்படையில் பல கட்டுரைகளை எழுதியுமுள்ளார். இது தமிழ்த் தேசியம், தமிழ் இளைஞர்களின் போராட்டம், சுயநிர்ணய உரிமை பற்றியதாகும். இதில் மகாகவியோடும்  முரண்படுகின்றார். இதை அவரின் நண்பரான கேசவன் “பாரதி முதல் கைலாசபதி வரை”  என்ற நூலில் குறிப்பிடுகின்றார். ஆனால் இத் தவறுகளை சுயவிமர்சன ரீதியில் உள்வாங்கி செம்பதாகை (புதியபூமியிலும் என்றினைக்கின்றேன்) பல கட்டுரைகளை எழுதியுள்ளார். இக் கட்டுரைகள்,  இப் பத்திரிகையின் அக்கால வாசகர்களுக்கு மட்டுமே சென்றடைந்தது. ஏகப் பெரும்பான்மையானவர்களுக்கு சென்றடையவில்லை. இதைக் கவனத்தில் கொண்டு புதியஜனநாயகக் கட்சி மா.லெ. செம்பதாகை, ரெட்பனர், புதிய பூமியில் வந்த கைலாசாதியின் கட்டுரைகளை காலத்தின் தேவை கருதி வெளியிடவேண்டும். இது கைலாசபதி பற்றிய மதிப்பீட்டிற்கும் உதவியாக அமையும்.

கைலாசபதி மீதான அவதூறற்ற விமர்சனங்கள்

இதில் பலரால் முன் வைக்கப்படுவது கைலாசாதி புதுக் கவிதையை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதே. இது பற்றி கைலாசபதி சொல்வதையும் பார்ப்போம். “இலக்கியம் தோன்றிய காலம் முதல் திறனாய்வும், வாதங்களும் இருந்து வந்துள்ளபோதும், இந்நூற்றாண்டில் இருப்பதைப் போன்று பன்முகப்பட்ட காரசாரமான இலக்கியச் சர்ச்சைகள் இருந்தன என்பதற்கில்லை.”….

“இதிலொன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை! இலக்கியத்தை உள்ளடக்கும் கவியை எடுத்துக் கொண்டால் அதனது பண்பு, பணி ஆகியவற்றைப் பற்றிய கருத்துக்ககள் காலத்திற்கு காலம் மாற்றம் பெற்றிருப்பதை காண்கின்றோம். ஆன்ம ஈடேற்றம், நல்லொழுக்கம், குடியியல் உணர்வு, நாட்டு முன்னேற்றம் முதலிய பல்வேறு கருத்துப் படிவங்கள் காலத்திற்கு காலம் கல்வியின் குறிக்கோளாகக் கூறப்பட்டு வந்துள்ளன. பிளேட்டேவிலிருந்து பியோஜே வரை….வரைவிலக்கணமும் விள்க்கமும் கூறி இருக்கின்றனர்”…..

“அறிவியலை ஆதாரமாய்க் கொள்ளும் நோக்குக் கொள்கையாளர் ” தருமமும், அர்த்தமும், காமமும் மோட்சமடைதலாகிய நான்கும் நூலால்; (இலக்கியத்தால்) எய்தும் பிரயோஜனம் என்பர். ஆனால் அழகுச் சுவையையே இலக்கியத்தின் பிரதான நோக்கமாகக் கொள்வோர். “இலக்கியத்திற்குப் புறநோக்கம் எதுவும் .இல்லையென்றும் அது தன்னளவில் தானே நிறைவுடையதொன்று கலை கலைக்காகவே என்றும் உறுதியாகச் சொல்வர்”….

இதற்கு நேர்மாறான கருத்தோட்டமும் உண்டு. உதாரணம் தேடி வெகுதூரம் போகவேணடியதில்லை. பாஞ்சாலி சபதம் முகவுரையில் பாரதியார் எழுதினார் ; “எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொதுஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது தாய் மொழிக்கு புதிய உயிர் தருவோனாகின்றான். ஓரிரண்டு வருஷத்து நூற்பழக்கமுள்ள தமிழ் மக்களெல்லாருக்கும் விளங்கும்படி எழுதுவதுடன் காவியத்துக்குள்ள நயங்கள் குறைவுபடாமலும் நடத்துதல் வேண்டும்”

இவைகளுக்கூடாக கைலாசபதி கலை இலக்கியம் பற்றி எதைத் தான் சொல்கின்றார். அதில் எப்பக்கம் நிற்கின்றார். என்பது பற்றி  இன்னும் சில விடயங்களை மேலே பார்ப்போம். புதுமைப்பித்தன் கட்டுரைகள் எனும் நூலில் “சமயத்தையும் கடந்த கலை” என்ற கட்டுரையில் “இருதயத்தின் கனிவாக வெளிப்படும் இசை தான் கவிதை~யெனவும், கவிதையில் அமைப்பும் உணர்ச்சியும் தான் கவிதையின் உரைகல்” என்ற புதுமைப்பித்தனின் கோட்பாட்டை முற்று முழுதாக நிராகரிக்கும் கைலாசபதி,  பாரதி  சொல்கின்ற பல  புதிய உயிர்தரும் பல விடயங்களோடு  ஒன்றிணைகின்றார். அதுதான் ஆசிரியர் கார்த்திகேசன் சொல்லும் அவரின் கல்வி கலை-இலக்கியச் செயற்பாடு. அது சமுதாய மாற்றத்திற்கானது. அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கானதானதின் பக்கம் ஓலித்தது என்பதானது. இதனாலேயே இவரை “இழிசனர் இலக்கியவாதியென்றனர். வேளாள மார்க்சிஸவாதி” என்றனர்.

கைலாசபதி புதுக் கவிதை புனைவாளன் அல்ல. கலை-இலக்கியத்தை அதன் வடிவங்களை சமூக விஞ்ஞான—வரலாற்றுப் பொருள் முதல்வாத நோக்கில் ஆய்வு-விமர்சனம் என்பதற் கூடாக வகைப்படுத்தி எழுதியவர். இதில் புதுக் கவிதை என்பது பாரதி கண்டெடுத்த “வெகுஜன அரசியல் இலக்கியமாக” பர்ணமிக்க வேண்டுமெனறார்.

இது நிற்க சிலர் ஆறுமுகநாவலர் திருக்குறளை இலக்கியமாக கணித்தார். க. நா. சுப்பிர்ணியம் போன்ற விமர்சகர்கள் திருக்குறள் இலக்கியமன்று, அறநூலே என்ற வாதத்தை முன்வைத்தனர். இதில் கைலாசபதி நாவலர் சொன்ன இலக்கியம் எனும் மரபிற்குள் இறுகினார் என்கின்றனர்.

(தொடரும்)

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது