Language Selection

செங்கொடியின் சிறகுகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நாளை 61 வது குடியரசு தினமாம். பாதுகாப்பு ஏற்பாடுகள், பய பீதிகள் என கடந்த வாரம் முதலே பரபரப்பு காட்டப்படுகிறது. ஒரு கொண்டாட்ட மனோநிலைக்கு மக்கள் ஆயத்தப்படுத்தப்படுகிறார்கள். கொண்டாட்டங்களை நுகர்வைக்கொண்டே அள‌க்கமுடியும் என்பதால் வர்த்தக நிறுவனங்கள் தங்கள் விழாக்கால தள்ளுபடியை குடியரசு தினத்திற்கும் நீட்டுகின்றன. தொலைக்காட்சி நிறுவனங்கள் ‘தேசபக்த’ நடிகைகளை “வந்தே மாட்றோம்” என்று கூறவைத்து நம்மை கொண்டாட தூண்டுகின்றன. இதையே இன்னும் விரிவான அளவில் யாராவது வெளிநாட்டு தலைவர்களை அழைத்துவந்து இராணுவ தளவாடங்களை ஓடவிட்டுக் காட்டி பெருமிதமாய் கொண்டாடுகிறது அரசு. இருக்கட்டும், எதற்காக இந்த கொண்டாட்டங்கள்? முடியரசாக இருந்தபோதும், காலனியரசாக இருந்தபோதும், இப்போதும் எந்த அரசும் குடிமக்களுக்கான அரசாக இருந்ததில்லை. என்றால் இந்த கொண்டாட்டங்களின் பொருள்?

 

முதலில் இதை சுதந்திரமான அரசு என்று கூறுவதே தவறான கூற்று. நாட்டு மக்களின் மீது அனைத்து அளவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் தன்மை வாய்ந்த பொருளாதார கொள்கைகளிலேயே தனிப்பட்டு செயல்படமுடியாமல் அன்னிய ஆதிக்க நாட்டின் நலன்களுக்கு உதவிடும் வகையிலும், சொந்த நாட்டின் நலன்களுக்கு ஊறுவிளைவிக்கும் வகையிலும் திணிக்கப்படும் கொள்கைகளால் செயல்படும் ஒரு நாட்டின் அரசை சுதந்திரமான அரசு என்று எப்படி கூறமுடியும்? தனக்குத்தானே சுதந்திரமாக இல்லாத ஒரு அரசை தன்னுடைய மக்களுக்கான அரசு என்று எந்த அடிப்படையில் கூறுவது?

 

நாட்டின் பெரும்பாலான மக்களுக்கு வேலைவாய்ப்பாகவும் வாழ்வாகவும் இருக்கும் விவசாயத்தை முற்றாக துடைத்தொழிப்பதற்கு நாள் குறித்துக் கொண்டு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது அரசு. பசுமைப்புரட்சி எனும் பெயரில் விளை நிலங்களில் இரசாயண உரங்களைக் கொட்டி மலடாக்கி, நீர் ஆதாரங்களை பராமரிக்க மறுத்து விவசாயிகளின் சொந்தச் செலவில் நிலத்தடிநீரை பயன்படுத்தவைத்து; அதிக மகசூல் தரும் விதைகள் என்று அதிக வளத்தையும், அதிக தண்ணீரையும் இறைத்தெடுக்கும் விளைமுறைகளை திணித்து; பணப்பயிர்கள் என்று ஆசை காட்டி உணவுப்பயிர்களை விட்டு விலக்கி கடைசியில் லட்சக்கணக்கான விவசாயிகளைக் கொன்று குவித்து, வெற்றிகரமாக விவசாயத்தை கருவறுத்து வீசியிருக்கும் இந்த அரசை, குடிமக்களுக்கான அரசு என்று கூறுவதெப்படி?

 

நாட்டின் கனிம வளங்களையெல்லாம் அற்ப விலைக்கு விற்று, சொற்ப வேலைவாய்ப்பை உண்டாக்குவதால் சலுகை எனக்கூறி எல்லாவித வரிகளையும் விலக்கி, லாப உத்திரவாதம் என்று சுற்றுச்சூழலை, நீர்நிலைகளை, விவசாய நிலங்களை, காற்றை மாசுபடுத்த அனுமதித்து, உற்பத்திச் செலவைக் குறைப்பது என்ற பெயரில் தொழிலாளர்களை கசக்கிப்பிழிவதை கண்டும்காணமலும் இருந்து, வேலையிழப்பு பயம்காட்டி தொழிலாளர்களின் உழைப்பாளிகளின் எல்லவித உரிமைகளையும் பரித்தெடுத்து, இயல்பாக இவைகளை எதிர்த்துக் கிளர்ந்தெழும் போராட்டங்களை அடக்க அடக்குமுறைச் சட்டங்களை இயற்றி, அனைத்து வகையிலும் முதலாளிகளின் லாப வெறிக்காக உழைக்கும் மக்களை வதைக்கும் இந்த அரசை குடிமக்களுக்கான அரசு என்று கூறுவதெப்படி?

 

வணிகர்கள், நெசவாளர்கள், மீனவர்கள் என எந்தப்பிரிவு மக்களையாவது விட்டுவைத்திருக்கிறதா இந்த அரசும் அதன் கொள்கைகளும். பின் எந்த அடிப்படையில் குடிமக்களுக்கான அரசுமுறையாக இந்த அரசை கொண்டாடுவது? நாட்டு மக்களின் நலன்களுக்கான திட்டம் என விளம்பரப்படுத்தப்பட்டு தொடங்கப்படும் எந்தத்திட்டமும் அதன் உள்நோக்கில் மக்களுக்கு எதிரானதாகவே இருக்கிறது. எல்லாத்தட்டு மக்களுமே அரசின் திட்டங்களினால் பாதிப்படையவே செய்கிறார்கள். கடவுள் என்ற ஒன்று இல்லாமல் எதுவும் இல்லை எனும் ஆன்மீக நம்பிக்கையையும், நடப்பில் நாம் முனைந்து உழைக்காமல் எதுவும் நடப்பதில்லை எனும் யதார்த்தத்தையும் தனித்தனியாக புரிந்துகொண்டு எப்படி மக்கள் செயல்படுகிறார்களோ, அதுபோலவே குடி மக்களுக்கான அரசு என்பதையும், அரசு நமக்கு எதிராகவே செயல்படுகிறது என்பதையும் தனித்தனியாகவே புரிந்துகொண்டிருக்கிறார்கள். முன்னது கற்பிதமாகவும், பின்னது நடைமுறையாகவும் கடைப்பிடிக்கப்படுவதனால் தான் அவர்களால் ஒரு கொண்டாட்டமாக குடியர‌சு தினம், சுதந்திர தினம் போன்றவற்றை கொண்டாடமுடிகிறது.

ஒரு போதையான மயக்கத்தைப் போல் நாட்டு மக்களிடம் மந்தை மனோநிலையை உருவாக்கி கொண்டாட்டத்தைத் திணிப்பதையே தேசபக்தியாக உருவகப்படுத்தி வைத்திருக்கிறார்கள். நாடு என்பது அனைத்து வகையிலும் அதன் மக்களை எதிரொலிப்பது, அனைத்து வகையிலும் அந்த மக்களை மறுதலித்துவிட்டு அதையே நாட்டுப்பற்று என்பது உச்சகட்ட மோசடி. இந்த மோசடியின் குறிய‌டையாளமாகத் தான் கொடியேற்றிக் கொண்டாடுவது.

 

ஆனால் பாஜக கும்பல் இந்த கொடியேற்றுவதில் கூட தங்கள் பாசிச அரசியலை காட்டிக்கொண்டிருக்கிறது. மக்களின் வாழ்வாதார உரிமைகள் பறிக்கப்படுவதற்கு துணை நிற்கும் ஒரு கட்சி கொடியேற்றுவதை உரிமையாக முன்வைக்கிறது. காஷ்மீரின் சிரிநகரில் லால்சௌக் பகுதியில் கொடியேற்றுவதற்கு நாட்டின் பல பகுதியிலிருந்தும் பேரணியாக செல்வது என்று அறிவித்திருக்கிறது. இதை சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி ஆளும் காங்கிரஸ் கும்பல் அனுமதிக்க மறுக்கிறது. நாட்டின் எந்தப் பகுதியிலும் குடியரசு தினத்தன்று கொடியேற்றுவது மக்களைன் உரிமை என்றும், அதைத்தடுப்பது தீவிரவாதிகளை, பிரிவினைவாதிகளை ஊக்குவிக்கும் செயல் என்றும் விளக்கம் சொல்லி போலியான நாட்டுப்பற்றை விசிரிவருகிறது.

 

அயோத்தி ராமர் கோவில் விவகாரம், கட்டைப்பஞ்சாயத்திற்குப் பிறகு உ.பி.யில் கூட பா.ஜ.க.வுக்கு வாக்குகளைப் பெற்றுத் தரும் என்பது நிச்சய‌மில்லை; குஜராத் படுகொலை போல ஒரு கலவரத்தை நடத்தினால், அதற்கு எதிர்வினையாகக் குண்டு வெடிக்கும் உத்தரவாதம் உண்டே தவிர, நாடெங்கும் வாக்குகளை அள்ள முடியுமா என்பது ஐயம்தான். அணுசக்தி ஒப்பந்தத்தைக் கடுமையாக விமர்சித்தால், அமெரிக்க முதலாளிகளுக்கு கோபம் வந்து, முதலுக்கே மோசமாகப் போய் விடும். விலைவாசி உயர்வினால், தற்பொழுது பா.ஜ.க. ஆளுங்கட்சியாக உள்ள மாநிலங்களிலும் அதிருப்தி தலைவிரித்தாடுகிறது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகளை மறைப்பதிலும், கூட்டுக்குழுவை தீர்வாக காட்டி கூச்சலிட்டு முடக்கியதிலும் கொஞ்சம் பலன் கிடைத்திருப்பதாய் தெரியவே அதே வழியில் இந்த கொடியேற்றலை பயன்படுத்திக்கொள்ள முயல்கிறது.

 

காஷ்மீர் இந்தியாவின் பகுதி, அங்கு கொடியேற்றுவதை தடுக்க நினைப்பது பிரிவினைவாதம், தேசவிரோதம் என நினைப்பவர்களுக்கு, அந்த மக்கள் தாங்கள் இந்தியாவின் ஒரு மாநிலத்தில் இருப்பதாக கருதப்படுவதை எதிர்க்கிறார்கள் என்பது நினைவுக்கு வருவதேயில்லை. பிரிவினைவாதம் என்பவர்கள் அந்த மக்களுக்கு விரோதமாக அவர்களின் நிலத்தை இந்தியாதான் தன் இராணுவ பலத்தினால் பிடித்து வைத்திருக்கிறது என்பது நினைவுக்கு வருவதேயில்லை. அந்த மக்களிடமே வாக்கெடுப்பு நடத்துகிறோம் என்று ஐநாவிடம் வாக்குறுதி கொடுத்திருந்தும் இன்றுவரை வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்பது நினைவுக்கு வருவதேயில்லை.

 

இதுபோல் உண்மைகளை மக்களிடமிருந்து மறைத்து போலியான, போதையான நாட்டுப்பற்றை மக்களிடம் ஊட்டுவதன் மூலம் தங்களின் கோரமுகத்தை மறைத்து வருகிறார்கள். இவற்றினின்று விடுபட்டு மக்கள் உண்மையை உணரும் நாள் தான் கொண்டாட்டத்திற்கு போராட்டத்திற்கு உரிய நாளேயன்றி, நாளை (ஜனவரி 26) எந்தவிதத்திலும் கொண்டாட்டத்திற்கு உரியதல்ல‌.

http://senkodi.wordpress.com/

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது